என் மலர்
கோயம்புத்தூர்
- சமத்துவபுரம் நுழைவு வாயிலில் மார்பளவு கொண்ட பெரியார் சிலை வைக்கப்பட்டு உள்ளது.
- போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
கோவை:
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூரில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகிறார்கள்.
சமத்துவபுரம் நுழைவு வாயிலில் மார்பளவு கொண்ட பெரியார் சிலை வைக்கப்பட்டு உள்ளது. கம்பி வேலி அமைக்கப்பட்டு அதற்குள் சிலை மிகவும் பாதுகாப்புடன் இருந்தது.
இந்தநிலையில் இன்று காலை அந்த பெரியார் சிலை மீது யாரோ மாட்டு சாணத்தை வீசி அவமதிப்பு செய்து இருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியினர் நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சிலையின் மீது வீசப்பட்டு இருந்த சாணத்தை தண்ணீர் ஊற்றி கழுவினர். இந்த செயலில் ஈடுபட்டது யார், எதற்காக ஈடுபட்டனர் என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தகவல் அறிந்த திராவிடர் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அங்கு திரண்டனர். இதனால் கிணத்துக்கடவு சமத்துவபுரம் பகுதியில் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பு கருதி அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். பெரியார் சிலையை அவமதித்தவர்களை கண்டுபிடித்து சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் புகாரில் கூறி இருந்தனர்.
இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில் மக்கள் மத்தியில் வேற்றுமை இருக்கக் கூடாது. ஒற்றுமையாக சமத்துவமாக வாழ வேண்டும் என்பதற்காக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது சமத்துவ புரங்கள். அதற்கு பெரியாரின் பெயரையே சூட்டினார்.
அத்தகைய சமத்துவபுரத்தில் இருந்த பெரியாரின் சிலை அவமதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட செயல் சமூக ஒற்றுைமயை சீர்குலைக்க நடத்தப்பட்ட சதி ஆகும். எனவே இதில் தொடர்புடைய நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பதை நாளை மறுநாள் கோவையில் நடைபெறும் கூட்டத்தில் கமல்ஹாசன் முடிவு செய்ய உள்ளார்.
- பா.ஜ.க. வெளியேறி விட்டால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரலாமா? என்பது பற்றியும் மக்கள் நீதிமய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறார்கள்.
கோவை:
நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, தமிழகத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் எந்த ஒரு தொகுதியிலும் அந்த கட்சி வெற்றி பெறவில்லை.
கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.
இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் கமல்ஹாசன் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். கமல்ஹாசன் போட்டியிட்டால் எந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு உள்ளது என ஆய்வு செய்யப்பட்டது. கோவை, தென்சென்னை அல்லது மதுரை ஆகிய 3 தொகுதிகளில் எதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெற்று விடலாம் என கட்சி நிர்வாகிகள் கருதுகிறார்கள்.
ஏற்கனவே கோவை தெற்கு தொகுதி சட்டசபை தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டு உள்ளதால், தொகுதி மக்களுக்கு அவர் பரீட்சயமானவராக மாறி விட்டார். இதனால் கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி எளிதாக இருக்கும் என நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து கோவை தொகுதியை குறிவைத்து கமல்ஹாசன் காய் நகர்த்தி வருகிறார். பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் வெற்றி எளிதாகும் என்பதால் தனித்து போட்டி என்ற முடிவில் இருந்து கூட்டணி அமைத்து போட்டி என்ற நிலைப்பாட்டில் கமல்ஹாசன் இருக்கிறார்.
தற்போது கமல்ஹாசன், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடன் நட்பு ரீதியாக நெருக்கமான நிலையில் இருக்கிறார். இதனால் காங்கிரஸ்-தி.மு.க. அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் இணைந்து அவர் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. அந்த கூட்டணியில் சேரும் பட்சத்தில் கமல்ஹாசன் எதிர்பார்க்கும் தொகுதி கிடைக்குமா என்பது சந்தேகமே? இருந்தாலும் கூட்டணி கட்சி தலைவர்களிடம் பேசி எப்படியாவது கேட்கும் தொகுதியை பெற்று விடலாம் என மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
அப்படி கேட்கும் தொகுதி கிடைக்காவிட்டால் என்ன செய்வது, அடுத்தக்கட்ட நகர்வு என்ன? என்பது பற்றியும் கமல்ஹாசன் ஆலோசித்து வருகிறார். இந்தநிலையில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் தற்போது சிறுஉரசல் ஏற்பட்டுள்ளது. அந்த அணியில் இருந்து பா.ஜ.க. வெளியேறி விட்டால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரலாமா? என்பது பற்றியும் மக்கள் நீதிமய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறார்கள்.
பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பதை நாளை மறுநாள் (22-ந்தேதி) கோவையில் நடைபெறும் கூட்டத்தில் கமல்ஹாசன் முடிவு செய்ய உள்ளார். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டல மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பீளமேட்டில் உள்ள தனியார் ஓட்டலில் நாளை மறுநாள் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் 4 மாவட்ட நிர்வாகிகள் மட்டுமல்லாமல் மாநில நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அவர்களிடம் பாராளுமன்ற தேர்தல் குறித்து கமல்ஹாசன் ஆலோசிக்கிறார். கூட்ட முடிவில் கமல்ஹாசன், யாருடன் கூட்டணி என்பதை இறுதி செய்ய இருக்கிறார்.
கமல்ஹாசன் கோவையில் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவை எடுக்க உள்ளதால் நாளை மறுநாள் நடைபெறும் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக கமல்ஹாசன் நாளை மறுநாள் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.30 மணிக்கு கோவை வருகிறார். நேராக கூட்டம் நடக்கும் ஓட்டலுக்கு சென்று கூட்டத்தில் பங்கேற்கிறார். காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
கூட்டம் முடிந்த பின்னர் மாலையில் கணியூரில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் கமல்ஹாசன் பங்கேற்கிறார். அங்கு பேராசிரியர்களுக்கு அவர் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.
- ரெடிேமடு பாலங்களை பொருத்தி அதிகாரிகள் சாதனை
- அடுத்த நாள் காலையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டது
கோவை,
கோவை மாநகரில் நாளுக்கு நாள் போக்கு வரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனை சமாளிக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் சாலை கட்டமைப்பு வசதிகள், பாலப்பணிகள் ஆகியவற்றை மேம்படுத்தி வருகின்றனர்.
கோவை மாநகர பகுதியில் பகல்நேரத்தில் சாலைப்பணிகளை செய்வது மிகவும் சவாலான விஷயம். இந்தநிலையில் கோவை துடியலூர் பகுதியில் கழிவு நீர் ஓடைப்பாலம் அமைப்பது என மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி மாநகராட்சி 4-வது வார்டு தொழிற் பூங்காவிற்கு செல்லும் முக்கிய சாலையில், ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை பயன்படுத்தி ஒரே நாள் இரவில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. அடுத்த நாள் காலையில் மேற்கண்ட பாலம்பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டது.
கோவை மாநகராட்சியில் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை பயன்படுத்தி ஒரே நாள் இரவில் கழிவுநீரோடை பாலம் கட்டப்பட்டு உள்ளது இதுவே முதல்முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில் இது சிறிய பாலம் ஆகும். தற்போது இதற்கு ரெடிேமடு பாலங்கள் வந்து விட்டன. வேறு ஒரு இடத்தில் தயார் செய்து அப்படியே பொருத்தி விடலாம். அதே போலத்தான் நேற்று இரவும் அந்த இடத்தில் சிறுபாலம் அமைக்கப்பட்டு உள்ளது என்றனர்.
- குடிபோதையில் படுத்திருந்தவரை தாக்கியதால் பழிக்குப்பழி வாங்கினார்
- தனிப்படை போலீசார் கேரளாவில் தீவிர தேடுதல் வேட்டை
கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை, காந்தி நகரை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கோவையில் தங்கியிருந்து ஆடிஸ் வீதியில் டீக்கடை நடத்தி வந்தார். பகுதிநேரமாக சமையல் காண்டிராக்ட் வேலையையும் எடுத்து செய்து வந்தார்.
