search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டு மனை பட்டா"

    • இதுவரை வீட்டு மனை பட்டா வழங்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக மனு அளித்தும் செவி சாய்க்கவில்லை.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள பொன்நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் வீடற்ற ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு ஒதுக்கித் தர வேண்டும் என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 1 மாதத்துக்கு முன்பு மனு அளித்தனர்.

    இப்பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு குடியிருப்பு இல்லாததால் மிகுந்த கஷ்டப்பட்டு வருவதாகவும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    ஆனால் இதுவரை அவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்குள்ள 2 ஏக்கர் 24 செண்ட் அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழர் விடுதலைக்கழக மாவட்ட செயலாளர் தேவேந்திரன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமையில் பொதுமக்களுக்கு வேண்டிய டெண்ட் அமைப்பதற்கான பொருட்களை வழங்கினர்.

    இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய பொதுமக்கள் தங்களுக்கு வீட்டு மனை பட்டா கேட்டு பல்வேறு அதிகாரியிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக மனு அளித்தும் செவி சாய்க்கவில்லை. இதனால் அரசு புறம்போக்கு நிலத்தில் பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதன் பிறகும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இதே இடத்தில் தாங்களாகவே இடத்தை ஒதுக்கி குடியிருக்கும் முயற்சியில் ஈடுபடும் நிலை ஏற்படும் என்றனர்.

    • உதவி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
    • பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்

    ஆரணி:

    ஆரணி அருகே மட்டதாரி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக பிரேம்குமார் என்பவர் பதவி வகித்து வருகின்றார்.

    இந்த கிராமத்தில் சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தில் ஆதிதிராவிடர் மேம்பாடு பிரிவின் கீழ் ஆதிதிராவிடர் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்பட்டுள்ளன.

    ஆனால் ஆதிதிராவிடர்களுக்கு பலபேருக்கு இலவச வீட்டுமனை வரவில்லை எனவும் குற்றசாட்டு எழுந்துள்ளன. இதனையடுத்து ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு முகாமில் மட்டதாரி கிராம பெண்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து தகுதியுள்ள நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு அளித்தனர்.

    இந்த மனுவில் கூறியதாவது:-

    மட்டதாரி கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை மற்றும் பட்டா வழங்கப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று ள்ளதாகவும் ஏற்கனவே வீடு இருப்பவர்களுக்கும் அரசு பணியில் உள்ளவர்களுக்கும் வீட்டுமனை வழங்கப்பட்டுள்ளன.

    தகுதி உள்ள நபர்களை வருவாய் துறையினர் விசாரணை செய்து மீண்டும் வீட்டுமனை பட்டா வழங்க கோரி உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 6 மாதத்திற்குள் வீட்டு மனை பட்டா வழங்க அதிகாரிகள் உறுதி அளித்தனர்
    • சுக்கிரன்குண்டு கிராமமக்கள் போராட்டம் எதிரொலி:

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள சுக்கிரன்குண்டு கிராமத்தில் சுமார் 40 ஆ ண்டுகளுக்கு மேலாக வசிக்கும் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு வீட்டும னை பட்டா வழங்க கோரி, தே.மு.தி.க. தெற்கு மாவட்ட செயலாளர் மன்மதன் தலைமையில் அப்பகுதி மக்கள் கைகாட்டி பகுதியில் கைக்குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில்,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அணவயல் எல்என்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட சுக்கிரன்குண்டு கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா இ ல்லாததால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும், வரு வாய் துறையினருக்கும் மனு கொடுத்தும் இதனால் வரை எந்த பலனும் இல்லை.

    இந்நிலையில் பல ஆண்டு காலமாக நாங்கள் வசிக்கும் பகுதிக்கு பட்டா கேட்டு போராடிவரும் நிலையில் தற்போது எங்கள் பகுதியை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வேலி அமைக்க முயல் வதாகவும், அதனால் அதனை தடுத்து நிறுத்தி நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள பட்டா வழங்க கோரியும் அல்லது அதற்கு பதிலாக அடிப்படை வசதிக ளுடன் கூடிய இடத்தையோ, வீட்டையோ தங்களுக்கு வழங்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது என்றனர்.

