என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து நேற்று பயணிகளை ஏற்றிகொண்டு விருத்தாசலம் நோக்கி அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சை டிரைவர் கதிர்வேல் ஓட்டினார். கண்டக்டராக மணிகண்ணன் வந்தார்.
அப்போது பெண் பயணி ஒருவருக்கு சில்லறை கொடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் அந்த பெண் கண்டக்டர் மணிகண்ணனை தனது ஆதரவாளர்களுடன் ஆட்டோவில் கடத்தி சென்றார்.
இதை அறிந்த அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் ஒன்று திரண்டு விருத்தசாலம் பஸ் நிலையம் அருகே ஜங்சன் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே கண்டக்டரை ஆட்டோவில் கடத்தி சென்றவர்கள், மீண்டும் பஸ் நிலையத்தில் அவரை விட்டுவிட்டு சென்றனர். இருந்தபோதிலும் சாலை மறியல் போராட்டம் தொடர்ந்தது. இதனால் போக்குவரத்து 2 மணிநேரம் பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் போலீசார் கண்டக்டரை கடத்தி சென்றவர்களை விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறியதை அடுத்து சமாதானம் அடைந்த போக்குவரத்து ஊழியர்கள் பஸ்களை இயக்க தொடங்கினர்.
இதுகுறித்து போலீசார் இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கண்டக்டர் மணிகண்ணன் போதையில் பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டது தெரியவந்தது. உடனே போலீசார் மணிகண்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக உள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி, அண்ணா கிராமம், தொரப்பாடி, கண்டரக்கோட்டை, காடாம்புலியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது.
வெயில்அளவு சதம் அடித்தது. அனல்காற்று வீசியது. மக்கள் வெயில் கொடுமை தாங்காமல் பெரிதும் அவதிப்பட்டனர். இதற்கிடையில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இடி, மின்னலுடன் திடீர் மழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ள நீராக பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி ஊர்ந்தபடியே சென்றனர்.
கடலூர் அருகே வெள்ளப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ற கூட்டம் நடைபெற்றபோது மனைபட்டா வேண்டி கோரிக்கை மனு அளித்தனர்.
இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி அவர்களுக்கு மனைபட்டா வழங்க உத்தரவிட்டனர்.
அதன்படி கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா வெள்ளப்பாக்கம் கிராமத்திற்கு நேரில் சென்று உங்கள் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டத்தில் கோரிக்கை மனு வழங்கிய அடிப்படையில் 34 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், உங்கள் பகுதியில் எந்தவித குறைகளும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போன்றவற்றை குறித்து தெரிவித்தால் உடனடியாக அதிகாரியிடம் தெரிவித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும் என தெரிவித்தார். அப்போது மாநகராட்சி மண்டல குழு தலைவர் இளையராஜா, கிராம நிர்வாக அலுவலர் சரளா, திமுக நிர்வாகிகள் மஸ்கட் புகழேந்தி, ஜெயசீலன், லெனின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கடலூர்:
மேல்மருவத்தூரில் ஓடும் பஸ்சில் கண்டக்டர் பெருமாள் என்பவர் குடிபோதையில் வந்த பயணி ஒருவரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரவியது.
இதனை தொடர்ந்து கண்டக்டர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்குவதாக முதல்அமைச்சர் மு.க.ஸடாலின் அறிவித்து உள்ளார்.
என்றாலும் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.
அதன்படி கடலூரில் அரசு போக்குவரத்து மண்டல அனைத்து தொழிற்சங்க தொழிலாளர்கள் மண்டல அலுவலகம் முன்பு இன்று திடீர் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போக்குவர த்து தொழிலாளர்கள் கூறுகையில் இறந்த கண்டக்ட ர் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதிஉதவி, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, இந்த சம்பவத்தை கொலைவழக்காக பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
உடனே போலீசார் இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பின்னர் மறியல் கைவிடப்பட்டது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதாத்தூர் கிராமத்தில் குறுவை சாகுபடியில் அறுவடை முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உள்ள மருதாத்தூர், இறப்பாவூர், மேலூர், சிறுமங்கலம், கோவிலூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்திலிருந்து 50 ஆயிரம் நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனை செய்ய காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் விவசாயிகளின் நெல் மூட்டைகளை அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் முறையாக கொள்முதல் செய்யாமல் குறைந்த அளவே கொள்முதல் செய்து வருகிறது. இதனால் தேங்கி உள்ள நெல் மூட்டைகள் அதிகாலை பெய்த திடீர் மழையால் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தது.
நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






