என் மலர்
கோயம்புத்தூர்
- மளிகைக்கடை காரர் மற்றும் அவரது மனைவியை தாக்கிய தி.மு.க. கவுன்சிலர் ரவி மற்றும் அவரது நண்பர்கள் பார்த்திபன், முருகேசன், துரைசாமி, ஆகியோரை கைது செய்தனர்.
- போலீசார் கைது செய்யப்பட்ட தி.மு.க. கவுன்சிலர் ரவி உள்பட அவரது நண்பர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடைரோட்டை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 46). இவர்கள் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரி வளாகத்தில் மளிகை கடை நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தன்று இவரது கடைக்கு காரமடை பஞ்சாயத்து யூனியன் தி.மு.க. கவுன்சிலர் ரவி (50), அவரது நண்பர்களான சிக்கதாசம்பாளையத்தை சேர்ந்த பார்த்திபன் (35), முருகேசன் (53), துரைசாமி ஆகியோர் வந்தனர். அவர்கள் கடையில் இருந்த ஜெயலட்சுமியிடம் சிகரெட் கேட்டு வாங்கினர். அதற்கான பணத்தை கடையின் உரிமையாளர் கணேசன் கேட்டார். அவர்கள் பணம் கொடுக்க மறுத்து அவரிடம் தகராறு செய்தனர்.
அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கவுன்சிலர் ரவி தனது நண்பர்களுடன் சேர்ந்து மளிகைகடைகாரர் கணேசன், அவரது மனைவி ஜெயலட்சுமி ஆகியோரை தாக்கினர். மேலும் மளிகைகடையையும் சேதப்படுத்தி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து ஜெயலட்சுமி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மளிகைக்கடை காரர் மற்றும் அவரது மனைவியை தாக்கிய தி.மு.க. கவுன்சிலர் ரவி மற்றும் அவரது நண்பர்கள் பார்த்திபன், முருகேசன், துரைசாமி, ஆகியோரை கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்ட தி.மு.க. கவுன்சிலர் ரவி உள்பட அவரது நண்பர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- உணவு குடிநீர் தேடி குடியிருப்பு, விளை நிலங்களில் நுழைந்து பொதுமக்களையும் விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.
- யானைகள் கிராமத்துக்குள் இருந்த மாடுகளை துரத்தியபடி சென்றது.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரத்திற்குட்பட்ட நெல்லிமலை அடிவாரத்தில் குரும்பூர், சமயபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இதனிடையே வனப்பகுதியில் இருந்து காட்டுயானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உணவு குடிநீர் தேடி குடியிருப்பு, விளை நிலங்களில் நுழைந்து பொதுமக்களையும் விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.
இதில் வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை பாகுபலியுடன் கூடுதலாக 3 காட்டுயானைகள் நடமாடி வருகின்றன. குறிப்பாக அதிகாலை நேரத்திலும் மாலை நேரத்திலும் சமயபுரம் கிராமத்தில் உள்ள கிராம சாலையை கடந்து செல்கிறது.
இன்று காலை முதலில் பாகுபாலி யானையும், அந்த யானையை தொடர்ந்து மற்ற 3 யானைகளும் வந்தன. அந்த யானைகள் கிராமத்துக்குள் இருந்த மாடுகளை துரத்தியபடி சென்றது.
அந்த சமயம் பொதுமக்கள் அச்சம் அடைந்து தங்கள் வீடுகளை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்து கொண்டனர். இப்பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் காட்டு யானை அடிக்கடி ஊருக்குள் வருவது அந்த பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அந்த யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- பாப்பம்பட்டி பிரிவு அருகே வந்தபோது பஸ்சை, மாணவியின் நண்பர்கள் வழிமறித்து திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
- கண்டக்டர் மீது துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
சூலூர்,
கரூரில் இருந்து நேற்று காலை அரசு பஸ் ஒன்று கோவைக்கு புறப்பட்டு வந்தது. காங்கேயம் பஸ் நிலையத்தில் ஒரு கல்லூரி மாணவி அந்த பஸ்சில் ஏறினார். பாப்பம்பட்டி பிரிவில் உள்ள தனது கல்லூரி பஸ்நிறுத்தத்தில் இறங்குவதற்காக அவர் டிக்கெட் எடுத்தார்.
