என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஈஸ்வரன் (வயது 43).
இவரது சொந்த ஊர் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள உஜ்ஜங்கனூர் ஆகும். ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வுக்கும் கோபி அருகே உள்ள உக்கரத்தை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகள் சந்தியா (23) என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சந்தியா எம்.சி.ஏ. வரை படித்துள்ளார்.
இதற்காக திருமணம் பத்திரிகை அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. மணமகள் வீட்டிலும் மற்றும் ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வும் அவரது உறவினர்களும் கடந்த ஒரு வாரமாக திருமண பத்திரிகையை கொடுத்து வந்தனர்.
வருகிற 12-ந்தேதி (புதன்கிழமை) ஈஸ்வரன் எம்.எல்.ஏ-சந்தியா திருமணம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் நடக்க இருந்தது.
அன்று காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை முகூர்த்தம் வைக்கப்பட்டிருந்தது.
திருமணத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்வதாக இருந்தது.

ஆனால் மணமகள் சந்தியா அக்கா வீட்டுக்கு போகவில்லை மாயமாகி விட்டார். கடந்த 2 நாட்களாக சந்தியாவை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சந்தியாவின் தாயார் தங்கமணி கடத்தூர் போலீசில் புகார் செய்தார்.
புகாரில் எனது மகள் அவளது அக்கா வீட்டுக்கு போய்வருவதாக கூறி கொண்டு சென்றவள் எங்கு சென்றாள்? என்று தெரியவில்லை. அவளை கண்டு பிடித்து தாருங்கள் என்று கூறி உள்ளார்.
மாயமான மணமகள் சந்தியா திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள கொளத்துபாளையத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரிடம் பழகி வந்துள்ளார். அவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அவருடன்தான் சந்தியா சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
சந்தியாவின் தாயார் அளித்த புகாரிலும் இதை தெரிவித்துள்ளார். தனது மகளுக்கும் விக்னேஷ் என்பவருக்கும் தொடர்பு இருந்ததாகவும் புகாரில் தெரிவித்து உள்ளார்.
இந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #EswaranMLA
ஈரோடு:
ஈரோட்டில் சமீபகாலமாக குழந்தைக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் மட்டும் குழந்தைக்கு எதிராக பாலியல் தொந்தரவு சம்பந்தமாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றும் 6 வயது சிறுமியை 50 வயதான கட்டிட தொழிலாளி பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 50). கட்டிட தொழிலாளி இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை தங்கராஜ் 6 வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இது குறித்து வெளியே கூறினால் உன்னை கொன்று விடுவதாக அந்த சிறுமியை மிரட்டி உள்ளார். எனினும் தனக்கு நடந்த கொடூரம் குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே கூறினாள்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அவர்கள் இந்த வழக்கை ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர்.
ஈரோடு மகளிர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தங்கராஜ் திடீரென மாயமானார் அவரை போலீசார் தேடி வந்தனர், இந்நிலையில் ஈரோடு காளைமாடு சிலை அருகே இன்று தங்கராஜ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் தங்கராஜ கைது செய்தனர்.
அந்தியூர்:
அந்தியூர் பஸ் நிலையம் அருகே பவானி செல்லும் ரோட்டில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் ஊட்டியைச் சேர்ந்த சேகர் (வயது21) என்ற வாலிபர் சப்ளையராக வேலை பார்த்து வந்தார்.
இந்தி நிலையில் சேகர் தனது ஊருக்கு போக வேண்டும் ரூ.10 ஆயிரம் பணம் தாருங்கள் என கேட்டாராம். அதற்கு உரிமையாளர் திடீரென கேட்டால் எப்படி...நாளை தருகிறேன் என்று கூறினாராம்.
ஓட்டல் எதிரே தொழிலாளிகள் தங்கும் விடுதி உள்ளது. வழக்கம் போல் சேகர் விடுதிக்கு சென்று விட்டார்.
இதற்கிடையே இன்று காலை அவர் தங்கி இருந்த மாடி அறையில் இருந்து குழாயில் தண்ணீர் கீழே கொட்டியபடி இருந்தது. அந்த வழியாக நடந்து சென்றவர்கள் இதை கண்டு மேலே இருப்பவர்களிடம் தெரிவித்தனர்.
உடனடியாக அந்த அறையை ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது உள்ளே தொழிலாளி சேகர் தனது அறையில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
இது குறித்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு அறையில் தூக்குபோட்டு பிணமாக தொங்கிய சேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொழிலாளி சேகர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ன காரணம் என உடனடியாக தெரியவில்லை.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்
இன்று காலையில் நடந்த இந்த சம்பவத்தால் அந்தியூர் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு கூட்டமும் கூடியது. போலீசார் அவர்களை கலைந்து போகும்படி கூறினர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள தண்ணீர் பந்தல் புதூரை சேர்ந்த பூபதி என்பவரின் மகள் பவித்ரா (வயது15). முருகேசன் மகள் பவிஸ்ஷினி(15) மேலும் கூகலூரை சேர்ந்த மற்றொரு முருகேசன் என்பவரின் மகள் தர்ஷினி(15).
மாணவிகள் 3 பேரும் கோபியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.
நேற்று சனிக்கிழமை எங்களுக்கு பள்ளியில் ஸ்பெஷல் கிளாஸ் உள்ளது என கூறி 3 மாணவிகள் பள்ளிக்கு சென்றனர். ஆனால் மாலையில் வீட்டுக்கு திரும்பவில்லை.
பள்ளிக்கு போவதாக கூரிய 3 மாணவிகளும் பள்ளி செல்லவில்லை. நேராக ஈரோட்டுக்கு பஸ்சில் சென்றனர். பிறகு பல இடங்களை பார்த்து விட்டு வரலாம் என ஈரோடு ரெயில் நிலையத்துக்கு சென்றனர். எங்கே செல்வது... எந்த ஊருக்கு போவது..? என தவித்த 3 மாணவிகளும் திடீரென மனதை மாற்றிக் கொண்டு மீண்டும் பஸ் ஏறி கோபிக்கே வந்தனர்.
பள்ளிக்கு போவதாக கூறி வெளியே சென்ற தங்களை பெற்றோர் திட்டு வார்களோ...என பயந்து வீட்டுக்கு போகாமல் அங்கிருந்த ஒரு மண்டபத்தில் தங்கினர்.
பிறகு திடீரென அவர்கள் தற்கொலை செய்ய முடிவு செய்து பினாயிலை குடித்து விட்டனர். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கோபியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு 3 மாணவிகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
முன்னதாக மாணவிகளின் பெற்றோர் இது குறித்து கோபி போலீசில் புகார் செய்தனர். போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில் 3 மாணவிகளும் மீட்கப்பட்டு உள்ளனர்.
கோபி இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் மற்றும் போலீசார் 3 மாணவிகளுக்கும் அறிவுரை கூறி பெற்றோரிடம் சேர்த்து வைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு ரெயில்வே காலனியில் இன்று காலை அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ரெயில்வே மிஸ்ட் ஸ்கூல் அருகே கருப்பு கலர் டிராவல் ’பேக்’ ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தது. இதை பார்த்து அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் அதில் ஏதாவது மர்ம பொருட்கள் இருக்குமோ என பயந்தனர்.
இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கும் சூரம்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ‘பேக்’கை திறந்து அதில் உள்ள பொருட்களை சோதனையிட்டனர்.
அப்போது அந்தப் ‘பேக்’குக்குள் தினேஷ் குமார் ராமமூர்த்தி நகர், ஈரோடு என்று எழுதப்பட்ட அடையாள அட்டை இருந்தது. மேலும் கணேஷ் ஈரோடு என்ற பெயரும் இருந்தது. இதையடுத்து அந்த அடையாள அட்டையில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு போலீசார் பேசினர்.
அப்போது அந்த பேக் ஈரோடு ஜோசியர் கணேஷ் உடையது என்பது தெரியவந்தது. கணேஷ் சென்னைக்கு கூரியர் பார்சல் அனுப்புவதற்காக தினேஷ்குமார் என்பவரிடம் இந்த பேக்கை கொடுத்துள்ளார்.
அவர் பார்சல் அனுப்பு வதற்காக ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்த போது அந்த பேக்கை மர்ம நபர் யாரோ திருடிச் சென்று விட்டனர். இது குறித்து அவர் ஈரோடு ரெயில்வே நிலையபோலீசில் புகார் கொடுத்து சென்று விட்டார்.
இந்நிலையில்தான் அந்த பேக் இன்று காலை ஈரோடு ரெயில்வே காலனியில் உள்ள ரெயில்வே மிஸ்டு ஸ்கூல் அருகே கிடந்துள்ளது.
இதையடுத்து போலீசார் அந்த ‘பேக்’கை கணேஷிடம் ஒப்படைத்தனர், இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10-1-2018 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது மொத்தம் 18 லட்சத்து 37ஆயிரத்து 652 வாக்காளர்கள் இருந்தனர்.
அந்த வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்காதவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்கவும், நீக்க விரும்புபவர்கள் நீக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
அதன்படி பலர் விண்ணப்பம் செய்திருந்தனர். அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு புதிய வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அந்த பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
பட்டியலை மாவட்ட கலெக்டர் கதிரவன் வெளியிட்டார். நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் சீனி அஜ்மல்கான், கலெக்டரின் நேர்முக உதவியாளர் நர்மதா தேவி, பல்துறை அதிகாரிகள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
புதிய பட்டியலின்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 1098 பேர் சேர்க்கப்பட்டு, 272 பேர் நீக்கப்பட்டனர். ஈரோடு மேற்கு தொகுதியில் 1754 பேர் சேர்க்கப்பட்டு, 425 பேர் நீக்கப்பட்டனர்.
மொடக்குறிச்சி தொகுதியில் 1005 பேர் சேர்க்கப்பட்டு, 446 பேர் நீக்கப்பட்டனர். பெருந்துறை தொகுதியில் 223 பேர் சேர்க்கப்பட்டு, 42 பேர் நீக்கப்பட்டனர்.
பவானி தொகுதியில் 780 பேர் சேர்க்கப்பட்டு, 243 பேர் நீக்கப்பட்டனர். அந்தியூர் தொகுதியில் 419 பேர் சேர்க்கப்பட்டு, 65 பேர் நீக்கப்பட்டனர்.
கோபி தொகுதியில் 875 பேர் சேர்க்கப்பட்டு, 787 பேர் நீக்கப்பட்டனர். பவானிசாகர் தொகுதியில் 961 பேர் சேர்க்கப்பட்டு, 97 பேர் நீக்கப்பட்டனர்.
ஆக மொத்தமாக மாவட்டம் முழுவதும் 7 ஆயிரத்து 115 பேர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டனர். 2 ஆயிரத்து 377 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
புதிய வாக்காளர் பட்டியலில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள 8 தொகுதிகளிலும் மொத்தம் 18 லட்சத்து 42 ஆயிரத்து 390 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் 9 லட்சத்து 4 ஆயிரத்து 432 ஆண்களும், 9 லட்சத்து 37 ஆயிரத்து 888 பெண்களும் அடங்குவர். ஆண்களைவிட பெண்களே அதிகமாக உள்ளனர். மற்றவர்கள் 70 பேர் உள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை விட இந்த புதிய பட்டியலில் புதிதாக 4738 வாக்காளர்கள் சேர்ந்துள்ளனர்.
இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 980 வாக்காளர்களும், ஈரோடு மேற்கு தொகுதியில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 103 வாக்காளர்களும் உள்ளனர்.
மொடக்குறிச்சி தொகுதியில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 960 வாக்காளர்களும், பெருந்துறை தொகுதியில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 15 வாக்காளர்களும் இடம் பெற்றுள்ளனர்.
பவானி தொகுதியில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 687 வாக்காளர்களும், அந்தியூர் தொகுதியில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 666 வாக்காளர்களும் உள்ளனர்.
கோபி தொகுதியில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 616 வாக்காளர்களும், பவானி சாகர் 2 லட்சத்து 43 ஆயிரத்து 363 வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பவானி, காலிங்கராயன்பாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 66). மஞ்சள் பைகளுக்கு சாயமேற்றும் தொழிலாளி.
சளி தொல்லையாள் இவர் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை சோதித்தபோது அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. எனவே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அவர் சிசிச்சை பலனின்றி கடந்த வாரம் இறந்தார். இதையடுத்து அவர் வசித்து வந்த பாரதிநகர் பகுதி மக்கள் மத்தியில் பன்றி காய்ச்சல் பீதி ஏற்பட்டது.
எனவே சுகாதாரதுறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். முருகன் வசித்து வந்த பாரதி நகருக்கு மருத்துவ குழு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த குழுவினர் அந்த பகுதியில் வேறு யாருக்காவது பன்றி காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.
ஆனால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இது குறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் சவுண்டம்மாள் கூறியதாவது:-
பன்றி காய்ச்சலால் இறந்த முருகன் அடிக்கடி வெளியூருக்கு சென்று வந்துள்ளார். எனவேதான் அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த பகுதியில் டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் முகாமிட்டு ஆய்வு நடத்தினர். காய்ச்சல் உள்ளிட்ட பிற பாதிப்புகள் உள்ளவர்களை கண்டறிந்து அவர்கள் முழுமையாக பரிசோதித்தோம். ஆனால் வேறுயாருக்கும் பன்றி காய்ச்சல் பாதிப்பு, அறிகுறிகள் இல்லை. எனவே பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம்.
தும்மல், இருமல் மூலமாக மனிதர்களால்தான் இந்த காய்ச்சல் பரவும். பன்றிகள் மூலம் பன்றி காய்ச்சல் பரவுவதில்லை. இறந்த முருகன் வசித்த பகுதியில் பன்றிகள் இல்லை.
மருத்துவ குழுவினர் தேவைப்பட்டவர்களுக்கும், பிற நோய் பாதிப்பு இருந்தவர்களுக்கும் மருந்துகள் வழங்கினர். மாவட்டத்திலும் வேறெங்கும் பன்றி காய்ச்சல் பாதிப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
கோபி:
கோபி அருகே உள்ள ஒத்தக்குதிரையில் ஓட்டல் நடத்தி வருபவர் ஆனந்த ஜோதி. நேற்று இரவு வியாபாரம் முடிந்து ஓட்டலை பூட்டிவிட்டு சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை ஓட்டல் திறக்கப்பட் டது. உணவு தயாரிக்க ஊழியர்கள் தயார் ஆனார்கள்.
அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஊழியர்கள் ஓட்டம் பிடித்தனர். தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். கோபி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர். இந்த நிலையில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது. ஆனால் சேதம் ஏதும் ஏற்படவில்லை. கியாஸ் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 37). கட்டிட தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி அம்சவேணியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை அன்பரசன் புஞ்சை புளியம்பட்டிக்கு சென்றார்.

அவர்கள் அன்பரசன் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது அன்பரசன் அங்கு கட்டிலில் படுத்திருந்தார். அவரிடம் உறவினர்கள் கேட்டனர்.
தான் எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயற்சித்ததாக அன்பரசன் கூறியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அன்பரசன் வீட்டிற்கு செல்வதாக கூறி ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறிவிட்டார். அப்போதுதான் அவர் எலி மருந்து சாப்பிட்டதாக கூறி நாடகமாடியது தெரிய வந்தது.
இது குறித்து அவரது உறவினர்களிடம் கேட்டபோது, ‘‘அன்பரசன் மதுபோதையில் அவ்வப்போது சண்டை போடுவது வழக்கம். அதே போலத்தான் தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டி விட்டு தற்கொலைக்கு முயற்சித்ததுபோல் நாடகமாடியுள்ளார்’’ என்றனர்.
இதற்கிடையே எப்படி தனது படத்தை கொடுத்து அன்பரசன் போஸ்டர் அடித்தார் என்ற சந்தேகம் எழுந்தது. இது பற்றி விசாரித்தபோது ருசிகர தகவல் கிடைத்தது.
போஸ்டர் அடிக்க அன்பரசன் கடைக்கு சென்ற போது அங்கிருந்தவர்கள் படத்தில் இருப்பதும் அன்பரசனும் ஒன்றுபோல் இருந்ததால் சந்தேகம் அடைந்தனர்.
எனவே இது பற்றி அன்பரசனிடம் கேட்டுள்ளனர். அதற்கு அன்பரசன், அந்த படத்தில் இருப்பது தனது அண்ணன் என்று கூறி உள்ளார். எனவேதான் கடைக்காரர்கள் போஸ்டர் அச்சடித்து கொடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த பங்களாப்புதூரில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று முன்தினம் 3 பேர் சாப்பிட சென்றனர். பின்பு அதில் ஒருவர் சாப்பிட்டதற்கான பில் தொகைக்காக ரூ.2 ஆயிரத்தை ஓட்டல் உரிமையாளரிடம் கொடுத்தார். அது கள்ளநோட்டாக இருக்குமோ? என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது.
தொடர்ந்து அவர்கள் 3 பேரும் திடீரென அங்கிருந்து ஓடினார்கள். இதனால் ஓட்டல் உரிமையாளர் சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் அவர்களை விரட்டி சென்று பிடித்து பங்களாப்புதூர் போலீசில் ஒப்படைத்தார்கள்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திருப்பூரை சேர்ந்த சதீஷ் (வயது 32), பெருமாநல்லூர் கணக்கரசம்பாளையத்தை சேர்ந்த கோகுல் (31), புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (33) என்பது தெரியவந்தது.
3 பேரும் நண்பர்கள். திருப்பூரில் உள்ள பிரிண்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்த அவர்கள் வேலையை விட்டுவிட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு டி.என்.பாளையம் வந்தனர். வேலைக்கு செல்வதாக கூறி அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை 3 பேரும் வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.
தொடர்ந்து வீட்டில் வைத்து 100 ரூபாய் நோட்டுகள், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து கடந்த 2 நாட்களாக புழக்கத்தில் விட்டு வந்துள்ளனர். அதில் ஒரு 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை புழக்கத்தில் விட முயன்றபோதுதான் 3 பேரும் சிக்கிக்கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஜெராக்ஸ் எந்திரம், மடிக்கணினி, பிரிண்டர், 100 ரூபாய் கள்ளநோட்டுகள் 58, 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் 31 என மொத்தம் 67 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்கள் வேறு எங்கெல்லாம் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர்? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொடுமுடி:
கொடுமுடி அருகே பாசூர் அடுத்த வேங்கியாம் பாளையம் கிராமத்தை சேர்ந்த வரதன். இவரது மகன் வீராசாமி (28). இவருக்கு இன்னும் திருமண மாகவில்லை. கூலி வேலை செய்து வருகிறார்.
வீராசாமி பாசூரில் இருந்து சோளங்கா பாளையம் செல்லும் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் 108 ஆம்பு லன்சு மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வீராசாமியை பரிசோதணை செய்த டாக்டர்கள் வீராசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து மலையம் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ மாணிக்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகம் பின்புறம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ரூ.54.61 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் பூமி பூஜையும் இன்று காலை நடந்தது. விழாவில் தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது.-

அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி தமிழகத்தில் 412 நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இதில் 3200 ஆசிரியர்-ஆசிரியைகள் இடம் பெற்று கற்றுக் கொடுப்பார்கள். மாணவ-மாணவிகளுக்கு காணொலி காட்சி மூலம் நீட் பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
விழாவில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், சத்தி நகராட்சி கமிஷனர் சுபா, துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #MinisterSenkottaiyan #NEETexam #NEETtraining






