என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
247 பவுன் போலி நகைகளை கொடுத்து ரூ.70 லட்சம் மோசடி- தம்பதி கைது
Byமாலை மலர்26 Nov 2021 3:19 AM GMT (Updated: 26 Nov 2021 3:19 AM GMT)
247 பவுன் நகைகளை கொடுத்து பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்டனர்.
மதுரை:
மதுரை ஐராவதநல்லூர் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி புவனேசுவரி(வயது 32). இவர்கள் நகை வியாபாரம் செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் புவனேசுவரி தெப்பக்குளம் குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த நகை வியாபாரி ஆனந்த்பாபு(35), அவருடைய மனைவி பிரியா (31) ஆகியோர் என்னிடம் நகைகளை கொடுத்து அதற்கு பதிலாக பணம் வாங்கி வந்தனர். இவ்வாறு அவர்கள் மொத்தம் 247 பவுன் வரை நகைகளை கொடுத்து ரூ.70 லட்சம் வரை பணம் பெற்றுள்ளனர். இந்தநிலையில் அவர்கள் கொடுத்த நகைகளை பரிசோதித்து பார்த்தபோது, அவை அனைத்தும் போலி நகைகள் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து நான் அவர்களிடம் கேட்டேன். அப்போது அவர்கள் பணத்தை திரும்ப கொடுக்க மறுப்பு தெரிவித்து, மிரட்டல் விடுத்தனர். எனவே ஏமாற்றிய தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
அதன்பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி நகை கொடுத்து ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக ஆனந்த்பாபு, அவருடைய மனைவி பிரியா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை ஐராவதநல்லூர் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி புவனேசுவரி(வயது 32). இவர்கள் நகை வியாபாரம் செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் புவனேசுவரி தெப்பக்குளம் குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த நகை வியாபாரி ஆனந்த்பாபு(35), அவருடைய மனைவி பிரியா (31) ஆகியோர் என்னிடம் நகைகளை கொடுத்து அதற்கு பதிலாக பணம் வாங்கி வந்தனர். இவ்வாறு அவர்கள் மொத்தம் 247 பவுன் வரை நகைகளை கொடுத்து ரூ.70 லட்சம் வரை பணம் பெற்றுள்ளனர். இந்தநிலையில் அவர்கள் கொடுத்த நகைகளை பரிசோதித்து பார்த்தபோது, அவை அனைத்தும் போலி நகைகள் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து நான் அவர்களிடம் கேட்டேன். அப்போது அவர்கள் பணத்தை திரும்ப கொடுக்க மறுப்பு தெரிவித்து, மிரட்டல் விடுத்தனர். எனவே ஏமாற்றிய தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
அதன்பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி நகை கொடுத்து ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக ஆனந்த்பாபு, அவருடைய மனைவி பிரியா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X