என் மலர்
ஈரோடு
- ட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் கோபாலகி ருஷ்ணன் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வரும் வழியி லேயே லோகநாயகி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு பி.பி.அக்ர ஹாரம் காமராஜ் நகரை சேர்ந்தவர் பெருமாள் (55). கூலி தொழிலாளி. இவரது மனைவி மாதம்மாள். இவர்களுக்கு கோபால கிரு ஷ்ணன்(25), பால கிருஷ்ணன்(23) என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகன் கோபால கிருஷ்ணன் தார்ப்பாய் வேலைக்கு சென்று வந்து ள்ளார். இவருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில் கடந்த 2 வருடமாக கோபால கிருஷ்ணன் சரிவர வேலைக்கு செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்த ன்று கோபால கிருஷ்ணன் பெற்றோர் வெளியே சென்று விட்டனர். அப்போது வீட்டில் கோபாலகிருஷ்ணன் மட்டும் இருந்துள்ளார். மதியம் வெளியே சென்று விட்டு மீண்டும் கோபாலகிரு ஷ்ணனின் தாய் மாதம்மாள் வீட்டுக்கு வந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் கோபாலகி ருஷ்ணன் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கோபால கிருஷ்ணனை மீட்டு ஒரு ஆட்டோவில் சிகிச்சை க்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்ற னர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியி லேயே கோபாலகிருஷ்ணன் இறந்துவிட்டதாக தெரி வித்தார்.
இது குறித்து கருங்கல்பா ளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு பழைய பாளையம் ,இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி லோகநாயகி(42).
கடந்த சில வருடங்க ளாகவே லோகநாயகி வயிற்று வலியால் அவதி அடைந்து வந்துள்ளார். இதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.
இருந்தாலும் வயிற்று வலி குணமாகவில்லை என கூறப்படுகிறது. வயிற்று வலியால் வாழ்வதை விட செத்து விடலாம் என்று அடிக்கடி அவர் கூறி வந்துள்ளார். அவருக்கு அவரது உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று மாலை வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்த துரை சாமி கதவை தட்டி உள்ளார். ஆனால் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழி யாக பார்த்த போது லோக நாயகி வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தொங்கி கொண்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று லோக நாயகியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வரும் வழியி லேயே லோகநாயகி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாசன பகுதியில் மஞ்சள், வாழை, கரும்பு, நெல் உள்ளிட்டவை பயிரிடப்ப டுகிறது.
- பழுதான மதகுகள், ஷட்ட ர்களில் சிறிய பணி கள், கரைகளில் முக்கிய இடங்களில் பழுது நீக்கப்பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படும்.
ஈரோடு:
பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர், காளிங்கராயன்பாளையம் அணையில் இருந்து பிரிந்து, காளிங்கராயன் வாய்க்கால் மூலம், 15,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் தருகிறது.
பாசன பகுதியில் மஞ்சள், வாழை, கரும்பு, நெல் உள்ளிட்டவை பயிரிடப்ப டுகிறது. ஆண்டு தோறும் ஜூன் 16-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு ஏப்ரல் 30-ந் தேதி நிறுத்த ப்படும். ஒன்றரை மாத கால பராமரிப்புக்குப்பின், ஜூன், 16-ந் தேதி மீண்டும் பாசன த்துக்கு திறக்கப்படும்.
பவானிசாகர் அணையில் நீர் இருப்பு உள்ளதால் வரும் 16-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என காளிங்கராயன் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன்படி குறிப்பிட்ட நாளில் திறக்க கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
இதுபற்றி நீர் வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
இந்தாண்டு வழக்கமான தேதியில் திறக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும். முன்னதாக வாய்க்காலில் பராமரிப்பு பணி கள் மே ற்கொள்ள வேண்டும். பராமரி ப்பு பணிகளு க்கான நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது.
இதனால் அத்யாவசிய பணிகள் மட்டும் மேற்கொள்ள ப்படும். குறிப்பாக தண்ணீர் ஓட்ட த்தை தடுக்கும் ஊனா ங்கொடி, ஆகாயத்தாமரை போன்றவற்றை அகற்றி கழிவுகள் வெளியேற்ற ப்படும்.
பழுதான மதகுகள், ஷட்ட ர்களில் சிறிய பணி கள், கரைகளில் முக்கிய இடங்களில் பழுது நீக்கப்பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படும்.
இப்பணிகள் ஓரிரு நாளில் தொடங்கி அடுத்த 10 நாட்களில் நிறைவு செய்யப்படும். அதன்பின், காளிங்கரா யனில் தண்ணீர் திறக்க ப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்
- தமிழகத்தில் 6 லட்சம் விசைத்தறி மூலம் 30 லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பெறுகின்றனர்.
- 30 சதவீத கூலி உயர்வாக, வேட்டிக்கு, 24ல் இருந்து 7.20 ரூபாய் உயர்ந்தி, 31.20 ரூபாயும், சேலைக்கு, 43 ரூபாயில் இருந்து 12.90 ரூபாய் உயர்த்தி 55.91 ரூபாயாகவும் வழங்க வேண்டும்.
ஈரோடு:
தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டி.எஸ்.ஏ.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதா வது:-
தமிழகத்தில் 6 லட்சம் விசைத்தறி மூலம் 30 லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பெறுகின்றனர். அரசின் இலவச வேட்டி, சேலை, 228 விசைத்தறி கூட்டுறவு நெசவாளர் தொடக்க சங்கம் மூலம் 68 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளுக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது. இதன் மூலம், பல லட்சம் நெசவா ளர்கள் வேலை பெறுகின்ற னர்.
கடந்த, 2010–-11ல் வேட்டிக்கு 16 ரூபாய், சேலைக்கு 28.16 ரூபாய் கூலி வழங்கினர். 2011–12ல் வேட்டிக்கு–18.40 ரூபாய், சேலைக்கு–31.68 ரூபாய், 2015–-16-ல் வேட்டிக்கு– 21.60 ரூபாய், சேலைக்கு–39.27 ரூபாய், 2019ல் வேட்டிக்கு–24 ரூபாய், சேலைக்கு–43.01 ரூபாய் என உயர்த்தினர்.
அதன்பின் கூலி உயரவில்லை. கடந்த, 2010 முதல், 13 ஆண்டில் வேட்டி க்கு 8 ரூபாயும், சேலைக்கு 14.85 ரூபாயும் உயர்ந்துள்ளது. அதேநேரம் கடந்த, 4 ஆண்டில் தொழிலாளர் ஊதியம், குடோன் வாடகை, மின் கட்டணம், விசைத்தறி உதிரி பாகங்கள், போக்கு வரத்து செலவு, பஸ் கட்டணம், எலக்டரானிக் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
எனவே 30 சதவீத கூலி உயர்வாக, வேட்டிக்கு, 24ல் இருந்து 7.20 ரூபாய் உயர்ந்தி, 31.20 ரூபாயும், சேலைக்கு, 43 ரூபாயில் இருந்து 12.90 ரூபாய் உயர்த்தி 55.91 ரூபாயாகவும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- கடந்த சில நாட்களாகவே தினசரி பாதிப்பை விட குணமடை ந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 2 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாவட்ட நிர்வாக த்தின் பல்வேறு நட வடிக்கையால் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது.
கடந்த சில நாட்களாகவே தினசரி பாதிப்பை விட குணமடை ந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோ னா பாதிப்பு ஏற்படவில்லை.
மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்த வர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 893 ஆக உள்ளது.
அதே சமயம் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். இதுவரை மாவ ட்டத்தில் குணம் அடை ந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 155 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கொரோனா தாக்கத்தால் மாவட்டத்தில் 736 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 2 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- கொலையான சந்தோஷ் மீது வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி போலீஸ் நிலையங்களில் 2 வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது.
