என் மலர்tooltip icon

    ஈரோடு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் ஈரோடுக்கு அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முகாமிட்டு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பணம் பட்டுவாடா தொடர்பாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி பொதுமக்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழுக்கள், 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் ஈரோடுக்கு அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முகாமிட்டு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பணம் பட்டுவாடா தொடர்பாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    இதனைத்தொடர்ந்து தேர்தலில் துணை ராணுவத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி 5 கம்பெனி துணை ராணுவ படை வீரர்கள் ஈரோடுக்கு வருகை தந்துள்ளனர். ஒவ்வொரு குழுவில் 80 பேர் வீதம் 400-க்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளனர்.

    இதுதவிர தமிழ்நாடு சிறப்பு காவல் படை வீரர்கள் 160 பேரும் வந்துள்ளனர். இதில் துணை ராணுவத்தினர் போலீசாருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் கூறும்போது,

    தேர்தல் நெருங்கி வருவதால் வாகன சோதனையை தீவிரபடுத்தியுள்ளோம். ஈரோடு கிழக்கு பகுதியில் மொத்தம் 27 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை தீவிரபடுத்தியுள்ளோம்.

    இது தவிர 7 கார் குழுக்கள், 15 மோட்டார் சைக்கிள் குழுக்கள் தனித்தனியாக பிரிந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறோம். தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் இனிவரும் நாட்களில் சோதனை மேலும் தீவிரபடுத்தப்படும் என்றார்.

    • அ.தி.மு.க . ஆட்சியில் 55 லட்சம் மடிக்கணினிகள், 65 லட்சம் மிதிவண்டிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் எடப்பாடி யாருக்கு திருப்பு முனையாக அமையும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

    அ.தி.மு.க . ஆட்சியில் 55 லட்சம் மடிக்கணினிகள், 65 லட்சம் மிதிவண்டிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. தாலிக்கு தங்கம், ஸ்கூட்டி, கறவை மாடுகள், ஆடுகள் என பல உதவிகள் மக்களுக்கு செய்யப்பட்டன.

    ஆனால் தி.மு.க. அரசு அனைத்தையும் நிறுத்திவிட்டது. மாறாக வீட்டு வரி, மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. எனவே தி.மு.க. அரசை எச்சரிக்கும் விதமாக தேர்தல் அமையட்டும்.

    அ.தி.மு.க.வை மக்கள் ஆதரிக்க வேண்டும். திண்டுக்கல் இடைத்தேர்தல் எம்.ஜி.ஆருக்கும், மதுரை கிழக்கு மற்றும் மருங்காபுரி தேர்தல்கள் ஜெயலலிதாவுக்கும், ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் எடப்பாடி யாருக்கு திருப்பு முனையாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பரிசுப் பொருட்கள், மது பானங்களையும் போலீசார் மற்றும் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
    • கடந்த மாதம் 20-ந் தேதி முதல் நேற்று வரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.41 லட்சத்து 53 ஆயிரத்து 370 பணம் பறிமுதல்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் பொதுமக்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் நிலை கண்காணிப்பு குழு, பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ரூ 50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் பரிசுப் பொருட்கள், மது பானங்களையும் போலீசார் மற்றும் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    அதன்படி கடந்த மாதம் 20-ந் தேதி முதல் நேற்று வரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.41 லட்சத்து 53 ஆயிரத்து 370 பணம் பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் இதுவரை 91 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.63 ஆயிரத்து 960 ஆகும். இதே போல் 1850 கிராம் கஞ்சா, புகையிலை பொருட்கள், தடை செயய்ப்பட்ட பாக்கு வகைகள், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.22,500 ஆகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2-வது கட்ட பிரசாரத்தை அடுத்த வாரம் 24, 25-ந்தேதிகளில் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார்.
    • எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய வருவதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    இதே போல் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியும் 2 கட்டமாக 5 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி நாளை (15-ந்தேதி) தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். மாலை 5 மணியளவில் வீரப்பன் சத்திரம் பகுதி, பெரியார் நகர் பகுதிகளில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

    தொடர்ந்து வீரப்பம்பாளையம், வெட்டுகாட்டு வலசு, நாராயண வலசு, டவர் லைன் காலனி, குமலன் குட்டை மாரியம்மன் கோவில் அருகில், கலெக்டர் அலுவலகம், சம்பத் நகர், பெரிய வலசு நால்ரோடு, கல்யாண விநாயகர் கோவில், இடையன்காட்டு வலசு, மணிக்கூண்டு ஆகிய இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பின்னர் வீரப்பன்சத்திரம் பகுதியில் தனது முதல் நாள் பிரசாரத்தை முடித்து கொள்கிறார்.

