என் மலர்tooltip icon

    ஈரோடு

    • காவிரி ஆற்றில் இறந்த நிலையில் முதியவர் உடல் மிதந்து கொண்டிருந்தது.
    • கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் எதிரே காவிரி ஆற்றில் இறந்த நிலையில் முதியவர் உடல் மிதந்து கொண்டிருப்பதை பார்த்த கொடுமுடி கிராம நிர்வாக அலுவலர் விஜயராஜ் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

    இதன்பேரில் கொடுமுடி போலீசார் இறந்து கிடந்த முதியவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்த நபருக்கு சுமார் 60 வயது இருக்கும் என்று தெரியவந்தது.

    ஆனால் இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முதியவர் ஆற்றில் மூழ்கி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புளியம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
    • கவியரசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது புளியம்பட்டி-மேட்டுப்பாளையம் ரோடு ஜே.ஜே.நகர் அருகே மாதம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் சோதனை செய்த போது கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை 18 பாக்கெட்டுகள் மற்றும் விமல் பான் மசாலா 9 பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

    இது குறித்து விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த கவியரசன்(21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • சிகிச்சை பலனின்றி சங்கீதம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த ஞானி பாளையம் குமாரவலசு மயிலாடி பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (36). தொழிலாளி. இவரது மனைவி சங்கீதம் (33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் சங்கீதத்தி ற்கும், யுவராஜிக்கும் அவர்க ளது மகனை பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்ப ட்டது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சங்கீதம் மனவேதனை அடைந்து சம்பவத்தன்று வீட்டின் கழிப்பறைக்குள் சென்று கதவை தாழிட்டு, மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் சங்கீதத்தை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சங்கீதம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சங்கீதத்தின் தந்தை ஈஸ்வரன் வெள்ளோடு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வீரப்பன் சத்திரம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    • இந்த கொலையில் தொடர்பு டைய மேலும் 3 பேர் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்(29). இவர் நேற்று முன்தினம் கனிராவு த்தர்குளம் பகுதியில் காந்தி நகர் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி கொண்டு அருகில் உள்ள பாரில் மது குடித்துள்ளார்.

    அப்போது அங்கு ஏற்கனவே ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ஜின்னா(30) தலைமையிலான 4 பேர் கொண்ட கும்பல் ஒன்றாக மது குடித்து கொண்டி ருந்தனர்.

    சந்தோஷ் மது குடித்து விட்டு டாஸ்மாக் பாரினை விட்டு வெளியே வந்தபோது ஜின்னா மற்றும் அவருடன் வந்த 4 பேர் சந்தோஷை வழிமறித்து ஏற்கனவே அவர்களுக்குள் இருந்த முன் விரோதம் காரணமாக தகராறில் ஈடுபட்டு கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த ஜின்னா, அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோஷின் வயிற்றில் குத்தினார். இதையடுத்து சந்தோஷ் நிலைகுலைந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சந்தோஷ் இறந்ததை உறுதி செய்தபின் ஜின்னா மற்றும் அவருடன் வந்த 4 வாலிபர்கள் 3 மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    கொலையான சந்தோஷ் மீது வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி போலீஸ் நிலைய ங்களில் 2 வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது. அதேபோல் சந்தோஷை கத்தியால் குத்திய ஜின்னா மீதும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் குற்றவாளி களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் டவுன் டி.எஸ்.பி ஆறுமுகம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், சோமசுந்தரம், முருகன், தெய்வராணி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்ப ட்டுள்ளது.

    இதற்கிடையே சந்தோ ஷை கொலை செய்த ஜின்னா, ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன்(27) ஆகியோர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கோ ர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவி ட்டார்.

    இந்நிலையில் சரணடைந்த 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வீரப்பன் சத்திரம் போலீசார் முடிவு செய்துள்ளனர். அவர்களி டம் விசாரணை நடத்திய பிறகு தான் இந்த கொலைக்கான காரணம் தெரியவரும்.

    மேலும் இந்த கொலையில் தொடர்பு டைய மேலும் 3 பேர் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். 