- போலீசாரின் விசாரணையில் முன் விரோத தகராறில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (29). இவர் கடந்த 30-ந் தேதி ஈரோடு கனிராவுத்தர்குளம் பகுதியில் காந்தி நகர் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி கொண்டு அருகில் உள்ள பாரில் மது குடித்துள்ளார்.
அப்போது அங்கு ஏற்கனவே ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ஜின்னா(30) தலைமையிலான 4 பேர் கொண்ட கும்பல் ஒன்றாக மது குடித்து கொண்டி ருந்தனர்.
சந்தோஷ் மது குடித்து விட்டு டாஸ்மாக் பாரினை விட்டு வெளியே வந்தபோது, ஜின்னா மற்றும் அவருடன் வந்த 4 பேர் சந்தோஷை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு ள்ளனர்.
இதில் ஆத்திரம் அடைந்த ஜின்னா, அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோஷின் வயிற்றில் குத்தினார். இதை யடுத்து சந்தோஷ் நிலை குலைந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சந்தோஷ் இறந்ததை உறுதி செய்தபின், ஜின்னா மற்றும் அவருடன் வந்த 4 வாலிபர்கள் 3 மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றனர்.
கொலையான சந்தோஷ் மீது வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி போலீஸ் நிலையங்களில் 2 வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது.
அதேபோல் சந்தோஷை கத்தியால் குத்திய ஜின்னா மீதும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. மேலும் போலீசாரின் விசாரணையில் முன் விரோத தகராறில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. இந்த கொலை சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் குற்றவா ளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின்பேரில் டவுன் டி.எஸ்.பி. ஆறுமுகம் மேற்பார்வையில் இன்ஸ்பெ க்டர்கள் சண்முகம், சோம சுந்தரம், முருகன், தெய்வ ராணி ஆகியோர் தலைமை யில் தனிப்படை அமைக்க ப்பட்டு உள்ளது.
இதற்கிடையே சந்தோஷை கொலை செய்த ஜின்னா, ஈரோடு கருங்க ல்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன்(27) ஆகியோர் நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களைப் 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்பு உடைய சின்னசேமூர் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் சித்தீக் (34), பவானியை சேர்ந்த மனோஜ் குமார்(37), கனி ராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(30) ஆகிய 3 பேரை வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் கோர்ட்டில் சரணடைந்த 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வீரப்பன் சத்திரம் போலீசார் முடிவு செய்து ள்ளனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு தான் இந்த கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்பதால் ஜின்னா, மணிகண்டனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக நீதிமன்ற அனுமதியை கோரியு ள்ளனர்.
இன்னும் ஓரிரு நாளில் அனுமதி கிடைத்ததும் அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். அதன்பிறகு இந்த கொலையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மலைவாழ் மக்கள் காலை நேரங்களிலேயே பலாப்பழங்களை பறித்து மாலைக்குள் வீட்டில் இருப்பு வைக்காமல் விற்பனை செய்து வருகின்றனர்.
- பலாப்பழம் வாசத்திற்காக வனப்பகுதிகளுக்குள் இருக்கும் யானைகள் தானாக வந்து பழங்களை லாவகமாக எடுத்து ருசித்து செல்கின்றன.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்த மலை பகுதிகளில் விளையும் ராகி, கம்பு பச்சைப்பயிர், தட்டைப்பயிர் உள்ளிட்ட தானிய வகைகளும் புளி, நிலக்கடலை உள்ளிட்ட பொருட்கள் மிகவும் ருசியாக இருக்கும்.
மேலும் இங்கு இயற்கை உரங்களை பயன்படுத்தி வளர்க்கப்படுவதால் இந்த பயிர்களை நேரடியாக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து வாங்கி செல்கின்றனர். மற்றவைகளை வாரம்தோறும் அந்தியூரில் நடக்கும் வாரச்சந்தைகளுக்கு மலை வாழ் மக்கள் கொண்டு வந்து விற்பனை செய்து செல்வார்கள்.
இதில் தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கியிருக்கும் நிலையில் இங்கு விளையும் பலாப்பழம் மிகுந்த ருசியாக இருப்பதினால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து வாங்கி செல்கின்றனர். இந்த பழங்கள் அந்தியூர் தேர் நிலையம் அருகே மலைவாழ் மக்கள் கொண்டு வந்து பழங்களின் அளவிற்கு தகுந்தாற் போல் விலை நிர்ணயம் செய்து 200 முதல் 600 ரூபாய் வரை எடைக்கு ஏற்ப விற்பனை செய்து வருகின்றனர். இந்த பலாப்பழங்களை மலைவாழ் மக்கள் பறித்து தாங்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள சாலைகளில் வைக்கப்பட்டிருந்தால் இதன் வாசத்திற்காக வனப்பகுதிகளுக்குள் இருக்கும் யானைகள் தானாக வந்து பழங்களை லாவகமாக எடுத்து ருசித்து செல்கின்றன.
இதனால் மலைவாழ் மக்கள் காலை நேரங்களிலேயே பலாப்பழங்களை பறித்து மாலைக்குள் வீட்டில் இருப்பு வைக்காமல் விற்பனை செய்து வருகின்றனர்.
- கும்பாபிஷேக விழாவையொட்டி கருவறையில் இருந்த ஷீரடி சாய்பாபா சிலைக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
- சிலர் கேமிரா, செல்போனில் சாய்பாபா சிலையை போட்டோ, வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தனர்.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கொளாநல்லி நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாய்பாபா பக்தர் ஒருவர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் ஒரு குடிசைக்குள் சாய்பாபா சிலை வைத்து தினமும் வழிபாடு செய்து அன்னதானம் வழங்கி வந்தார்.
இந்த நிலையில் அந்த இடத்தில் புதிதாக ரூ.50 லட்சம் மதிப்பில் சாய்பாபா கோவில் கட்டப்பட்டது. கருவறையில் 8 அடி உயரத்தில் பளிங்கு கல்லால் ஆன ஷீரடி சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது. இந்த கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.
கும்பாபிஷேக விழாவையொட்டி கருவறையில் இருந்த ஷீரடி சாய்பாபா சிலைக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் சிலர் கேமிரா, செல்போனில் சாய்பாபா சிலையை போட்டோ, வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது செல்போன், வீடியோவில் கருவறையில் இருந்த 8 அடி உயர ஷீரடி சாய்பாபா சிலை மறைந்து இருந்தது. ஆனால் சாய்பாபா கழுத்தில் இருந்த மாலை மட்டும் தனியாக பதிவாகி இருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மீண்டும் போட்டோ, வீடியோ எடுத்த போது சாய்பாபா சிலை பதிவாகி இருந்தது. இதைக் கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
- குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.97 அடியாக உள்ளது.
- பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 22.64 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. அதேநேரம் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.75 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு 513 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடியும், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 955 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதே போல் குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.97 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 22.64 அடியாக உள்ளது. வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 24.80 அடியாக உள்ளது. மழைப்பொழிவு இல்லாததால் நீர் வரத்து குறைந்து அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
- நகராட்சி பகுதிக்கு தேவையான கொசு மருந்துகளை திருச்சியில் உள்ள ஒரு நிறுவனத்திடம் வாங்கி வந்தனர்.
- நகராட்சி ஆணையாளர் சையது உசேன் நேற்று பணி ஓய்வு பெற இருந்தார்.
புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இந்த நகராட்சியின் ஆணையாளராக சையது உசேன் என்பவர் பணியாற்றினார்.
நகராட்சி பகுதிக்கு தேவையான கொசு மருந்துகளை திருச்சியில் உள்ள ஒரு நிறுவனத்திடம் வாங்கி வந்தனர். இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு தேவையான 335 லிட்டர் கொசு மருந்துகளை திருச்சியில் உள்ள நிறுவனத்திடம் இருந்து வாங்கியதாகவும், அதற்காக ரூ.3 லட்சத்து 98 ஆயிரத்து 299 காசோலையாக செலுத்தப்பட்டதாகவும் நகராட்சி பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டது.
