search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவுண்டம்பாளையத்தில் வீட்டு வேலைக்கு வந்த பெண்ணுடன் ரேஷன் கடை ஊழியர் கள்ளக்காதல்
    X

    கவுண்டம்பாளையத்தில் வீட்டு வேலைக்கு வந்த பெண்ணுடன் ரேஷன் கடை ஊழியர் கள்ளக்காதல்

    • தட்டிக் கேட்ட கணவரை இரும்பு கம்பியால் தாக்கியதால் பலத்த காயம் ஏற்பட்டது.
    • புகாரின் பேரில் போலீசார் ரேசன்கடை ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் 46 வயது கூலித் தொழிலாளி. மூடை தூக்கும் தொழிலாளி. இவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனது மனைவிக்கு தற்போது 40 வயதாகிறது.

    18 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. எனது மனைவி கடந்த சில ஆண்டுகளாக எங்கள் பகுதியில் உள்ள 58 வயதான ரேசன்கடை ஊழியர் வீட்டிற்கு வேலைக்கு சென்றார்.

    அப்போது எனது மனைவிக்கும் ரேசன் கடை ஊழியருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக எனக்கு தெரிய வந்தது. இதனையடுத்து நான் எனது மனைவியை கண்டித்தேன்.

    இது குறித்து எனது மனைவி அவரது கள்ளக்காதலனிடம் தெரிவித்தார்.

    இதனால் எனக்கும், அவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று நான் வேலைக்கு சென்றுவிட்டு கணபதி மாமரதோட்டம் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தேன். அப்போது அங்கு வந்த ரேசன் கடை ஊழியர் என்னை தகாத வார்த்தைகளால் பேசினார்.

    அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அவர் அங்கு இருந்த இரும்பு கம்பியால் என்னுடைய தலையில் தாக்கினார். பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய என்னை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு நான் சிகிச்சை பெற்று வருகிறேன். எனவே என்னை தாக்கிய ரேசன் கடை ஊழியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீசார் ரேசன்கடை ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×