என் மலர்
கடலூர்
- என்.எல்.சி.க்கு நிலம் மற்றும் வீடு கொடுத்து பாதிக்கப்பட்ட கிராம விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பட்டாடம் நடைபெற்றது.
- என்.எல்.சி. நிர்வாகம் பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளுக்கும் சம அளவில் இழப்பீடு வழங்க வேண்டும்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் என்.எல்.சி.க்கு நிலம் மற்றும் வீடு கொடுத்து பாதிக்கப்பட்ட கிராம விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பட்டாடம் நடைபெற்றது.
என்.எல்.சி. நிர்வாகம் பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளுக்கும் சம அளவில் இழப்பீடு வழங்க வேண்டும். இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதார தொகை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அருண்மொழித் தேவன், பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். மேலும், முன்னாள் எம்.பி. சந்திர காசு, முன்னாள் எம்.எல்.ஏ. முருகமாறன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலைநகரில் அனைத்து கடைகளும் திறந்திருந்தன.
- அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கடைகளை தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.
சிதம்பரம்:
என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள வளையமாதேவி கிராமத்தில் பணிகள் தொடங்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல ஓடின.
சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலைநகரில் அனைத்து கடைகளும் திறந்திருந்தன. அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் டீக்கடை மீது கல் வீசி தாக்கினார்கள். இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த மேலும், 2 கடைகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். பின்னர் அந்த மர்மகும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றது.
இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கடைகளை தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.
- 11ஆயிரம் காலியான அரசு பணியிடங்கள் தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது.
- தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும்.
கடலூர்:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவினைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பணியாளர் அரசு தேர்வு ஆணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கு 2023-ம் ஆண்டிற்கான தேர்வு நாட்காட்டி அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பல்வேறு தேர்வுகளுக்கான 11ஆயிரம் காலியான அரசு பணியிடங்கள் தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது. இத்தேர்வில் ஆதிதிராவிடர் , பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற தாட்கோ மூலமாக இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் 18 முதல் 32 வயது வரை உள்ள பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும்.
இப்போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிகேற்ப ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை பணியமர்த்தப்படுவார்கள். இத்தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும்.இத்திட்டம் தொடர்பான விபரங்கள் மற்றும் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள தகுதியான அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ- மாணவிகள் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
- ரெட்டிசாவடி அருகே வெடி விபத்து நடந்த பகுதியில் 1½ மூட்டை வெடி பறிமுதல் செய்யப்பட்டது.
- இதே போல் முத்தம்மாள் என்பவர் வீட்டிலும் ஒரு மூட்டை காக்கி வெடி வைத்திருந்ததும் தெரிய வந்தது.
கடலூர்:
ரெட்டிச்சாவடி அடுத்த சிவனார் புரத்தில் மதலப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் பிரபாகருக்கு, அந்த பகுதியில் ஒரு வீட்டில் அனுமதி இன்றி பட்டாசு வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் வெள்ளை கண்ணு என்பவர் வீட்டிற்கு சென்று பிரபாகர் சோதனை செய்த போது, அரசு அனுமதி இன்றி நாட்டு வெடி 1½ மூட்டை இருந்தது தெரிய வந்தது. மேலும் இந்த நாட்டு வெடி சமீபத்தில் சிவனார்புரத்தில் பட்டாசு வெடிவிபத்தில் கைது செய்யப்பட்ட அரியாங்குப்பம் மணவெளி சேர்ந்த கோசலா மற்றும் சேகர் ஆகியோர் தயாரிக்கும் இடத்திலிருந்து கொண்டு வந்து வெள்ளைகண்ணு வீட்டில் வைத்திருந்தது தெரிய வந்தது.