பஸ் பல்லடம் அருகே வந்தபோது, அதில் பணியாற்றிய கண்டக்டர் மாணவியிடம் பேச்சு கொடுத்தார். அவர் மாணவியின் ஆடை குறித்து ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்ததுடன் கல்லூரியில் படிக்கும் தனது நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்தார்.
பஸ் பாப்பம்பட்டி பிரிவு அருகே வந்தபோது பஸ்சை, மாணவியின் நண்பர்கள் வழிமறித்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பஸ்சை போலீஸ்நிலையத்துக்கு திருப்பி கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். இதுதொடர்பாக அவர்கள் போலீசாரிடம் மனுவாகவும் எழுதிக் கொடுத்தனர்.
சம்பந்தப்பட்ட கண்டக்டரிடம் போலீசார் விசாரித்தனர். பின்னர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதிகாரிகள் மாணவர்களை சமாதானப்படுத்தினர். கண்டக்டர் மீது துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். அதை ஏற்று மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கண்டக்டரிடம் உயர் அதிகாரிகள் விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. இந்த சம்பவத்தால் சூலூர் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது.
- கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர்.
- பாலகிருஷ்ணன் திருப்பூர் மாவட்ட இந்து முன்னணி துணைத்தலைவராக உள்ளார்.
கோவை,
கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் அண்மைக்காலங்களாக தொடர்ந்து மோட்டார் சைக்கிள், மொபட் ஆகியவை திருடு போகும் சம்பவங்கள் நடைபெற்று வந்தது.
இது தொடர்பாக அதன் உரிமையாளர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது. அதில் 2 பேர் மோட்டார் சைக்கிள், மொபட் ஆகியவற்றை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிய தொடர் விசாரணை மேற்கொ ண்டனர்.
போலீசார் விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியது திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது29), ஆறுமுகம் பாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள், மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைதாகி உள்ள பாலகிருஷ்ணன் திருப்பூர் மாவட்ட இந்து முன்னணி துணைத்தலைவராக உள்ளார்.
- அரசு தொகுப்பு வீடுகளை பணம் கொடுத்தால் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
- புகாரின் பேரில் மகேந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாந்தி நகரை சேர்ந்தவர் ஜெயசுமா (வயது 41). அதே பகுதியை சேர்ந்த மதுமிதா (25), கல்பனா (46) இவர்கள் 3 பேரும் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார்அளித்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் அனைவரும் உறவினர்கள். துணிக்கடை மற்றும் நகைக்கடைகளில் வேலை பார்த்து வருகிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமுகை ஜீவா நகரை சேர்ந்த மகேந்திரன் (40) என்பவர் அறிமுகமானார். அவர் சிறுமுகை ரோட்டில் உள்ள அரசு தொகுப்பு வீடுகளை பணம் கொடுத்தால் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.
இதனை உண்மை என நம்பிய நாங்கள் 3 பேரும் ரூ.2 லட்சம் பணத்தை மகேந்திரனிடம் கொடுத்தோம். பின்னர் அவர் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறி மேட்டுப்பாளையம் தாசில்தார் கையொப்பம் மற்றும் சீலுடன் கூடிய ஆணையை எங்களிடம் வழங்கினார்.
அதனை நாங்கள் கொண்டு சென்று பார்த்த போது அது போலியானது என்பது தெரிய வந்தது. எனவே வீடு பெற்று தருவதாக கூறி எங்களிடம் ரூ.2 லட்சம் பணத்தை பெற்று மோசடி செய்த மகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தனர்.
புகாரின் பேரில் மகேந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நந்தகுமாரின் நடத்தை சரியில்லாததால் அவரது காதலை ஏற்பதற்கு இளம்பெண் மறுத்து விட்டார்.
