search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A gang of"

    • கருங்கல்பாளையம் சாய் குரு நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் 18 பேர் கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
    • பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து 18 பேரையும் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல் பாளையம் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது கருங்கல் பாளையம், சாய் குரு நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பணம் வைத்து மெகா சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன் பேரில் போலீசார் சாய்குரு நகருக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள பண்ணை வீட்டிற்குள் நுழைந்து போலீசார் சோதனையிட்டனர். அப்போது அங்கு ஒரு கும்பல் பணம் வைத்து மெகா சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேசையில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன.

    போலீசை பார்த்ததும் அந்த கும்பலை சேர்ந்த வர்கள் அதிர்ச்சிய டைந்தனர். 18 பேர் கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து 18 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 3 லட்சத்து 16 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 3 சொகுசு கார்கள், 3 மோட்டார்சைக்கிள் களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

    ×