search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cheated"

    • கடனாக பெற்ற ரூ.15 லட்சம் மற்றும் 1900 கிராம் தங்கத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
    • பெரிய கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷ்பாபுவை கைது செய்தனர்.

    கோவை, ஜூலை.31-

    கோவை செல்வபுரம் திருநகர் 2-வது வீதியை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது50). நகைக்கடை அதிபர்.

    இவர் பெரிய கடைவீதி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் கோவை செல்வ புரம் அசோக்நகரில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நகைக்கடை நடத்தி வருகிறேன்.

    நானும் கோவை வைசியாள் வீதியில் தங்க நகை சீட்டு ஏல கம்பெனி நடத்தி வரும் மகேஷ்பாபு(55) என்பவரும் 30 ஆண்டுகளாக நண்பர்களாக பழகிவந்தோம்.

    இதனை தொடர்ந்து அவரது மகளுக்கு கடந்த 2018 ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது மகேஷ்பாபு என்னிடம் ரூ.15 லட்சம் கடன் வாங்கினார். ரூ.100 க்கு 1 ரூபாய் வட்டி செலுத்தி வந்தார்.

    இதற்கிடையே மகேஷ்பாபு என்னிடம், நான் நடத்தி வரும் தங்க நகை ஏல சீட்டில் நல்ல லாபம் வருவதாகவும், நீயும் அதில் சேருமாறு கூறினார். இதனை உண்மை என நம்பி நான் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2021-ம் ஆண்டு வரை அவரது ஏல சீட்டு கம்பெனியில் தங்கம் கொடுத்து வந்தேன்.

    மாத, மாதம் 80 கிராம், 85 கிராம் வீதம் 1756 கிராம் சொக்க தங்கத்தை கொடுத்தேன். அதன் பின்னர் மகேஷ்பாபு லாபத்துடன் சேர்த்து 1900 கிராம் தங்கம் தருவதாக உறுதியளித்தார்.

    ஆனால் அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகியும், கடனாக பெற்ற ரூ.15 லட்சம் மற்றும் 1900 கிராம் தங்கத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். பலமுறை கேட்டும் எந்த பயனும் இல்லை. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது பணம் மற்றும் தங்கத்தை மீட்டு தரவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில், பெரிய கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மகேஷ்பாபு ரூ. 1.30 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் பணத்தை சிவக்குமாரிடம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகேஷ்பாபுவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • தட்டிக் கேட்ட கணவரை இரும்பு கம்பியால் தாக்கியதால் பலத்த காயம் ஏற்பட்டது.
    • புகாரின் பேரில் போலீசார் ரேசன்கடை ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் 46 வயது கூலித் தொழிலாளி. மூடை தூக்கும் தொழிலாளி. இவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனது மனைவிக்கு தற்போது 40 வயதாகிறது.

    18 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. எனது மனைவி கடந்த சில ஆண்டுகளாக எங்கள் பகுதியில் உள்ள 58 வயதான ரேசன்கடை ஊழியர் வீட்டிற்கு வேலைக்கு சென்றார்.

    அப்போது எனது மனைவிக்கும் ரேசன் கடை ஊழியருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக எனக்கு தெரிய வந்தது. இதனையடுத்து நான் எனது மனைவியை கண்டித்தேன்.

    இது குறித்து எனது மனைவி அவரது கள்ளக்காதலனிடம் தெரிவித்தார்.

    இதனால் எனக்கும், அவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று நான் வேலைக்கு சென்றுவிட்டு கணபதி மாமரதோட்டம் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தேன். அப்போது அங்கு வந்த ரேசன் கடை ஊழியர் என்னை தகாத வார்த்தைகளால் பேசினார்.

    அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அவர் அங்கு இருந்த இரும்பு கம்பியால் என்னுடைய தலையில் தாக்கினார். பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய என்னை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு நான் சிகிச்சை பெற்று வருகிறேன். எனவே என்னை தாக்கிய ரேசன் கடை ஊழியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீசார் ரேசன்கடை ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
    • ரூ.2 லட்சத்து 61 ஆயிரத்து நூறு முதலீடு செய்தார். பின்னர் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை என்பதை உணர்ந்தவர் புகார் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக வருமானம் தருகிறோம் என்று இணைய வழி மோசடிக்காரர்கள் சொன்னதை நம்பிய வில்லியனூரை சேர்ந்த சங்கர் என்பவர் ரூ.90 ஆயிரம் முதலீடு செய்தார். அவர்கள் லாபத்தை திருப்பித் தரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் புகார் அளித்துள்ளார்.

    ஆன்லைனில் நல்ல வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறோம் என்று தானாகவே முன்வந்து அறிமுகமான ஒரு இணைய வழி மோசடிக்காரரின் பேச்சை நம்பிய புதுவை குருசுக்குப்பத்தை சேர்ந்த முகுந்தன் என்பவர் ரூ.2 லட்சத்து 61 ஆயிரத்து நூறு முதலீடு செய்தார். பின்னர் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை என்பதை உணர்ந்தவர் புகார் அளித்துள்ளார்.

