என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுங்குவார்சத்திரத்தை சேர்ந்த பிரபல ரவுடிக்கு ஆதரவாக செயல்பட்ட போலீஸ்காரர் அதிரடி கைது
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டத்துக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், படப்பை, சுங்குவார்சத்திரம் பகுதிகளில் தொழிற் சாலைகளில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்தை தடுக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் மேற்பார்வையில் கட்டப்பஞ்சாயத்து ஒழிப்பு பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் கூடுதல் டி.எஸ்.பி. வெள்ளத்துரை நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பொறுப்பேற்ற பிறகு கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளை பிடிக்க அதிரடி வேட்டை நடைபெற்று வருகிறது. இதனால் ரவுடிகள பலர் தலைமறைவாக உள்ளனர்.
இந்தநிலையில் சுங்குவார்சத்திரத்தை சேர்ந்த பிரபல ரவுடியான குணாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஆயுதப்படை போலீஸ்காரர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏ பிளஸ் ரவுடியான குணாவுக்கு ஆதரவாக செயல்பட்டு கீரநல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை மிரட்டி நிலத்தை அபகரிக்க முயன்றதாக காவலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையிலேயே காவலர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதே குற்றச்சாட்டின் பேரில் மேலும் 2 காவலர்கள் மீதும் புகார் கூறப்பட்டுள்ளது. அவர்கள் மீதும் விரைவில் நடவடிக்கை பாயும் என தெரிகிறது.






