என் மலர்tooltip icon

    ஈரோடு

    • தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ரெயில் மூலமாக 1,930 டன் யூரியா ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள பணிமனைக்கு கொண்டு வரப்பட்டது.
    • இதில் ஈரோடு மாவட்டத்துக்கு 1,680 மெட்ரிக் டன் யூரியாவும், திருப்பூர் மாவட்டத்துக்கு 250 மெட்ரிக் டன் யூரியாவும் அனுப்பி வைக்கப்பட்டன.

    ஈரோடு:

    தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ரெயில் மூலமாக 21 பெட்டிகளில் 1,930 டன் யூரியா இன்று காலை ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள பணிமனைக்கு கொண்டு வரப்பட்டது.

    இதையடுத்து அவற்றை ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங் களுக்கு லாரிகள் மூலமாக அனுப்பும் பணி மண்டல மேலாளர் ஸ்ரீதர் மற்றும் கிரிப்கோ கள அலுவலர் கதிர் வடிவேலன் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது.

    இதில் ஈரோடு மாவட்டத்துக்கு 1,680 மெட்ரிக் டன் யூரியாவும், திருப்பூர் மாவட்டத்துக்கு 250 மெட்ரிக் டன் யூரியாவும் அனுப்பி வைக்கப்பட்டன.

    • நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,900 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 5-ந் தேதி 102 அடியை எட்டியது.

    அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்ப ட்டது. பின்னர் மழைப்பொ ழிவு இல்லாத போது நீர்வரத்து குறைவதும், மழை பொழிவின்போது நீர்வரத்து அதிகரிப்பதும் என மாறி மாறி வந்து கொண்டு இருக்கிறது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,900 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 2,800 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    இதேப்போல் மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளில் நீர்வரத்து சற்று அதிகரித்து ள்ளது. 41.75 அடி கொண்ட குண்டேரி பள்ளம் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 36.04 அடியாக உள்ளது.

    30.84 அடி கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.26 அடியாக உள்ளது. இதேபோல் 33.50 அடி கொண்ட வரட்டுபள்ளம் அணியின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.46 அடியாக உள்ளது.

    • சிவகிரி பேரூராட்சி பகுதியில் சேகரிக்கும் குப்பைகள் சிவகிரி சந்தைமேடு பகுதியில் உள்ள சந்தையின் உள்பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது.
    • இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் குப்பை மேட்டில் இருந்து திடீரென புகை வெளியேறியது.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி பேரூராட்சி பகுதியில் சேகரிக்கும் குப்பைகள் சிவகிரி சந்தைமேடு பகுதியில் உள்ள சந்தையின் உள்பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது.

    இந்த பகுதியில் குப்பைகள் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே உரப்பூங்காவும் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் குப்பை மேட்டில் இருந்து திடீரென புகை வெளியேறியது.

    பின்னர் நேரம் செல்ல, செல்ல இரவு 9 மணியளவில் குப்பை மேட்டில் தீ பிடித்து தீ மளமளவென எரிய தொடங்கியது.

    இதைப்பார்த்த பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக ஊழியர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதையடுத்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து தீ கட்டுப்படுத்தப்பட்டது.

    தீ விபத்து நடந்த குப்பை மேட்டு பகுதிக்கு பேரூராட்சி தலைவர் பிரதீபா கோபிநாத், துணை தலைவர் கோபால், ெசயல் அலுவலர் கண்ணன், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் விசுவநாதன், கவுன்சிலர்கள் தனபால், மருதாச்சலம், மற்றும் வரதராஜ், பாபு ராஜா, செந்தில், கார்த்திகேயன் ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    தீ பிடித்து எரிந்த குப்பை மேட்டில் விடிய விடிய தூய்மை பணியாளர்கள் கண்காணித்தனர். அப்போது தொடர்ந்து காலையிலும் குப்பையில் இருந்து புகை வெளியேறி கொண்டு இருந்தது.

    இதையடுத்து மீண்டும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து புகை மீது தண்ணீர் பாய்ச்சினர். மேலும் பொக்லின் எந்திரம் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு புகையை அணைக்கும் பணி நடந்தது.

    குப்பை மேட்டில் தீ பிடித்து எரிந்ததால் அங்கு இருந்த பாட்டில்கள் வெடித்து சிதறியது. மேலும் கடுமையான புகை மண்டலம் நிலவியது.

    • கருங்கல்பாளையம் சாய் குரு நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் 18 பேர் கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
    • பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து 18 பேரையும் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல் பாளையம் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது கருங்கல் பாளையம், சாய் குரு நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பணம் வைத்து மெகா சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன் பேரில் போலீசார் சாய்குரு நகருக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள பண்ணை வீட்டிற்குள் நுழைந்து போலீசார் சோதனையிட்டனர். அப்போது அங்கு ஒரு கும்பல் பணம் வைத்து மெகா சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேசையில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன.