- இளம்பெண் ஆர்.எஸ் புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை செல்வபுரம் எல்.ஐ.சி காலனி பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் கல்லூரி முடித்து விட்டு எல்.ஐ.சி காலனியில் தையல் கடை யுன் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவரது கடைக்கு எதிரே உள்ள ஓட்டலில் கோவை காந்தி பார்க்கை சேர்ந்த நந்தகுமார் (வயது 24) என்பவர் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இவர் எதிரே உள்ள தையல் கடைக்கு சென்று இளம்பெண்ணிடம் அடிக்கடி பேசி வந்தார். இதையடுத்து நந்தகுமார், இளம்பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். ஆனால் நந்தகுமாரின் நடத்தை சரியில்லாததால் அவரது காதலை ஏற்பதற்கு இளம்பெண் மறுத்து விட்டார். சம்பவத்தன்று, இளம்பெண் ஆர்.எஸ் புரத்தில் உள்ள வங்கி பயிற்சி வகுப்பிலிருந்து தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த நந்தகுமார் இளம் பெண்ணை வழிமறித்து மீண்டும் தனது காதலை கூறினார். இதில் கோபமடைந்த இளம்பெண் அவரது காதலை ஏற்பதற்கு மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நந்தகுமார் இளம்பெண்ணை கழுத்தை பிடித்து நெரித்து, கன்னத்தில் அறைந்தார். மேலும் அவரிடம் தகராறு செய்து செல்போனையும் பறித்தார். அப்போது, அங்கு வந்த இளம்பெண்ணின் தாயார் தனது மகளை வாலிபரிடம் இருந்து காப்பாற்ற முயன்றார்.
அப்போது இருவரையும் நந்தகுமார், தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து இளம்பெண் ஆர்.எஸ் புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் நந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- ஆழியாறு பாசனப்பகுதியை சேர்ந்த 21 நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் உள்ளன.
- தேர்தல் அலுவலராக சப்-கலெக்டர் பிரியங்கா செயல்படுவார்.
பொள்ளாச்சி,
ஆழியாறு நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6,400 ஏக்கர் விளைநிலங்களும் பாசனம் பெறுகிறது. பி.ஏ.பி. பரம்பிக்குளம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் ஆழியாறு பாசனப்பகுதியை சேர்ந்த 21 நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களுக்கான தேர்தல் கடந்த மார்ச் மாதம் பகிர்மான குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில், ஆழியாறு நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை மறுநாள் (20-ந் தேதி) நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆழியாறு பாசன திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்காக தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு தேர்தல் அலுவலராக சப்-கலெக்டர் பிரியங்கா செயல்படுவார்.
திட்டக்குழு தலைவருக்கான தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் காலை 8.30 மணி முதல் 9.30 வரை பெற்றுக் கொள்ளலாம்.
வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்தல் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடுதல் காலை 9.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும்.
காலை 10 மணி முதல் 10.30 மணி வரை வேட்பு மனுக்கள் திரும்ப பெறுதல் நடக்கிறது. வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் காலை 10.45 மணிக்கு வெளியிடப்படுகிறது.
11.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதன் பின்னர் உடனடியாக பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதில், திட்டக்குழு தலைவரை தேர்ந்து எடுப்பதற்காக 4 பகிர்மான குழு தலைவர்களும், அசல் தேர்தல் சான்றிதழுடன் வர வேண்டும்.
அதனைத் தொடர்ந்து திட்டக்குழு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் நடைபெறும். இதில் ஓட்டுப்பதிவு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
- கடந்த 8-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- 28-ந் தேதி மாரியம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.
கிணத்துக்கடவு,
கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கலில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்த ஆண்டிற்கான தேர்த்திருவிழாவையொட்டி கடந்த 8-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வேல் புறப்பாடு, பூச்சாட்டு விழா, கிராம சாந்தி, வாஸ்து சாந்தி, கம்பம் நடும் நிகழ்ச்சி, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நேற்று காலை யாகசாலை ஆரம்பம் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடந்தன.
இதில் பொள்ளாச்சி கோவை, கிணத்துக்கடவு வட்டார பகுதியில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு மாரியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று (வியாழக்கிழமை) முதல் 23-ந் தேதி வரை மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 24-ந் தேதி மாவிளக்கு எடுத்து வருதல் பொங்கல் விழாவும் நடக்கிறது. அன்று இரவு 7 மணிக்கு மாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
25-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டர், இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து தொடங்கி வைக்கின்றனர். 26-ந் தேதி 2-ம் நாள் தேர் திருவிழாவும், 27-ந் தேதி 3-ம் நாள் தேர் திருவிழாவும் நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து 28-ந் தேதி மாரியம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் கந்தசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.
- நள்ளிரவு வீட்டுக்குள் குடிபோதையில் அத்துமீறி நுழைந்தார்.
- வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து செட்டிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.