நேற்று காலை ராஜேஷ் ஆடிஸ்வீதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடலை ரேஸ்கோர்ஸ் போலீசார் மீட்டு விசாரணை நடத்தி னர். விசாரணையில் ராஜேசை அவரது நண்பரே கொலை செய்துள்ள விவரம் தெரியவந்தது. ராஜேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு சூலூருக்கு சமையல் வேலைக்கு சென்று வந்தார். பின்னர் வேலையாட்களுக்கு சம்பள பணத்தை பிரித்து கொடுத்தார். அதன்பிறகு அவர்கள் ஒன்றாக மதுபானம் அருந்தி உள்ளனர். தொடர்ந்து ராஜேஷ் மட்டும் ஆடிஸ் வீதிக்கு புறப்பட்டு வந்தார்.
அப்போது அங்கு உள்ள பிளாட்பார பெஞ்சில் பென்னி என்பவர் படுத்திருந்தார். அப்போது ராஜேஷ், இது எங்களின் இடம். நீ ஏன் இங்கு வந்து படுத்து இருக்கிறாய் என்று கேட்டு உள்ளார். தொடர்ந்து 2 பேருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் சரமாரியாக தாக்கி உள்ளார்.
இதில் பென்னிக்கு காயம் ஏற்பட்டது. எனவே அவர், உன்னை என்ன செய்கிறேன் பார் என்று எச்சரித்து விட்டு டாஸ்மாக் கடைக்கு சென்று அங்கு மது குடித்து உள்ளார்.
அப்போது அவர் தன்னை தாக்கிய ராஜேஷை கொலை செய்வது என்று முடிவெடுத்தார். இதற்காக ஒரு உருட்டுக்கட்டையை எடுத்துக்கொண்டு மீண்டும் ஆடிஸ் வீதிக்கு புறப்பட்டு வந்தார்.
அங்கு உள்ள பிளாட்பார பெஞ்சில் ராஜேஷ் குடிபோதையில் படுத்திருந்தார். அவரை பென்னி உருட்டு க்கட்டையால் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராஜேஷ் சம்பவ இடத்தில் பலியானார். ராஜேசும்,
அதன்பிறகு பென்னி உருட்டுக்கட்டையை தூர வீசி எறிந்துவிட்டு கோவை ரெயில் நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்து ரெயில் மூலம் கேரளாவுக்கு தப்பி சென்று உள்ளார் என்பது தெரியவந்து உள்ளது.கோவை ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிரா மூலம் பென்னி கேரளாவுக்கு தப்பி செல்வதை போலீசார் உறுதி செய்து உள்ளனர்.
தொடர்ந்து பென்னியின் பின்புலம் குறித்து ஆடிஸ் வீதி பகுதியில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டம், நெல்லிப்பாடா பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
கோவையில் சமையல் தொழிலாளி ராஜேஷ் என்பவரை படுகொலை செய்துவிட்டு, கேரளாவில் பதுங்கி உள்ள பென்னியை கைது செய்வதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இதன்ஒருபகுதியாக தனிப்படை போலீசார் கேரளாவுக்கு சென்று அங்கு முகாமிட்டு கொலையாளிக்கு வலைவிரித்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
- கோவை கமிஷனர் அலுவலகத்தில் புகார்
- திருநங்கைகளை அவமானப்படுத்தும் காட்சிகளை நீக்க வலியுறுத்தல்
கோவை,
கோவை சிவானந்தா காலனியை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஜாஸ்மின் மதியழகன் என்பவர், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்து உள்ள புகார் மனுவில், நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்து, ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் திருநங்கைகளை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்று உள்ளன. இது அவர்களை கேளிக்கை பொருளாகவும், நகைச்சுவைக்காக அவமானப்படுத்துவதாகவும் உள்ளது.
எனவே இந்த படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். இல்லையெனில் திருநங்கைகளை அவமானப்படுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
- கணவருக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தற்கொலை
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை. ஆர்.டி.ஓ விசாரணையும் நடக்கிறது
வடவள்ளி,
கோவை நவாவூர் ஐயப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர்நிர்மல்ராஜ். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நந்தினி (வயது 25) என்பவரை காதல் திரும ணம் செய்து கொண்டார்.
கணவனும் மனைவியும் அங்கு உள்ள சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வந்தனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள் ளன.
இந்த நிலையில் நிர்மல் ராஜ் நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அங்கு துணிமணிகள் இறைந்து கிடந்தன. எனவே அவர் நந்தினியிடம், வீட்டு வேலைகளை ஒழுங்காக செய்யமாட்டாயா என்று கூறி கண்டித்து உள்ளார்.