    இந்த சாலை மறியல் போராட்டத்தை அறிந்து அங்குவந்த வட்டாட்சியர் செந்திலநாயகி தலைமையிலான வருவாய் துறையினர், டிஎஸ்பி தீபக் ரஜினி, வடகாடு காவல் ஆய்வாளர் மற்றும் கீரமங்கலம் வருவாய் அலுவலர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டத்தில் ஆறு மாத காலத்திற்குள் வீட்டு மனை பட்டா வழங்குவதாக வாய்மொழி உத்தரவாக அளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • தமிழக அரசு எப்போதும் 3-ம் பாலினத்தவர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளது.
    • மூன்றாம் பாலினத்தவர்கள் வழங்கிய 55 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

    கள்ளக்குறிச்சி, செப்.17-

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறையின் சார்பில், 3- ம்பாலினத்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:- தமிழக அரசு எப்போதும் 3-ம் பாலினத்தவர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளது. மேலும், -ம் பாலினத்தவர்களின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூத்த திருநங்கைகளுக்கு முதியோர் ஓய்வூதியம் திட்டத்தின்கீழ் 37 திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையினையும், திருநங்கைகளின் மேம்பாட்டுக்காக தொண்டு நிறுவன உதவியுடன் 2 திருநங்கைகளுக்குதையல் எந்திரங்களும், திருநங்கைகளின் தொழில் முனைவோரை ஊக்குவிக்க ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் 7 திருநங்கைகளுக்கு ரூ.3,50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    இதே போல் 38 திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களும், 60 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகளும், முதலமைச்சரின் சூரிய சக்தியால் இயங்கும் பசுமை வீடு திட்டத்தின்கீழ் 2 திருநங்கைகளுக்கு தலா ரூ.2.10 இலட்சம் மதிப்பிலான வீடுகள், திருநங்கைகள் அடையாளஅட்டை 62 திருநங்கைகளுக்கும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் 4 திருநங்கைகளுக்கு காப்பீட்டு அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் திருநங்கைகள் வா ழ்வாதார மேம்பாட்டுக்காக 100 ஆடுகள் வழங்க ப்படவுள்ளது. மேலும், அரசின் மூலம் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் மூன்றாம் பாலினத்தவர்கள் அனை வருக்கும் கிடைத்திடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரசின் சார்பில் வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களையும் மூன்றாம் பாலினத்தவர்கள் பெற்று,தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி க்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து சிறப்பு முகாமில் மூன்றாம் பாலினத்தவர்கள் வழங்கிய 55 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சந்திரசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள், திருநங்கைகள் பலரும் கலந்துகொண்டனர்.

    • நன்னை கிழக்கு நத்தம் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்த 57 பேருக்கு கடந்த 2001ம் ஆண்டு வீட்டுமனை பட்டா அரசால் வழங்கப்பட்டது,
    • எங்களுக்கு மாற்று இடம் கிடையாது. எனவே நாங்கள் அங்கேயே குடியிருந்து வசிக்க வழிவகை செய்யவேண்டும்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் ஒன்றியம், நன்னை போஸ்டாபீஸ் வீதியை சேர்ந்த 50க்கு மேற்பட்டோர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது,

    நன்னை கிழக்கு நத்தம் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்த 57 பேருக்கு கடந்த 2001ம் ஆண்டு வீட்டுமனை பட்டா அரசால் வழங்கப்பட்டது, இதையடுத்து அந்த இடத்தில் நாங்கள் வீடு கட்டி வசித்து வருகிறோம்.

    இந்நிலையில் கடந்த 9ம்தேதி வருவாய்த்துறை மூலம் நிளஅளவு செய்யப்பட்டுள்ளது. எங்களது அந்த இடத்தை விட்டு காலி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    எங்களுக்கு மாற்று இடம் கிடையாது. எனவே நாங்கள் அங்கேயே குடியிருந்து வசிக்க வழிவகை செய்யவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • தேவராஜி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி, அம்மையப்பன் நகர் ஊராட்சியில் பல வருடங்களாக வீட்டு மனையின்றி 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தனர். இதனால் இங்குள்ள பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டாவுடன், இலவச வீடும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மாதவன், ஜமுனா இளவரசன் ஆகியோர் மாவட்ட கவுன்சிலர் சிந்துஜா ஜெகன் மற்றும் ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர்.

    மேலும் கோரிக்கையை ஏற்று மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய குழு தலைவர் ஆகியோர் திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க.தேவராஜியிடம் பல வருடங்களாக கட்டேரி, அம்மையப்பன் நகர் ஊராட்சியில் வீட்டுமனை இன்றி அரசு புறம்போக்கு இடத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனையடுத்து எம்எல்ஏ நடவடிக்கையால் இங்குள்ள பொது மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 22 பயனாளிகளுக்கு நேற்று இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம், மாவட்ட கவுன்சிலர் ஜெ.சிந்துஜா ஜெகன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர் சூரியகுமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.சத்தியமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலரும், மத்திய ஒன்றிய பொறுப்பாளருமான க.உமா கண்ரங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாவட்ட கழக பொறுப்பாளரும், தொகுதி எம்எல்ஏவுமான க. தேவராஜி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட 22 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியின் போது கட்டேரி ஊராட்சி மன்ற தலைவர் மாதவன், அம்மையப்பன் நகர் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா இளவரசன், ஜோலார்பேட்டை நகர கழக செயலாளர் ம.அன்பழகன், கிராம நிர்வாக அலுவலர் ராஜா உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    ×