என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீழ்பவானி கொப்பு வாய்க்காலில் உடைப்பு- ரோட்டில் தண்ணீர் ஆறாக ஓடியது
Byமாலை மலர்1 Oct 2020 2:40 AM GMT (Updated: 1 Oct 2020 2:40 AM GMT)
கீழ்பவானி கொப்பு வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பை அதிகாரிகள் விரைந்து சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
ஈரோடு:
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. பாசனத்துக்காக திறக்கப்பட்டு உள்ள இந்த தண்ணீர் கிளை வாய்க்கால்கள், கொப்பு வாய்கால்கள் வழியாக விவசாய விளைநிலங்களில் பாய்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை ஆனைக்கல்பாளையம் ரிங்ரோடு பகுதியில் உள்ள பெரியார் நகர் அருகே கீழ்பவானி கொப்பு வாய்க்காலில் திடீர் உடைப்பு ஏற்பட்டது.
இதனால் வாய்க்கால் தண்ணீர் ரோட்டில் ஆறாக ஓடியது. இந்த தண்ணீர் வயல்வெளிகளில் புகுந்தது. உடனடியாக உடைப்பு சரி செய்யப்படாததால் அங்குள்ள ஒரு கிணறு முழுமையாக தண்ணீரால் நிரம்பியது. கொப்பு வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால் அதற்கு பின்னர் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வது தடையானது. வாய்க்கால் கரைகள் மண்ணால் அமைக்கப்பட்டதாக இருப்பதால் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விரயமாகி வருவதாகவும், உடைப்புகளை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதியினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. பாசனத்துக்காக திறக்கப்பட்டு உள்ள இந்த தண்ணீர் கிளை வாய்க்கால்கள், கொப்பு வாய்கால்கள் வழியாக விவசாய விளைநிலங்களில் பாய்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை ஆனைக்கல்பாளையம் ரிங்ரோடு பகுதியில் உள்ள பெரியார் நகர் அருகே கீழ்பவானி கொப்பு வாய்க்காலில் திடீர் உடைப்பு ஏற்பட்டது.
இதனால் வாய்க்கால் தண்ணீர் ரோட்டில் ஆறாக ஓடியது. இந்த தண்ணீர் வயல்வெளிகளில் புகுந்தது. உடனடியாக உடைப்பு சரி செய்யப்படாததால் அங்குள்ள ஒரு கிணறு முழுமையாக தண்ணீரால் நிரம்பியது. கொப்பு வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால் அதற்கு பின்னர் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வது தடையானது. வாய்க்கால் கரைகள் மண்ணால் அமைக்கப்பட்டதாக இருப்பதால் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விரயமாகி வருவதாகவும், உடைப்புகளை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதியினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X