என் மலர்
செய்திகள்

கருங்குழி
செங்கல்பட்டு மாவட்டத்தில் தூய்மை நகரம் பட்டியலில் கருங்குழி பேரூராட்சி முதலிடம்
மத்திய அரசின் 2021-ம் ஆண்டிற்கான தென்னிந்தியாவில் தூய்மையான நகரம் தரவரிசைப் பட்டியலில் 25 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட 671 நகரங்களில் கருங்குழி பேரூராட்சி 25-வது இடத்தினை பெற்றுள்ளது.
மதுராந்தகம்:
மதுராந்தகம் தாலுகாவிற்கு உட்பட்டது கருங்குழி பேரூராட்சி.
மத்திய அரசின் 2021-ம் ஆண்டிற்கான தென்னிந்தியாவில் தூய்மையான நகரம் தரவரிசைப் பட்டியலில் 25 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட 671 நகரங்களில் கருங்குழி பேரூராட்சி 25-வது இடத்தினை பெற்றுள்ளது.
தமிழ்நாடு அளவில் உள்ள 468 நகரங்களில் 7-வது இடத்தையும், செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் இடத்தையும் கருங்குழி பேரூராட்சி பிடித்து இருக்கிறது. இதுகுறித்து கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் கூறும் போது, “தூய்மையான நகரத்தை நோக்கிய பயணத்தில் தென்னிந்திய அளவில் 2018-ம் ஆண்டு 750-வது இடத்தையும், 2019-ம் ஆண்டு 216-வது இடத்தையும், 2020-ம் ஆண்டு 81 இடத்தையும் பெற்று ஒவ்வொரு ஆண்டும் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலை உயரக் காரணமாக இருந்த பொதுமக்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கிறேன்” என்றார்.
மதுராந்தகம் தாலுகாவிற்கு உட்பட்டது கருங்குழி பேரூராட்சி.
மத்திய அரசின் 2021-ம் ஆண்டிற்கான தென்னிந்தியாவில் தூய்மையான நகரம் தரவரிசைப் பட்டியலில் 25 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட 671 நகரங்களில் கருங்குழி பேரூராட்சி 25-வது இடத்தினை பெற்றுள்ளது.
தமிழ்நாடு அளவில் உள்ள 468 நகரங்களில் 7-வது இடத்தையும், செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் இடத்தையும் கருங்குழி பேரூராட்சி பிடித்து இருக்கிறது. இதுகுறித்து கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் கூறும் போது, “தூய்மையான நகரத்தை நோக்கிய பயணத்தில் தென்னிந்திய அளவில் 2018-ம் ஆண்டு 750-வது இடத்தையும், 2019-ம் ஆண்டு 216-வது இடத்தையும், 2020-ம் ஆண்டு 81 இடத்தையும் பெற்று ஒவ்வொரு ஆண்டும் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலை உயரக் காரணமாக இருந்த பொதுமக்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கிறேன்” என்றார்.
Next Story






