என் மலர்
கடலூர்
- இவர் நடராஜர் கோயிலில் நடைபெற்ற தேர்த்திருவிழாவை பார்ப்பதற்காக சென்றவர் அதன் பின் வீடுதிரும்பவில்லை.
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர்:
சிதம்பரம் அருகே உள்ள சி. தண்டேஸ் வரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகள்ஆர்த்தி (வயது17). இவர் நடராஜர் கோயிலில் நடைபெற்ற தேர்த்திருவிழாவை பார்ப்பதற்காக சென்றவர் அதன் பின் வீடுதிரும்பவில்லை. இவரை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்க வில்லை. இதுகுறித்து ஆர்த்தியின் தாய்ரேவதி சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகரமன்ற உறுப்பினர் சலீம் டிஜிட்டல்பேனர் அமைத்திருந்தார்.
- இதனை தொடர்ந்து தலைமறைவான ராஜியை வலை வீசி தேடி வருகின்றனர்.
கடலூர்:
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகரமன்ற உறுப்பினர் சலீம் டிஜிட்டல்பேனர் அமைத்திருந்தார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி 12வது ஆண்டு விழா வரும் ஜனவரி 15-ந்தேதி தைப்பொங்கல் அன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகரமன்ற உறுப்பினர் சலீம் டிஜிட்டல்பேனர் அமைத்திருந்தார். அந்த டிஜிட்டல் பேனர் கிழிக்கப்பட்டிருந்தது.இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் (பொ)நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குவிரைந்து சென்று இது குறித்துவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் விசாரணையில் பண்ருட்டி போலீஸ் லைன் 3-வது தெரு ராஜி என்பவர் இந்த பேனரை குடிபோதையில் கிழித்தது தெரிய வந்தது இதனை தொடர்ந்து தலைமறைவான ராஜியை வலை வீசி தேடி வருகின்றனர்.
- இதில் கோவில் கதவில் பூட்டு உடைந்து கோவி லுக்குள் பொருட்கள் சிதறி கிடந்தது.
- போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
கடலூர்:
கடலூர் கம்மியம் பேட்டை ஜவான் பவன் சாலையில் பிரசித்தி பெற்ற காசி விசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் சண்முக ஞானிகள் சித்தர் பீடம் கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் நேற்று இரவு பூசாரி முருகையன் வழக்கம் போல் பூஜை செய்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை வழக்கம் போல் பூஜைகள் செய்வதற்கு கோவிலுக்கு வந்து பார்த்தபோது கடும் அதிர்ச்சி காத்திருந்தது. இதில் கோவில் கதவில் பூட்டு உடைந்து கோவி லுக்குள் பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு இருந்தன. இதனை தொடர்ந்து பூசாரி முருகையன் உடனடியாக பீரோவை சென்று பார்த்த போது அதில் வைத்திருந்த2 வெள்ளி கிரீடம் மற்றும் தங்க தாலி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்பு லியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கோவில் வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது முகமூடி அணிந்து 2 கொள்ளையர்கள் கோவில் பூட்டை உடைத்து வெள்ளி கிரீடம் மற்றும் தங்கத் தாலி ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்துள்ளது. திருடி சென்ற பொருட்க ளின் மதிப்பு சுமார் 50 ஆயிரம் ஆகும். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து முகமூடி கொள்ளையர்க ளை வலைவீசி தேடி வரு கின்றனர்.
- ஒரு மர்ம ஆசாமி இவரது கழுத்தில் இருந்த ரூ.2லட்சம் மதிப்பிலான 6 பவுன் தங்கச் செயினை திருடிச் சென்று விட்டார்.
- தனது பெயர் பூமிகா என்றும், சேலம் ஒன்றாவது வார்டு, 5 வது ரோட்டில் வசிப்பதாகவும் கூறினார்.
கடலூர்:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று முன்தினம் ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதில் பல்வேறு பகுதியை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நடராஜரை தரிசித்தனர். அதன்படி செங்கல்பட்டு மேட்டுத் ெதருவைச் சேர்ந்த ஹேமாவதி (வயது 81) தனது உறவினர்களுடன் ஆருத்ரா தரிசன விழாவில் கலந்து கொண்டார். அங்கு கூட்ட நெரிசலில் ஒரு மர்ம ஆசாமி இவரது கழுத்தில் இருந்த ரூ.2லட்சம் மதிப்பிலான 6 பவுன் தங்கச் செயினை திருடிச் சென்று விட்டார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் கோவிலுக்குள் சென்றனர். அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போது, சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஹேமாவதியின் கழுத்தில் இருந்த செயினை திருடும் காட்சி பதிவாகியிருந்தது.
இதிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து அந்த பெண்ணை போலீசார் தேடுகின்றனர். அப்போது அவர் சிதம்பரம் நடராஜர் கோவில் அருகில் நின்று கொண்டிருப்பதை கண்ட போலீசார் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடமிருந்த 6 பவுன் தங்கச் செயினை பறிமுதல் செய்த போலீசார் மூதாட்டி ஹேமாவதியிடம் வழங்கினர். விசாரணையில், தங்கச் செயினை பறித்தவர் தனது பெயர் பூமிகா என்றும், சேலம் ஒன்றாவது வார்டு, 5 வது ரோட்டில் வசிப்பதாகவும் கூறினார். இது போல ஒரு முகவரி இருக்குமா என்று சந்தேகமடைந்த போலீசார் பூமிகாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் மருங்கூரில் இருந்து கொள்ளுக்காரன்குட்டை நோக்கி சென்றார்.
- இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.
கடலூர்:
பண்ருட்டி தோப்புகொல்லை வடக்கு தெருவை சேர்ந்தவர்சுப்பிரமணியன். இவர் மோட்டார் சைக்கிளில் மருங்கூரில் இருந்து கொள்ளுக்காரன்குட்டை நோக்கி சென்ற போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்மோதியதில் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்ததும் முத்தாண்டி குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டிஅர சுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- நெய்வேலியில் மத்திய அரசுக்கு சொந்தமான என்.எல்.சி. நிறுவனம் உள்ளது.
- வானதிராயபுரத்தில் இருந்து இன்று நண்பகல் நடைபயணத்தை தொடங்கினார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசுக்கு சொந்தமான என்.எல்.சி. நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி என்.எல்.சி. நிறுவனம் விரிவாக்க பணியினை தொடங்கி உள்ளது. இதற்காக புதிய அலகு அமைக்கப்பட உள்ளது. அதன்படி என்.எல்.சி. நிறுவனம் அந்த பகுதியில் நிலத்தை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது,
எனவே மாவட்ட அதிகாரிகள் என்.எல்.சி.க்கு நிலத்தை கையககப்படுத்த வந்தனர். ஆனால் கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு தங்களுக்கு குடும்பத்துக்கு நிரந்தர வேலைவழங்க வேண்டும். ஏக்கருக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால் இதற்கு அரசு செவிமடுக்கவில்லை.
எனவே கிராம மக்களுக்கு ஆதரவாகவும், என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும், நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த கோரியும் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி, இன்றும் , நாளையும் நடைபயணம் மேற்கொள்ள போவதாக அறிவித்து இருந்தார். அதன்படி டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வானதிராயபுரத்தில் இருந்து இன்று நண்பகல் நடைபயணத்தை தொடங்கினார். அப்போது என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து ஆவேசமாக பேசினார். இதனை தொடர்ந்து அவர் கங்கைகொண்டான், ,வடக்குவெல்லூர், தென்குத்து, அம்மேரி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்றார். அவருடன் பா.ம.க.வினர் மற்றும் கிராம மக்கள் சென்றனர்.
- மஞ்சக்குப்பம் மற்றும் பாரதி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
- முக்கிய சாலையாக தற்போது சரவணநகர் இணைப்பு சாலை செயல்பட்டு வருகின்றது.
கடலூர்:
சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் கடலூர் மஞ்சக்குப்பம், பாரதி சாலை, அண்ணா மேம்பாலம் வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வந்ததால் மஞ்சக்குப்பம் மற்றும் பாரதி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
எனவே கடலூர் செம்மண்டலம் வழியாக கம்மியம்பேட்டை ஜவான்பவன் பைபாஸ் சாலை வழியாக திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை வழியாக கனரக வாகனங்கள் பஸ் லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றது. இந்த நிலையில் பண்ருட்டி பாலூர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் வழியாக அனைத்து கனரக வாகனங்களும், பஸ்களும் கடலூர் பஸ் நிலையத்திற்கும் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு தினந் தோறும் சென்று வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசலில் திருப்பாதிரிப்புலியூர் பகுதி முழுவதும் ஸ்தம்பித்தது.