இதுபற்றி தெரியவந்ததும் நகராட்சி தலைவர் ஜனார்த்தனன், துணைத்தலைவர் சிதம்பரம் மற்றும் நகராட்சியின் உறுப்பினர்கள் நகராட்சி பயன்பாட்டுக்கு வாங்கப்பட்ட கொசு மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளதா? என அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கொசு மருந்து இல்லாததை கண்டுஅதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து நகராட்சி அதிகாரியிடம் கேட்டனர். அவர் சரிவர பதில் அளிக்கவில்லை. இதையடுத்து நகராட்சி தலைவர் போலீசில் புகார் செய்தார். மேலும் இதுகுறித்து நகராட்சி உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து திருப்பூர் மண்டல நகராட்சி இயக்குனர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முறைகேடு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் நகராட்சி ஆணையாளர் சையது உசேன் நேற்று பணி ஓய்வு பெற இருந்தார். இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் கொசு மருந்துகள் ஒரு வேனில் அவசரமாக கொண்டு வந்து அலுவலகத்தில் இறக்கி வைத்தனர். இதுகுறித்தும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஓய்வுபெறும் நாளில் நகராட்சி ஆணையாளர் சையது உசேன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதேபோல் நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமாரும் இந்த முறைகேட்டில் சஸ்பெண்டு செய்யப்பட்டார். ஓய்வு பெறும் நாளில் நகராட்சி ஆணையாளர் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் அந்த பகுதியில் உள்ள செல்லாயி வீட்டுக்கு சென்றனர்.
- வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 12 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு ராசாம்பாளையம் ரோடு, எஸ்.எஸ்.பி நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியின் ஒரு வீட்டில் செல்லாயி (58) என்ற மூதாட்டி பல வருடங்களாக வீட்டில் வைத்து மது விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இவர் வீட்டுக்கு மது அருந்த வருபவர்களால் அப்பகுதி மக்கள் பல்வேறு அவதிக்கு உள்ளாகினர்.
மது குடிக்க வரும் குடிமகன்களால் அப்பகுதி பெண்கள், குழந்தைகள் வெளியே வர அச்சப்பட்ட னர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் ஏற்கனவே ஈரோடு கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படு கிறது.
இதனையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு மது விற்பனையை தடுத்து நிறுத்த கோரி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வீரப்ப ன்சத்திரம் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் பொதுமக்களி டம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். நிச்சயமாக மது விற்பனையில் ஈடுபடு பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இன்ஸ்பெக்டர் சண்முகம் உறுதி அளித்தார்.
இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள செல்லாயி வீட்டுக்கு சென்றனர். அங்கு செல்லாயிடம் விசாரணை நடத்தினர். வீட்டில் விற்ப னை க்காக வைக்கப்பட்டி ருந்த 12 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வீரப்பன்ச த்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லாயியை அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்த மது விற்பனையில் தொடர்பு டைய அவருடைய உறவி னர்களையும் தேடி வருகின்றனர்.
- முகூர்த்தம் காரணமாக காய்கறிகள் தேவை அதிகரித்து விலையும் உயர்ந்துள்ளது.
- மார்க்கெட்டில் பழங்கள் விலை சற்று உயர்ந்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு வ .உ.சி . காய்கறி மார்க்கெட்டிற்கு ஒட்டன்சத்திரம், ஊட்டி , தாளவாடி, ஆந்திரா, எடப்பாடி, மேட்டுப்பா ளையம், பெங்களூர், தாரா புரம் போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்ப னைக்கு கொண்டு வரப்படு கிறது.
இங்கு வழக்கமாக 75 முதல் 90 டன் வரை காய்கறிகள் வரத்தாகி வரும். ஆனால் பரவலாக மழை பெய்தது காரணமாக காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்துவிட்டது.
