search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சார நிறுத்தம்
    X
    மின்சார நிறுத்தம்

    காஞ்சிபுரத்தில் 4-ந்தேதி மின்தடை

    காஞ்சிபுரத்தில் 4-ந்தேதி மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் துணைமின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் வருகிற 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரம் மற்றும் நகரத்தை ஒட்டியுள்ள பாலியர்மேடு, திருகாலிமேடு, வெள்ளைகேட், காரைப்பேட்டை, கூரம், கீழம்பி, திம்மசமுத்திரம், கே.வி.வேளியூர் துணை மின் நிலையங்களைச் சேர்ந்த கிராமங்களிலும் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும். இந்த தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் காஞ்சிபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் சரவணதங்கம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×