என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் துணைமின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் வருகிற 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரம் மற்றும் நகரத்தை ஒட்டியுள்ள பாலியர்மேடு, திருகாலிமேடு, வெள்ளைகேட், காரைப்பேட்டை, கூரம், கீழம்பி, திம்மசமுத்திரம், கே.வி.வேளியூர் துணை மின் நிலையங்களைச் சேர்ந்த கிராமங்களிலும் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும். இந்த தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் காஞ்சிபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் சரவணதங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மதியம் முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து கனமழை கொட்டிதீர்த்தது. இதன் காரணமாக அனைத்து சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன.
இதனால் விமான பயணம் மேற்கொள்ள வேண்டியவர்கள் சரியான நேரத்திற்கு விமான நிலையம் வர முடியவில்லை. பயணிகள் மட்டுமின்றி விமானிகள், விமான பணிப்பெண்கள், விமான பொறியாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் சரியான நேரத்திற்கு விமான நிலையத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
நேற்று இரவு 7 மணிமுதல் இன்று அதிகாலை 1.30 மணி வரை 20 விமானங்கள் சுமார் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றது.
சென்னையில் இருந்து இலங்கை செல்லும் 4 விமானங்கள், துபாய், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய 7 சர்வதேச விமானங்களும், டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், புவனேஸ்வர், கோவை உள்ளிட்ட 13 உள்நாட்டு விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
ஆனால் சென்னைக்கு வரவேண்டிய விமானங்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வழக்கம்போல் வந்தன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாபெரும் மரம் வளர்ப்பு மூலம் ஊரக பகுதிகளில் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளக் கூடிய வகையில் பசுமை பகுதியினை மேம்படுத்தும் நோக்கிலும், பழம்தரும் மரங்கள், தீவனம் சார்ந்த மரங்கள் மற்றும் பொருளாதார அடிப்படையில் பயன் தரும் மரங்கள் ஆகியவற்றை நட திட்டமிடப்பட்டது.
அதன்படி ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்று நட திட்டமிடப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கீழ்கதிர்ப்பூர் ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மரக்கன்று நட்டு இதனை தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 23 ஆயிரத்து 210 மரக்கன்றுகளும், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 20 ஆயிரத்து 26 மரக்கன்றுகளும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒனறியத்திற்குட்பட்ட பகுதிகளில் 15 ஆயிரத்து 493 மரக்கன்றுகளும், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட பகுதிகளில் 10 ஆயிரத்து 797 மரக்கன்றுகளும் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகிளில் 30 ஆயிரத்து 240 மரக்கன்றுகளும் நடப்பட்டது.
இதில் நாவல் 20 ஆயிரத்து 430, புளியன் 15 ஆயிரத்து 250, வேம்பு 8 ஆயிரத்து 680, பூவரசன் 8 ஆயிரத்து 560, நெல்லி 6 ஆயிரத்து 140, புங்கன் 6 ஆயிரத்து 100, கொய்யா 3 ஆயிரத்து 500, பொன்னாரை 3 ஆயிரம், இலுப்பை 2 ஆயிரத்து 160, மாதுளை 2 ஆயிரத்து 90, குலமோகர் 1,580, நொச்சி 1,250, காட்டுவா 1,100, பாதாம் 1,090, வாகை 1,010, பலா 1000, தகரை 1,000 எண்ணிக்கையில் நடப்பட்டு உள்ளது.
நிகழ்ச்சியில் எழிலரசன் எம்.எல்.ஏ, காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவர் மலர்க்கொடி குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலந்தூர்:
ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து பட்டை தீட்டப்படாத வைரக்கற்கள் விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
டி.ஆர்.ஐ. அதிகாரிகள் சென்னை விமானநிலைய சுங்கத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதோடு டி.ஆர்.ஐ. மற்றும் சுங்கத்துறையினா இணைந்து சென்னை விமான நிலையத்தில் சர்வதேச விமான பயணிகளை, குறிப்பாக ஆப்பிரிக்கா நாடுகளிலிருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் துபாயில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் பயணிகளை சோதனை செய்தனர், மும்பையை சேர்ந்த 35 வயது ஆண் பயணிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரண்பாடாக தகவல் அளித்தார்.
அவர் ஆப்பிரிக்கா நாடான காங்கோவிலிருந்து துபாய் வழியாக சென்னை வந்திருந்தது தெரியவந்தது.
அந்த பயணியை தனி அறையில் வைத்து சோதனை செய்தனர். அப்போது அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 3 பாலிதீன் கவர்களை எடுத்து பிரித்து பார்த்தனர்.
அதனுள் பட்டை தீட்டப்படாத வைரக் கற்கள் 717.95 கேரட் இருந்ததை கண்டுப்பிடித்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.10.88 லட்சம் ஆகும்.
இதையடுத்து அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாமல்லன் நகர் அருகே உள்ள மாருதி நகரில் வசித்து வருபவர் மேகநாதன். இவர் உள்ளாட்சி நிதித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
கடந்த 23-ந்தேதி இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் 80 பவுன் நகை, 1 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. அவர்கள் கொள்ளை நடந்த வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் கொள்ளையில் ஈடுபட்டது காஞ்சிபுரம் ஏகாம்பரபுரம் பகுதியை சேர்ந்த உறவினரான சந்தான கிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள், சாலவாக்கத்தை சேர்ந்த கவுதம், சிவக்குமார் என்பது தெரிந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 44 பவுன் நகை, 31 கிராம் வெள்ளி, ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த அயப்பாக்கம் ஊராட்சி உள்ள வெள்ளாளர் தெருவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் வட்ட வழங்கள் அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அங்கு சென்ற வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் தனி வருவாய் அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் அந்த பகுதியில் ஒரு வீட்டின் பின்புறத்தில் சென்றனர் அப்போது அங்கே நின்று கொண்டிருந்த 4 பேர் அதிகாரிகள் வருவதை அறிந்து தப்பி ஓடிவிட்டனர்
அங்கு சோதனை செய்த போது பிறகு 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைப்பட்டு இருந்தது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.
ரேஷன் அரிசி பதுக்கல் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