    போலீசை பார்த்ததும் அந்த கும்பலை சேர்ந்த வர்கள் அதிர்ச்சிய டைந்தனர். 18 பேர் கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து 18 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 3 லட்சத்து 16 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 3 சொகுசு கார்கள், 3 மோட்டார்சைக்கிள் களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

    • கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு போலீஸ் ஏட்டு மாதேஸ்வரனுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.
    • மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போலீஸ் ஏட்டு மாதேஸ்வரன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் மாதேஸ்வரன் (54). இவர் குடும்பத்துடன் பவானி அருகே உள்ள ஆர்.என்.புதூர் சூரியம்பாளையம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.

    கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு போலீஸ் ஏட்டு மாதேஸ்வரனுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. அல்சர் காரணமாக அவர் ரத்த வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போலீஸ் ஏட்டு மாதேஸ்வரன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது தொடர்பாக அவர் மனைவி சித்தோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜமாதேஸ்வரன் வெளியே சென்று வருவதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
    • இதுவரை அவர் வீட்டிற்கு வரவில்லை. அவர் மனைவி பாப்பாத்தி அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே சானடோரியம் பகுதியை சேர்ந்தவர் ராஜமாதேஸ்வரன் (வயது 57). இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒயர் மேனாக பெருந்துறை பகுதியில் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கு பாப்பாத்தி என்ற மனைவியும், கல்பனா என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று ராஜமாதேஸ்வரன் வெளியே சென்று வருவதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

    இதுவரை அவர் வீட்டிற்கு வரவில்லை. அவர் மனைவி பாப்பாத்தி அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    பின்னர் இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் காணாமல் போன ராஜ மாதேஸ்வரனை தேடி வருகிறார்.

    • முத்துசாமி வீட்டில் இல்லாததை தெரிந்து கொண்டு யாரோ சிலர் வீட்டின் பின்புறத்தில் ஏணி வைத்து ஏறி குதித்து உள்ளே புகுந்து ரூ.27 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
    • தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையம் அருகே உள்ள அவினாசி கவுண்டர் பாளையம் பகுதியை சேர்ந்த வர் முத்துசாமி (வயது 68). விவசாயி. இவரது விவசாய நிலம் ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அருகே உள்ள இந்திரா நகரில் உள்ளது.

    வக்கீல் தோட்டம் என்று அழைக்கப்படும் அவரது தோட்டத்தில் பண்ணை வீடும் அமைந்துள்ளது. இந்த பண்ணை வீட்டில் முத்து சாமி தங்கி விவசாயம் செய்து வருகிறார்.

    கடந்த 9-ந் தேதி பண்ணை வீட்டின் படுக்கை அறையில் உள்ள பீரோவில் ரூ.27 லட்சம் வைத்து விட்டு பீரோவை பூட்டி வைத்து இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி முத்துசாமி பண்ணை வீட்டை பூட்டி விட்டு திருப்பூர் சென்று விட்டார். அப்போது அவர் பீரோவை பூட்டாமல் சென்று விட்டதாக கூறப்படு கிறது.

    இதற்கிடையே நேற்று முன் தினம் பண்ணை வீட்டு தோட்டத்தில் வேலை செய்யும் தங்கராஜ் என்பவர் முத்துசாமிக்கு போன் செய்து வீட்டின் பின்புறம் உள்ள ஏணி சாய்ந்து கிடப்பதாக கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த முத்துசாமி உடனடியாக பவானிசாகர் பண்ணை வீட்டுக்கு வந்து பார்த்தார்.

    அப்போது படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோவில் இருந்த ரூ.27 லட்சம் மாயமாகி இருந்ததும் தெரிய வந்தது.

    முத்துசாமி வீட்டில் இல்லாததை தெரிந்து கொண்டு யாரோ சிலர் வீட்டின் பின்புறத்தில் ஏணி வைத்து ஏறி குதித்து உள்ளே புகுந்து ரூ.27 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து முத்துசாமி பவானிசாகர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்து விசா ரணை நடத்தினர்.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கபட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தாளவாடி போலீஸ் இன்ஸ் பெக்டர் செல்வம், கோபிசெட்டிபாளையம் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், பவானிசாகர் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் தலைமையில் தனி தனியாக 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.

    • ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் காய்ச்சல் அதிகம் கண்டறிய ப்பட்டுள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் இன்று சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
    • அதன்படி வட்டார அளவில் 4 கிராமங்களில் நடமாடும் மருத்துவ குழுக்கள் சென்று முகாம் நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இன்புளுயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அதிகளவில் இந்த காய்ச்சல் பரவி வருகிறது.

    இதனை தடுக்க சுகாதார துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடி க்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் காய்ச்சல் கண்டறியும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் காய்ச்சல் அதிகம் கண்டறிய ப்பட்டுள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் இன்று சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி வட்டார அளவில் 4 கிராமங்களில் நடமாடும் மருத்துவ குழுக்கள் சென்று முகாம் நடத்தி வருகின்றனர்.

    இந்த முகாம்களில் காய்ச்சல், சளி, இருமல், உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. காய்ச்சலின் தன்மை பொறுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சாதாரண காய்ச்சல் என்றால் மருந்து மாத்திரை கொடுக்கப்படும். தொடர் காய்ச்சல் என்றால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர்கள் செல்லுமாறு அறிவுறுத்தப்படுவார்கள்.

