search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது

    சத்தியமங்கலம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில் போலீசார் அங்குள்ள கடைகளில் சோதனையிட்டனர். அப்போது அங்குள்ள ரவி, கோபி ஆகியோர் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். அப்போது தினசரி மார்க்கெட்டுக்கு ராம் என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பதற்காக கொண்டு வந்ததையும் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து ரவி, கோபி, ராம் மற்றும் கோபி கடையில் வேலை செய்த சதீஷ்குமார் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ரூ.7 ஆயிரத்து 500 மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×