search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "influence of alcohol"

    • பள்ளத்தில் மோகன்ராஜ் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
    • இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ஊஞ்சலூர் சொட்டையூரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (45). கட்டிட காண்டராக்டர். இவரது மனைவி கடந்த 7 வருடங்களாக மலேசி யாவில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது 2 மகன்களையும் மனைவியின் பெற்றோர் பராமரித்து வருகின்றனர்.

    மோகன்ராஜ் தனது தாயார் நல்லம்மாளுடன் வசித்து வந்தார். கடந்த 10 வருடங்களாக மதுவுக்கு அடிமையான மோகன்ராஜ் தினமும் குடித்து விட்டு ஆங்காங்கே கீழே விழுந்து கிடந்துள்ளார்.

    இந்த நிலையில் நல்லம்மாள் சம்பவத்தன்று சொட்டையூர் கோவிலில் மோகன்ராஜை பார்த்துள்ளார்.

    அதன் பின் அவர் வீட்டுக்கு வரவில்லை. பின்னர் சொட்டையூரை சேர்ந்த நபர் ஒருவர் வெங்கம்பூர் குரங்கன் பள்ளம் அருகில் உள்ள பள்ளத்தில் மோகன்ராஜ் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக நல்லம்மாளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    உடனடியாக நல்லம்மாள் தனது உறவினர்களுடன் சென்று பார்த்துள்ளார். அப்போது வழக்கம்போல, பாலத்தின் மீது அமர்ந்து மது அருந்திய போது போதையில் தவறி விழுந்து மோகன்ராஜ் இறந்தது தெரியவந்தது.

    இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
    • பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ஈரோடு:

    ஆங்கில புத்தாண்டான 2023-ம் ஆண்டு இன்று நள்ளிரவில் பிறக்கிறது. புத்தாண்டை வரவேற்க மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகிறார்கள்.

    தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நக ரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்று இரவு களை கட்டும். குறிப்பாக சென்னை மாநகரில் மக்கள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக திரண்டு புத்தாண்டு கொண்டாட் டத்தில் ஈடுபடுவார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் அதிகக்கூடும் இடங்கள், முக்கிய கடை வீதிகள், வழிபாட்டுத்தலங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈடுபட உள்ளார்கள்.

    புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களை கேலி செய்வது போன்ற செயல் ஈடுபடும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் தெரிவித்துள்ளார்.

    இதேபோல் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கேளிக்கை விடுதி, தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் போலீசார் அறிவுறுத்தியுள்ள பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு வி.சசிமோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக ஈரோடு மாவட்ட போலீசார் பல்வேறு முன்னெ ச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    கடந்த 2 ஆண்டாக கொரோனாவுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு அவ்வாறு இல்லாமல் வழக்கமான உற்சாகத்துடன் அவரவர் குடும்பத்தாரோடு கொண்டாடுங்கள்.

    ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் உள்ளூர், ஆயுதப்படை காவலர்கள், ஊர் காவல் படையினர் என 1,500 பேர் சிறப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    இன்று மாலை முதல் அனைத்து கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், மாநில, மாவட்ட எல்லை, முக்கிய சாலை சந்திப்புகள், பஸ் நிலையம், ரெயில் நிலையம், மக்கள் அதிகம் கூடும் இடங்களில், அனுமதிக்கப்பட்ட கேளிக்கை நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணி செய்கின்றனர்.

    இருசக்கர வாகனங்களில் ரோந்து, 4 சக்கர வாகன ரோந்து, நெடுஞ்சாலை ரோந்து, மாநகர பகுதியில் 6 சிறப்பு ரோந்து வாகனங்களில் கண்காணிக்க உள்ளனர்.

    நீண்ட துார பயணம் செய்வோர், இரவு நேர பயணத்தை தவிர்க்கவும். தவிர்க்க இயலாத காரணத்தால் பயணித்தால், குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறிது நேரம் ஓய்வெடுத்து பயணத்தை பாதுகாப்பாக தொடருங்கள்.

    மோட்டார்சைக்கிளில் செல்வோர் தலைகவசம் அணிந்தும், 4 சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிந்தும் பயணிக்க வேண்டும்.

    வேகமாக, தாறுமாறாக வாகனங்கள் இயக்குவோர், மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோர், சாகச பயணம், பைக் ரேஸ்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் வாகனமும் பறிமுதல் செய்யப்படும். நள்ளிரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டா ட்டத்தை முடிக்க வேண்டும்.

    பொது, தனியார் விடுதிகளில் உள்ள நீச்சல் குளங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். நீர் நிலைகள், இதர பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை அசம்பாவிதம் இன்றி கொண்டாடுங்கள். சட்ட மீறல் நடந்தால் 96552 20100 என்ற எண்ணில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    மேலும் மாவட்டம் முழுவதும் முக்கிய சாலைகளில் தயார் நிலையில் ஆம்புலன்சுகள் நிறுத்தப்படுகிறது. விபத்தில் யாராவது சிக்கினால் உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    ×