search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student suicide try"

    • காயம் அடைந்த தருணை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆலந்தூர்:

    வடபழனி, மசூதி தெருவை சேர்ந்தவர் தருண். இவர் மீனம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பி.சி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறார். தினமும் மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து வடபழனிக்கு மெட்ரோ ரெயிலில் சென்று வருவது வழக்கம். நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக தருண் மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வந்து நடை மேடையில் காத்திருந்தார்.

    அப்போது மெட்ரோ ரெயில் வந்தபோது திடீரென தருண் ரெயில் முன்பாய்ந்தார். என்ஜின் முன்பு சிக்கிய அவரை சிறிது தூரம் மெட்ரோ ரெயில் இழுத்து சென்று நின்றது. இதில் பலத்த காயம் அடைந்த தருண் அலறி துடித்தார். இதனை கண்டு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய இருந்த பயணிகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். உடனடியாக பலத்த காயம் அடைந்த தருணை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மாணவர் தருணின் பெற்றோர் சினிமா துறையில் வேலை பார்த்து வருகிறார்கள். தருண் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருததாக தெரிகிறது. இதனால் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. நடைமேடையில் நிற்பதற்காக மெட்ரோ ரெயில் குறைந்த வேகத்தில் வந்ததால் அவர் பலத்த காயத்துடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். இது குறித்து மீன்பாக்கம் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி அருகே மாயமான 10-ம் வகுப்பு மாணவிகள் 3 பேர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள தண்ணீர் பந்தல் புதூரை சேர்ந்த பூபதி என்பவரின் மகள் பவித்ரா (வயது15). முருகேசன் மகள் பவிஸ்ஷினி(15) மேலும் கூகலூரை சேர்ந்த மற்றொரு முருகேசன் என்பவரின் மகள் தர்ஷினி(15).

    மாணவிகள் 3 பேரும் கோபியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    நேற்று சனிக்கிழமை எங்களுக்கு பள்ளியில் ஸ்பெ‌ஷல் கிளாஸ் உள்ளது என கூறி 3 மாணவிகள் பள்ளிக்கு சென்றனர். ஆனால் மாலையில் வீட்டுக்கு திரும்பவில்லை.

    பள்ளிக்கு போவதாக கூரிய 3 மாணவிகளும் பள்ளி செல்லவில்லை. நேராக ஈரோட்டுக்கு பஸ்சில் சென்றனர். பிறகு பல இடங்களை பார்த்து விட்டு வரலாம் என ஈரோடு ரெயில் நிலையத்துக்கு சென்றனர். எங்கே செல்வது... எந்த ஊருக்கு போவது..? என தவித்த 3 மாணவிகளும் திடீரென மனதை மாற்றிக் கொண்டு மீண்டும் பஸ் ஏறி கோபிக்கே வந்தனர்.

    பள்ளிக்கு போவதாக கூறி வெளியே சென்ற தங்களை பெற்றோர் திட்டு வார்களோ...என பயந்து வீட்டுக்கு போகாமல் அங்கிருந்த ஒரு மண்டபத்தில் தங்கினர்.

    பிறகு திடீரென அவர்கள் தற்கொலை செய்ய முடிவு செய்து பினாயிலை குடித்து விட்டனர். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கோபியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு 3 மாணவிகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    முன்னதாக மாணவிகளின் பெற்றோர் இது குறித்து கோபி போலீசில் புகார் செய்தனர். போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில் 3 மாணவிகளும் மீட்கப்பட்டு உள்ளனர்.

    கோபி இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் மற்றும் போலீசார் 3 மாணவிகளுக்கும் அறிவுரை கூறி பெற்றோரிடம் சேர்த்து வைத்தனர்.

    திண்டுக்கல் அருகே ஆசிரியர் கண்டித்ததால் 2 மாணவிகள் வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். #Suicidetry

    கொடைரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு டோல்கேட் அருகே கொழிஞ்சிப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி நடுநிலைப்பள்ளியாக இருந்து நடப்பு கல்வி ஆண்டில்தான் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்தது. இத்தேர்வில் தமிழ்பாடத்தில் சில மாணவிகள் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தனர்.

    பள்ளியின் 10-ம் வகுப்பு தமிழ் ஆசிரியர் மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவிகள் சிலரை கடுமையாக கண்டித்ததுடன் கன்னத்தில் அடித்துள்ளார்.

    கொழிஞ்சிப்பட்டியைச் சேர்ந்த பழனி மகள் கவுசல்யாதேவி (வயது 15), கள்ளிப்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் மகள் அங்காளஈஸ்வரி (15) ஆகிய 2 பேரும் ஆசிரியர் தங்களை வகுப்பறையில் சக மாணவிகள் மத்தியில் அடித்ததால் மனவேதனையடைந்தனர்.

    நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்லாமல் காட்டு பகுதியில் இருந்த அரளி விதையை அரைத்து சாப்பிட்டனர். பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராத தங்களது குழந்தைகளை தேடி பெற்றோர்கள் சென்ற போது மாணவிகள் 2 பேரும் சாலை ஓரத்தில் மயங்கிய நிலையில் இருந்தனர்.

    உடனே அவர்களை கொடைரோடு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மாணவிகள் நடந்த விபரத்தை கூறவே இது குறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் அளிக்கப்பட்டது. மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தவே இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரி கொழிஞ்சிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வருகிறார்.

    திருமங்கலம் அருகே மாடியில் இருந்து குதித்த நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பேரையூர்:

    மதுரை முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மகள் சங்கீதா (வயது 18). இவர் கூடக்கோவில் அருகே எலியார்பத்தியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பயிற்சிக்காக கல்லூரியைச் சேர்ந்த மருத்துவமனைக்கு சங்கீதா சென்றார். அப்போது ஒரு வாலிபர் கடிதம் கொடுத்ததாக தெரிகிறது.

    இது குறித்து விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம் சங்கீதாவை சில நாட்களுக்கு சஸ்பெண்டு செய்தது.

    இந்த நிலையில் மீண்டும் கல்லூரி திரும்பிய சங்கீதா விடுதியின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து கூடக்கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. கல்லூரி முதல்வர் ஹெலன் பிரிட்டா, ஆசிரியை கல்பனா ஆகியோர் தற்கொலைக்கு தூண்டும் வகையில் தொல்லை கொடுத்ததாக புகாரில் சங்கீதா தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

    ×