என் மலர்tooltip icon

    ஈரோடு

    • இழப்பீடு பெற வி.ஏ.ஓ., ஆர்.ஐ., ஆகியோரி டம் ஒப்புதல் பெற்று, வேளாண் துறை சான்று இணைக்க வேண்டும்.
    • ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வெங்கடேசன் விசாரித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில், 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. வனப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் கரும்பு, மக்காசோளம், ராகி உள்ளிட்ட பயிர்களை வன விலங்குகள் சேதப்படுத்தி வருகிறது.

    அதற்கு, இழப்பீடு பெற வி.ஏ.ஓ., ஆர்.ஐ., ஆகியோரிடம் ஒப்புதல் பெற்று, வேளாண் துறை சான்று இணைக்க வேண்டும். இவ்வாறு கடம்பூரை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள், பயிர்களை சேதப்படுத்தியது. வேளாண் சான்று கோரி, சத்தியமங்கலம் வேளாண் உதவி இயக்குனர் வேலுசாமியிடம் முறையிட்டார்.

    அந்த விவசாயி, தனது பையில் வைத்திருந்த மொபைல் போனில், 'வீடியோ' பதிவை 'ஆன்' செய்து வைத்து, அதிகாரியிடம் பேசி பதிவு செய்தார். அதில் அலுவலக செலவுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், இழப்பீடு தொகை ரூ. 22 ஆயிரத்தை ரூ. 24 ஆயிரமாக போட்டு தருவதாக கூறினார்.

    அதற்கு அந்த விவசாயி, 'எனக்கு இதுபோன்ற விபரம் தெரியாது. நான், குன்றி மலையில் இருந்து வருகிறேன். 500 ரூபாய் மட்டும் கொண்டு வந்தேன். 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டேன். மீதமுள்ள, 400 ரூபாய்தான் உள்ளது,' என்றார்.

    அதையும் மீறி அந்த அதிகாரி, யாரிடமாவது வாங்கி வரும்படி கூறியதும், தனக்கு யாரையும் தெரியாது என விவசாயி கூறுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வெங்கடேசன் விசாரித்தார். இந்நிலையில், சென்னை, வேளாண் துறை இயக்குனர் சுப்பிரமணியம் வெளியிட்ட உத்தரவில் கூறியதாவது:-

    சத்தியமங்கலம் தாலுகா குன்று கிராம விவசாயி இடம் இழப்பீடு வழங்குவதற்காக சத்தியமங்கலம் வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனர் கே.வேலுசாமி, பேரம் பேசியதற்கான பதிவுகள் வெளியானது. இதன் அடிப்படையில், அவர் உடனடியாக பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். மறு உத்தரவு வரும் வரை அவர், சஸ்பெண்ட்டில் தொடர்வார்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வரட்டு பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 33.46 அடியை எட்டி உள்ளது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.28 அடியாக அதிகரித்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மாவட்டத்தின் அணைப்பகுதிகளான பவானிசாகர், குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம், கொடிவேரி போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழையால் வரட்டு பள்ளம், கல்லு பள்ளம், கும்பரவாணி பள்ளம் ஆகிய பள்ளங்கள் வழியாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் வரட்டு பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 33.46 அடியை எட்டி உள்ளது. அணையிலிருந்து 50 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் டி.என். பாளையம் அருகே கொங்கர் பாளையம் வனப்பகுதியை ஒட்டி குண்டேரிபள்ளம் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 41.75 அடி யாகும். நேற்று முன்தினம் குண்டேரி பள்ளம் அணைப்பகுதியில் 101 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

    இதன் காரணமாக நேற்று முன்தினம் 32 அடியாக இருந்த குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் 34 அடியாக உயர்ந்தது. இந்நிலையில் நேற்று இரவும் குண்டேரிபள்ளம் அணை பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் கொண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து இன்று 37.34 அடியாக உயர்ந்துள்ளது.

    இதேபோல் ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.28 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 443 கனஅடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பவானிசாகர் அணை கடல் போல் காட்சி அளிக்கிறது.

    பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,700 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் அணைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஒர்க் ஷாப்பில் 10-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே நஞ்சகவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரகு (வயது 33). இவர் ஈரோடு-சக்தி மெயின் ரோடு வெள்ளாளபாளையம் பிரிவு அருகே சொந்தமாக ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம் போல் ரகு ஒர்க் ஷாப்பில் பழுதாகி நின்ற ஒரு காரை சரி செய்து ஒர்க் ஷாப்பை பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டார்.

    ஒர்க் ஷாப்பில் 10-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை ஒர்க் ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்களில் ஒரு கார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    அந்த கார் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு காரும் தீ பிடித்து எரிய தொடங்கியது. இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக கோபி செட்டிபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் ஒரு கார் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. மற்றொரு கார் பாதி எரிந்த நிலையில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

    மேலும் விபத்து நடந்த ஒர்க் ஷாப் அருகே பெட்ரோல் பங்க் இருந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • வரட்டு பள்ளம் அணைப்பகுதிகளில் பொழிந்த மழையினால் அணையின் முழு கொள்ளளவான 33.5 அடி இன்று காலை 6 மணி அளவில் நிறைந்து 25 கன அடி உபரி நீர்வெளியேறி வருகிறது.
    • ஓடையின் தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தி வருகின்றார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை. இந்த அணையில் பர்கூர் மலை மற்றும் வரட்டுப்பள்ளம் அணை சுற்று பகுதியில் பொழிய கூடிய மழை நீரானது தேக்கி வைக்கப்பட்டு கோடை காலங்களில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்கும் நீராகவும், விவசாயிகளின் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பர்கூர் மலை மற்றும் வரட்டு பள்ளம் அணைப்பகுதிகளில் பொழிந்த மழையினால் அணையின் முழு கொள்ளளவான 33.5 அடி இன்று காலை 6 மணி அளவில் நிறைந்து 25 கன அடி உபரி நீர்வெளியேறி வருகிறது.

    மேலும் இன்னும் தொடர்ந்து 5 நாட்கள் மழைப்பொழிவு இருக்கும் என்பதால் வரட்டு பள்ளம் அணை பகுதி ஒட்டியுள்ள கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாஜலம், பொதுப்பணி மற்றும் வருவாய்த் துறையினர் எச்சரித்து வருகின்றனர்.

    மேலும் அந்தியூர் பேரூராட்சி பகுதியில் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறு ப்பு) நாகேஷ், துப்புரவு ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் ஒலிபெருக்கி மூலம் ஓடையின் தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தி வருகின்றார்கள். கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் வெளுத்து வாங்கிய மழையால் அணை கிடுகிடுவென 2.25அடி நீர் உயர்ந்தது.

    அது போன்று இரவு நேரங்களில் அதிக அளவில் மழைப்பொழிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்கள் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, அந்தியூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் சங்கராபாளையம், கெட்டி சமுத்திரம், எண்ணமங்கலம் உள்ளிட்ட ஊராட்சி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து பாதுகாத்து வருகின்றனர்.

    • பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
    • தண்ணீர் கேனில் மூழ்கி குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பவானி:

    பீகார் மாநிலம் கைத்வா லியா மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார் என்கிற அருன்பாகத் (வயது 32). இவரது மனைவி சாந்தினி தேவி. இவர்களுக்கு மனிஷா குமாரி (11) மற்றும் போன்பி குமாரி என்ற ஒன்றை வயது பெண் குழந்தையும் உள்ளது. அருன்பாகத் தனது குடும்பத்தினருடன் ஈரோடு மாவ ட்டம் சித்தோடு அடுத்த பூம்புகார் தெருவில் வசித்து வருகிறார்.

    இவர் கொங்கம்பாளையம்-கங்காபுரம் ரோட்டில் உள்ள ஒரு பிராசசிங் மில்லில் கடந்த 5 வருடமாக லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அருண் பாகத் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார்.

    மூத்த மகள் பள்ளிக்கு சென்றுவிட்டார். வீட்டில் சாந்தினிதேவி மற்றும் அவரது ஒன்றை வயது குழந்தை சோன்பிகுமாரி மட்டும் இருந்தனர். பின்னர் சாந்தினிதேவி வீட்டில் தூங்கி உள்ளார். குழந்தை சோன்பி குமாரி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது.