    அப்போது அவர்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு என்ன வகையான காய்ச்சல் என கண்டறியப்படும். இதேபோல் பள்ளிகளுக்கு என்று தனியாக மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    அவர்கள் மாணவ ர்களை பரிசோதனை செய்து அவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் உள்ளதா? என்று சோதனை செய்வார்கள்.

    இவ்வறாக ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று 196 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டு வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். 

    • நடப்பாண்டில் செல்போன் மாயமானதாக பெறப்பட்ட புகாரின் பேரில் நடவடி க்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
    • 407 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் பிரிவு செயல்பட்டு வருகிறது.

    இங்கு செல்போன்கள் மாயம், திருட்டு, ஆன்லைன் பண மோசடி, வங்கி வாடிக்கையாளரிடம் பண மோசடி, சமூக வலைத்த ளங்கள் மூலமாக ஏற்படும் பிரச்சனைகள் மீது புகார் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் நடப்பாண்டில் செல்போன் மாயமானதாக பெறப்பட்ட புகாரின் பேரில் நடவடி க்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதன் பேரில் போலீசார் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த ஆண்டில் மட்டும் இதுவரை மாயமான ரூ.60 லட்சத்து 25 ஆயிரத்து 466 மதிப்பிலான 407 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தை ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகன சுந்தரம் ஆய்வு செய்தார்.
    • தற்போது பவானி அரசு விதைப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட உளுந்து வம்பன் 8 ஆதாரநிலை விதையின் சுத்திப்பணி நடைபெற்று வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த குரும்பநாய்க்கன்பாளையத்தில் அரசு விதை சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இவ்விதை சுத்திகரிப்பு நிலையத்தை ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகன சுந்தரம் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    தமிழக அரசின் வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் அமைக்க ப்படும் விதைப்ப ண்ணைகள் விதைச்சான்று அலுவலரின் ஆய்வின் போது பயிர் விலகுதூரம் பிற ரக கலவன்கள், குறித்தறிவிக்கப்பட்ட நோய்கள் முதலிய வயல் தரங்களில் தேர்ச்சி பெற்றவுடன் அறுவடை செய்யப்படும்.

    பின்பு விதைக்கு வியல்கள் முத்திரை யிடப்பட்டு இவ்விதை சுத்தி நிலை–யத்திற்கு கொண்டு வரப்பட்டு சுத்தி செய்யப்படும். இவ்வாறு சுத்தி செய்யப்பட்ட விதைக்குவியல்களில் விதை மாதிரி எடுக்கப்பட்டு, விதை பகுப்பாய்விற்காக விதை ஆய்வகத்திற்கு அனுப்பப்படும்.

    இங்கு முளைப்புத்திறன், புறத்தூய்மை, பிற ரக கலவன் விதைகள் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவுடன் சான்றட்டை பொருத்த ப்பட்டு விவசா யிகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்ப––டும்.

    தற்போது பவானி அரசு விதைப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட உளுந்து வம்பன் 8 ஆதாரநிலை விதையின் சுத்திப்பணி நடைபெற்று வருகிறது.

    இவ்விதை விரைவில் பகுப்பாய்வு செய்யப்பட்டு ஈரோடு மாவட்ட வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயி களுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது பவானி விதைச்சான்று அலுவலர் நாசர்அலி, வேளாண்மை அலுவலர் முருகேசன் மற்றும் உதவி பொறியாளர் கவுதம் ஆகியோர் உடனிருந்தனர்.

    • கைகாட்டி பாலத்தில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
    • அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் மதுவிற்ற வெங்கடேசன் என்பவரை கைது செய்தனர்.

    ஆப்பக்கூடல்:

    அத்தாணி அருகே உள்ள கைகாட்டி பாலத்தில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் மதுவிற்ற திண்டுக்கல் கள்ளிமந்தையம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 45) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.910 மதிப்புள்ள 7 மதுபானபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • அந்தியூர் பஸ் நிலையம் அருகே ரவுண்டானா பகுதி யில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
    • அந்த பகுதியில் சிலர் போக்குவரத்திற்கு இடையூறாக இருசக்கர வாகனங்களை நிறுத்தி வந்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் பஸ் நிலையம் அருகே ரவுண்டானா பகுதி யில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் சிலர் போக்குவரத்திற்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்வதாகவும், மேலும் சிலர் இருசக்கர வாகனங்களை நிறுத்தி இடையூறுகள் ஏற்படுத்தியும் வந்தனர்.

    இதனால் இந்த பகுதி களில் அடிக்கடி விபத்து க்கள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.

    மேலும் இது குறித்து பொதுமக்கள் அந்தியூர் போக்குவரத்து போலீசாரி டம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து போக்குவரத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் பஸ் நிலையம் ரவுண்டானா பகுதியில் ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப் பட்டு இருந்தது. இந்த இருசக்கர வாகனங்களுக்கு போலீசார் பூட்டு போட்டனர். தொடர்ந்து அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இதனால் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை வாகன உரி மையாளர்கள் போக்கு வரத்துக்கு இடையூறு இல்லாமல் வேறு இடங்களில் நிறுத்தி விட்டு வந்தனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நில வியது.

    ×