search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்காளி
    X
    தக்காளி

    ஒரு கிலோ தக்காளிக்கு ஒரு கிலோ பிரியாணி - நூதன அறிவிப்பால் பொதுமக்கள் குவிந்தனர்

    மேல்மருவத்தூர் அருகே ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு கிலோ சிக்கன் பிரியாணி வழங்குவதாக கூறியதால் அந்த கடைக்கு பிரியாணி வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரை அடுத்த சோத்துப்பாக்கத்தில் பிரியாணி கடை நடத்தி வருபவர் ஞானவேல். மழை காரணமாக தக்காளி விலை உயர்ந்ததையடுத்து பண்டமாற்று முறையில் ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு கிலோ சிக்கன் பிரியாணி வழங்குவதாக நூதன அறிவிப்பை வெளியிட்டார்.

    மேலும் 2 கிலோ சிக்கன் பிரியாணி வாங்கினால் ½ கிலோ தக்காளி இலவசமாக கொடுப்பதாக அறிவித்தார். இதையடுத்து அவரது கடைக்கு பிரியாணி வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
    Next Story
    ×