என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் பலி
    X
    வாலிபர் பலி

    மீன்பிடிக்க சென்றபோது ஏரியில் தவறி விழுந்து வாலிபர் பலி

    மீன்பிடிக்க சென்றபோது ஏரியில் தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்திரமேரூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி வேடபாளையம் மெயின் ரோடு தெருவில் வசித்து வந்தவர் பச்சையப்பன் (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை.

    இவர் நேற்று காலை நண்பர்களுடன் அருகிலுள்ள உத்திரமேரூர் ஏரியில் மீன்பிடிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏரியின் மதகில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. அவரை மீட்ட நண்பர்கள் உடனடியாக உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் பச்சையப்பனில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×