    அரியாங்குப்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை இணைய வழியில் தொடர்பு கொண்ட நபர், நான் சொல்லும் வழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவோம் என்று கூறியதை நம்பி ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 834 முதலீடு செய்தார். 30 நாட்கள் ஆகியும் எந்த தகவலும் வராததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவரும் என்று சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    இந்த புகார்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் இணைய வழியில் எந்த முதலீடும் செய்து ஏமாற வேண்டாம். இணைய வழியில் வரும் முதலீடுகள், வருமானங்கள், வேலை வாய்ப்புகள் போன்றவை பெரும்பாலான இணைய வழி மோசடிக்காரர்களின் வேலைகள்தான்.

    எனவே பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம். மிக முக்கியமாக இன்ஸ்டாகிராம் டெலிகிராமில் வருகின்ற முதலீட்டு வாய்ப்புகளையும், அழைப்புகளையும் ஏற்க வேண்டாம். புதுவையில் மட்டும் நாள் ஒன்றுக்கு குறைந்தது பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் இதுபோன்ற ஆன்லைன் பணத்தை முதலீடு செய்தும், வேலை வாய்ப்புகளையும் நம்பி பணத்தை இழக்கின்றனர். எனவே பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

    • அரசு தொகுப்பு வீடுகளை பணம் கொடுத்தால் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
    • புகாரின் பேரில் மகேந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாந்தி நகரை சேர்ந்தவர் ஜெயசுமா (வயது 41). அதே பகுதியை சேர்ந்த மதுமிதா (25), கல்பனா (46) இவர்கள் 3 பேரும் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார்அளித்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் அனைவரும் உறவினர்கள். துணிக்கடை மற்றும் நகைக்கடைகளில் வேலை பார்த்து வருகிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமுகை ஜீவா நகரை சேர்ந்த மகேந்திரன் (40) என்பவர் அறிமுகமானார். அவர் சிறுமுகை ரோட்டில் உள்ள அரசு தொகுப்பு வீடுகளை பணம் கொடுத்தால் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.

    இதனை உண்மை என நம்பிய நாங்கள் 3 பேரும் ரூ.2 லட்சம் பணத்தை மகேந்திரனிடம் கொடுத்தோம். பின்னர் அவர் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறி மேட்டுப்பாளையம் தாசில்தார் கையொப்பம் மற்றும் சீலுடன் கூடிய ஆணையை எங்களிடம் வழங்கினார்.

    அதனை நாங்கள் கொண்டு சென்று பார்த்த போது அது போலியானது என்பது தெரிய வந்தது. எனவே வீடு பெற்று தருவதாக கூறி எங்களிடம் ரூ.2 லட்சம் பணத்தை பெற்று மோசடி செய்த மகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தனர்.

    புகாரின் பேரில் மகேந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பணம் கொடுத்தால் வேலை வாங்கித்த ருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார்.
    • கடந்த 13-ந் தேதி சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் பிரசாந்த் உத்தமன் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    கோவை,

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர் ராஜேஸ்குமார் (வயது 37). பட்டதாரியான இவர் மத்திய அரசு வேலைக்கு முயற்சி செய்துகொண்டிருந்தார். அப்போது கடந்த 2019-ம் ஆண்டு நண்பர் ஒருவர் மூலமாக கோவை வீரகேர ளத்தை சேர்ந்த பிரசாந்த் உத்தமன் என்பவர் ராஜேஸ்குமாருக்கு அறிமுக மானார்.

    அவர் மத்திய அரசில் தனக்கு தெரிந்த அதிகாரிகள் ஏரளமானவர்கள் இருப்ப தாகவும், பணம் கொடுத்தால் வேலை வாங்கித்த ருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார். இதனை உண்மையென நம்பிய ராஜேஸ்குமார் ரூ.11.50 லட்சம் பணத்தை பிரசாந்த் உத்தமனிடம் கொடுத்தார்.

    அதன்பின்னர் ராஜேஸ்குமாருக்கு மத்திய அரசின் இந்துஸ்தான் ஸ்கவுட்டில் வேலை கிடைத்தது போல போலியான பணி ஆணை யை அரசு முத்திரையுடன் கொ டுத்தார். பின்னர் அந்த பணியாணையை கொண்டு பணியில் சேர சென்ற போது அது போலியானது என்பது தெரியவந்தது.இதையடுத்து ராஜேஸ்குமார் பணத்தை திருப்பிக் கேட்ட போது பிரசாந்த் உத்தமன் கொடுக்க மறுத்துவிட்டார்.

    தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜேஸ்குமார் இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 13-ந் தேதி சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் பிரசாந்த் உத்தமன் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நெல்லை மாவட்டம் தேவர்குளம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிர மணியன் விவசாயி.
    • அதே ஊரை சேர்ந்தவர் சுதாகர் தங்க நகையை வைத்து கொண்டு கடனாக ரூ.2 லட்சம் தருமாறு சுப்பிரமணியனிடம் கேட்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் தேவர்குளம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிர மணியன் (வயது 33). விவசாயி.

