என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் தயாரிப்பில் டாக்டர் பிரகபல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மட்டி படத்தின் முன்னோட்டம்.
    பிரமாண்ட அளவில் ஆறு மொழிப் படமாக உருவாகியிருக்கும் படம் 'மட்டி' (Muddy). இந்தியாவின் முதன்முதலாக கரடுமுரடான மண் சாலைப் பந்தயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் டாக்டர் பிரகபல் இயக்கி உள்ளார். பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் இப்படத்தைத்  தயாரித்துள்ளது. குடும்பம், பகை, பழிவாங்கல், ஆக்ஷன், திகில் என்று பல  வண்ணங்களில் இப்படக்கதை சுற்றிச் சுழலும்.

    'கே ஜி.எப்' படத்திற்கு இசை அமைத்த ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கே.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'ராட்சசன்' படப்புகழ் சான் லோகேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார். 'புலி முருகன்' புகழ் ஆர்.பி.பாலா  இப்படத்திற்குத் தமிழில் வசனம் எழுதி இருக்கிறார்.

    மட்டி படத்தின் போஸ்டர்

    யுவன் கிருஷ்ணா, ரிதன், அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர பல படங்களில் அறிமுகமான முகங்களும் இப்படத்தில் பங்கேற்றுள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஆறு மொழிகளில் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
    மதுராந்தகம் அருகே பெரும்பாக்கத்தில் உள்ள கிளி ஆற்றில் துணி துவைத்து குளிக்க சென்ற மூதாட்டி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.
    மதுராந்தகம்:

    தொடர் மழை காரணமாக மதுராந்தகம் ஏரி நிரம்பி வழிகிறது. ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் கிளியாற்றில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் இன்று காலை நிலவரப்படி 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகிறது.

    இந்தநிலையில் கிளி ஆற்று வெள்ளத்தில் மூதாட்டி அடித்துச் செல்லப்பட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மதுராந்தகம் அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 85). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இதையடுத்து வள்ளியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்தநிலையில் இன்று காலை வள்ளியம்மாள் பெரும்பாக்கத்தில் உள்ள கிளி ஆற்றில் துணி துவைத்து குளிக்க சென்றார். ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் தண்ணீரில் அவர் இழுத்து செல்லப்பட்டார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்க முயன்றனர். இதற்குள் வள்ளியம்மாள் தண்ணீரில் மூழ்கினார். சுமார் 100 மீட்டர் தூரத்தில் வள்ளியம்மாளை கிராம மக்கள் மீட்டனர்.

    அப்போது அவர் இறந்திருப்பது தெரிந்தது. இது குறித்து மதுராந்தகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், பலியான வள்ளியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    பள்ளியில் இருந்து மாலையில் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு முட்டை பேன் கேக் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 2
    கேரட் - 1
    வெங்காயம் - 1
    முட்டை - 3
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
    கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    மிளகு தூள் - அரை டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை

    உருளைக்கிழங்கு, கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் துருகிய உருளைக்கிழங்கு, கேரட்டை போட்டு வதக்கவும்.

    உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும் உப்பு, மிளகாய் தூள், கரம்மசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் பச்சை வாசனை போகும் வரை வதக்கி ஆற விடவும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு, மிளகு தூள், கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அடுத்து அதில் உருளைக்கிழங்கு மசாலாவை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி கலவையை சற்று தடிமனாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு முட்டை பேன் கேக் ரெடி.

    மத்திய அரசின் 2021-ம் ஆண்டிற்கான தென்னிந்தியாவில் தூய்மையான நகரம் தரவரிசைப் பட்டியலில் 25 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட 671 நகரங்களில் கருங்குழி பேரூராட்சி 25-வது இடத்தினை பெற்றுள்ளது.
    மதுராந்தகம்:

    மதுராந்தகம் தாலுகாவிற்கு உட்பட்டது கருங்குழி பேரூராட்சி.

    மத்திய அரசின் 2021-ம் ஆண்டிற்கான தென்னிந்தியாவில் தூய்மையான நகரம் தரவரிசைப் பட்டியலில் 25 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட 671 நகரங்களில் கருங்குழி பேரூராட்சி 25-வது இடத்தினை பெற்றுள்ளது.

    தமிழ்நாடு அளவில் உள்ள 468 நகரங்களில் 7-வது இடத்தையும், செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் இடத்தையும் கருங்குழி பேரூராட்சி பிடித்து இருக்கிறது. இதுகுறித்து கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் கூறும் போது, “தூய்மையான நகரத்தை நோக்கிய பயணத்தில் தென்னிந்திய அளவில் 2018-ம் ஆண்டு 750-வது இடத்தையும், 2019-ம் ஆண்டு 216-வது இடத்தையும், 2020-ம் ஆண்டு 81 இடத்தையும் பெற்று ஒவ்வொரு ஆண்டும் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

    இந்த நிலை உயரக் காரணமாக இருந்த பொதுமக்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கிறேன்” என்றார்.
    ஒத்தக்கடை அருகே பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவி மீது கார் மோதிய விபத்தில் அவர் பலியானார். 2 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலூர்:

    மதுரை கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிகுமார். இவரது மகள் தாரணி. இவர் ஒத்தக்கடை அருகே நெல்லியேந்தல்பட்டியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று கல்லூரி முடித்து விட்டு பஸ் ஏறுவதற்காக கல்லூரி முன்புள்ள 4 வழிச்சாலை பஸ் நிறுத்தத்தில் தாரணி நின்று கொண்டிருந்தார்.

    அப்போது பாண்டிச்சேரியில் இருந்து திருச்செந்தூர் நோக்கிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணவி தாரணி மற்றும் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த மாணவி செல்லூர் சுயராஜ்யபுரத்தைச் சேர்ந்த லாவண்யா, கப்பலூரைச் சேர்ந்த மாணவர் நிதிஷ் குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த தாரணி இன்று காலை பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து தொடர்பாக ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் வழக்குப்பதிவு செய்து காரில் வந்த பாண்டிச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரை கைது செய்துள்ளார்.

    மேல்மருவத்தூர் அருகே ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு கிலோ சிக்கன் பிரியாணி வழங்குவதாக கூறியதால் அந்த கடைக்கு பிரியாணி வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரை அடுத்த சோத்துப்பாக்கத்தில் பிரியாணி கடை நடத்தி வருபவர் ஞானவேல். மழை காரணமாக தக்காளி விலை உயர்ந்ததையடுத்து பண்டமாற்று முறையில் ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு கிலோ சிக்கன் பிரியாணி வழங்குவதாக நூதன அறிவிப்பை வெளியிட்டார்.

    மேலும் 2 கிலோ சிக்கன் பிரியாணி வாங்கினால் ½ கிலோ தக்காளி இலவசமாக கொடுப்பதாக அறிவித்தார். இதையடுத்து அவரது கடைக்கு பிரியாணி வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
    சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும் என அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
    லக்னோ:

    உத்தரப் பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.க., காங்.,உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.

    இந்தநிலையில்,  சமாஜ்வாடி கட்சி (எஸ்.பி.) தலைவர் அகிலேஷ் யாதவ் டுவிட்டர் பதிவில் கூறியதாவது: 

    2022 உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும். 

    விவசாயிகள் போராட்டம்

    "ஒரு விவசாயியின் வாழ்க்கை விலைமதிப்பற்றது, ஏனென்றால் அவர் மற்றவர்களுக்காக  உணவு தானியங்களை பயிரிடுகின்றனர்," என பதிவிட்டுள்ளார்.

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள்  சங்கத்திற்கு  சமாஜ்வாடி கட்சி ஆதரவு அளித்தது.

    3 புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது. 


