என் மலர்
கடலூர்
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்பு மதசார்பற்ற கட்சிகள் பிரிந்து நின்றதால்தான் குளறுபடி ஏற்பட்டது. தேர்தலுக்கு பின்னர் காங்கிரசும் மதசார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள். கூட்டணிக்கு முன்பே சேர்ந்திருந்தால் மதவாத சக்திகள் வலுபெறுவதற்கு வாய்ப்பில்லை. இந்திய அளவிலான மதவாத சக்திகளுக்கு இது ஒரு படிப்பினையாகும்.
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரண்டால்தான் மதவாத சக்திகளை முறியடிக்கமுடியும் என்பதை கர்நாடக தேர்தல் உணர்த்தியுள்ளது. எக்காரணத்தை முன்னிட்டும் பா.ஜ.க ஆட்சி அதிகாரத்திற்கு வர இடம் கொடுத்துவிடக்கூடாது. மிகவும் விழிப்பாக இருந்து மதவாத சக்திகளிடம் இருந்து தேசத்தை காக்க வேண்டும்.
நாளை (22-ந் தேதி) ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கட்சி சார்பற்ற முறையில் மக்கள் திரள் ஆர்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளார்கள். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பங்கேற்பார்கள்.
தென்மாவட்டங்களில் உள்ள அனைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
திட்டக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் நடுவர் நீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்பாகும். ஆனால் மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக ஆணையத்தை அமைக்க சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
ஆணையம் என்பது தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருக்காது. இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடியதாகவே அமையும். கடந்த மாதம் 14-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதற்கு கர்நாடக அரசும் ஒப்புதல் அளித்தது. ஆனால் 2 நாட்களுக்கு பிறகு மத்திய அரசு சில நிலைப்பாட்டை மாற்றியது, ஏன் என்று புரியவில்லை.
சென்னை அறிவாலயத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் கூட்டத்தில், காவிரி பிரச்சினை குறித்தும், அதில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
காவிரி பிரச்சினைக்காக தி.மு.க. தலைமையில் 9 கட்சிகள் கூடி பேசி செயல்பட்டு வருகிறோம். இந்நிலையில் கமல்ஹாசன் கூட்டிய கூட்டத்திற்கு அழைப்பு வந்தது. ஆனால் அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததற்காக கமல்ஹாசனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார். #tamilnews #thirumavalavan
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிவாயம் கிராமத்தில் குமராட்சிக்கு செல்லும் சாலையில் உள்ள ராஜன் வாய்க்காலில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இதில் வாய்க்காலில் தேங்கி நிற்கும் தண்ணீரில் முதலை ஒன்று கிடந்தது. நேற்று மதியம் அந்த முதலை வாய்க்காலை விட்டு வெளியே வந்தது.
இதை பார்த்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இது குறித்து மாவட்ட வன அதிகாரி ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வனசரகர் சிதம்பரம், வன காப்பாளர் கஜேந்திரன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். பொதுமக்களை பயமுறுத்திய முதலையை பிடித்தனர்.
பிடிபட்ட முதலை 10 அடி நீளம் இருந்தது. அந்த முதலையை சிதம்பரத்தில் உள்ள வக்காரமாரி ஏரியில் வனத்துறையினர் பத்திரமாக விட்டனர்.
கடலில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்தது தொடர்பாக கடலூர் முதுநகர் சோனாங்குப்பம் மீனவர்களுக்கும், தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும் இடையே கடந்த 15-ந்தேதி மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த தேவனாம்பட்டினம் மீனவர்கள் அரிவாள், கத்தி, சுளுக்கி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சோனாங்குப்பம் கிராமத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில், சோனாங்குப்பத்தைச்சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு மீனவ கிராமங்களிலும் பதற்றம் நீடித்து வருகிறது. அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் கொலை தொடர்பாக கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவனாம்பட்டினத்தைச்சேர்ந்த 8 மீனவர்களை கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகிறார்கள்.