இதே போல் முத்தம்மாள் என்பவர் வீட்டிலும் ஒரு மூட்டை காக்கி வெடி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வெடி வைத்திருந்த மூட்டைகளை கிராம நிர்வாக அலுவலர் பிரபாகர் பறிமுதல் செய்து, ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வெள்ளை கண்ணு, முத்தம்மாள், கோசலா, சேகர் ஆகியோர் மீது தனித்தனியாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 10 மகளிர் குழு உறுப்பினர்களிடம் ஒரு லட்சம் வட்டியில்லா கடன் தருவதாக கூறி முன்பணமாக ரூ.34 லட்சம் பெற்று மோசடி செய்தனர்.
- இந்நிலையில் பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றம் நடுவர் எண்-1 மகேஷ், ஜெரால்ட்க்கு பிடி ஆணை பிறப்பித்தார்.
கடலூர்:
பண்ருட்டி வி.ஆண்டிக்குப்பம் கிராமத்தில் கடந்த 2011-ம் ஆண்டு அன்னை தனியார் தொண்டு நிறுவனம் செயல்பட்டது. இங்கு 10 மகளிர் குழு உறுப்பினர்களிடம் ஒரு லட்சம் வட்டியில்லா கடன் தருவதாக கூறி முன்பணமாக ரூ.34 லட்சம் பெற்று மோசடி செய்தனர். இது சம்மந்தமாக திருச்சி கருமண்டபம் சேர்ந்த ஜெரால்ட் (வயது 31) என்பவரின் மீது பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் 8 வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. இதில் நீதிமன்றத்தில் ஜெரால்ட் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததார்.
இந்நிலையில் பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றம் நடுவர் எண்-1 மகேஷ், ஜெரால்ட்க்கு பிடி ஆணை பிறப்பித்தார். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் குருசாமி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், ராஜசேகரன் மற்றும் தலைமை காவலர் பாபு ஆகிய தனிப்படையினர் திருச்சியில் தலைமறைவாக பதுங்கியிருந்த ஜெரால்ட்டை பிடித்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பண்ருட்டி அருகே கல்லூரி மாணவி மாயமானார்.
- இவர் 9-ந்தேதி காலை கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் ஆனந்தி (வயது 18) இவர் 9-ந்தேதி காலை கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. மாணவியை எங்கு தேடியும் கிடைக்காததால் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் இவரது தந்தை சக்திவேல் புகார் அளித்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகிறனர்.
- மாவட்டம் முழுவதும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- போலீசார் பா.ம.க. நிர்வாகிகளை சூழ்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கடலூர்:
என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் விவசாயிகளின் நிலத்தில் 2-வது சுரங்க விரிவாக்க பணி தொடங்கப்பட்டது. இதனை கண்டித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணி மற்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டு வந்தனர். மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ம.க. நிர்வாகிகள் 56 பேரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதுமட்டும் இன்றி மாவட்டம் முழுவதும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை அருகே பா.ம.க.மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட தலைவர் தடா.தட்சிணாமூர்த்தி, மாணவரணி கோபிநாத், கவுன்சிலர் சரவணன், இளைஞரணி சந்திரசேகர் மற்றும் 40-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திரண்டனர்.
அப்போது அங்கிருந்த போலீசார் பா.ம.க. நிர்வாகிகளை சூழ்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் பா.ம.க. நிர்வாகிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பி கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் இந்தப் போராட்டத்திற்கு அனுமதி இல்லை என கூறி பா.ம.க. நிர்வாகிகளை அதிரடியாக கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
- முழு அடைப்புபோராட்டம் நடைபெறும் என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்து இருந்தார்.
- வர்த்தக சங்கமுகர்களைஅழைத்துப் பேசிகுறைகள் கேட்டார்.
