search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake jewels"

    • நெல்லை மாவட்டம் தேவர்குளம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிர மணியன் விவசாயி.
    • அதே ஊரை சேர்ந்தவர் சுதாகர் தங்க நகையை வைத்து கொண்டு கடனாக ரூ.2 லட்சம் தருமாறு சுப்பிரமணியனிடம் கேட்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் தேவர்குளம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிர மணியன் (வயது 33). விவசாயி.

    ரூ.2 லட்சம்

    அதே ஊரை சேர்ந்தவர் சுதாகர் என்ற சுதாஜி. தொழிலாளியான இவர் அவசர தேவைக்காக தங்க நகையை வைத்து கொண்டு கடனாக ரூ.2 லட்சம் தருமாறு சுப்பிரமணியனிடம் கேட்டுள்ளார்.

    அதற்கு சுப்பிரமணியன் அவ்வளவு பணம் இல்லை என்று கூறி தனது மனை வியின் நகையை அடகு வைத்து ரூ.2 லட்சம் பணத்தை சுதாகருக்கு கொடுத்துள்ளார்.

    போலி நகை

    இதற்கிடையே சுப்பிர மணியனின் நண்பர் மாரிச் செல்வம் என்பவர் ஆட்டோ வாங்குவதற்காக ரூ.46 ஆயிரம் கடன் கேட்டுள்ளார். இதனால் சுதாகர் கொடுத்த நகையை வன்னிக் கோனேந்தலில் உள்ள தனியார் வங்கியில் அடகு வைத்து சுப்பிரமணியன் பணம் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் தனியார் வங்கியில் நகையை சோதனை செய்ததில் அது போலி நகை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி மேலாளர் உடனடியாக வந்து நகையை திரும்ப பெற்றுக் கொண்டு பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும், அவ்வாறு தவறினால் போலீசாரிடம் புகார் கொடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

    மிரட்டல்

    உடனடியாக மாரிச் செல்வம் வங்கிக்கு சென்று பணத்தை கட்டி நகையை திரும்ப பெற்றுள்ளார். இந்நிலையில் நகை போலி என்பதால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியன் தனது நண்பர் மாரிச் செல்வத்துடன் சேர்ந்து சுதாகரிடம் நகை குறித்து கேட்டுள்ளனர்.

    இதனைக் கேட்ட சுதாஜி அவர்களை மிரட்டி உள்ளார். இது குறித்து தேவர்குளம் போலீசில் சுப்பிரமணியன் புகார் செய்யவே, அதனை வாபஸ் வாங்குமாறு கூறியுள்ளார்.

    வழக்குப்பதிவு

    அதன்பின்னர் நடை பயிற்சி சென்ற சுப்ரமணி யனை அரிவாளால் சுதாகர் வெட்ட முயன்ற போது உறவினர்கள் வரவே அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டார்.

    இச்சம்பவம் குறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமுறைவான சுதாகரை தேடி வருகின்றனர்.


    247 பவுன் நகைகளை கொடுத்து பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்டனர்.
    மதுரை:

    மதுரை ஐராவதநல்லூர் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி புவனேசுவரி(வயது 32). இவர்கள் நகை வியாபாரம் செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் புவனேசுவரி தெப்பக்குளம் குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த நகை வியாபாரி ஆனந்த்பாபு(35), அவருடைய மனைவி பிரியா (31) ஆகியோர் என்னிடம் நகைகளை கொடுத்து அதற்கு பதிலாக பணம் வாங்கி வந்தனர். இவ்வாறு அவர்கள் மொத்தம் 247 பவுன் வரை நகைகளை கொடுத்து ரூ.70 லட்சம் வரை பணம் பெற்றுள்ளனர். இந்தநிலையில் அவர்கள் கொடுத்த நகைகளை பரிசோதித்து பார்த்தபோது, அவை அனைத்தும் போலி நகைகள் என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து நான் அவர்களிடம் கேட்டேன். அப்போது அவர்கள் பணத்தை திரும்ப கொடுக்க மறுப்பு தெரிவித்து, மிரட்டல் விடுத்தனர். எனவே ஏமாற்றிய தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    அதன்பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி நகை கொடுத்து ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக ஆனந்த்பாபு, அவருடைய மனைவி பிரியா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே போலி நகைகளை அடகு வைத்து வங்கியில் ரூ.1½ கோடி மோசடி தொடர்பாக ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது திருவம்பட்டு. இங்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று உள்ளது.

    இந்த வங்கியில் புதுவை முதலியார்பேட்டையை சேர்ந்த ஜெகநாதன் (வயது 39) என்பவர் நகை மதிப்பீட்டாளராக கடந்த 2012-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.

    இந்த வங்கியில் செஞ்சி மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் தங்களது நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர்.

    இந்த நிலையில் வங்கியில் வைக்கப்பட்டுள்ள நகைகளை சோதனை செய்து பார்த்தபோது அதில் பல நகைகள் போலி என்பது தெரிய வந்தது. யாரோ வாடிக்கையாளர்களின் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.1½ கோடி பண மோசடி செய்துள்ளது தெரிய வந்தது.

    இது தொடர்பாக வங்கி மேலாளர் செஞ்சி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வங்கி ஊழியர் ஜெகநாதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சை மாவட்டம் கபிஸ்தலத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகள் அடகு வைத்து ரூ.6 கோடி மோசடி செய்தததாக விவசாய சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமலநாதன் மற்றும் தலைவர் சின்னதுரை ஆகியோர் கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப் குமாரை நேரில் சந்தித்து இன்று ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டம் கபிஸ்தலத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த வங்கியில் விவசாயிகள் வேளாண்மை நகை கடன் வேளாண் பயிர் கடன் எந்திரக் கருவிகள் பண்ணை திட்டங்களுக்கான கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் விவசாயத்துக்கு சம்பந்தம் இல்லாத நபர்களுக்கு விவசாய கடன்கள் வழங்கப்படுவதாக புகார் வந்த வண்ணம் இருந்தது. இதற்கிடையே வங்கிக்கு புதிதாக பொறுப்பேற்ற அலுவலர்கள் வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளை திடீர் ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது வங்கி ஊழியர்கள் போலி நகைகளை விவசாயிகள் பெயரில் பல கோடி ரூபாய்க்கு அடகு வைத்து மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. சுமார் ரூ.6 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளது என தெரியவருகிறது.

    எனவே இந்த மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அவ்வாறு சி.பி.ஐ. விசாரணைக்கு வங்கி நிர்வாகம் ஒத்துழைக்காவிட்டால் வங்கியின் முன் விவசாயிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    ×