அதேபோல் சம்பவத்தன்று சோனாங்குப்பத்துக்கு ஆயுதங்களுடன் சென்ற மீனவர்களை தடுக்க முயன்ற தேவனாம்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயன்றதாக 5 பேரை தேவனாம்பட்டினம் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் சோனாங்குப்பம் மற்றும் தேவனாம்பட்டினம் மீனவ கிராமங்களில் உள்ளூர் மட்டுமின்றி விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை போன்ற வெளிமாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் கடலிலும் 4 படகுகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
இந்த சம்பவங்களில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்வதற்காக 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினரும் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். இது தவிர தேவனாம்பட்டினம், துறைமுகம் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு கூடுதலாக 16 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே போலீசாருக்கு பயந்து தேவனாம்பட்டினம் மீனவர்கள் கடந்த 15-ந்தேதி இரவில் இருந்தே ஊரை விட்டு வெளியே சென்று தலைமறைவாக இருக்கின்றனர். ஆண்கள் வெளியூர்களில் தலைமறைவாக இருப்பதால் தேவனாம்பட்டினம் மீனவ கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மட்டுமே உள்ளனர்.
அவர்களும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதால், தேவனாம்பட்டினம் மீனவ கிராமம் நேற்று 4-வது நாளாக வெறிச்சோடி கிடந்தது. சோனாங்குப்பம் மீனவ கிராமத்தில் மக்கள் நடமாட்டம் இருந்தாலும், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கும் ஒரு வித இறுக்கமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி சோனாங்குப்பத்தில் தாக்குதலில் ஈடுபட்ட மீனவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக தேவனாம்பட்டினம் மீனவர்களின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
கடலூரில் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்காக கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், முதுநகர் சோனாங்குப்பம் மீனவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து தேவனாம்பட்டினம் மீனவர்கள், சோனாங்குப்பம் கிராமத்துக்குள் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சென்று தாக்குதல் நடத்தினர்.
இதில் சோனாங்குப்பத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக தேவனாம்பட்டினத்தை சேர்ந்த ஆறுமுகம், கந்தன், ஓசைமணி, சுதாகர், சரண்ராஜ் உள்பட 20 பேர் மீது துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வந்தனர்.
இதற்கிடையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த தேவனாம்பட்டினம் தம்பிராஜ் மகன் ஆறுமுகம் ( வயது 41), ஓசைமணி (39), சுதாகர் (46), நாராயணசாமி மகன் ஆறுமுகம் (46), தினகரன் (59), சரண்ராஜ் (30), தனஞ்செழியன் மகன் தென்னரசு (32), ராமு மகன் சுந்தர் (43) ஆகிய 8 பேரை துறைமுகம் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மற்றும் நர்சுகளின் செல்போன்கள் தொடர்ந்து காணாமல் போனது. இதேபோல் கடந்த 12-ந் தேதி அவசர சிகிக்சை பிரிவில் இருந்த டாக்டர் ஒருவரின் விலைஉயர்ந்த செல்போனை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து அவசர சிகிக்சை பிரிவில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிளை போலீசார் பார்த்தனர். அதில் ஒரு காட்சி பதிவாகி இருந்தது. கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவுக்கு கடந்த 12-ந் தேதி மதியம் ஒரு டிப்-டாப் வாலிபர் உள்ளே வருகிறார்.
பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் மேஜை மீது செல்போனும், வாட்டர் பாட்டிலும் வைத்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார். அப்போது நோயாளியாக வந்த அந்த மர்ம வாலிபர் நாற்காலியில் அமர்கிறார்.
டாக்டர் எழுந்து வேறு ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த வாலிபர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மேஜை மீதிருந்த செல்போனை எடுத்து தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பதட்டமில்லாமல் நடந்து செல்கிறார்.
சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த அந்த வாலிபரின் அடையாளத்தை வைத்து அவரை போலீசார் பிடித்தனர். அந்த நபர் கடலூர் கம்மியம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் அவர் மதுவுக்கு அடிமையானவர் என்றும், குடிப்பதற்கான செலவுக் காகவே அவர் திருடுகிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் அந்த வாலிபர் பற்றி விசாரித்ததில் கடலூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கைவரிசைகளைக் காட்டியுள்ளதும், சமீபத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் திருட முயன்றபோது பிடிபட்ட அவருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்துள்ளதும் தெரியவந்தது.
கடலூர் மஞ்சக்குப்பத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் உள்ளது. இது 2 மாடி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இன்று காலை அலுவலகம் திறந்திருந்தது. அப்போது திட்டக்குடியை சேர்ந்த ஆசிரியர் சேரன் (வயது 52) அங்கு வந்தார்.
அவர் திடீரென அலுவலக மாடிக்கு வேகமாக ஏறினார். 2-வது மாடியில் ஏறி நின்று நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனை பார்த்த அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கடலூர் புதுநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
தற்கொலை மிரட்டல் விடுத்த ஆசிரியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாடியில் இருந்து கீழே இறங்குங்கள் என்று கூறினர். ஆனால் அவர் இறங்கி வரவில்லை. பின்னர் அலுவலக மாடிக்கு சென்ற போலீசார் அந்த ஆசிரியரை மீட்டு மாடியில் இருந்து கீழே அழைத்து வந்தனர். தற்கொலை மிரட்டல் விடுத்தது குறித்து அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் தான் கொண்டு வந்த மனுவை போலீசாரிடம் கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
நான் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவன். என் பெயர் சேரன். மங்களூர் அரசு பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்தேன். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு நான் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டேன். எனது ஒரு கை செயல்படவில்லை. பின்னர் நான் வேலைக்கு செல்லவில்லை. அவர்களும் என்னை மீண்டும் வேலைக்கு அழைக்கவில்லை.
இது குறித்து முதன்மை கல்வி அலுவலரிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து பணி வழங்குமாறு மனு கொடுத்தேன். அமைச்சர் எம்.சி.சம்பத்திடமும் முறையிட்டேன். இவர்கள் அனைவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். மேலும் சென்னையில் உள்ள அதிகாரிகளிடம் சென்று எனக்கு மீண்டும் பணி வழங்குமாறு கோரிக்கை மனு வழங்கினேன். ஆனால் இதுவரை எனக்கு யாரும் பணி வழங்கவில்லை.
என் குடும்பம் வறுமையில் வாடுகிறது. என் மனைவி விபத்தில் இறந்து விட்டார். என் மகன் என்ஜினீயரிங் படிப்பை விட்டு விட்டு வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கடன் அதிகரித்து அதனை திருப்பி கொடுக்க முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். என் மரணத்திற்கு பிறகாவது என்னை போல் பாதிக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களை அலைக்கழிக்காமல் அவர்களுக்கு தீர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
பின்னர் சேரனை புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் கடலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 45). இவர் கடலூரில் உள்ள ஒரு கோவிலில் புரோகிதராக உள்ளார்.
இவரது தந்தைக்கு 80 வயது பூர்த்தியானதை தொடர்ந்து அவருக்கு சிறப்பாக சதாபிஷேக விழா நடத்த முடிவு செய்தார்.
நாகபாம்பை வைத்து பூஜை செய்தால் பெற்றோரின் ஆயுள் கூடும் என கருதி அதை வைத்து பூஜை நடத்த திட்டமிட்டார்.
தந்தையின் சதாபிஷேக விழாவில் கலந்து கொள்ளும்படி உறவினர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் விழா நடந்தது. பாம்பாட்டி பழனி ஒரு நாக பாம்பை கொண்டு வந்தார். சுந்தரேசனின் பெற்றோர் முன்பு நாகபாம்பை வைத்து பூஜை செய்யப்பட்டது.