    ரூ.2 லட்சம்

    அதே ஊரை சேர்ந்தவர் சுதாகர் என்ற சுதாஜி. தொழிலாளியான இவர் அவசர தேவைக்காக தங்க நகையை வைத்து கொண்டு கடனாக ரூ.2 லட்சம் தருமாறு சுப்பிரமணியனிடம் கேட்டுள்ளார்.

    அதற்கு சுப்பிரமணியன் அவ்வளவு பணம் இல்லை என்று கூறி தனது மனை வியின் நகையை அடகு வைத்து ரூ.2 லட்சம் பணத்தை சுதாகருக்கு கொடுத்துள்ளார்.

    போலி நகை

    இதற்கிடையே சுப்பிர மணியனின் நண்பர் மாரிச் செல்வம் என்பவர் ஆட்டோ வாங்குவதற்காக ரூ.46 ஆயிரம் கடன் கேட்டுள்ளார். இதனால் சுதாகர் கொடுத்த நகையை வன்னிக் கோனேந்தலில் உள்ள தனியார் வங்கியில் அடகு வைத்து சுப்பிரமணியன் பணம் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் தனியார் வங்கியில் நகையை சோதனை செய்ததில் அது போலி நகை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி மேலாளர் உடனடியாக வந்து நகையை திரும்ப பெற்றுக் கொண்டு பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும், அவ்வாறு தவறினால் போலீசாரிடம் புகார் கொடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

    மிரட்டல்

    உடனடியாக மாரிச் செல்வம் வங்கிக்கு சென்று பணத்தை கட்டி நகையை திரும்ப பெற்றுள்ளார். இந்நிலையில் நகை போலி என்பதால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியன் தனது நண்பர் மாரிச் செல்வத்துடன் சேர்ந்து சுதாகரிடம் நகை குறித்து கேட்டுள்ளனர்.

    இதனைக் கேட்ட சுதாஜி அவர்களை மிரட்டி உள்ளார். இது குறித்து தேவர்குளம் போலீசில் சுப்பிரமணியன் புகார் செய்யவே, அதனை வாபஸ் வாங்குமாறு கூறியுள்ளார்.

    வழக்குப்பதிவு

    அதன்பின்னர் நடை பயிற்சி சென்ற சுப்ரமணி யனை அரிவாளால் சுதாகர் வெட்ட முயன்ற போது உறவினர்கள் வரவே அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டார்.

    இச்சம்பவம் குறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமுறைவான சுதாகரை தேடி வருகின்றனர்.


    • சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
    • புதுவை காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்

    புதுச்சேரி:

    அரியாங்குப்பத்தில் வேறு ஒருவரின் இடத்தை பத்திர பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புதுவை முருங்கப்பாக்கம் குயவர் தெருவை சேர்ந்தவர் சேகரன் (வயது64). இவர் புதுவை காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த

    2017-ம் ஆண்டு இவரிடம் அரியாங்குப்பத்தை சேர்ந்த பாரதி (35) என்பவர் அணுகி அரியாங்குப்பம் மணவெளியில் பாக்கியவ தியம்மாள் என்பவருக்கு சொந்தமான இடம் விற்பனைக்கு உள்ளதாக தெரிவித்தார். அந்த இடத்தை சேகரன் வாங்க முடிவு செய்தார். அதற்காக பாக்கியவதியம்மாளின் வாரிசுகளான விஜயகுமார், மோகன்ராஜ் மற்றும் பானுமதி உள்பட 8 பேரிடம் ரூ.6 லட்சத்தை சேகரன் கொடுத்து தனது மனைவி லட்சுமி பெயரில் பத்திர பதிவு செய்தார்.

    பின்னர் பத்திர பதிவு செய்து கொடுத்த அந்த இடத்தை சேகரன் சென்று பார்த்த போது வேறு ஒருவர் விவசாயம் செய்ய நிலத்தை ஏர் உழுது செய்திருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து விசாரித்த போது அந்த இடம் வேறு ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

    இதையடுத்து சேகரன் அப்போது அரியாங்குப்பம் போலீசில் இதுகுறித்து புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கிரையம் பெற்ற இடத்தை ரத்து செய்து விடுவதாகவும், பணத்தை 6 மாதத்தில் திருப்பி தந்து விடுவதாகவும் போலீசாரிடம் உறுதி அளித்தனர். இதையடுத்து 6 மாத காலம் கெடு முடிந்து சேகரன் பணத்தை கேட்ட போது அவர்கள் மீண்டும் 2 மாத காலம் அவகாசம் கேட்டனர். அதனையும் சேகரன் ஏற்றுக்கொண்டார்.

    அதன் பிறகு கொரோனா காலம் வந்து விட்டதால் பணத்தை திருப்பி தரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக விஜயக்குமார், மோகன்ராஜ், பானுமதி உள்ளிட்டோர் கூறினர். ஆனால் தொடர்ந்து போன் மூலம் பணத்தை கேட்ட போது அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்து வந்தனர். இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த சேகரன் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி விஜயக்குமார், மோகன்ராஜ், பானுமதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    ×