

பெருந்துறை:
பெருந்துறை அருகே சானடோரியம் பகுதியை சேர்ந்தவர் ராஜமாதேஸ்வரன் (வயது 57). இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒயர் மேனாக பெருந்துறை பகுதியில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு பாப்பாத்தி என்ற மனைவியும், கல்பனா என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று ராஜமாதேஸ்வரன் வெளியே சென்று வருவதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
இதுவரை அவர் வீட்டிற்கு வரவில்லை. அவர் மனைவி பாப்பாத்தி அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
பின்னர் இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் காணாமல் போன ராஜ மாதேஸ்வரனை தேடி வருகிறார்.