இதனால் இன்று வ. உ. சி. காய்கறி மார்க்கெட்டிற்கு வெறும் 50 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வந்து இருந்தது.
அதே சமயம் தொடர் முகூர்த்தம் காரணமாக காய்கறிகள் தேவை அதிகரித்து இதன் எதிரொலியாக விலையும் உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தை விட ஒரு சில காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
இன்று வ. உ.சி. மார்க்கெட்டில் விற்க ப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:
கத்திரிக்காய் - 80 - 90, பீர்க்கங்காய்-60, புடல ங்காய்-50, தக்காளி - 35 - 40, பெரிய வெங்காயம் - 30, சின்ன வெங்காயம் - 80, பீன்ஸ்-80, கேரட் - 65, பாவக்காய் - 60,
முட்டைக்கோஸ் - 20, காலிபிளவர் - 30, குடமிளகாய் -60, முருங்கை க்காய் - 80, பீட்ரூட் - 55, வெண்டைக்காய் - 70, முள்ளங்கி - 40, சுரைக்காய் - 15, சவ்சவ் - 20, பட்ட அவரை - 80, கருப்பு அவரை - 100. இஞ்சி வரத்து வெகுவாக குறைந்து விட்டதால் விலை கிடுகிடு என உயர்ந்து இன்று ஒரு கிலோ ரூ. 200-க்கு விற்கப்படுகிறது.
ஈரோடு மார்க்கெட்டிற்கு பெங்களூர், மகாராஷ்ட்ரா, ஊட்டி கொடைக்கானல், ஆந்திரா, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் இருந்து பழங்கள் வரத்தாகி வருகிறது.
இங்கு நாளொன்றுக்கு 30 டன் வரை பழங்கள் வரத்தாகி வந்தன. தற்போது வரத்து குறைவால் இன்று 10 டன் பழங்கள் மட்டுமே வரத்தாகி இருந்தன.
இதேப்போல் தொடர் முகூர்த்தம் காரணமாகவும், வரத்து குறைவு காரணமா கவும் ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் பழங்கள் விலை சற்று உயர்ந்துள்ளது. இன்று விற்கப்பட்ட பழங்களின் விலை கிலோவில் வருமாறு:-
கொய்யா-50, செந்தூரம் மாம்பழம் - 50, ஜில் பசந்த் மாம்பழம் - 70, ருமேனியா மாம்பழம் -70, கோப்பூர் அல்வா மாம்பழம்-60, இமாம் பசந்த் மாம்பழம் - 50, மாதுளை பழம் - 120, ஆப்பிள் - 200, ஆஸ்திரேலியா ஆரஞ்சு - 120, சாத்துக்குடி-80, பன்னீர் திராட்சை - 120, சின்ன நாவல் பழம் - 240, பெரிய நாவல் பழம் - 360.
- பர்கூர் மலைப்பகுதியில் மழை விடிய விடிய கொட்டியது.
- இந்த மழை வனப்பகுதியை குளிர வைத்துள்ளது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பொழிந்து வருகிறது.
அக்னி நட்சத்திரம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முடிவுற்ற நிலையில் வெயி லின் தாக்கம்படிப்ப டியாக குறைய தொடங்கிய வருகிறது. இருப்பினும் சில பகுதிகளில் இன்னும் சதம் அடித்து வரும் வெயிலினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பர்கூர் மலைப்பகுதியில் நள்ளிரவு ஒரு மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை, விடிய விடிய கொட்டியது. இதனால் பர்கூர் மலைப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இந்த மழையினால் மலைப்பகுதிகளில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியுள்ளது.
வனப்பகுதிகளுக்குள் விலங்குகளுக்கு அமைக்கப்பட்டுள்ள குட்டைகளில் மழை நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகள், வனப்பகுதி களுக்குள்ளேயே தாகத்தை தீர்க்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
கடந்த 27 நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் இந்த மழை வனப்பகுதியை குளிர வைத்துள்ளது.