இதனால் 2 பேருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நிர்மல் ராஜ் வெளியே புறப்பட்டு சென்றார். அப்போது அவரது செல்போனுக்கு நந்தினியிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், நான் உங்களுக்கு கடைசியாக அனுப்பும் மெசேஜ் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
எனவே அதிர்ச்சி அடைந்த நிர்மல்ராஜ் அவசரம்- அவசரமாக வீட்டிற்கு சென்றார். அதற்குள் வீட்டில் நந்தினி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
நந்தினியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
- சுமார் 3 கிலோமீட்டர் தூரம் சூலூர் முக்கிய வீதிகளில் ஊர்வலம் நடத்தப்பட்டது
- 60-க்கும் மேற்பட்ட போலீசார் பேரணியாக கலந்து கொண்டனர்
சூலூர்,
சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் நாளை நொய்யல் ஆற்றில் மற்றும் அருகில் உள்ள குளங்களில் கரைக்கப்பட உள்ளது.
இதையொட்டி சூலூர், சுல்தான்பேட்டை போலீசார் சூலூர், கண்ணம்பாளையம், பள்ளபாளையம், பீடம் பள்ளி காங்கேயம் பாளை யம், காடம்பாடி, அப்பநாய க்கன்பட்டி, பாப்பம்பட்டி, சுல்தான்பேட்டை, செஞ்சே ரிமலை, ஜல்லிப்பட்டி, செஞ்சேரி புத்தூர், ஜெ.கிருஷ்ணாபுரம், குமாரபாளையம் உள்ளிட்ட விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தினர்.
மேலும் நேற்று மாலை சூலூர் போலீசார் ஆயுதப்படை மற்றும் சிறப்பு ஆயுதப்படைகாவலர்களுடன் சூலூர் சுற்றுவட்டார பகுதி யில் அணிவகுப்பு ஊர்வலங்களை நடத்தினர். இதன்மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த முடியும் என சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் தெரிவித்தார்.
இந்த அணி வகுப்பு ஊர்வலத்தில் 60-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சூலூர் முக்கிய வீதிகளில் இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது.
- கண் இமைக்கும் நேரத்தில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.
- காட்டூர் போலீசார் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
கோவை,
கோவை காந்திபுரம், ஆர்.வி.ரவுண்டானா அருகே, நேற்று மாலை ஒரு வாலிபர் அங்கு உள்ள மின் கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், கீழே இறங்கும்படி வற்புறுத்தினர். ஆனாலும் அவர் கீழே இறங்கவில்லை.
ஒருகட்டத்தில் அவர் திடீரென மேலே தொங்கிய மின்ஒயரை தொட்டார். இதில் கண் இமைக்கும் நேரத்தில் வாலிபரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் சம்பவ சம்பவ இடத்திலேயே அவர் உடல் கருகி பரிதாபமாக பலியானார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் மின்வாரிய அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர் .
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காட்டூர் போலீசார் வாலிபரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ஆதார் கார்டை சோதனை செய்த போது, மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்டவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பைனா மஜ்கி (வயது48) என்பது தெரியவந்தது. இதனையடுத்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்,
கோவையில் எங்கு தங்கியிருந்து வேலை பார்த்தார்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த நபரின் முகவரியை தொடர்பு கொண்டு உறவினர்களுக்கு தெரியப்படுத்தும் முயற்சியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
- பொதிந்து கொடுத்த பேப்பரில் வெறும் கற்கள் மட்டுே இருந்தது அம்பவம்
- பொள்ளாச்சி கிழக்கு போலீசில் மூதாட்டி புகார்
கோவை,
கோவ மாவட்டம் பொள் ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்த வர் சந்திரன். இவரது மனைவி ராஜம்மாள் (வயது 65). இவர் கடந்த 2 மாதங்களாக சிங்காநல்லூரில் உள்ள மகள் வீட்டில் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று ராஜம்மாள் பொள்ளாச்சியில் உள்ள மகன் வீட்டிற்கு செல்வதற்காக பஸ்சில் பொள்ளாச்சிக்கு சென்றார். பழைய பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த போது 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் ராஜம்மாளின் அருகே வந்து இவ்வளவு நகைகளை அணிந்து உள்ளீர்கள். இது பாதுகாப்பானது இல்லை. எனவே நகைகளை கழற்றி கைப்பையில் வையுங்கள் என்று கூறினர்.