கடலூர்:
நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நிலக்கரிசுரங்க விரிவாக்பணிக்காக விளை நிலங்களை கையகப்ப டுத்து வதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்டம் முழுவதும் முழு அடைப்புபோராட்டம் நடைபெறும் என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து பண்ருட்டியில்வடக்கு மண்டல ஐஜி கண்ணன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நேரில்ஆய்வு செய்தார். வேலூர்டி.ஐ.ஜி. பகலவன், செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா,இன்ஸ்பெக்டர்கள்கண்ணன்,நந்தகுமார்,ராஜதாமரைபாண்டியன்,ரவிச்சந்திரன்ஆகியோரிடம்ஆலோசனை நடத்தினார்.வர்த்தக சங்கமுகர்களைஅழைத்துப் பேசிகுறைகள் கேட்டார்.போலீசார் மற்றும் வியாபாரி களுடன் நான்கு முனை சந்திப்பில் உள்ள டீக்கடையில் டீ குடித்தார். ஐ.ஜி. கண்ணன் செயல்பாட்டால் வியாபாரி கள் நிகழ்ச்சி அடைந்தனர்.
- கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன் தலைமையில் சுமார் 7 ஆயிரம் போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- பந்த் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ம.க.வினர் 56 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி. நிர்வாகம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்கு விவசாயிகளிடமிருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். என்.எல்.சி., கடலூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் போராட்டங்கள் நடத்தினர்.
மேலும், ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும். வீட்டிற்கு ஒருவருக்கு என்.எல்.சி.யில் நிரந்தர வேலை வேண்டும். மாற்று இடம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, ஆணைவாரி, எரும்பூர், கத்தாழை கிராம மக்கள் வலியுறுத்தினர்.
இக்கிராம மக்களுக்கு ஆதரவாக பா.ம.க., கட்சி களம் இறங்கியது. அதில் குறிப்பாக என்.எல்.சி. நிறுவனம் கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டார்.
இதனையடுத்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் கடலூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் என்.எல்.சி. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது. அதன்படி உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கும் பணி 90 சதவீதம் முடிந்துள்ளது.
இந்நிலையில் என்.எல்.சி. நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தும் பணியை நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதற்கட்டமாக எல்லைகளில் வாய்க்கால் வெட்டும் பணிகள் நடந்தது. இதனை அறிந்து அங்கு திரண்ட பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பணிகள் நடைபெற்றன.
இதையடுத்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து இன்று கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்தார். இதனையொட்டி பா.ம.க.வினர் வணிக நிறுவனங்கள், கடைகளின் உரிமையாளர்களிடம் நோட்டீஸ் வழங்கி முழு அடைப்பு போராட்டத்திற்கு கடலூர் மாவட்டம் முழுவதும் ஆதரவு திரட்டினர்.
அதன்படி இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஆனால், கடலூரில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தது. ஒரு சில கடைகள் மட்டுமே மூடப்பட்டிருந்தது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல இயங்கியது. 5 பஸ்களை ஒன்றிணைத்து போலீஸ் பாதுகாப்புடன் இயக்கினார்கள்.
புதுவையிலிருந்து கடலூருக்கு வரும் பஸ்கள் மாநில எல்லையான முள்ளோடையில் நிறுத்தப்பட்டது. அங்கு இறக்கிவிடப்பட்ட பயணிகள் ஆட்டோக்கள் மூலம் கடலூருக்கு வந்தனர். கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு, புவனகிரி, மந்தாரக்குப்பம், நெய்வேலி, முத்தாண்டிக்குப்பம் பகுதிகளில் 90 சதவீத கடைகள் மூடப்பட்டிருந்தது.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன் தலைமையில் சுமார் 7 ஆயிரம் போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், ரோந்து பணியும் தீவிரபடுத்தப்பட்டு இருந்தது.
பந்த் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ம.க.வினர் 56 பேர் கைது செய்யப்பட்டனர். மந்தாரக்குப்பத்தில் கடைகளை அடைக்கும்படி கூறிய பா.ம.க. முன்னாள் மாவட்ட தலைவர் தர்மலிங்கம் உட்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர். பா.ம.க. முழு அடைப்பு போராட்டம் அறிவித்திருந்தாலும், கடலூரில் வழக்கமான இயல்பு வாழ்க்கை நிலவியது. பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை.