இதன் காரணமாக திருப்பாதிரிப்புலியூர் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே சரவணா நகர் இணைப்பு சாலை வழியாக பஸ்கள் கனரக வாகனங்கள் சென்று வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். கடலூர் பகுதிக்கு மிக முக்கிய சாலையாக தற்போது சரவணநகர் இணைப்பு சாலை செயல்பட்டு வருகின்றது. இதன் காரணமாக திருப்பாதிரிப்புலியூர் பகுதிக்கு வரப்பிரசாதமாக அமைந்த சரவணா நகர் இணைப்பு சாலை தற்போது பல்லாங்குழி போல் குண்டு குழியுமாக காட்சியளித்து வருகின்றது. இதன் காரணமாக இவ்வழியாக செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் பெரிய அளவில் ஏற்பட்டுள்ள குண்டு குழியுமான சாலையில் செல்லும்போது மிகுந்த அவதி அடைந்து வருவதோடு அடிக்கடி சாலை விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றது.
இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் இரு சக்கர வாகனங்கள் ஆட்டோ கார் போன்ற வாகனங்கள் எளிதாக விபத்து ஏற்பட்டு அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர் இது மட்டும் இன்றி மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதும் மற்ற நேரங்களில் ஏதேனும் பாதாள சாக்கடை குழாய் அடைத்துக் கொண்டால் கழிவு நீர் முழுவதும் சாலையில் தேங்குவதால் அடிக்கடி குண்டு குழியுமாக ஏற்பட்டு பாதிப்படைந்து வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் முறையாக வடிகால் வாய்க்கால் அமைத்து சரவணா நகர் இணைப்பு சாலையை முக்கியசாலையாக அதிகாரிகள் கருதி அதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தற்போது குண்டு குழியுமான சாலை நாளடைவில் அந்த பகுதியில் சாலைகளே இல்லாத அளவிற்கு பெரிய அளவில் பள்ளம் உருவாகி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த சாலையில் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். அப்படியே சென்றாலும் அவர்கள் தவறி விழும் நிலையில் இந்த சாலை உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிடம் கேட்ட போது, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் சரவணன் நகர் இணைப்பு சாலை 780 மீட்டர் நீளம் கொண்டது. தற்போது பெரியளவில் குண்டும் குழியுமாக சாலையாக மாறி உள்ளது. இதன் காரணமாக மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருவதை எங்களுக்கு தொடர்ந்து புகார் இருந்து வந்தன. இந்த நிலையில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் மேற்பார்வையில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் கீழ் சேதமடைந்த சாலையை 48 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்க திட்ட மதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதன் மூலம் விரைவில் நிதி பெறப்பட்டு உடனடியாக சாலையை சீரமைத்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எளிதாக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறுஅவர் கூறினார்.
- கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெரு ஜெயின் கோவில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
கடலூர்:
இந்திய அரசிடம் ஜைன புண்ணிய ஸ்தலங்களை பாதுகாக்க கோரியும், ஜெயின்களின் புனித ஸ்தலமான ஜார்கண்ட் மாநிலத்தின் சம்தே சிகரம் மற்றும் குஜராத் மாநிலத்தின் சத்ருஞ்ஜய் மலை, கிர்னார்ஜி ஆகியவற்றை சுற்றுலா ஸ்தலங்களாக அறிவித்த செயலை திரும்ப பெறவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் கடலூர் ஜெயின் சங்கம் சார்பில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெரு ஜெயின் கோவில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு துணைத் தலைவர் வீரேந்திரகுமார் உத்தாட் தலைமை தாங்கினார். செயலாளர் விஜயகுமார் மேத்தா முன்னிலை வகித்தார். இதில் மாவீர்மல் சோரடியா, தில்சுக்மல் மேத்தா, குசல்ராஜ் தாரிவால், பாரஸ்ஜிகோட்டாரி, ஷோபாக்மல்சான்ட் ஆனந்தகுமார் மேத்தா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- பலத்த காற்றுடன் கூடிய மழை கடும் குளிரும் இருந்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
- கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர், நவம்பர் மாதம் மிக கனமழை பெய்து வந்தது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் முதல் மாண்டஸ் புயல், இதனை தொடர்ந்து கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை கடந்த சில தினங்களாக பெய்து வந்தது. மேலும் கடும் குளிரும் இருந்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் மார்கழி மாதம் என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் பனிப்பொழிவு இருந்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று கடலூர் பகுதியில் திடீரென்று மழை பெய்தது இதன் காரணமாக திடீர் மழை கடும் பனிப்பொழிவு சீதோசன மாற்றம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் இந்த நிலையில் கடலில் வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக தற்போது கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து வழக்கத்தை விட கடல் அலை சீற்றமாக காணப்படுவதால் பொதுமக்களை போலீசார் அனுமதிக்காமல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்ட காரணத்தினால் பரபரப்பாக காணப்பட்டது.
- 2 வருட ங்களுக்கு முன்பு ரோட்டில் ஜல்லி மட்டும் கொட்டி சென்றனர்.
- இருசக்கர வாகனங்களில் சென்றாலும் பஞ்சர் ஆகி விடுகிறது.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி தாலுகா விற்கு உட்பட்ட பஸ் நிலை யத்தி லிருந்து குறிஞ்சிப்பாடி முதல் எம்.ஆர்.கே. நகர் வழியாக சென்று வரதரா ஜன்பேட்டை, கல்குணம், கிருஷ்ணாபுரம் வரை செல்ல சுமார் 2 கிலோ மீட்ட ருக்கு மேல் உள்ள பழுத டைந்த கிராமசாலையை தார் சாலையாக போடு வதற்காக, சுமார் 2 வருட ங்களுக்கு முன்பு ரோட்டில் ஜல்லி மட்டும் கொட்டி சென்றனர்.
ஆனால் இது நாள் வரையில் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் சாலையை போடாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் சுமார் 2000 ஏக்கர் விவ சாய நிலங்களுக்கு செல்ல பயன்படும் இந்த சாலை யில் பயிர்களுக்கு உரம் இடு வதற்கு மாட்டு வண்டிகளை பயன்படுத்த முடியாமலும், இருசக்கர வாகனங்களில் சென்றாலும் பஞ்சர் ஆகி விடுகிறது.
இதனால் ஒவ்வொரு மூட்டையாக தலையில் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயி களும், பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர். உடனடி யாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் கிடப்பில் போடப்பட்ட இந்த தார் சாலையை அமைத்து தர விவசாயிகளும், பொதுமக்க ளும் கோரிக்கை வைக்கின்ற னர். கிராம வளர்ச்சியே நம் இந்திய நாட்டின் வளர்ச்சி, விவசாயமே நம் உயிர் நாடி ஆகையால் மாவட்ட நிர்வாக மும், சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகளும் காலம் தாழ்த்தாமல் சாலை போடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.
- டந்த சில நாட்களாக சாமிநாதன் வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர்சுற்றி வந்தார்.
- மனைவி தீபா நேற்று இரவு கண்டித்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள லக்கூர் நடுத்தெருவை சேர்ந்தவர் சாமிநாதன். (வயது 32). கூலி தொழிலாளி. அவரது மனைவி தீபா. கடந்த சில நாட்களாக சாமிநாதன் வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர்சுற்றி வந்தார். இதனை அறிந்த அவரது மனைவி தீபா நேற்று இரவு கண்டித்தார். இதனால் மனமுடைந்த சாமிநாதன் திடீர் என வீட்டை விட்டு மாயமானார். இரவு முழுவதும் தனது கணவர் வீடு திரும்பாததால் தீபா அதிர்ச்சி அடைந்தார். உடனே உறவினர்கள் உதவியுடன் தீபா தனது கணவரை தேடினார். எங்கு தேடியும் கிைடக்கவில்லை.
இன்று காலை அந்த பகுதியில் உள்ள விைள நிலத்தில் சாமிநாதன் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல்அறிந்த ராமநத்தம் போலீசார் விரைந்து சென்று சாமிநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசார ணையில் சாமிநாதன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.
- சத்யா என்பவர் மனோஜ்குமார் வீட்டின் அருகே குப்பைகளை கொட்டினார்.
- 2 பேர் சேர்ந்து மனோஜ்குமாரின் மனைவி நந்தினியை திட்டி தாக்கிடினர்.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள கே.என். பேட்டையை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மணிகண்டன். இவர்கள் இடையே முன்விரோதம் உள்ளது. சம்பவத்தன்று மணிகண்டன் மனைவி சத்யா என்பவர் மனோஜ்குமார் வீட்டின் அருகே குப்பைகளை கொட்டினார். இதனால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சத்யா மற்றும் 2 பேர் சேர்ந்து மனோஜ்குமாரின் மனைவி நந்தினியை திட்டி தாக்கிடினர். இதனை விலக்க சென்ற அதே பகுதியை சேர்ந்த குமுதா, சோனியா, மனோஜ்குமார் ஆகியோரும் தாக்க ப்பட்டனர். இதுகுறித்து திருப்பாதி ரிபுலியூர் போலீசார் 3 பேர் மீது வழக்குபதிந்து உள்ளனர்.






