search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • கடந்த 8-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 28-ந் தேதி மாரியம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

    கிணத்துக்கடவு,

    கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கலில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்த ஆண்டிற்கான தேர்த்திருவிழாவையொட்டி கடந்த 8-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து வேல் புறப்பாடு, பூச்சாட்டு விழா, கிராம சாந்தி, வாஸ்து சாந்தி, கம்பம் நடும் நிகழ்ச்சி, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    நேற்று காலை யாகசாலை ஆரம்பம் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடந்தன.

    இதில் பொள்ளாச்சி கோவை, கிணத்துக்கடவு வட்டார பகுதியில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு மாரியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று (வியாழக்கிழமை) முதல் 23-ந் தேதி வரை மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 24-ந் தேதி மாவிளக்கு எடுத்து வருதல் பொங்கல் விழாவும் நடக்கிறது. அன்று இரவு 7 மணிக்கு மாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    25-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டர், இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து தொடங்கி வைக்கின்றனர். 26-ந் தேதி 2-ம் நாள் தேர் திருவிழாவும், 27-ந் தேதி 3-ம் நாள் தேர் திருவிழாவும் நடைபெறுகிறது.

    அதனைத் தொடர்ந்து 28-ந் தேதி மாரியம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் கந்தசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×