என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    படப்பை அருகே பெயிண்டர் கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் புது நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 29). பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த வாரம் சோமங்கலம் புதுநல்லூர் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் பின்புறம் கொலை செய்யப்பட்டு அவரது உடல் தார்ப்பாயில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சோமங்கலம் போலீசார் விசாரணை செய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

    கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் 7 பேரை பிடித்து விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் கொலையில் தொடர்புடையதாக புதுநல்லூர் பகுதியை சேர்ந்த அன்பு (24), பழையநல்லூர் பகுதியை சேர்ந்த சதீஷ் (30), வெங்கடேசன் (20), நாகராஜ் (20), ஸ்ரீபெரும்புதூர் பருத்திப்பட்டு பகுதியை சேர்ந்த யுவராஜ் ( 20), புதுநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (36) ஆகியோரை சோமங்கலம் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

    போலீஸ் விசாரணையில் சங்கர் ஆட்களை வைத்து பெயிண்டர் வேலை செய்து வந்ததாகவும் ஒரு சில ஆர்டர்களை அன்புவிடம் கொடுப்பார். அந்த வேலைகளை அன்பும் செய்து கொடுப்பார் என்பது தெரியவந்துள்ளது.

    கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பழைய நல்லூர் பகுதியில் சங்கர் மூலம் வந்த ஒரு வீட்டின் வேலையை அன்பு செய்து கொண்டிருந்தார். மறுநாள் சனிக்கிழமை சங்கர் அன்புவை வேலைக்கு அழைத்துள்ளார். அப்போது நான் மது குடித்துள்ளேன். வேலைக்கு வரவில்லை என்று சங்கரிடம் அன்பு தெரிவித்தார். அப்போது சங்கர், நான் உனக்கு வேலை எடுத்து தருகிறேன். அதை செய்கிறாய். ஆனால் எனக்கு ஒரு வேலை அவசரம் என்ற போது ஏன் வர மறுக்கிறாய் என கேட்டுள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டு சங்கர் அன்புவை அடித்து விட்டு சென்றதாக தெரிகிறது.

    இதனை தொடர்ந்து சங்கர் அன்புவின் செல்போனை தொடர்பு கொண்டபோது, பழையநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தோப்பு பகுதிக்கு சங்கரை வர சொல்லி உள்ளார். இதனை தொடர்ந்து சங்கர் தோப்பு பகுதிக்கு சென்றவுடன் அங்கிருந்த அன்பு மற்றும் அன்புவின் நண்பர்கள் சேர்ந்து சங்கரை கொலை செய்ததாகவும் கொலை செய்யப்பட்ட உடலை எடுத்து வந்து சோமங்கலம் பஸ் நிறுத்தம் பின்புறம் வீசி விட்டு சென்றுள்ளனர் என்பவை தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், கத்தி போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.

    கைது செய்யப்பட்ட 6 பேரையும் போலீசார் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவர்களை நீதிபதி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
    இந்த ஆண்டு பிப்ரவரி 18-ந் தேதியில் இருந்து டிசம்பா 20-ந் தேதி வரையிலான 10 மாதங்களில் மொத்தம் 5 ஆயிரம் விமானங்களின் சரக்குகளை சென்னை விமானநிலைய சரக ஊழியாகள் கையாண்டு சாதனை படைத்துள்ளனர்.
    ஆலந்தூர்:

    கொரோனா வைரஸ் முதல் அலை வேகமாக பரவியதை அடுத்து சென்னை உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து விமானநிலையங்களிலும் கடந்த 2020 மார்ச் 25-ந் தேதியில் இருந்து பயணிகள் விமான போக்குவரத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது.

    சரக்கு விமானங்கள் போக்குவரத்திற்கு மட்டும் மத்திய அரசு அனுமதித்து இருந்தது. ஆனாலும் சரக்கு விமான சேவைகள் மிகவும் குறைந்த அளவே இயக்கப்பட்டதோடு, சரக்குகளை ஏற்றி இறக்கும் ஊழியர்களும் மிகவும் குறைவானவர்களே பணிக்கு வந்ததால், சரக்குகளை கையாளுவது மிகவும் குறைவாகவே இருந்தது.

    இந்நிலையில் கொரோனா வைரஸ் 2-ம் அலை நேரத்தில் சென்னை விமானநிலைய சரகத்தில் சரக்கு விமானங்களின் வருகையும், சரக்குகளை கையாளுவதும் பல மடங்கு அதிகரித்தது.

    இந்த ஆண்டு பிப்ரவரி 18-ந் தேதியில் இருந்து டிசம்பா 20-ந் தேதி வரையிலான 10 மாதங்களில் மொத்தம் 5 ஆயிரம் விமானங்களின் சரக்குகளை சென்னை விமானநிலைய சரக ஊழியாகள் கையாண்டு சாதனை படைத்துள்ளனர்.

    கொரோனா வைரஸ் இரண்டாம் அலை உச்சக்கட்டத்தில் இருந்த ஏப்ரல், மே, ஜூன், ஜுலை மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து பெருமளவு வந்த மருத்துவ உபகரணங்களான ஆக்சிஜன் செரியூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டாகள், வெண்டிலேட்டர்கள், தெர்மல் ஸ்கேனர்கள், மாஸ்க்குகள், கிருமிநாசினி மருந்துகள் உள்ளிட்ட பல்வேறுவிதமான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மற்றும் இந்திய ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்களில் தொடர்ச்சியாக வந்தன. அவைகள் விமானநிலைய சரக ஊழியர்களை உடனடியாக விமானங்களில் இருந்து இறக்கி, காலதாமதமின்றி விரைந்து டெலிவரி செய்து வந்தனர்.

    அதைப்போல் கொரோனா தடுப்பூசி மருந்துகள் சரக பார்சல்களாக தொடர்ந்து தற்போது வரை விமானங்களில் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் கத்தார், துபாய், ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வழக்கமாக வரும் சரக்குகளும் பெருமளவு வந்து கொண்டிருக்கின்றன.

    கொரோனா வைரஸ் 2-ம் அலை ஊரடங்கால் ஊரே முடங்கிக்கிடந்த இந்த நேரத்திலும் சென்னை விமானநிலைய சரகப்பிரிவு இடைவிடாமல் தொடர்ந்து பணியாற்றி 10 மாதங்களில் 5 ஆயிரம் விமானங்களின் சரக்குகளை ஏற்றி, இறக்கி கையாண்ட சாதனையை சென்னை விமானநிலைய சரகப்பிரிவு ஊழியர்கள் நேற்று மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

    அதோடு 5 ஆயிரத்தை குறிக்கும் விதத்தில் அணிவகுத்து நின்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சென்னை விமானநிலைய சரக ஊழியர்கள் இதைப் போல் தொடர்ந்து மேலும் சிறப்பாக செயல்பட்டு சாதனைகளை படைக்க வேண்டும் என்று விமானநிலைய அதிகாரிகள் வாழ்த்தி பாராட்டினர்.
    நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் சென்னை விமான நிலைய பெண்கள் நலச்சங்கம் சார்பில், சர்வதேச சேலை தின விழா சென்னை விமான நிலையத்தில் கொண்டாடப்பட்டது.
    ஆலந்தூர்:

    கொரோனா நோய் தொற்று குறைந்ததை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான போக்குவரத்து பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. இதனால் விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் உலக சேலை தினம் நேற்று (21-ந் தேதி) கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டும் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையிலும் சென்னை விமான நிலைய பெண்கள் நலச்சங்கம் சார்பில், சர்வதேச சேலை தின விழா சென்னை விமான நிலையத்தில் கொண்டாடப்பட்டது.

    விமான நிலையத்தில் பணியாற்றும் பல்வேறு துறைகள், விமான நிறுவனங்களைச் சேர்ந்த 75 பெண்கள், விதவிதமாக சேலைகளை அணிந்து, ஒய்யார நடை அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

    இதில் பங்கேற்ற பெண்கள் 75 விதமாக சேலை அணிந்து கலக்கலாக வந்து பார்வையாளர்களை கவர்ந்தனர். இதனால் நிகழ்ச்சி களைகட்டியது. நிகழ்ச்சியில் சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் உட்பட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.
    காஞ்சிபுரம் செவிலிமேடு மேட்டுக்காலணி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் செவிலிமேடு மேட்டுக்காலணி பகுதியில் 126 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக மாநகராட்சி நிர்வாகம் சரிவர குடிநீர் வழங்கவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு முறையாக குடிநீர் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி காலி குடங்களுடன் காஞ்சிபுரத்திலிருந்து ஓரிக்கை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    அண்மையில் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குடிநீர் எடுத்துச் செல்லும் குழாய்கள் வெள்ளத்தில் அடித்து சென்று விட்டதால் குடிநீரை முறையாக வினியோகம் செய்ய முடியவில்லை எனவும் புதிய குழாய்கள் அமைக்கும் பணிநடைபெற்று வருவதாகவும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    கல்லூரி மாணவரின் ஆபாச தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
    மாங்காடு:

    பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாங்காட்டை சேர்ந்த 17 வயதான மாணவி பிளஸ்-1 படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் அவர் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாங்காடுபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது மாணவி உருக்கமாக எழுதி வைத்திருந்த 3 கடிதங்களை போலீசார் கைப்பற்றினர். அதில், “எனக்கு வாழ பிடிக்கவில்லை. என்னை சிலர் தவறாக பயன்படுத்தி விட்டனர். வெளியில் சொன்னா என்னைதான் தப்பா பேசுவாங்க. என்னை நீ பொண்ணுனு கூட பார்க்கவில்லை. நீ எல்லாம் டீச்சருக்கு பிறந்தவன்னு சொல்லக்கூடாது. நீ எல்லாம் இருக்கவே கூடாது.

    கடவுள் உன்னை விரைவில் தண்டிப்பார். இதற்கு மேல் முடியாது. பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க வேண்டும். மனசு ரொம்ப வலிக்குது. எனக்கு ஆறுதல் சொல்ல கூட யாரும் இல்லை. என்னால் நிம்மதியாக தூங்க முடியல. கனவு வந்து டார்ச்சர் பண்ணுது. படிக்க முடியவில்லை. பள்ளி பாதுகாப்பானது இல்லை. கல்லறையும், தாயின் கருவறையும்தான் பாதுகாப்பானது. ஆசிரியர், உறவினர்கள் யாரையும் நம்ப வேண்டாம்” என்று உருக்கமாக எழுதி இருந்தார்.

    மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து 3 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவரது செல்போனுக்கு கடைசியாக பேசியவர்கள் யார் யார்? அவரது நெருங்கிய நண்பர்கள், தோழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 20-க்கும் மேற்பட்டவர்களிடம் இந்த விசாரணை நடந்தது.

    இதில் மாங்காட்டை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவரான விக்னேஷ் என்பவர் மாணவியின் செல்போனுக்கு அடிக்கடி பேசி இருப்பது தெரிந்தது. மேலும் அவரது வாட்ஸ்அப்பில் இருந்து மாணவிக்கு ஆபாசமாக பதிவிட்டிருப்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து கல்லூரி மாணவரான விக்னேசை போலீசார் இன்று காலை கைது செய்தனர். அவர் சோமங்கலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    அவர் மீது போக்சோ, பெண் வன்கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    மாணவி மாலை நேரத்தில் தட்டச்சு வகுப்பிற்கு சென்று வந்துள்ளார். அப்போது மாணவிக்கும், கல்லூரி மாணவர் விக்னேசுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் அவர் மாணவி படித்த அதே பள்ளியில் படித்திருக்கிறார்.

    இதன் பின்னர் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி உள்ளனர். மாணவி நெருங்கி பழகியதை சாதகமாக பயன்படுத்திய விக்னேஷ் ஆபாசமாக பேச ஆரம்பித்து உள்ளார். வாட்ஸ்அப்பிலும் ஆபாசமாக சாட் செய்து இருக்கிறார். மாணவியுடன் விக்னேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள், சாட் செய்த விவரங்களை போலீசார் ஆதாரங்களாக திரட்டி உள்ளனர்.

    விக்னேசின் ஆபாச தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “மாணவி தற்கொலை தொடர்பாக முதல் கட்டமாக கல்லூரி மாணவர் விக்னேஷ் கைது செய்யப்பட்டு உள்ளார்.

    மாணவியிடம் அடிக்கடி பேசிய நபர்களின் செல்போன் நம்பர்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதனை வைத்து மாணவிக்கு தொல்லை கொடுத்தவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள். தனிப்படையினர் வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். அடுத்தக் கட்டமாக இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

    மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தில் பள்ளி பாதுகாப்பானது இல்லை. ஆசிரியர்கள், உறவினர்கள் யாரையும் நம்ப வேண்டாம் என்று குறிப்பிட்டு இருப்பதால் அந்த கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

    மாணவியின் உறவினர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை அழைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து மேலும் சிலரும் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

    இதனால் மாணவியிடம் செல்போனில் பேசியவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.