    தொடர்ந்து 16, 17-ந்தேதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்கிறார். பின்னர் 2-வது கட்ட பிரசாரத்தை அடுத்த வாரம் 24, 25-ந்தேதிகளில் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய வருவதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    • எந்த சூழ்நிலையிலும் நாட்டை விட்டு போகமாட்டேன் என்று வீரமாக சண்டை புரிந்தவர் எங்கள் அண்ணன்.
    • 15 ஆண்டுகள் ஒரு இடத்தில் பதுங்கி பேசாமல் இருப்பார் என் அண்ணா என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

    ஈரோடு:

    விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நெடுமாறன் கூறிய தகவல் பற்றி சீமான் கூறியதாவது:

    என்னிடம் பதில் இல்லை, சில கேள்விகள் தான் இருக்கிறது. என் தம்பி பாலசந்திரனை பலி கொடுத்துவிட்டு என் அண்ணன் பத்திரமாக தப்பி சென்றிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எந்த சூழ்நிலையிலும் இந்த நாட்டை விட்டு போக மாட்டேன் என்று வீரமாக சண்டை புரிந்தவர் எங்கள் அண்ணன். தன் உயிரை மட்டும் தற்காத்துக் கொண்டு தப்பி செல்லும் கோழை என்று நினைக்கிறீர்களா? போர் புரிந்து ஒரு பெரிய பேரழிவை சந்தித்துள்ளோம் 15 ஆண்டுகள் பத்திரமாக ஒரு இடத்தில் பதுங்கி பேசாமல் இருப்பார் என் அண்ணா என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

    சொல்லிவிட்டு வருபவர் அல்ல எங்கள் அண்ணன் வந்துவிட்டு தான் சொல்லுவார். அதுதான் அவரின் பழக்கம். தேவையில்லாமல் குழம்ப வேண்டாம். அவர்கள் கூறியது போல் ஒரு நாள் மக்கள் முன் தோன்றுவார் என்று கூறியதுபோல் தோன்றும்போது தோன்றட்டும். ஐயா பெரியாரிடம் கடவுள் இல்லை இல்லை என்று சொல்லி கொண்டிருக்கிறீர்களே திடீர் என்று கடவுள் நேரில் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்பவருக்கு அவர் அன்றுமுதல் கடவுள் இருக்கிறார் என்று சொல்லுவோம் என்றார்.

    அதுபோல் ஐயா நெடுமாறன் கூறியவாறு எங்கள் அண்ணன் நேரில் வந்துவிட்டால், இதை பற்றி வந்தவுடன் பேசுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே உள்ளதால் தேர்தல் களம் தற்போது களை கட்ட தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டு உள்ளது.
    • பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பார்த்து ரசித்து வருகிறார்கள். இதனால் எங்கு பார்த்தாலும் திருவிழா போல் காட்சி அளித்து வருகிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அரசியல் கட்சியினர் பொதுமக்களை கவரும் வகையில் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். தேர்தல் நாள் நெருங்க... நெருங்க... அரசியல் கட்சியினர் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார்கள்.

    இதையொட்டி தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் எந்த பகுதியில் பார்த்தாலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டம்.. கூட்டமாக சுற்றி வருகிறார்கள். பெரும்பாலும் தெருக்களில் வாக்காளர்களை கவர கட்சியினர் பம்பரம் போல் சுழன்றி வருகிறார்கள். இதனால் எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சியினரின் தலைகளாக காட்சி அளித்து வருகிறது. இதனால் ஈரோடு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.

    இதே போல் அரசியல் கட்சி தொண்டர்கள் தலைவர்கள் போல் வேடம் அணிந்து பிரசாரத்தில் ஈடுபட்டு அவர்கள் போல் பேசி பொதுமக்களை கவர்ந்து வருகிறார்கள்.

    பெரியார் போல் வேடம் அணிந்து வருபவர்கள் சுய மரியாதை, பெண் விடுதலை குறித்தும் கருணாநிதி போல் வருபவர்கள் அவரது வசனம் மற்றும் கொள்கைகள் குறித்தும் அவரது பழைய பாடல்களை பாடி நடித்து காட்டுகிறார்கள்.

    மேலும் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா போல் வேடம் அணிந்து வருபவர்கள் அவரது கொள்கைகள் குறித்தும் மற்றும் எம்.ஜி.ஆர். பாடிய பாடல்களை பாடி அவர் போல் நடித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும் வருகிறது. மேலும் மேள தாளங்கள் முழங்க சினிமா பாடல்கள், அரசியல் கட்சி பாடல்கள் மூலம் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறார்கள்.

    மேலும் தொண்டர்கள் கட்சி சின்னங்களை உடலில் வரைந்து கொள்கிறார்கள். மேலும் பலர் சைக்கிள், இருசக்கர வாகனங்களில் கட்சி சின்னங்களை வைத்து கொண்டு பல பகுதிகளில் சுற்றி வருகிறார்கள். பெண்கள் வீடுகளில் கட்சி சின்னங்களை கோலமாக வரைந்தும் வேட்பாளர்களை கவருகிறார்கள். பிரசாரத்துக்கு வரும் தொண்டர்கள் பலர் மொட்டை அடித்து கட்சி சின்னங்களை சிகை அலங்காரம் செய்தும் வருகிறார்கள்.

    மேலும் சிலர் கரகாட்டம் ஆடுபவர்களை அழைத்து வருகிறார்கள். அவர்கள் வீதி வீதியாக சென்று வாக்காளர்களை கவரும் வகையில் கரகாட்டம் ஆடி வருகிறார்கள். நேற்று மோகினி ஆட்டம், கதகளி ஆட்டமும் நடந்தது. இதை அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பார்த்து ரசித்து வருகிறார்கள். இதனால் எங்கு பார்த்தாலும் திருவிழா போல் காட்சி அளித்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே உள்ளதால் தேர்தல் களம் தற்போது களை கட்ட தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டு உள்ளது.

    • தே.மு.தி.க.வினர் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் வீதி வீதியாக நடந்தே சென்று முரசு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வருகிறார்கள்.
    • விஜய் பிரபாகர் வருகிற 15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து கிழக்கு தொகுதியில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்ய உள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடுகிறது. தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே கடந்த 27-ந்தேதி முதல் பிரசாரத்தை தொடங்கினார். தினமும் காலை, மாலை கட்சி நிர்வாகிகளுடன் பிரசாரம் செய்து வருகிறார். தே.மு.தி.க.வினர் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் வீதி வீதியாக நடந்தே சென்று முரசு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வருகிறார்கள்.

    இது பற்றி தே.மு.தி.க நிர்வாகிகளிடம் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நட்சத்திர பேச்சாளர்கள் களமிறங்கி ஓட்டு சேகரித்து வருகிறார்கள். ஆனால் எந்த கட்சியும் ஆதரவு இல்லாமல் தனியாக போட்டியிடுகிறீர்களே. உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்று கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    எங்கள் கட்சியின் கொள்கையை மற்ற கட்சி களிடம் அடமானம் வைக்க விரும்பாததால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தனியாக போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதனால் வேட்பாளர் ஆனந்தை அறிவித்து உள்ளனர். அவரும் காலையும், மாலையும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    எந்த கூட்டணி கட்சி ஆதரவு இல்லாமல் தனியாகவே நாங்கள் பிரசாரம் செய்து வருகிறோம். எங்களுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. நாங்கள் தனித்து போட்டியிடுவதால் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் தேர்தலில் எங்கள் கட்சிக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

    எங்களது இலக்கு வெற்றியை நோக்கி செல்கிறது. எனவே எதைப் பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்று கூறினர்.

    இந்த நிலையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரையும், விஜய் பிரபாகர் வருகிற 15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரையும் தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து கிழக்கு தொகுதியில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்ய உள்ளார்.

    • சம்பவத்தன்று மதியம் மணி வாந்தி எடுத்து கொண்டிருந்தார்.
    • இது குறித்து அவரிடம் கேட்டபோது விஷ மாத்திரையை தின்று விட்டதாக கூறியுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை, செம்மண் குழிக்காடு பெரிய காட்டுத்தோட்டத்தை சேர்ந்தவர் மணி (66). விவசாயி. இவரது மனைவி விஜயா (58). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் மணி கடந்த ஒரு வருடமாக பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    சம்பவத்தன்று மதியம் மனைவி விஜயா ரேஷன் கடைக்கு போய்விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மணி வாந்தி எடுத்து கொண்டிருந்தார்.

    இது குறித்து அவரிடம் கேட்டபோது நோய் காரணமாக வாழப்பிடிக்காமல் விஷ மாத்திரையை தின்று விட்டதாக கூறியுள்ளார். உடனடியாக விஜயா அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்துள்ளார்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அறச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புன்செய் பாசனத்திற்காக 2-வது சுற்று தண்ணீர் நாளை திறக்கப்படுகிறது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 98.30 அடி யாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    தற்போது அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் கீழ் பவானி வாய்க்கால் பாசனப்பகுதி விவசாயிகளின் கோரி க்கையை ஏற்று கீழ்பவானி வாய்க்காலில் 2-ம் போக புன்செய் பாசனத்திற்காக கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    ஏப்ரல் 30-ந் தேதி வரை 5 சுற்றுக்களாக தண்ணீர் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 6-ந் தேதி நிறுத்தப்ப ட்டது.

    இந்நிலையில 2-வது சுற்று தண்ணீர் நாளை (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் வரும் 28-ந் தேதி வரை திறக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 98.30 அடி யாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1152 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்திற்காக ஆயிரம் கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் 1,150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • அறையில் அருளானந்தம் தூக்குபோட்டு தொங்கிக்கொண்டிருந்தார்.
    • இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள மாயபுரம் பகுதியை சேர்ந்தவர் அருளானந்தம் (45). இவர் அப்பகுதியில் உள்ள டையிங் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 14 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அருளானந்தத்தின் மனைவி கடந்த 2 வருடங்களுக்கு முன் அவரை விட்டு பிரிந்து சென்று வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

    இதையடுத்து அருளானந்தம் தனது குழந்தைகள் மற்றும் தாய் தெரசாமேரி (68), தம்பி ஜெயசீலன் ஆகியோருடன் வசித்து வந்தார்.

    மனைவி பிரிந்து சென்றதில் இருந்து மனமுடைந்து காணப்பட்ட அருளானந்ததுக்கு அவரது தாய், தம்பி மற்றும் குழந்தைகள் அனைவரும் ஆறுதல் கூறி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காலை அருளானந்தத்தின் மகன் கண் விழித்து பார்த்த போது வீட்டினுள் உள்ள அறையில் அருளானந்தம் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அருளானந்தம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளத்தில் மோகன்ராஜ் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
    • இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ஊஞ்சலூர் சொட்டையூரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (45). கட்டிட காண்டராக்டர். இவரது மனைவி கடந்த 7 வருடங்களாக மலேசி யாவில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது 2 மகன்களையும் மனைவியின் பெற்றோர் பராமரித்து வருகின்றனர்.

    மோகன்ராஜ் தனது தாயார் நல்லம்மாளுடன் வசித்து வந்தார். கடந்த 10 வருடங்களாக மதுவுக்கு அடிமையான மோகன்ராஜ் தினமும் குடித்து விட்டு ஆங்காங்கே கீழே விழுந்து கிடந்துள்ளார்.

    இந்த நிலையில் நல்லம்மாள் சம்பவத்தன்று சொட்டையூர் கோவிலில் மோகன்ராஜை பார்த்துள்ளார்.

    அதன் பின் அவர் வீட்டுக்கு வரவில்லை. பின்னர் சொட்டையூரை சேர்ந்த நபர் ஒருவர் வெங்கம்பூர் குரங்கன் பள்ளம் அருகில் உள்ள பள்ளத்தில் மோகன்ராஜ் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக நல்லம்மாளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    உடனடியாக நல்லம்மாள் தனது உறவினர்களுடன் சென்று பார்த்துள்ளார். அப்போது வழக்கம்போல, பாலத்தின் மீது அமர்ந்து மது அருந்திய போது போதையில் தவறி விழுந்து மோகன்ராஜ் இறந்தது தெரியவந்தது.

    இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
    • மேலும் அவர்களிடம் இருந்து 33 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    சட்டவிரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி கடம்பூர், மலையம்பாளையம், பெருந்துறை போலீசார் தங்கள் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 33 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ×