search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சியில் மூதாட்டிக்கு உதவுவது போல் நடித்து 8 பவுன் நகைகளை பறித்த வாலிபர்கள்
    X

    பொள்ளாச்சியில் மூதாட்டிக்கு உதவுவது போல் நடித்து 8 பவுன் நகைகளை பறித்த வாலிபர்கள்

    • பொதிந்து கொடுத்த பேப்பரில் வெறும் கற்கள் மட்டுே இருந்தது அம்பவம்
    • பொள்ளாச்சி கிழக்கு போலீசில் மூதாட்டி புகார்

    கோவை,

    கோவ மாவட்டம் பொள் ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்த வர் சந்திரன். இவரது மனைவி ராஜம்மாள் (வயது 65). இவர் கடந்த 2 மாதங்களாக சிங்காநல்லூரில் உள்ள மகள் வீட்டில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று ராஜம்மாள் பொள்ளாச்சியில் உள்ள மகன் வீட்டிற்கு செல்வதற்காக பஸ்சில் பொள்ளாச்சிக்கு சென்றார். பழைய பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த போது 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் ராஜம்மாளின் அருகே வந்து இவ்வளவு நகைகளை அணிந்து உள்ளீர்கள். இது பாதுகாப்பானது இல்லை. எனவே நகைகளை கழற்றி கைப்பையில் வையுங்கள் என்று கூறினர்.

    இதனையடுத்து மூதாட்டி தான் அணிந்து இருந்த 5 பவுன் செயின், 3 பவுன் வளையல் ஆகியவற்றை கழற்றி வாலிபர்களிடம் கொடுத்தார். அப்போது அந்த வாலிபர்கள் நகைகளை பேப்பரில் சுற்றி கொடுத்தனர். வீட்டிற்கு செல்லும் வழியில் ராஜம்மாள் பேப்பரை திறந்து பார்த்தபோது அதில் நகைகள் இல்லை. கற்கள் மட்டுமே இருந்தது. அந்த வாலிபர்கள் உதவி செய்வது போல நடித்து மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி 8 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து ராஜம்மாள் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியின் கவனத்தை திசைதிருப்பி 8 பவுன் நகைகளை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×