    தனியார் நிறுவன பெண் ஊழியர்களுக்கு தரமற்ற உணவு தயாரித்து கொடுத்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆண், பெண் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். வேலை செய்யும் ஊழியர்கள் தொழிற்சாலை நிர்வாகம் சுங்குவார்சத்திரம் வடக்குப்பட்டு, ஜமீன் கொரட்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விடுதிகளில் தங்க வைத்து அங்கிருந்து அவர்கள் பணி புரியும் தொழிற்சாலைக்கு சென்று வந்தனர். இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஜமீன் கொரட்டூரில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த பெண் ஊழியர்கள் சாப்பிட்ட உணவில் ஏற்பட்ட நச்சுத்தன்மையால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரு சிலரை தவிர மீதம் உள்ளவர்கள் சிகிச்சை முடிந்து விடுதிக்கு திரும்பினர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்த 8 பெண் ஊழியர்களை காணவில்லை என்ற தகவல் காட்டுத்தீ போல பரவியது.

    இந்த தகவலை தொடர்ந்து ஊழியர்கள் ஒரகடம் வடக்குபட்டு, புளியம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழி்த்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    இநத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 67 பெண் தொழிலாளர்கள் மற்றும் போராட்டத்திற்கு தூண்டுதலாக இருந்த பல்வேறு அமைப்புகளை சார்ந்த 22 பேர் என மொத்தம் 89 பேரை ஒரகடம் போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட பெண் ஊழியர்கள் சொந்த ஜாமீனில் விடப்பட்டனர். 22 பேர் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். சுங்குவார்சத்திரத்திலும் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சி.ஐ.டி.யு. சார்பில் வண்டலூர்- வாலாஜாபாத் சாலை படப்பை பகுதியில் கோஷங்களை எழுப்பி 30-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மணிமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.அதே போன்று காஞ்சிபுரம் காந்தி ரோடு பெரியார் நினைவுதூண் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகள், தொண்டர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தரமற்ற உணவு சாப்பிட்டு பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைக்கு பின்னர் திரும்பிய பெண் ஊழியர்கள் திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தனர். தரமற்ற உணவு வழங்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் நேற்று முன்தினம் சிறுவானூர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் அந்த தனியார் விடுதியின் வார்டன் உள்பட 97 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஜமீன் கொரட்டூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கியிருந்த பெண் ஊழியர்களுக்கு தரமற்ற உணவு தயாரித்து கொடுத்த சக்தி கிச்சன் மேற்பார்வையாளர்கள் பிபின் (வயது 34), கவியரசு (32) ஆகியோரை வெள்ளவேடு போலீசார் கைது செய்தனர்.

    தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டது தொடர்பாக சமூகவலைத்தளங்களில் சேலத்தை சேர்ந்த வளர்மதி அவதூறு தகவல்களை பதிவிட்டதாக தெரிகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நகர் போலீசில் சூளைப்பள்ளம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் புகார் செய்தார். போலீசார் வளர்மதி மீது தமிழக அரசுக்கும், போலீஸ் துறைக்கும் ஏதிராக செயல்பட்டது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    வளர்மதி ஏற்கனவே நெடுவாசல், சேலம் எட்டுவழிசாலை திட்டம் போன்றவற்றை எதிர்த்து சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மறியலில் ஈடுபட்டயில் 68 பெண் தொழிலாளர்கள் மற்றும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த தொழிற்சங்க நிர்வாகிகள் 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ளசுங்குவார்சத்திரம் பகுதியில் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

    இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், பூந்தமல்லி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடுதிகளில் தங்கி ஏராளமான பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    கடந்த 15-ந்தேதி பூந்தமல்லி அருகே உள்ள விடுதிகளில் தங்கியிருந்த பெண் தொழிலாளர்களுக்கு உணவை சாப்பிட்டதால் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சுமார் 200 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்கை பெற்ற 8 பேர் உயிரிழந்ததாக தொழிலாளர்கள் மத்தியில் வதந்தி பரவியது. அவர்களை பற்றிய விபரத்தை தொழிற்சாலை நிர்வாகத்தினர் தெரிவிக்க வில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பெண்தொழிலாளர்கள் உள்பட சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டடோர் நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் சுங்குவார்சத்திரத்தில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலை முன்பு சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதேபோல் தொழிலளார்களுக்கு ஆதரவாக ஒரகடம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதியில் தங்கி இருந்தவர்களும் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    அவர்களிடம் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கணேசன், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது காணவில்லை என்று கூறப்பட்ட பெண் தொழிலார்கள் சிலரிடம் கலெக்டர் ஆர்த்தி வீடியோ காலில் பேசினார். அனைவரும் நலமுடன் இருப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஆர்த்தி, மற்றும் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், கணேசன் ஆகியோர் உறுதிஅளித்தனர். இதையடுத்து தொழிலாளர்களின் 16 மணிநேர போராட்டம் முடிவுக்கு வந்தது.

    சுங்குவார் சத்திரம் பாக்ஸ்கான் தொழிற்சாலை அருகே நடைபெற்ற போராட்டத்தை தொழிலாளர்கள் கைவிட்ட நிலையிலும், ஒரகடம் பகுதியில் செயல்பட்ட விடுதியில் தங்கியிருந்த பெண் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்டயில் 68 பெண் தொழிலாளர்கள் மற்றும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த தொழிற்சங்க நிர்வாகிகள் 22 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காஞ்சீபுரம் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    காஞ்சீபுரத்தில் 15-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் தங்களது உடலில் மண்ணெண்ணைய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கப்போவதாக மிரட்டல் விடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் பகுதியில் ஏராளமான திருநங்கைகள் வசித்து வருகிறார்கள. இவர்களுக்கு காஞ்சீபுரம் அடுத்த குருவி மலைப்பகுதியில் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அங்கு வசிக்காமல் தனித்தனியாக ஆங்காங்கே தங்கி உள்ளனர்.

    அவர்கள் தனம் , சங்கீதா ஆகியோரது தலைமையில் தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஒரிக்கை பகுதியில் தனம் பிரிவைச் சேர்ந்த திருநங்கைகள் மீது நேற்று நள்ளிரவு சங்கீதா தலைமையிலான திருநங்கைகள் தாக்குதல் நடத்தினர். இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஒருதரப்பு திருநங்கைகள் ஓரிக்கை பகுதியில் காஞ்சீபுரம்-உத்திரமேரூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது 15-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் தங்களது உடலில் மண்ணெண்ணைய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கப்போவதாக மிரட்டல் விடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் விரைந்து வந்து திருநங்கைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தாக்குதல் நடத்திய திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை அடுத்து மறியலில் ஈடுபட்ட திருநங்கைகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    காஞ்சிபுரத்தில் குடோனில் பதுக்கி வைத்த 15 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த ஒலிமுகம்மது பேட்டை அரக்கோணம் சாலையில் உள்ள தனியார் குடோனில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வத்திற்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அதிகாரிகள் குடோனில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு 250 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 டன் ரேசன் அரிசி, 150 மூட்டை பாலிஷ் செய்யப்பட்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.

    இதே குடோனில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த புகாரை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

    அதே நபர் மீண்டும் ரேசன் அரிசி பதுக்கலில் ஈடுபட்டாரா? என்பது குறித்து உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தற்கொலை செய்து கொள்ளும் முன்பு மாணவி 3 கடிதங்களை எழுதி இருக்கிறார். அதில் ஒரு கடிதத்தை அவரே கிழித்து போட்டுள்ளார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் சமீப காலமாகவே பள்ளி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. இது தொடர்பாக போலீஸ் நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பாலியல் அத்துமீறல்களை எதிர்கொள்ள முடியாமல் அவ்வப்போது மாணவிகள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் மாங்காட்டை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் செக்ஸ் தொல்லை தாங்க முடியாமல் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாகவே அந்த மாணவி பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. இதனை அவர் எழுதி உள்ள கண்ணீர் கடிதமும் உறுதி செய்து இருக்கிறது.

    மாணவி எழுதிய உருக்கமான முழு கடிதமும் கிடைத்துள்ளது. அதில் அவர் வாழ்வதற்கு பிடிக்கவில்லை. பாலியல் துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது போன்ற வார்த்தைகளை குறிப்பிட்டுள்ளார்.

    கடிதத்தில் அவர் கண்ணீர் மல்க கூறி இருப்பதாவது:-

    எனக்கு வாழ பிடிக்கல. கொடூரமான சமூகத்தில் தப்பான எண்ணங்களை ஏன் இப்படி கடவுள் படைத்து இருக்கிறார். என்னை இந்த உலகத்துல கஷ்டப்படணும்னு படைச்சிருக்கார். என்னை பார்த்தாலே வெறுப்பு வருகிறது. என்னை சிலர் தவறாக பயன்படுத்தி விட்டனர்.

    அது எனக்கு பிடிக்கலை. அந்த யோசனையே மனசுல ஓடிட்டு இருக்கு. எனக்கு ஆறுதல் சொல்லக் கூட யாரும் இல்லை.

    வெளியில சொன்னா என்னை தான் தப்பா பேசுவாங்க. இனிமே தப்பான எண்ணத்தோடு யாரும் பெண்களிடம் பேச விடக்கூடாது. யாரையும் நம்ப முடியலை. முக்கியமாக உறவினர்களை. யாரு இப்படி பண்ணாங்கன்னு எனக்கு தெரியும் (எதையோ அடித்துள்ளார்) பொண்ணுன்னு என்னை கூட பார்க்கல. நீ எல்லாம் டீச்சருக்கு பிறந்தவன்னு சொல்லக் கூடாது. நீ எல்லாம் இருக்கவே கூடாது. கடவுள் உன்னை விரைவில் தண்டிப்பார்.

    மாணவி எழுதிய கடிதம்

    இதற்கு மேல் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க வேண்டும். இதுக்கு மேல முடியாது. மனசு ரொம்ப வலிக்குது. எனக்கு ஆறுதல் சொல்லக் கூட யாரும் இல்லை. என்னால நிம்மதியா தூங்க முடியல. கனவு வந்து டார்ச்சர் பண்ணுது. படிக்க முடியலை. இந்த சமூகத்துல பாதுகாப்பே இல்லை. என்னோட கனவு எல்லாம் போயிடுச்சு. பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று அனைத்து பெற்றோர்களும் தங்கள் மகன்களுக்கு சொல்லிக் கொடுங்கள். எனக்கு நியாயம் கிடைக்கும்னு நினைக்கிறேன். உறவினர்கள், ஆசிரியர்கள் யாரையும் நம்பாதீர்கள். அனைத்து மனிதர்களும் வேட்டையாடுபவர்கள் தான்.

    அம்மா போய்ட்டு வர்றேன் இன்னொரு உலகத்துக்கு பாதுகாப்பான இடம் கல்லறையும், தாயின் கருவறையும்தான். பள்ளிக்கூடங்கள் பாதுகாப்பான இடம் இல்லை. எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

    இவ்வாறு மாணவி எழுதிய 2 பக்க கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

    இது தவிர 3-வதாகவும் மாணவி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தின் கடைசியில் உடலை மட்டும் பார்த்து பழகுபவர்கள் ஆண்மைக்கு தகுதி இல்லாதவர்கள். மோசமான உலகத்தில் பிறந்து விட்டேன். மறுபடியும் வேறு உலகத்துக்கு செல்கிறேன். ‘‘ஸ்டாப் செக்சுவல் அராஸ் மெண்ட். ஜஸ்டிஸ் பார் மீ’’ என குறிப்பிட்டுள்ளார். தூக்கு கயிறு படம் ஒன்றையும் கடிதத்தில் அவர் வரைந்துள்ளார்.

    இந்த கடிதத்தை கிழிந்த நிலையில்தான் போலீசார் கைப்பற்றி ஒட்ட வைத்துள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, ‘‘தற்கொலை செய்து கொள்ளும் முன்பு மாணவியே 3 கடிதங்களையும் எழுதி இருக்கிறார். அதில் ஒரு கடிதத்தை அவரே கிழித்து போட்டுள்ளார்’’ என்று தெரிவித்தனர்.

    கடிதத்தில் சில இடங்களில் எதையோ எழுதிவிட்டு முழுமையாக அழித்துள்ளார்.

    இந்த வழக்கில் அதில் இடம்பெற்றுள்ள விவரங்களே முக்கிய ஆதாரங்களாக இருக்கும் என்று போலீசார் கருதுகிறார்கள். தன்னை தற்கொலைக்கு தூண்டியவர்களின் பெயர்களை எழுதிவிட்டு பின்னர் அவற்றை மாணவி அழித்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

    இதுதொடர்பாக விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

    இதையும் படியுங்கள்...தமிழ் சினிமாவில் சாதி இருக்கிறது - கமல் பேச்சுக்கு பா.ரஞ்சித் பதில்

    அமைச்சர்கள் சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உண்மை நிலவரத்தை எடுத்துக் கூறினர்.
    காஞ்சிபுரம்:

    சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்கள், விடுதியில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டதும் வாந்தி- மயக்கம் ஏற்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

    சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 8 பெண்கள் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. அந்த பெண் ஊழியர்கள் கெட்டுப்போன உணவு சாப்பிட்டு இறந்து இருக்கலாம் என்ற தகவல் தொழிலாளர்கள் மத்தியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஆத்திரம் அடைந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்-ஆண் தொழிலாளர்கள் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்   மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு முதல் விடிய விடிய நடந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். தொழிலாளர்கள் மாயமானது தொடர்பாக வதந்தியை பரப்பிவிட்டுள்ளனர். எனவே யாரும் அதை நம்ப வேண்டாம். யாரும் மாயமாகவில்லை என்றார். அத்துடன் மாயமானதாக கூறப்படும் ஒரு பெண்ணிடம் வீடியோ காலில் கலெக்டர் ஆர்த்தி தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். 

    இதேபோல் அமைச்சர்கள் சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோரும் வந்து பேச்சுவார்த்தை நடத்தி உண்மை நிலவரத்தை எடுத்துக் கூறினர். இதையடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். சுமார் 12 மணி நேரம் நீடித்த சாலை மறியல் முடிவுக்கு வந்ததையடுத்து, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தொடங்கியது. 
    மாயமானதாக கூறப்பட்ட பெண்ணுக்கு எதுவும் ஆகவில்லை, நன்றாக இருக்கிறார் என்பதை சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் கலெக்டர் தெளிவுப்படுத்தினார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரில் சுமார் 20 ஆயிரம் பேர் சாலை மறியல் செய்கிறார்கள் என்ற தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி சம்பவ இடத்துக்கு விரைந்தார். அங்கு சாலை மறியலில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்.

    அப்போது 8 பேர் மாயமாகிவிட்டதாக சாலை மறியலில் ஈடுபட்டு இருந்தவர்கள் கூறினார்கள். இதையடுத்து அவர்களுக்கு கலெக்டர் ஆர்த்தி விளக்கம் அளித்தார்.

    சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள்


    அவர் கூறுகையில், “தொழிலாளர்கள் மாயமானது தொடர்பாக வதந்தியை பரப்பிவிட்டுள்ளனர். எனவே யாரும் அதை நம்ப வேண்டாம். யாரும் மாயமாகவில்லை” என்றார்.

    ஆனால் சாலை மறியலில் ஈடுபட்டு இருந்தவர்கள் கலெக்டர் ஆர்த்தி கூறியதை முதலில் நம்ப மறுத்தனர். இதைத்தொடர்ந்து மாயமானதாக கூறப்பட்ட ஒரு பெண்ணிடம் வீடியோ காலில் கலெக்டர் ஆர்த்தி தொடர்பு கொண்டார். அவரிடம் நலம் விசாரித்தார்.

    மாயமானதாக கூறப்பட்ட பெண்ணுக்கு எதுவும் ஆகவில்லை. நன்றாக இருக்கிறார் என்பதை சாலை மறியலில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் கலெக்டர் ஆர்த்தி தெளிவுப்படுத்தினார். வீடியோ காலில் பேசிய காட்சிகளையும் காண்பித்து விளக்கம் அளித்தார்.

    பின்னர் அவர் அங்கிருந்தவர்கள் மத்தியில் பேசியதாவது:-

    உணவு சாப்பிட்டு பாதிக்கப்பட்டவர்களில் 2 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். 4 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். எனவே தொழிலாளிகள் மாயமாகி விட்டதாக சொல்வதை யாரும் நம்ப வேண்டாம்.

    விடுதி காப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் நிறுவன விடுதிகளில் தங்கி இருப்பவர்களுக்கு சுகாதாரமான உணவு வழங்கப்படுகிறதா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

    எனவே போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள்.

    இவ்வாறு கலெக்டர் ஆர்த்தி கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் சமரசமாகி அங்கிருந்து கலைந்து சென்றனர்.


    ×