search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு தற்கொலை"

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் குடும்பதகராறு காரணமாக நல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் தனது 2 மகன்களை வாய்க்காலில் தள்ளி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
    • மீண்டும் அதே போல் குடும்ப தகராறு காரணமாக குழந்தைகளுடன் வாய்க்காலில் குதித்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் தீபக். இவர் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக இவர் வீட்டில் இருந்து கொண்டே வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (37). இவர்களுக்கு மதுநிஷா (12), தருணிகா(6) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

    கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இந்நிலையில் விஜயலட்சுமி அவரது அண்ணன் ராமசாமிக்கு வாட்ஸ் அப்பில் ஒரு ஆடியோ அனுப்பினார். அதில் எனக்கு வாழ பிடிக்கவில்லை. மகள்களை விட்டு செல்ல விருப்பமில்லை. மன்னிச்சிடுங்க என்று தெரிவித்து இருந்தார். இதை அடுத்து விஜயலட்சுமி தனது 2 மகள்களையும் மொபட்டில் அழைத்துக் கொண்டு சென்றார். பின்னர் குருமந்தூர் அருகே உள்ள சுட்டிக்கல் என்ற பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் கரையோரத்தில் மொபட்டை நிறுத்திவிட்டு தனது 2 குழந்தைகளை கீழ்பவானி வாய்க்காலில் வீசிவிட்டு அவரும் தற்கொலைக்கு முயன்றார்.

    விஜயலட்சுமி மற்றும் 2 குழந்தைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவர்களை தேடினர். அப்போது கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் மொபட் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து உறவினர்கள் வாய்க்காலில் அவர்களை தேடினர். அப்போது அவர்கள் குதித்த இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆயிபாளையம் என்ற பகுதியில் விஜயலட்சுமியின் மூத்த மகள் மதுநிஷா கரையோரம் உள்ள மரத்தை பிடித்துக் கொண்டு அழுது கொண்டு இருந்தார். அவரை உறவினர்கள் பத்திரமாக மீட்டனர்.

    தொடர்ந்து நம்பியூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கீழ்பவானி வாய்க்காலில் தாய் மற்றும் மற்றொரு மகளை தேடினர்.

    அப்போது அவர்கள் குதித்த இடத்தில் இருந்து சுமார் 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேட்டைக்காரன்கோவில் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் விஜயலட்சுமி பிணமாக மீட்கப்பட்டார்.

    தொடர்ந்து அவரது 2-வது மகள் தருணிகாவை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் குடும்பதகராறு காரணமாக நல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் தனது 2 மகன்களை வாய்க்காலில் தள்ளி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் மீண்டும் அதே போல் குடும்ப தகராறு காரணமாக குழந்தைகளுடன் வாய்க்காலில் குதித்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சரியாக படிப்பு வராத ஷபீனா சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் இருந்த எலி பேஸ்ட் (விஷம்) தின்று உள்ளார். மறுநாள் காலையில் ஷபீனா தொடர்ச்சியாக வாந்தி எடுத்தார்.
    • இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கள்ளுக்கடைமேடு ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் பசீர்அகமது. இவரது மகள் ஷபீனா (16). இவர் கருங்கல்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    பள்ளியில் நடந்த தேர்வில் மாணவி ஷபீனா மதிப்பெண் குறைவாக பெற்றிருந்தார். இதையடுத்து அவரது பெற்றோர் ஷபீனாவை அடிக்கடி டி.வி. பார்க்காதே என்று கண்டித்தும், நன்றாக படி என்றும் அறிவுரை கூறி வந்தனர்.

    சரியாக படிப்பு வராத ஷபீனா சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் இருந்த எலி பேஸ்ட் (விஷம்) தின்று உள்ளார். மறுநாள் காலையில் ஷபீனா தொடர்ச்சியாக வாந்தி எடுத்தார். இதையடுத்து அவரது பெற்றோர் மாணவியிடம் கேட்டபோது தான் எலி பேஸ்ட் விஷத்தை சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக ஷபீனாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவி திடீரென இறந்து விட்டார்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஈரோட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 27-ந் தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் முத்துலட்சுமி தேர்ச்சி பெறவில்லை.
    • இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மூலப்பாளையம் தீரன் சின்னமலை தெருவை சேர்ந்தவர் முருகன். இவருக்கு திருமணமாகி சூர்யா என்ற மகனும், முத்துலட்சுமி (16) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் முத்துலட்சுமி சிறுவயதாக இருக்கும் போதே அவரது தாய் இறந்து விட்டார்.

    இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு முத்துலட்சுமியின் தந்தையும் இறந்து விட்டார். இதையடுத்து முத்துலட்சுமியின் அத்தை சாந்தி முத்துலட்சுமியையும், அவரது அண்ணன் சூர்யாவையும் வளர்த்து வந்தார். முத்துலட்சுமி ஈரோட்டில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதி இருந்தார்.

    கடந்த 27-ந் தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் முத்துலட்சுமி தேர்ச்சி பெறவில்லை. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்து வந்துள்ளார். முத்துலட்சுமிக்கு அவரது அத்தை சாந்தி ஆறுதல் கூறி வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று சாந்தியும், முத்துலட்சுமியின் அண்ணனும் வெளியே சென்று விட்டனர். வீட்டில் முத்துலட்சுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். பின்னர் மாலை சாந்தி வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. சாந்தி கதவை பலமுறை தட்டியும் பதில் ஏதும் வராததால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது முத்துலட்சுமி வீட்டின் ஒரு அறையில் தூக்குப்போட்டு தூங்கிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்தார். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முத்துலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×