search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் ஒரு நாளில் 10 பேரிடம் மோசடி
    X

    கோப்பு படம்.

    புதுவையில் ஒரு நாளில் 10 பேரிடம் மோசடி

    • சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
    • ரூ.2 லட்சத்து 61 ஆயிரத்து நூறு முதலீடு செய்தார். பின்னர் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை என்பதை உணர்ந்தவர் புகார் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக வருமானம் தருகிறோம் என்று இணைய வழி மோசடிக்காரர்கள் சொன்னதை நம்பிய வில்லியனூரை சேர்ந்த சங்கர் என்பவர் ரூ.90 ஆயிரம் முதலீடு செய்தார். அவர்கள் லாபத்தை திருப்பித் தரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் புகார் அளித்துள்ளார்.

    ஆன்லைனில் நல்ல வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறோம் என்று தானாகவே முன்வந்து அறிமுகமான ஒரு இணைய வழி மோசடிக்காரரின் பேச்சை நம்பிய புதுவை குருசுக்குப்பத்தை சேர்ந்த முகுந்தன் என்பவர் ரூ.2 லட்சத்து 61 ஆயிரத்து நூறு முதலீடு செய்தார். பின்னர் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை என்பதை உணர்ந்தவர் புகார் அளித்துள்ளார்.

    அரியாங்குப்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை இணைய வழியில் தொடர்பு கொண்ட நபர், நான் சொல்லும் வழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவோம் என்று கூறியதை நம்பி ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 834 முதலீடு செய்தார். 30 நாட்கள் ஆகியும் எந்த தகவலும் வராததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவரும் என்று சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    இந்த புகார்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் இணைய வழியில் எந்த முதலீடும் செய்து ஏமாற வேண்டாம். இணைய வழியில் வரும் முதலீடுகள், வருமானங்கள், வேலை வாய்ப்புகள் போன்றவை பெரும்பாலான இணைய வழி மோசடிக்காரர்களின் வேலைகள்தான்.

    எனவே பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம். மிக முக்கியமாக இன்ஸ்டாகிராம் டெலிகிராமில் வருகின்ற முதலீட்டு வாய்ப்புகளையும், அழைப்புகளையும் ஏற்க வேண்டாம். புதுவையில் மட்டும் நாள் ஒன்றுக்கு குறைந்தது பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் இதுபோன்ற ஆன்லைன் பணத்தை முதலீடு செய்தும், வேலை வாய்ப்புகளையும் நம்பி பணத்தை இழக்கின்றனர். எனவே பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

    Next Story
    ×