    • 3 வழக்குகளிலும் அப்போதைய பங்களாபுதூர் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் விசாரணை அதிகாரியாக செயல்பட்டார்.
    • ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

    கோபி:

    சத்தியமங்கலம் அருகே உள்ள ஆண்டவர் நகரை சேர்ந்தவர் முருகேசன் (57). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 3.8.2017 அன்று கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரக்கன்கோட்டை மூலவாய்க்கால் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அந்தியூர் அருகே உள்ள பர்கூர் சுண்டப்பூரை சேர்ந்த சிவா (32) என்பவர் ஓட்டிச்சென்ற ஆம்னி வேன் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகேசன் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதேபோன்று கோபிசெ ட்டிபாளையம் அருகே உள்ள பங்களாபுதூர் அண்ணாநகரை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (75). இவர் கடந்த 24.2.2017 அன்று உப்புக்கார பள்ளம் என்ற இடத்தில் சைக்கிளில் சென்றபோது அந்த வழியாக வந்த வாணிப்புத்தூர் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த சதீஸ் என்கிற கருப்புசாமி என்பவர் ஓட்டிச்சென்ற ஆம்னி வேன் ஈஸ்வரமூர்த்தி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஈஸ்வரமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.ஜி.புதூர் நேரு நகரை சேர்ந்தவர் சங்கர் (31). கூலித்தொழிலாளியான சங்கர் கடந்த 29.3.2019 அன்று வீட்டின் முன்பு அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டு இருந்த போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் சங்கரிடம் இருந்த செல்போ னை பறித்துக்கொண்டு தப்பியோடினர். அதைத்தொடர்ந்து சங்கர் அளித்த புகாரின் பேரில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    இந்த 3 வழக்குகளிலும் அப்போதைய பங்களாபுதூர் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் விசாரணை அதிகாரியாக செயல்பட்டார். அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் நெப்போ லியன் தற்போது சேலம் மாநகரம் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த வழக்குகள் கோபியில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் எண். 1-ல் நடைபெற்று வந்தது.

    இந்த 3 வழக்குகளிலும் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தொடர்ந்து ஆஜராகாத நிலையில் இன்ஸ்பெக்டர் நெப்போலி யனுக்கு ஜே.எம்.1 மாஜிஸ்தி ரேட் விஜய் அழகிரி சாட்சி விசாரணைக்கு ஆஜராக கூறி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். 3 வழக்குகளில் தொடர்ந்து ஆஜராகாத இன்ஸ்பெக்ட ருக்கு வாரண்ட் பிறப்பி க்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    ஈரோடு:

    ஈரோடுமாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளி, புஞ்சை காள மங்கலம், கணபதி பாளை யம், ஈஞ்சம்பள்ளி, எழுமாத்தூர் மற்றும் முத்துக்க வுண்டம் பாளையம் ஆகிய கிராம ஊராட்சி பகுதிகளில் ரூ.5.05 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ஈரோடு மாவட்ட த்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட 225 கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    அந்த வகையில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    அதன்படி மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், மொடக்குறிச்சி ஊராட்சி லக்காபுரம் பகுதியில் விரிவான பள்ளி உள்கட்ட மைப்பு மேம்பாட்டு திட்ட த்தின் கீழ் ரூ.29.82 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி நகர் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியினையும், பள்ளி வளாகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிதிட்டத்தின் கீழ் ரூ.5.90 லட்சம் மதிப்பீட்டில் சமையல் கூடம் அமைக்கும் பணியினையும்,

    மொடக்குறிச்சி பேரூரா ட்சிக்குட்பட்ட மாதேஸ்வரன் நகர் பகுதி யில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.49.64 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் வசதியுடன் கூடிய தார்சாலை அமைக்கும் பணியினையும், மொடக்கு றிச்சி பகுதியில் ஒதுக்க ப்பட்ட வருவாய் திட்டப்ப குதி திட்டத்தின் கீழ் ரூ.307 லட்சம் மதிப்பீட்டில் கட்ட ப்பட்டு வரும் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தினையும்,

    மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட பெருமாபாளையம் பகுதி யில் நபார்டு திட்டத்தின கீழ் ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் தூரபாளையம் அங்க ன்வாடி முதல் பெருமா பாளையம் வரை தார்சாலை அமைக்கும் பணியினையும்,

    புஞ்சைகாளமங்கலம் ஊராட்சி சின்னம்மாபுரம் பகுதியில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.7.10 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாகம் அமைக்கும் பணியினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறு த்தினார்.

    மேலும் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தும் மணல், செங்கல், சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் தரத்தினையும் ஆய்வு செய்தார். முத்துக்கவுண்டம் பாளையம் ஊராட்சி பகுதியில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.9.59 லட்சம் மதிப்பீட்டில் பாரதி நகர் விநாயகர் கோவில் முதல் முருகேசன் வீடு வரை 2 மெட்டல் அமைத்து தார்சாலை அமைக்கப் பட்டுள்ளதையும் நேரில் சென்று பார்வையிட்டு தார் சாலையின் தரத்தினையும் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து மொட க்குறிச்சி பேரூராட்சி க்கு ட்பட்ட மேம்படுத்த ப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை நேரில் செனறு பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு நோ யாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மற்றும் மருந்துகளின் இருப்புகள் குறித்தும் மருத்து வர்கள் மற்றும் செவிலி யர்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும் சிகிச்சைக்காக வருகை புரிந்துள்ள நோயா ளிகளிடம் நலம் விசாரி த்தார். பின்னர் மொடக்கு றிச்சி கால்நடை மருத்துவ மனையினையும் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு கால்ந டைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் மருந்து களின் இருப்புகள் குறித்தும் கால்நடை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும் மொடக்குறிச்சி கிராமநிர்வாக அலுவல கத்தினை பார்வையிட்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். ஈஞ்ச ம்பள்ளி ஊராட்சி ஈஞ்சம்பள்ளி, முத்துகவுண்ட ம்பாளையம், ஆதி திராவிடர் காலனியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளையும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அங்கு அமை ந்துள்ள மேல்நிலை நீர்த்தே க்க தொட்டி யினையும் பார்வையிட்டு குளோரின் பயன்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.நஞ்சை ஊத்துக்குளி, ஐங்கரன் வலசு பகுதியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ள ப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    முன்னதாக வேளாண்-பொறியியல் துறையின் சார்பில் கணபதி பாளையம் ஊராட்சி, சாத்தாம்பூர் பகுதியில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தன் கீழ் ரூ.3.59 லட்சம் மதிப்பீட்டில் (மானியம் ரூ.1.43 லட்சம்) சூரிய கூடா ரஉலர்த்தி (சோலார்) அமைக்கப் பட்டுள்ளதையும், தோட்டக் கலை-மலைப்பயிர் களத்துறை ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் அவல்பூந்துறை பகுதியில் ரூ.75,000 மானிய உதவியுடன் சுமார் 1,200 கன மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள நீர் சேமிப்பு கட்டமைப் பினையும்,

    ஈஞ்சம்பள்ளி ஊரா ட்சியில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் 21 பயனாளிகளுடன் கூத்தம்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஈஞ்சம்பள்ளி தரிசு நிலத்தொகுப்பினையும் மற்றும் எழுமாத்தூர் பகுதியில் அமைந்துள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தினையும் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு விவசாயிக ளிடம் இருந்து பெறப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ள தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு களையும் பார்வை யிட்டார்.

    முன்னதாக நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகம் சார்பில் செயல்படும் தொழிற் பேட்டையினையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின் போது, மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கணபதி, மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமித்ரா, சண்முகப்பிரியா, உதவி செயற்பொறியாளர் சுந்தரம், உதவிபொறி யாளர்கள் ரமேஷ்குமார், பர்கத், மொடக்குறிச்சி தாசில்தார் ரவி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிரு ந்தனர்.

    • பவானி போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொண்டனர்.
    • டிப்பர் லாரியில் கிராவல் மண் அனுமதியின்றி விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.

    பவானி:

    பவானி மேட்டூர் மெயின் ரோட்டில் பவானி சப்-இன்ஸ்பெ க்டர் ரகுநாதன் மற்றும் போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொ ண்டனர். அப்போது ஈரோடு மெயின் ரோடு செல்லியாண்டியம்மன் கோவில் ஆர்ச் பகுதியில் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்ட னர்.

    அப்போது அவ்வழியே வந்த டிப்பர் லாரி ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொ ண்டனர். டிப்பர் லாரியில் 3 யூனிட் கிராவல் மண் அனுமதியின்றி விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் லாரி டிரைவர் தளவாய்பேட்டை பகுதியை சேர்ந்த மோகன்ராஜை (40) கைது செய்தனர்.

    மேலும் இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள அந்தியூரை சேர்ந்த லாரி உரிமையாளர் ரமேஷ் மற்றும் இடத்தின் உரிமை யாளர் பெரியசாமி ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.  

    • புழுக்கத்தாலும், அனல் காற்றாலும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
    • சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வருகிறது. மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. 107 டிகிரி வரை பதிவானது. இதனால் வாகன ஓட்டிகள். மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    அதனைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. மாவட்ட–த்தில் அவ்வப்போது இரவு நேரங்களில் மட்டுமே மழை பெய்தது.

    காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினத்துடன் அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்றது. இதன் பிறகு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வழக்கம்போல் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    காலை 9 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை உள்ளது. புழுக்கத்தாலும், அனல் காற்றாலும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    வீடுகளில் 24 மணி நேரமும் மின்விசிறி இயங்கி வந்தாலும் புழுக்கத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    வழக்கம்போல் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் கரும்பு பால், இளநீர், நுங்கு, மோர், போன்றவற்றை அருந்தி வருகின்றனர்.

    இதேப்போல் வெள்ளரி பிஞ்சு , பழம் வியாபாரமும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் சில நாட்கள் வெயிலின் அளவு இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.86 அடியாக சரிந்தது.
    • அணையில் இருந்து 855 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. அதேநேரம் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.86 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு 151 கன அடியாக நீர்வரத்து குறைந்தது.

    கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கன அடி நீர்வந்த நிலையில் இன்று 700 கன அடியாக குறைந்துள்ளது.

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 855 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • கவுரிசங்கர் விஷத்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த துடுப்பதி, டி. பள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர் கவுரிசங்கர் (40). இவரது மனைவி பிரீத்தா.

    திருமணம் ஆகி 2 மாதத்தில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு கவுரி சங்கரை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.

    இதனையடுத்து கவுரிசங்கர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி குடித்து திரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கவுரிசங்கர் விஷத்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை ஐ.ஆர்.டி.டி. மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கவுரிசங்கர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானி தாசில்தார் அலுவலக வளாகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    பவானி:

    திருச்சி மாவட்டம் துறை யூர் வருவாய் ஆய்வாளர் பிரபாகரனுக்கு நரசிங்கபுரம் பகுதியில் மணல் கடத்தப்படு வதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சம்பவ இடம் சென்றார். அப்போது டிராக்டர் மூலம் சிலர் கிராவல் மண் அனுமதி இன்றி கடத்தப்பட்டது தெரிய வந்தது.

    இது குறித்து அவர்களிடம் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் கேட்டு தடுத்து நிறுத்தினார். அப்போது 4 பேர் அவரை தகாத வார்த்தையால் பேசி அவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து துறையூர் போலீசில் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

    இந்நிலையில் வருவாய் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து பவானி தாசில்தார் அலு வலக வளாகத்தின் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் பவானி வட்டக் கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். செய லாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பறிக்கப்பட வேண்டும். அவர் மீதும் மறறவர்கள் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும். வருவாய் துறை அலுவலர்க ளுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலி யுறுத்தி கோஷங்கள் எழுப்பி னர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர், தாசில்தார் அலுவலக பணி யாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உதவி யாளர் சங்கத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகிரி பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.
    • கவுன்சிலர்கள் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மன்ற கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஏற்கனவே கவுன்சிலர்கள் அளித்த தீர்மானங்கள் நிறை வேற்றவில்லை என்றும் புதிய தீர்மானங்கள் கவுன்சிலர்களின் ஒப்புதல் இன்றி நிறை வேற்றப்பட்ட தாகவும் கூறப்படுகிறது.

    இதை கண்டித்தும், மேலும் கவுன்சிலர்களின் வார்டு பணிகள் புறக்கணிக்கப்படு வதாகவும் கூறியும் நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    இதை தொடர்ந்து பேரூராட்சி செயல் அலு வலரிடம் கவுன்சிலர்களின் எதிர்ப்பை மன்றத் தீர்மான புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

    இதில் தி.மு.க. கவுன்சி லர்கள் 7 பேர், அ.தி.மு.க. னவுன்சிலர் ஒருவர், பாரதிய ஜனதா கட்சி கவுன்சிலர் ஒருவர், சுயேட்சை கவுன்சிலர் ஒருவர் என மொத்தம் 10 கவுன்சிலர்கள் அனைத்து தீர்மானங்களு க்கும் எதிர்ப்பு தெரிவித்து செயல் அலுவலரிடம் எழுத்துப்பூர்வமாக மனு அளித்துள்ளனர்.

    கவுன்சிலர்கள் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மன்ற கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் சிவகிரி பேரூராட்சி பர பரப்புடன் காணப்பட்டது.

    ×