    திடீரென தூக்கம் கலைந்து எழுந்த சாந்தினிதேவி வீட்டின் வெளியே வந்து பார்த்தார். அப்போது மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரைத் தேடினார். பின்னர் வீட்டிற்கு பின்னால் சென்று பார்த்தார்.

    அப்போது பாத்திரங்கள் கழுவதற்காக தண்ணீர் ஊற்றி வைத்திருந்த ப்ளூ கலர் தண்ணீர் வாளிக்குள் குழந்தை சோன்பிகுமாரி தலைகீழாக தண்ணீரில் மூழ்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக சித்தோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் கேனில் மூழ்கி குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர் திறந்து வைத்தார்.
    • பழமையான நுழைவு வாயில் இடித்து தரைமட்டமாக்கியது பொது மக்களிடையே மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் பகுதி சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது.

    அதே போல் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கோபிசெட்டி பாளையம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் பெரும்பாலான திரைப்படங்கள் எடுக்கப்பட்டது. இதனால் இந்த பகுதியை சின்ன கோடம்பாக்கம் என்று பெயர் பெற்று திகழ்ந்தது.

    மேலும் கடந்த 1950-ம் ஆண்டுகளில் இருந்தே கோபிசெட்டிபாளையம் பல வரலாற்று சிறப்புகளையும் பெற்று வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் வரலாற்று சின்னங்களும் கம்பீரமாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் கோபி செட்டி பாளையத்தில் கடந்த 1-12-1958-ம் ஆண்டு 45-வது அரசியல் மாநாடு நடை பெற்றது. இதையொட்டி கோபி கிழக்கு பகுதியிலும் (கரட்டூர்), மேற்கு பகுதியிலும் (குடிநீர் மேல்நிலை தொட்டி அருகிலும்) நகராட்சி சார்பாக அப்போதே 2 நுழைவு வாயில்கள் (ஆர்ச்) கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. அதை அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர் திறந்து வைத்தார்.

    அப்போது முதல் ஈரோடு, சத்தியமங்கலம் ரோட்டில் கோபிசெட்டிபாளையம் என வளைவு அமைக்கப்பட்டு தூண்களுடன் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக பொதுமக்களை வரவேற்கும் வகையில் நிலைத்து நின்று வந்தது.

    இந்த நிலையில் கடந்த கடந்த 2018-ம் ஆண்டு கரட்டூர் ஆர்ச் மீது லாரி மோதியதில் அது இடிந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து புதியதாக கிழக்கு பகுதியில் உள்ள ஆர்ச் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

    இந்நிலையில் சித்தோட்டில் இருந்து சத்தியமங்கலம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ரோடுகள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி அந்த பகுதியில் உள்ள ஆக்கரமிப்புகளும் அகற்றப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் ஈரோடு-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் கோபிசெட்டி பாளையம் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சுமார் 60 ஆண்டுகள் பழமையான நுழைவு வாயில் (ஆர்ச்) ரோடுகள் வரிவாக்கம் பணிக்காக அகற்ற முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து நேற்று (புதன் கிழமை) இரவு நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்கப் பணிக்காக எந்திரங்கள் மூலம் பணியாளர்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு அகற்றினர். இதை கண்டு அந்த பகுதி மக்கள் வேதனை அடைந்தனர்.

    கோபியின் பெருமையை நிலை நாட்டும் வகையில் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகவும் பழமையான நுழைவு வாயில் இடித்து தரைமட்டமாக்கியது பொது மக்களிடையே மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • மக்கள் கூட்டமாக சென்றால் அவர்களிடம் விசாரணை நடத்தி ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.
    • வழிபாட்டுத்தலங்கள், முக்கிய வீதி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் கோழி திருடியதாக கடந்த மாதம் 21-ம் தேதி 2 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தாக்கி சிறுவலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    பிடிப்பட்ட 2 பேரையும் அவதூறாக பேசி தாக்கியதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதை கண்டித்தும் வழக்கை நீக்க கூறியும் இன்று (வியாழக்கிழமை) கோபி செட்டிபாளையம் ஒரு தனியார் கல்யாண மண்டபம் முதல் பஸ் நிலையம் வரை அனைத்து சமுதாய பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் சார்பில் ஊர்வலம் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோபி உட்கோட்ட எல்லை பகுதியில் இன்று ஊர்வலம், பேரணி, ஆர்ப்பாட்டம் நட த்த போலீசார் தடை விதித்துள்ளனர்.

    அதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீ சார் அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக கோபிசெட்டி பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோபி பஸ் நிலையம், பெரியார் சிலை, டவுன் பகுதி, மார்க்கெட் பகுதி, வழிபாட்டுத்தலங்கள், முக்கிய வீதி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பார்வையிட்டார்.

    மக்கள் கூட்டமாக சென்றால் அவர்களிடம் விசாரணை நடத்தி ஒழுங்கு படுத்தி வருகின்றனர். வாகனங்களில் வருபவர்களிடம் விசாரணை நடத்தி அதன் பிறகு கோபிசெட்டிபாளையம் பகுதிக்குள் அனுமதிக்கின்றனர். இதனால் இன்று கோபிசெட்டிபாளையம் பகுதி பரபரப்பாக காட்சியளித்து வருகிறது.

    • யானை விவசாய தோட்டத்திற்குள் புகுந்ததால் ஆங்காங்கே சில இடங்களில் விவசாய பயிர்கள் சேதம் அடைந்தன
    • காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்க அகழி வெட்ட வேண்டும்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள விளை பொருட்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள கெம்பநாயக்கன்பாளையம் பெரும்பள்ளம் அணை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை பட்டப்பகலில் கெம்பநாயக்கன்பாளையம் வன சோதனை சாவடி அருகே கடம்பூர் சாலையை கடந்து சென்று அப்பகுதியில் உள்ள விவசாயத் தோட்டங்களில் நுழைந்தது.

    அங்கு வாழை, கரும்பு, வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சேதப்படுத்தியது. பட்டப்பகலில் காட்டு யானை விவசாய தோட்டத்திற்குள் நடமாடுவதை கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயக்கூலி தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடினர்.

    இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சத்தியமங்கலம் வனச்சரக ஊழியர்கள் மற்றும் டி.என்.பாளையம் வனச்சரக ஊழியர்கள் இணைந்து சுமார் 2 மணி நேரம் போராடி காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    யானை விவசாய தோட்டத்திற்குள் புகுந்ததால் ஆங்காங்கே சில இடங்களில் விவசாய பயிர்கள் சேதம் அடைந்தன. பட்டப்பகலில் காட்டு யானை ஊருக்குள் புகுந்து விவசாய தோட்டத்திற்குள் நடமாடியதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்க அகழி வெட்ட வேண்டும். ஏற்கனவே உள்ள அகழியை ஆழம் மற்றும் அகலப்படுத்த வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குண்டம் இறங்குதல் மற்றும் தேர் திருவிழா இன்று நடைபெற்றது.
    • சின்ன மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் பிரசித்தி பெற்ற கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர் திருவிழா கடந்த 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    இதனைத்தொடர்ந்து கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் மற்றும் தேர் திருவிழா இன்று நடைபெற்றது.

    குண்டம் விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து குண்டத்துக்கு தேவையான விறகுகளை மாரியம்மனுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து நேற்று இரவு குண்டம் பற்றவைக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து கோவிலின் தலைமை பூசாரி பிரகாஷ் அம்மனை வழிபட்டு முதலில் குண்டம் இறங்க அதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    தொடர்ந்து இன்று தேர் வடம் பிடித்து இழுத்தலும், கோவில் கரகம் நிகழ்ச்சியும் நடந்தது. நாளை பொங்கல் மற்றும் மாவிளக்கு எடுத்தலும், அதனை தொடர்ந்து கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    குண்டம் மற்றும் தேர் திருவிழாவை முன்னிட்டு சின்ன மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    • தேர்த்திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
    • முன்னதாக சிறப்பு திருப்பலி நடந்தது.

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டேட் பேங்க் சாலையில் பழைமை வாய்ந்த புனித அமல அன்னை தேவலாயம் (சர்ச்) உள்ளது. இந்த தேவலாயத்தில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் தேர்த்திருவிழா விமர்சை யாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி நடப்பாண்டுக்கான தேர்த்திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. கோவை மறைமாவட்ட பொருளாளர் அருண் ஞானப்பிரகாசம் தலைமை தாங்கி புனித அமல அன்னையின் படத்துடன் கூடிய கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக சிறப்பு திருப்பலி (பூஜை) நடந்தது.

    இதைத்தொடர்ந்து வரும் 7-ந் தேதி சிறப்பு திருப்பலிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான 10-ந் தேதி தேர்த்திருவிழா தொடங்குகிறது.

    அன்றைய தினம் காலை 8.15 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியை கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜேசாப் ஸ்தனிஸ் நிறைவேற்றுகிறார். திருப்பலி முடிந்ததும் மாலை வேண்டுதல் தேர் எடுக்கப்பட உள்ளது.

    நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தையான ஈரோடு மறைமாவட்ட முதன்மை குரு ஆரோக்கிய ஸ்டீபன், உதவி பங்குத்தந்தை அந்தோணி ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வ.உ.சி. மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது.
    • 650 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மே ற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது.

    தாளவாடி, திருப்பூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், பொள்ளாச்சி, ஆந்திரா, பெங்களூர் போன்ற பகுதி யில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சராசரியாக நாளொன்றுக்கு 800 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 2 வாரத்திற்கு மேலாக தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் வ.உ.சி. மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இன்று மார்க்கெட்டிற்கு 650 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவர ப்பட்டிருந்தது.

    கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் விலை ஏறிக்கொண்டே வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 70 ரூபாய்க்கு விற்பனையானது.

    தற்போது வரத்து குறைந்ததன் எதிரொலியாக இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.80 முதல் 90 வரை விற்ப னையாகி வருகிறது. பெரிய வெங்காயத்தின் விலையும் இன்று அதிகரித்துள்ளது.

    கடந்த சில நாட்களாக ரூ.50 முதல் 60 வரை விற்பனையாகி வந்த பெரிய வெங்காயத்தின் விலை இன்று ரூ.70 ரூபாயாக அதிகரித்துள்ளது.

    இதேபோல் கருப்பு அவரை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. இன்று ஒரு கிலோ கருப்பு அவரை ரூ.100-க்கு விற்பனை யாகி வருகிறது.

    இன்று வ.உ.சி. மார்க்கெட்டில் விற்கப்பட்ட மற்ற காய்கறி களின் விலை கிலோவில் வருமாறு:

    கத்திரிக்காய்-60, பாவைக்காய்-60, புடலங்காய்-40, முள்ளங்கி-35, முருங்கைக்காய்-70, பீர்க்கங்காய்-50, சுரக்காய்-30, பட்டவரை-70, தக்காளி-30-35, காலிபிளவர்-30, புதிய இஞ்சி-110, பழைய இஞ்சி-280, குடைமிளகாய்-60, கேரட்-45, பீட்ரூட்-50, பீன்ஸ்-60.

    • சாலையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் அமர்ந்தபடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்து பவானிசாகர் அருகே முடுக்கன்துறையில் கடந்த ஒரு வார காலமாக சரியாக குடிநீர் வருவதில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.

    இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் புளியம்ப ட்டியில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் அமர்ந்தபடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த போலீசார் மற்றும் தொப்பம் பாளையம் துணை மண்டல அலுவலர் சக்திவேல் குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக சாலை மறியல் செய்து வந்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அதில் உடனடியாக உடைந்த குடிநீர் குழாய் சரி செய்து குடிநீர் சீராக வருவ தற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    அதன் பேரில் சாலை மறியல் செய்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மேலும் இந்த குடிநீர் பிரச்சினை இங்கு மட்டுமல்ல புளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மற்றும் கிராமப்புற ங்களிலும் இந்த குடிநீர் பிரச்சினை மிகவும் அதிகரி த்துள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    ×