search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் வழங்க கோரி என்.எல்.சி. நுழைவு வாயிலில் 6 கிராம மக்கள் முற்றுகை
    X

    மின்சாரம் வழங்க கோரி என்.எல்.சி. நுழைவு வாயிலில் 6 கிராம மக்கள் முற்றுகை

    நெய்வேலி அருகே மின்சாரம் வழங்க கோரி என்.எல்.சி. நுழைவு வாயிலில் 6 கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள ஐ.டிஐ. நகர், திருவள்ளுவர் நகர், பெரியார் நகர், சிவாஜிநகர் உள்ளிட்ட 6 கிராம பகுதியில் உள்ள மக்கள் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு என்.எல்.சி நிர்வாகம் மின்சாரம் வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    எனவே மின்இணைப்பு வழங்காத என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தபோவதாக கிராம மக்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி அவர்கள் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ. தலைமையில் கிராம மக்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் என்.எல்.சி. 2-வது சுரங்க வாயிலில் முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியன் மற்றும் நெய்வேலி, மந்தாரக்குப்பம் வர்த்தக சங்கத்தினர், வியாபார பிரமுகர்கள் பங்கேற்றனர்.
    Next Story
    ×