என் மலர்
ஈரோடு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:
ஜெயலலிதா வழியில் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாயின் ஆட்சி நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
கொரோனா தடுப்பு பணி சிறப்பாக உள்ளது என பிரதமரே பாராட்டும் வகையில் முதலமைச்சர் பழனிசாமியின் ஆட்சி உள்ளது.
அறைக்குள் பேசுவதை வெளியில் பேசுவது நாகரிகம் அல்ல என்பதுதான் எனது கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணையாகவும் தென்னிந்தியாவில் மிகப்பெரிய மண் அணையாகவும் விளங்குவது பவானிசாகர் அணை. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களாக மழை பெய்யாத காரணத்தால் தற்போது பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரத்து 173 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 101.80 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனப் பகுதிக்கு வினாடிக்கு 450 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 483 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 101.82 அடியாக இருந்தது. தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் மழை பெய்யாததால், பவானி ஆற்றில் பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. குடிநீருக்கு மட்டும் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் வழக்கம்போல் பாசனத்துக்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. பாசனத்துக்காக திறக்கப்பட்டு உள்ள இந்த தண்ணீர் கிளை வாய்க்கால்கள், கொப்பு வாய்கால்கள் வழியாக விவசாய விளைநிலங்களில் பாய்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை ஆனைக்கல்பாளையம் ரிங்ரோடு பகுதியில் உள்ள பெரியார் நகர் அருகே கீழ்பவானி கொப்பு வாய்க்காலில் திடீர் உடைப்பு ஏற்பட்டது.
இதனால் வாய்க்கால் தண்ணீர் ரோட்டில் ஆறாக ஓடியது. இந்த தண்ணீர் வயல்வெளிகளில் புகுந்தது. உடனடியாக உடைப்பு சரி செய்யப்படாததால் அங்குள்ள ஒரு கிணறு முழுமையாக தண்ணீரால் நிரம்பியது. கொப்பு வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால் அதற்கு பின்னர் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வது தடையானது. வாய்க்கால் கரைகள் மண்ணால் அமைக்கப்பட்டதாக இருப்பதால் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விரயமாகி வருவதாகவும், உடைப்புகளை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதியினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே மல்லியூரை சேர்ந்தவர் இளங்கோ (வயது23). மெக்கானிக்கல் என்ஜினீயர். இவரது மனைவி ரம்யா (23). இருவரும் கல்லூரியில் ஒன்றாக படிக்கும் போது காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாக இளங்கோ வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர் வீட்டுக்கு சென்று ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அப்போது இளங்கோவும்-ரம்யாவும் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணமாகி 3 மாதமே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ. இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
காதலித்து திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள அத்தாணி கரட்டுர் மேட்டை சேர்ந்தவர் மாதன். கூலி தொழிலாளி. இவருக்கு மாலதி (17), சவுந்தர்யா (16) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
மாலதி 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று விட்டு வீட்டில் இருந்து வருகிறார். சவுந்தர்யா அங்குள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி சவுந்தர்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது அக்காள் மாலதி பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது மாணவி சவுந்தர்யா தனது கையில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று பேனாவில் எழுதி இருந்தது தெரியவந்தது.
பின்னர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.






