நாளை ப்ளஸ் 2 ரிசல்ட்: தேர்வில் தோல்வி பயத்தால் மாணவி தற்கொலை

அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த ஆர்த்திகா சமீபத்தில் பொதுத்தேர்வு எழுதினார்.தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளை ப்ளஸ் 2 ரிசல்ட்: தேர்வில் தோல்வி பயத்தால் மாணவி தற்கொலை
Published on

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை சேர்ந்தவர் புண்ணிய மூர்த்தி. இவரது மகள் ஆர்த்திகா. பாபநாசத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த ஆர்த்திகா சமீபத்தில் பொதுத்தேர்வு எழுதினார்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் ஆர்த்திகா செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்த்திகா வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் ஆர்த்திகாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆர்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com