    மறைமலைநகர் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் உள்ள ரெயில் நகர் பகுதியில் உள்ள மறைவான இடத்தில் ஒரு சில நபர்கள் கஞ்சா வைத்திருப்பதாக மறைமலை நகர் போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மறைமலைநகர் போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு மறைமலைநகர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 29), என்பவர் கையில் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ரஞ்சித்தை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    கோவில்பட்டியில் இன்று கோவில் உண்டியலை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வடக்குதிட்டங்குளம் பகுதியில் அம்மன்கோவில் உள்ளது. அந்த கோவிலில் அம்மன் மட்டுமின்றி கருப்பசாமி, விநாயகருக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் செவ்வாய் கிழமையான இன்று வழக்கம் போல பூஜை நடத்துவதற்கு பூசாரி சென்றுள்ளார். அப்போது அம்மன் கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்து பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது 2 அம்மன் சிலை கழுத்தில் கிடந்த தாலிகள் கொள்ளை போயிருந்தது. மேலும் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியலை மர்மநபர்கள் உடைத்து அதிலிருந்த பணத்தை எடுத்து சென்றிருப்பதும் தெரியவந்தது.

    இது தொடர்பாக அவர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுஜித்ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை பார்வையிட்டு கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் 56 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 56 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 73 ஆயிரத்து 247- ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 25 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 2,529 பேர் உயிரிழந்துள்ளனர். 693 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 14 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்து 425- ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 73 ஆயிரத்து 945 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1.262 பேர் உயிரிழந்துள்ளனர். 218 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    இந்திய எல்லையில் பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தி நாட்டிற்கு பெருமை சேர்த்த அப்போதைய விங் கமாண்டர் அபிநந்தனுக்கு இன்று ‘வீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டது.
    டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று பாதுகாப்பு துறை சார்ந்த விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள், உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் வீரதீர செயல்களில் ஈடுபட்ட வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விமானப்படை விங் கமாண்டர்  (தற்போது குரூப் கேப்டன்) அபிநந்தனுக்கு நாட்டின் மூன்றாவது உயரிய விருதான வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.

    இந்த விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தி வீர தீர செயல் புரிந்தததற்காக அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் வீர் சக்ரா விருது பெற்ற அபிநந்தனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    'என் வயிறு புலி தங்கியிருந்த குகை. என் மகன் போர்க்களத்தில்தான் இருப்பான்’ என்று புறநானூறு பாடிய தமிழ் மண்ணின் வீரம் செறிந்த மகனாகச் செருக்களம் சந்தித்துத் தாயகம் காத்த அபிநந்தன் வர்த்தமான் அவர்கள் வீர் சக்ரா விருது பெற்றதற்குப் பெருமகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
    நீர்வரத்து கால்வாய் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள 9 வீடுகளுக்கு உடனடியாக நோட்டீஸ் வழங்கி அந்த ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதற்கு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மீனாட்சி நகர் வழியாக கூடுவாஞ்சேரி ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து அங்குள்ள தனியார் பள்ளி ஒன்று சுற்றுச்சுவர் மற்றும் சில கட்டிடங்களை கட்டி இருந்தது. இதனால் மழைக்காலங்களில் மீனாட்சி நகர் பகுதி மக்கள் மழை பாதிப்புகளால் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

    இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த புகாரின் பேரில் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் தாம்பரம் வருவாய் ஆர்.டி.ஓ. அறிவுடைநம்பி, வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் சென்று கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த பள்ளி சுற்றுச்சுவர் மற்றும் சில கட்டிடங்களை இடித்து அகற்றினார்கள்.

    இதையடுத்து அகற்றப்பட்ட இடத்தில் கால்வாய் அமைக்கும் பணியும் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் நேற்று கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றபட்ட இடத்தை ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா நேரில் சென்று ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார். மேலும் இதே நீர்வரத்து கால்வாய் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள 9 வீடுகளுக்கு உடனடியாக நோட்டீஸ் வழங்கி அந்த ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதற்கு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
    ×