search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "will start in a day or two"

    • பாசன பகுதியில் மஞ்சள், வாழை, கரும்பு, நெல் உள்ளிட்டவை பயிரிடப்ப டுகிறது.
    • பழுதான மதகுகள், ஷட்ட ர்களில் சிறிய பணி கள், கரைகளில் முக்கிய இடங்களில் பழுது நீக்கப்பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படும்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர், காளிங்கராயன்பாளையம் அணையில் இருந்து பிரிந்து, காளிங்கராயன் வாய்க்கால் மூலம், 15,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் தருகிறது.

    பாசன பகுதியில் மஞ்சள், வாழை, கரும்பு, நெல் உள்ளிட்டவை பயிரிடப்ப டுகிறது. ஆண்டு தோறும் ஜூன் 16-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு ஏப்ரல் 30-ந் தேதி நிறுத்த ப்படும். ஒன்றரை மாத கால பராமரிப்புக்குப்பின், ஜூன், 16-ந் தேதி மீண்டும் பாசன த்துக்கு திறக்கப்படும்.

    பவானிசாகர் அணையில் நீர் இருப்பு உள்ளதால் வரும் 16-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என காளிங்கராயன் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன்படி குறிப்பிட்ட நாளில் திறக்க கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

    இதுபற்றி நீர் வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    இந்தாண்டு வழக்கமான தேதியில் திறக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும். முன்னதாக வாய்க்காலில் பராமரிப்பு பணி கள் மே ற்கொள்ள வேண்டும். பராமரி ப்பு பணிகளு க்கான நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது.

    இதனால் அத்யாவசிய பணிகள் மட்டும் மேற்கொள்ள ப்படும். குறிப்பாக தண்ணீர் ஓட்ட த்தை தடுக்கும் ஊனா ங்கொடி, ஆகாயத்தாமரை போன்றவற்றை அகற்றி கழிவுகள் வெளியேற்ற ப்படும்.

    பழுதான மதகுகள், ஷட்ட ர்களில் சிறிய பணி கள், கரைகளில் முக்கிய இடங்களில் பழுது நீக்கப்பணிகள் மட்டும் மேற்கொள்ளப்படும்.

    இப்பணிகள் ஓரிரு நாளில் தொடங்கி அடுத்த 10 நாட்களில் நிறைவு செய்யப்படும். அதன்பின், காளிங்கரா யனில் தண்ணீர் திறக்க ப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

    ×