இதனையடுத்து மூதாட்டி தான் அணிந்து இருந்த 5 பவுன் செயின், 3 பவுன் வளையல் ஆகியவற்றை கழற்றி வாலிபர்களிடம் கொடுத்தார். அப்போது அந்த வாலிபர்கள் நகைகளை பேப்பரில் சுற்றி கொடுத்தனர். வீட்டிற்கு செல்லும் வழியில் ராஜம்மாள் பேப்பரை திறந்து பார்த்தபோது அதில் நகைகள் இல்லை. கற்கள் மட்டுமே இருந்தது. அந்த வாலிபர்கள் உதவி செய்வது போல நடித்து மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி 8 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து ராஜம்மாள் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியின் கவனத்தை திசைதிருப்பி 8 பவுன் நகைகளை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.
- நாளை முதல் நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க ஏற்பாடு
- ஆற்றுப்பகுதியில் தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை போலீசார் செய்து வருகின்றனர்
கோவை,
விநாயகர் சதுர்த்தியை யொட்டி கோவை மாநகரில் 676 சிலைகள், புறநகரில் 1,611 சிலைகள் என மாவட்டத்தில் மொத்தமாக 2,287 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனை யொட்டி மாநகரில் 2,500 போலீசார், புறநகரில் 2 ஆயிரம் போலீசார் என மொத்தம் 4,500 போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீசார் விடிய, விடிய ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சிலைகள் முன்பு தலா ஒரு போலீசார் நிறுத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
கோவை நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் நாளை (புதன்கிழமை) மற்றும் 22-ந் தேதி ஆகிய நாட்களில் நடந்கிறது. கோவை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் சிங்காநல்லூர், குறிச்சி, குனியமுத்தூர், வெள்ளக்கி ணறு, வடவள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள குளங்க ளிaல் கரைக்கப்படுகிறது. 22-ந் தேதி முத்தணங்குளத்தில் சிலைகள் கரைக்கப்படுகிறது. இதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி நாளை (புதன்கிழமை) மாந கரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள் ளது. இது குறித்து மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் இயக்கக்கூடாது. பொள்ளாச்சியிலிருந்து உக்கடம் வரும் கனரக வாகனங்கள் மற்றும் பஸ்கள் ஈச்சனாரி சர்வீஸ்ரோடு வழியாக சென்று ஈச்சனாரியில் யுடர்ன் செய்து செட்டிப்பாளையம் ரோடு வழியாக ஜி.டி டேங்க், ரெயில் கல்யாண மண்டபம் சந்திப்பு, போத்தனூர் கடைவீதி, குறிச்சி பிரிவு, ஆத்துப்பாலம் வழியாக உக்கடம் சென்றடையலாம்.
பொள்ளாச்சி சாலையில் இருந்து உக்கடம் நோக்கி செல்லும் இலகுரக வாக னங்கள் ஈச்சனாரி, தக்காளி மார்க்கெட்டில் வலது புறமாக திரும்பி சாரதா மில் ரோடு ரெயில் கல்யாண மண்டம் சந்திப்பு, போத்தனூர் கடைவீதி, குறிச்சி பிரிவு, ஆத்துப்பாலம் வழியாக உக்கடம் செல்லலாம்.
உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் பஸ்கள் ஆத்துப்பாலம், குறிச்சி பிரிவில் இடது புறமாக திரும்பி போத்த னூர் சாலை, போத்தனூர் கடைவீதி, ரெயில் கல்யாண மண்டபம் சந்திப்பு, செட்டி பாளையம் ரோடு, ஈச்சனாரி சென்று பொள்ளாச்சி ரோட்டை வந்தடைந்து செல்ல வேண்டும்.
உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி செல்லும் இலகுரக வாகனங்கள் ஆத்துப்பாலம், குறிச்சி பிரிவு, போத்தனூர் சாலை, போத்தனூர் கடைவீதி, ரெயில் கல்யாண மண்டபம் சந்திப்பில் வலது புறமாக திரும்பி சாரதாமில் ரோடு வழியாக பொள்ளாச்சி ரோட்டை வந்தடைந்து செல்ல வேண்டும்.
உக்கடத்தில் இருந்து குனியமுத்தூர் வழியாக பாலக்காடு நோக்கி செல்லும் கனரக வாக னங்கள் மற்றும் பஸ்கள் அனைத்தும் உக்கடம் பேரூர் பைபாஸ் சாலை வழியாக அசோக் நகர் ரவுண்டானா, பள்ளியின் இடது புறமாக திரும்பி சிவாலயா சந்திப்பு பேரூர், சுண்டக்காமுத்தூர், கோவைப்புதூர் வழியாக பாலக்காடு நோக்கி செல்ல லாம். உக்கடத்திலிருந்து குனிய முத்தூர் வழியாக பாலக் காடு நோக்கி செல்லும் இலகுரக வாகனங்கள் உக்கடம் பேரூர் பைபாஸ் சாலைவழியாக அசோக் நகர் ரவுண்டானாவில் இடது புறம் திரும்பி புட்டு விக்கி ரோடு வழியாக பாலக்காடு நோக்கி செல்லலாம்.
பாலக்காடு சாலையிலி ருந்து உக்கடம் நோக்கி வரும் கனரக வாகனம் மற்றும் பஸ்கள் பாலக்காடு ரோடு, கோவைப்புதூர் பிரிவில் இடது புறமாக திரும்பி கோவைப்புதூர் ஆசரமம் பள்ளி, பேரூர், செல்வபுரம் சிவாலயா சந்திப்பு வழியாக செல்வபு ரம் மேல்நிலைப் பள்ளியின் வலது புறமாக திரும்பி அசோக் நகர் ரவுண்டானா வழியாக உக்கடம் வந்தடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
இலகுரக வாகனங்கள் கோவைப்புதூர் பிரிவு, குனியமுத்தூர், கண்ணாம்பு காளவாயில் இடது புறமாக திரும்பி, புட்டுவிக்கி சாலை, அசோக் நகர் ரவுண்டானா வழியாக உக்கடம் வந்தடைந்து செல்லவேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் எங்கள் தலைவர்.
- யார் கூட்டணியில் இருந்தாலும் எப்போதும் எங்களது தன்மானத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம்.
கோவை:
கோவை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் இன்று பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் எங்கள் தலைவர். அவர் என்ன சொல்கிறாரோ அதனை தான் நாங்கள் செய்வோம்.
யார் கூட்டணியில் இருந்தாலும் எப்போதும் எங்களது தன்மானத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம்.
பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி பேசினார். தற்போது அண்ணா பற்றி பேசி உள்ளார். அவர்களை பற்றி பேசுவதற்கு அவருக்கு என்ன தகுதி உள்ளது. அண்ணாமலை பக்குவமில்லாமல் பேசி வருகிறார். அண்ணாமலை கூறியது போல் அண்ணா யாரிடமும் சென்று மன்னிப்பு கேட்கவில்லை. அவர் அண்ணா பற்றி பேசியது ஏற்புடையதல்ல. வரலாற்றை மறைத்து உண்மைக்கு புறம்பாக பேசி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.
- போலீசார் இவர்கள் 5 பேரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
கோவை:
கோவை சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் சிலர் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு கஞ்சாவை பதுக்கி விற்ற காளப்பட்டி ரைஸ்மில் ரோட்டை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் ஜனார்த்த னன் (வயது21), மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சபரீஷ் (19), கோவில்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்த லோகேஷ்வரி (23), சரவணம்பட்டி ஜனதா நகரை சேர்ந்த ஆசினா (21), கோவில்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சந்தியா (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலீசார் இவர்கள் 5 பேரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
கல்லூரி மாணவியான சந்தியா தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கஞ்சா விற்பனை செய்வதற்காக தனியாக லிங்கை உருவாக்கி உள்ளார். இதன் மூலம் அவர் கஞ்சா கிடைக்கும் இடம், நேரம் உள்ளிட்ட தகவல்களை கல்லூரி மாணவர்கள் மற்றம் இளைஞர்களுக்கு அனுப்பி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாணவியை 100-க்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் கைது செய்யப்பட்ட லோகேஸ்வரி, ஆசினா ஆகியோர் பட்டப்படிப்பை படித்து முடித்து உள்ளனர்.
இவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து உள்ளனர்.
கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவி உள்பட 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1.2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.