- கடலூரில் 100 சதவீதம் அரசு பேருந்துகளும் 50 சதவீதம் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
- கடையை மூட வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி தெரிவித்துள்ளார்.
வடலூர்:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்துக்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்து இருந்தார்.
ஆனால் கடலூர் மாவட்டத்தில் வழக்கம் போல் பஸ்கள் ஓடும், அனைத்து கடைகளும் திறந்து இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று தொடங்கியது.
கடலூரில் 100 சதவீதம் அரசு பேருந்துகளும் 50 சதவீதம் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அப்பகுதியில் இயல்பு நிலை காணப்பட்டது. கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. கடைகள், சந்தையில் வியாபாரிகள் வணிகத்தில் ஈடுபடுகின்றனர்.
கடலூரில் கடைகள் திறக்கலாம், வாகனங்களை இயக்கலாம் என்று ஏற்கெனவே மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ள நிலையில், இன்று வியாபாரிகள் அச்சமின்றி கடையை திறக்கலாம்; கடையை மூட வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி தெரிவித்துள்ளார்.
மேலும் கடலூரில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக பாமகவினர் 55 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- காலை மருந்து கடையை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டை உடைத்து கடையில் கொள்ளை போனதுதெரிய வந்தது.
- டிராயரில் வைக்கப்பட்டு இருந்த பணம் ரூ.4.5லட்சம்கொள்ளை போனது தெரியவந்தது.
கடலூர்:
பண்ருட்டி எல்.என்.புரத்தைசேர்ந்தவர்வி.எம்.சுந்தர் (50).இவர்பண்ருட்டி 5 முனை சந்திப்பில் நகராட்சிக்கு சொந்தமான காந்தி பூங்கா காம்ப்ளக்சில் பூச்சி மருந்துகடை நடத்தி வருகிறார். இவர்வழக்கம் போல நேற்று இரவு 9.30 மணிக்கு கடையை பூட்டி சென்று விட்டு இன்று காலை8.30மணிஅளவில் மருந்து கடையை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டை உடைத்து கடையில் கொள்ளை போனதுதெரிய வந்தது.உள்ளே டிராயரில் வைக்கப்பட்டு இருந்த பணம் ரூ.4.5லட்சம்கொள்ளை போனது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சி யடைந்த சுந்தர் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கண்ணன் சப்.இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு, சரண்யா, புஷ்பராஜ் மற்றும் குற்றப்பி ரிவு போலீ சார்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னார்கள்.
கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக் கப்பட்டது. போலீஸ் மோப்பநாய் கொள்ளை நடந்த கடையிலிருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.கடலூரில் இருந்துகைரேகை நிபுணர்கள்,தடய அறிவியல் நிபுணர்கள் விரைந்து சென்று மர்ம ஆசாமிகளின்கை ரேகைகளின்தடயங்களை பதிவு செய்தனர். கொள்ளை யர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடு தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் 2-வது சுரங்க விரிவாக்க பணி தொடங்கப்பட்டது.
- உழவர் சந்தை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் 2-வது சுரங்க விரிவாக்க பணி நேற்று தொடங்கப்பட்டது. இதனை கண்டித்து மாவட்ட செயலாளர்கள் சண்.முத்துகிருஷ்ணன், வடக்குத்து ஜெகன், செல்வ.மகேஷ், கார்த்திகேயன் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை கைது செய்ததை கண்டித்தும், என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்தும் கடலூரில் மாவட்ட தலைவர் தடா.தட்சிணாமூர்த்தி தலைமையில் மாணவர் அணி கோபிநாத், இளைஞர் அணி சந்திரசேகரன், மாநகராட்சி கவுன்சிலர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. மாவட்ட தலைவர் தடா. தட்சிணாமூர்த்தி உட்பட 25 பேரை கைது செய்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சம்பவத்தால் கடலூர் மாவட்டத்தில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டு வருகின்றது.






