search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "home arrested"

    • போலீசார் அந்த பகுதியில் உள்ள செல்லாயி வீட்டுக்கு சென்றனர்.
    • வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 12 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ராசாம்பாளையம் ரோடு, எஸ்.எஸ்.பி நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியின் ஒரு வீட்டில் செல்லாயி (58) என்ற மூதாட்டி பல வருடங்களாக வீட்டில் வைத்து மது விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இவர் வீட்டுக்கு மது அருந்த வருபவர்களால் அப்பகுதி மக்கள் பல்வேறு அவதிக்கு உள்ளாகினர்.

    மது குடிக்க வரும் குடிமகன்களால் அப்பகுதி பெண்கள், குழந்தைகள் வெளியே வர அச்சப்பட்ட னர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் ஏற்கனவே ஈரோடு கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படு கிறது.

    இதனையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு மது விற்பனையை தடுத்து நிறுத்த கோரி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது வீரப்ப ன்சத்திரம் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் பொதுமக்களி டம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். நிச்சயமாக மது விற்பனையில் ஈடுபடு பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இன்ஸ்பெக்டர் சண்முகம் உறுதி அளித்தார்.

    இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள செல்லாயி வீட்டுக்கு சென்றனர். அங்கு செல்லாயிடம் விசாரணை நடத்தினர். வீட்டில் விற்ப னை க்காக வைக்கப்பட்டி ருந்த 12 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து வீரப்பன்ச த்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லாயியை அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்த மது விற்பனையில் தொடர்பு டைய அவருடைய உறவி னர்களையும் தேடி வருகின்றனர்.

    ×