கோவை,
கோவை அருகே உள்ள செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் 50 வயது கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 20 வயதில் ஒரு மகள் உள்ளார்.
சம்பவத்தன்று இரவு வீட்டில் உள்ள அனைவரும் தனித்தனி கட்டிலில் படுத்து தூங்கினர். நள்ளிரவு வீட்டுக்குள் குடிபோதையில் அத்துமீறி நுழைந்த வாலிபர் ஒருவர் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த தொழிலாளியன் மகளை கையை பிடித்து இழுத்து அவரிடம் தவறாக நடக்க முயன்றார். திடுக்கிட்டு எழுந்த இளம்பெண் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். இதனையடுத்து அந்த வாலிபர் அங்கு இருந்து தப்பி ஓடினார்.
அவரை அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து செட்டிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மலுமச்சம்பட்டியை சேர்ந்த ரவுடி பூவரசன் (வயது 25) என்பது தெரிய வந்தது. இவர் மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை, அடிதடி, வழிப்பறி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
போலீசார் கைது செய்யப்பட்ட ரவுடி பூவரசனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
- புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏலம் நடைபெற்று வருகிறது.
- நேந்திரன் வாழைத்தார் கிலோ ஒன்றுக்கு அதிக பட்சமாக ரூ.40 வரை விற்பனையானது.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் வாழைக்காய் ஏலம் மையம் செயல்பட்டு வருகிறது.இங்கு மேட்டுப்பாளையம், அன்னூர்,புளியம்பட்டி, சிறுமுகை,காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த வாழைத்தார்களை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதனை இந்த ஏல மையத்தில் ஏலம் விட்டு வியாபாரிகள் போட்டி போட்டு எடுத்துச்செல்வதும் வழக்கம்.
இந்த மையத்தில் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏலம் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் நேந்திரன், கதளி,பூவன், தேன் வாழை, ரஸ்தாளி, ரோபஸ்டா,செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு வகை வாழைத்தார்கள் விவசாயிகளால் இந்த மையத்திற்கு கொண்டு வரப்பட்டன. நேற்றைய ஏலத்தில் நேந்திரன் வாழைத்தார் கிலோ ஒன்றுக்கு அதிக பட்சமாக ரூ.40 வரையும், கதளி வாழைத்தார் கிலோ ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.25 வரையும் விற்பனையானது.
மேலும்,பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500 வரையும்,தேன் வாழை தார் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.475 வரையும், ரஸ்தாளி தார் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.450 வரைக்கும், ரோபஸ்டா அதிகபட்சமாக தார் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ.450 வரையும், செவ்வாழை அதிகபட்சமாக ரூ.800 வரையும் ஏலம் போனது. குறிப்பாக நேந்திரன் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிலோ ஒன்றிற்கு ரூ.20 வரை விற்பனையான நிலையில் தற்போது விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ஏல மையத்தின் நிர்வாகிகள் சின்னராஜ் மற்றும் வெள்ளியங்கிரி கூறுகையில் மேட்டுப்பாளையம், அன்னூர், புளியம்பட்டி, சிறுமுகை, காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்பட்ட நேந்திரன் வாழைத்தார்கள் கடந்த பல நாட்களுக்கு முன்னர் சூறாவளி காற்றின் காரணமாக வரத்து அதிகமாக இருந்தன. இதனால் கடும் விலை வீழ்ச்சி அடைந்து அதிகபட்சமாக ரூ.20 வரை மட்டுமே ஏலம் போனது.
தற்போது நேந்திரன் வாழைத்தார்களின் வரத்து குறைவாக இருப்பதாலும்,கேரள வியாபாரிகளின் வரத்து அதிகரித்துள்ளதாலும் அதிகபட்சமாக நேந்திரன் வாழைத்தார் கிலோ ஒன்றிற்கு ரூ.40 வரை ஏலம் போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்றனர்.
- சம்பவம் குறித்து மாணவியின் தாய் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- மாணவி மாயமானது அவரது பெற்றோரையும், உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
கோவை:
கோவை ராமநாதபுரம் அடுத்த ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் சுதாகரன்.
