search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 INJURED"

    • மரக்காணம் அருகே ஆட்சி காடு தண்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி ராசாத்தி.
    • ஷேர் ஆட்டோ மீது மோதியது.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே ஆட்சி காடு தண்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி ராசாத்தி (வயது 45).இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த சில பெண்களும் நேற்று வழக்கம்போல் மண்ட வாய் புதுகுப்பம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இறால் குஞ்சு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு கூலி வேலைக்கு சென்றனர். இவர்கள் வேலையை முடித்துவிட்டு ஷேர் ஆட்டோவில் மீண்டும் வீடு திரும்பினர்.

    இவர்கள் வந்த ஷேர் ஆட்டோவை பொன்னுசாமி ஓட்டி வந்தார். இந்த ஷேர் ஆட்டோ மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் மண்ட வாய் என்ற இடத்தில் வந்த போது சென்னையில் இருந்து புதுவைக்கு சென்ற கார், ஷேர் ஆட்டோ மீது மோதியது. இதில் ராசாத்தி, நாகம்மாள் ,கலைச்செல்வி ,வசந்தி, பிரபாவதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராசாத்தி நேற்றிரவு இறந்துவிட்டார். மற்ற 4பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.இச்சம்பவம் குறித்து அவர்களது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு கும்பல் போலீசாரை பணி செய்ய விடாமல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
    • அலமேலு, சரண்ராஜ், கார்த்திக், இளையமாறன் ஆகிய 4 பேர் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடி தம்பிபேட்டை பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினரிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இத் தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் தம்பிபேட்டை கிராமத்திற்கு விரைந்து சென்றனர். இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்திய போது ஒரு கும்பல் போலீசாரை பணி செய்ய விடாமல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இது மட்டும் இன்றி அங்கு இருந்த பொதுமக்களையும் சரமாரியாக தாக்கினார்கள். இதனை தொடர்ந்து அங்கிருந்த போலீஸ் ஜீப் கண்ணாடியை கல்லால் தாக்கி அடித்து நொறுக்கி அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.

    இந்த மோதலில் தம்பிபேட்டை சேர்ந்த அலமேலு, சரண்ராஜ், கார்த்திக், இளையமாறன் ஆகிய 4 பேர் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் தம்பி பேட்டைைய சேர்ந்த செந்தமிழ் செல்வன், வீர பிரபு உள்ளிட்ட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் அருகே மோதலை தடுக்க சென்ற போலீசாரின் ஜீப் கண்ணாடி உடைத்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். 

    • என்.எல்.சி., நிறுவனத்தின் 2-வது அனல் மின் நிலையத்தில் புதிய அனல்மின் நிலையம் உள்ளது.
    • தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது.

    கடலூர்:

    என்.எல்.சி., நிறுவனத்தின் 2-வது அனல் மின் நிலையத்தில் புதிய அனல்மின் நிலையம் உள்ளது. இது 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும். இங்குள்ள நிலக்கரி கொள்கலன் பிரிவில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

    உடனடியாக தீக்காயமடைந்தவர்கள் நெய்வேலி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது. தகவலறிந்து வந்த என்.எல்.சி., நிறுவன உயரதிகாரிகள் திடீரென தீப்பிடித்ததற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகன விபத்தில் குழந்தைகள் உட்பட 4 பேர் காயம் ஏற்பட்டது.
    • லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்

    அரியலூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரிப்பூம்பட்டினம் தாலுகா கல்லுகொடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (வயது 37) இவரது மனைவி அம்சவேணி (35), குழந்தைகள் யாழினி (8), செழியன் (7) ஆகியோர் காரில் கிருஷ்ணகிரியில் இருந்து கும்பகோணம் அருகே உள்ள சூரியநாராயணன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு மீண்டும் கிருஷ்ணகிரி செல்ல அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்- விருத்தாச்சலம் ரோட்டில் கூவத்தூர் அருகே மடத்தெரு பகுதியில்சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது ரமேஷ் ஓட்டி வந்த காரும், எதிரே சாம்பல் லோடு ஏற்றி வந்த டாரஸ் லாரியும் எதிர்பாராத வித–மாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த ரமேஷ், அவரது மனைவி அம்சவேணி, குழந்தைகள் யாழினி, செழியன் உள்ளிட்ட அனைவரும் பலத்த காயமடைந்து காரில் சிக்கியிருந்தனர்.

    அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்கள் அனைவரையும் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    விபத்துக்கான காரணம் குறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இது குறித்து லாரி டிரைவர் சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுக்கா பகடப்பாடி கோபியை (39) போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×