search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை மறியல்
    X
    சாலை மறியல்

    குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

    காஞ்சிபுரம் செவிலிமேடு மேட்டுக்காலணி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் செவிலிமேடு மேட்டுக்காலணி பகுதியில் 126 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக மாநகராட்சி நிர்வாகம் சரிவர குடிநீர் வழங்கவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு முறையாக குடிநீர் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி காலி குடங்களுடன் காஞ்சிபுரத்திலிருந்து ஓரிக்கை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    அண்மையில் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குடிநீர் எடுத்துச் செல்லும் குழாய்கள் வெள்ளத்தில் அடித்து சென்று விட்டதால் குடிநீரை முறையாக வினியோகம் செய்ய முடியவில்லை எனவும் புதிய குழாய்கள் அமைக்கும் பணிநடைபெற்று வருவதாகவும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    Next Story
    ×