இவரது மனைவி சசிகலா. இவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 12 வயதில் ஸ்ரீநிதி என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
ஸ்ரீநிதி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது முழு ஆண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் ஸ்ரீநிதி வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று காலை சுதாகரன் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சசிகலா, அவரது மகள் ஸ்ரீநிதி மற்றும் மகன் மட்டும் இருந்தனர். மதியம் சசிகலா வீட்டில் வேலைகளை பார்த்து கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீநிதி தனது சகோதருடன் வீட்டின் முன்பு நின்று விளையாடி கொண்டிருந்தார். சசிகலா வேலையை முடித்து விட்டு மதியம் 1.30 மணிக்கு வெளியில் வந்து பார்த்த போது மகன் மட்டும் நின்றிருந்தார். மகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியான அவர் இதுகுறித்து தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக அவர் வீட்டிற்கு விரைந்து வந்தார். பின்னர் 2 பேரும் சேர்ந்து அக்கம்பக்கம் உள்ளவர்களின் வீடு மற்றும் அருகே உள்ள இடங்கள் முழுவதும் ஸ்ரீநிதியை தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.
உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கலாம் என நினைத்து அவர்களை தொடர்பு கொண்டு விசாரித்தனர். ஆனால் மாணவி அங்கும் செல்லவில்லை என்பது தெரியவந்தது.
இதனால் மாணவியின் தாய் சசிகலா சம்பவம் குறித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மாணவியின் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் விசாரித்து விட்டு, அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களையும் ஆய்வு செய்தனர்.
அப்போது அதில் மாணவி வீட்டில் இருந்து நடந்து ஒண்டிப்புதூர் பஸ் நிறுத்தத்திற்கு செல்வதும், அங்கிருந்து உக்கடம் செல்லும் பஸ்சில் ஏறும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.
இதையடுத்து போலீசார் உக்கடம் பஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு பஸ் நிலையம் மற்றும் அங்கு வந்த அனைத்து பஸ்களிலும் ஏறி தேடி பார்த்தனர். ஆனால் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கு சென்றார் என்பதும் தெரியவில்லை.
மாணவி மாயமாகி ஒரு நாள் ஆகியும் இன்னும் கிடைக்காததால் மாணவியின் பெற்றோர் அழுதபடியே மிகுந்த சோகத்தில் உள்ளனர். அவர்களை உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றி வருகின்றனர்.
இதற்கிடையே மாயமான மாணவியை கண்டுபிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மாணவியை தேடி வருகின்றனர். மாணவி மாயமானரா? அல்லது யாராவது கடத்தி சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் மாணவியை எங்கு தேடியும் கிடைக்காததால், மாணவியின் தந்தை சுதாகரன், தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் தனது மகளின் புகைப்படம், பெயர், வயது, வீட்டின் முகவரி என அனைத்து தகவல்களையும் சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் பதிவிட்டார். அதில், இந்த புகைப்படத்தில் உள்ள மாணவியின் பெயர் ஸ்ரீநிதி, கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த அவரை நேற்று மதியம் முதல் காணவில்லை. அவரை யாராவது பார்த்தால் அதில் கொடுக்கப்பட்டுள்ள செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும் என கூறப்பட்டிருந்தது.
தற்போது இந்த தகவலானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோவை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மின்னல் வேகத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்க்கும் பலரும் தங்களது செல்போனில் உள்ள வாட்ஸ் அப், பேஸ் புக் குழுக்களில் பகிர்ந்து மாணவியை கண்டுபிடிக்க தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். மாணவி மாயமானது அவரது பெற்றோரையும், உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
- அண்மைக்காலங்களாக தொடர்ந்து மோட்டார் சைக்கிள், மொபட் ஆகியவை திருடு போகும் சம்பவங்கள் நடைபெற்று வந்தது.
- கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கோவை:
கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் அண்மைக்காலங்களாக தொடர்ந்து மோட்டார் சைக்கிள், மொபட் ஆகியவை திருடு போகும் சம்பவங்கள் நடைபெற்று வந்தது.
இது தொடர்பாக அதன் உரிமையாளர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது. அதில் 2 பேர் மோட்டார் சைக்கிள், மொபட் ஆகியவற்றை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிய தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியது திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது29), ஆறுமுகம் பாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள், மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைதாகி உள்ள பாலகிருஷ்ணன் திருப்பூர் மாவட்ட இந்து முன்னணி துணைத்தலைவராக உள்ளார்.