விழாவுக்கு வந்திருந்த உறவினர்கள் இந்த பூஜையை செல்போன் மூலம் படம் எடுத்தனர். மேலும் செல்பியும் எடுத்துக் கொண்டனர். சதாபிஷேகத்தில் எடுக்கப்பட்ட படங்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவியது.
இது கடலூர் மாவட்ட வனத்துறையினர் பார்வைக்கும் சென்றது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
அதன்பேரில் வனவர் அப்துல் மற்றும் வனத்துறையினர் நாகபாம்பை வைத்து பூஜை செய்தது தொடர்பாக புரோகிதர் சுந்தரேசனிடம் விசாரணை நடத்தினர்.
வன விலங்கை துன்புறுத்தும் வகையில் அதை பயன்படுத்தியதாக வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து புரோகிதர் சுந்தரேசனை கைது செய்தனர்.
பின்னர் அவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நாகபாம்பை பூஜைக்கு கொடுத்த பாம்பாட்டி பழனி தலைமறைவாகி விட்டார். அவரை வனத்துறையினர் தேடிவருகின்றனர்.
மேலும் சதாபிஷேக விழாவில் கலந்து கொண்டவர்களிடமும் விசாரணை நடத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
விருத்தாசலம்:
விருத்தாசலம் அடுத்த பட்டி கிராமத்தில் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக ஆழ்துளை மோட்டாருடன் கூடிய 4 மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகள், 7 மினிகுடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் கடந்த சில நாட்களாக பட்டி சுரங்கப்பாதை அருகில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மினிகுடிநீர் தொட்டி மூலம் தண்ணீர் வினியோகித்து பல நாட்களாகிவிட்டது. இதனால் அந்த மினிகுடிநீர் தொட்டியின் முன்பு பொதுமக்கள் காலிகுடங்களை வைத்து தண்ணீர் எப்பொழுது வரும் என காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. மேலும் குடிநீர் கிடைக்காத மக்கள் அருகில் உள்ள தொட்டிக்குப்பம் மற்றும் பரூர் கிராமங்களுக்கு சென்றும், விவசாய விளைநிலங்களுக்கு சென்றும் குடிநீர் எடுத்துவந்து பயன்படுத்த வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.
இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பட்டி கிராம பெண்கள் இன்று காலை காலிகுடங்களுடன் அப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தின் முன்பு திரண்டனர். குடிநீர் வழங்கக்காரி போராட்டதில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் வினியோகிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
தகவல் அறிந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விரைந்து வந்தனர். உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் விருத்தாசலம்-சிறுவம்பார் சாலையில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறிவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துச்சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஊராட்சி செயலாளர் தங்கத்துரை கூறும்போது மின்சாரம் சரியாக இல்லாததால் முறையான குடிநீர் வழங்கமுடியவில்லை. இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகளிடம் கூறி முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். என தெரிவித்தார்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நல்லூர்பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 25). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
பண்ருட்டியை அடுத்த வாணியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டபாணி. இவரது மகள் ரம்யா (23). இவருக்கும், விஜயகுமாருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களது திருமணம் வருகிற 20-ந் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து இருவீட்டாரும் திருமண பத்திரிகை அச்சடித்து உறவினர்களுக்கு கொடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி வீட்டில் இருந்த ரம்யா திடீரென்று காணாமல் போனார். இதனால் கவலையடைந்த கோதண்டபாணி தனது மகளை பல இடங்களில் தேடிப்பார்த்தார். எங்கும் அவரை காணவில்லை.
இதனை தொடர்ந்து அவர் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ரம்யாவை தேடி வந்தனர்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இருந்தை கிராமத்தில் உள்ள விவசாயி கிணற்றில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், கிணற்றில் பிணமாக கிடந்த பெண் மாயமான ரம்யா என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் ரம்யாவை, விஜயகுமார் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதும் தெரிய வந்தது. உடனே போலீசார் விஜயகுமாரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் ரம்யாவை கற்பழித்து கிணற்றில் வீசி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரிடம் விஜயகுமார் கொடுத்த வாக்கு மூலம் வருமாறு:-
நான் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன். எனக்கும், ரம்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
எங்களது திருமணம் 20-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது. திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்ததும் ரம்யாவுடன் நான் செல்போனில் அடிக்கடி பேசி வந்தேன். அப்போது அவரது செல்போன் பெரும்பாலும் பிசியாக இருந்து வந்தது.
இது தொடர்பாக அவரிடம் கேட்டேன். அப்போது அவரது செல்போன் பழுதாகி இருப்பதாக கூறினார். இதைத் தொடர்ந்து அவருக்கு புதிய செல்போன் வாங்கி கொடுத்தேன். அதன் பின்னரும் ரம்யாவின் செல்போன் அடிக்கடி பிசியாக இருந்தது. யாரிடம் பேசி கொண்டு இருக்கிறாய்? என்று கேட்டதற்கு உறவினர்களிடம் பேசியதாக கூறினார். இதனால் அவர் மேல் சந்தேகம் அடைந்தேன்.
கடந்த 13-ந் தேதி இரவு ரம்யாவுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். நாம் தனிமையில் சந்தித்து பேச வேண்டும் என்று கூறி அழைத்தேன். வீட்டில் யாருக்கும் தெரியாமல் ரம்யா வெளியே வந்தார். மோட்டார் சைக்கிளில் ரம்யாவை அழைத்துச் சென்றேன்.
இருந்தையில் உள்ள விளை நிலத்துக்கு சென்றோம். அப்போது அங்கு நாங்கள் 2 பேரும் பேசி கொண்டிருந்தோம். அப்போது நாம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறினேன். அதற்கு ரம்யா மறுத்து விட்டார். இதனால் எங்களுக்குள் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த நான், ரம்யாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தேன். இதில் அவர் மயங்கி விழுந்தார். மயக்க நிலையில் இருந்த ரம்யாவை கற்பழித்தேன்.
இதையடுத்து அருகில் உள்ள கிணற்றுக்கு ரம்யாவை தூக்கி சென்றேன். பின்னர் அவளை கிணற்றில் தூக்கிப் போட்டேன். சிறிது நேரத்தில் ரம்யா இறந்து விட்டார். இதையறிந்ததும் நான் ஒன்றும் தெரியாதது போல் எனது வீட்டுக்கு சென்று விட்டேன். ஆனால், போலீசார் நடத்திய விசாரணையில் நான் சிக்கி கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைதான விஜயகுமாரை போலீசார் திருக்கோவிலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து விஜயகுமார் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் காந்திநகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). பெயிண்டர். இவருக்கு விருத்தாசலத்தைச் சேர்ந்த நவீன், பரத்ராஜ், சுகுந்த், பிரேம், சுரேஷ் மற்றும் சிலர் நண்பர்களாக இருந்தனர். இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில் சதீஷ்குமார் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்திறங்கிய நவீன் உள்ளிட்டவர்கள் சதீஷ்குமாரை கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.
இதில் முகம், கைகளில் காயமடைந்த அவர் அதே இடத்தில் மயங்கி விழுந்தார். தகவல் கிடைத்து விரைந்து சென்ற விருத்தாசலம் போலீசார் சதீஷ்குமாரை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பெற்று வருகிறார்.
இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைராகி மடத்தைச் சேர்ந்த பரத்ராஜ் (26), மேட்டுத்தெருவைச் சேர்ந்த வாசுதேவன் (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் மன்னார்குடி தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் நந்தினி(வயது 18). இவர் சிதம்பரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று மாலை நந்தினி கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து நந்தினியின் தந்தை சண்முகம் சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகள் நந்தினியை சிதம்பரம் அம்பலவாணன் நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது தந்தை சங்கர், தாய் வள்ளி ஆகிய 3 பேரும் கடத்தி சென்றிருக்கலாம் என கூறியுள்ளார்.
புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews






