search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Abinandhan"

    இந்திய எல்லையில் பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தி நாட்டிற்கு பெருமை சேர்த்த அப்போதைய விங் கமாண்டர் அபிநந்தனுக்கு இன்று ‘வீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டது.
    டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று பாதுகாப்பு துறை சார்ந்த விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள், உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் வீரதீர செயல்களில் ஈடுபட்ட வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விமானப்படை விங் கமாண்டர்  (தற்போது குரூப் கேப்டன்) அபிநந்தனுக்கு நாட்டின் மூன்றாவது உயரிய விருதான வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.

    இந்த விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தி வீர தீர செயல் புரிந்தததற்காக அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் வீர் சக்ரா விருது பெற்ற அபிநந்தனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    'என் வயிறு புலி தங்கியிருந்த குகை. என் மகன் போர்க்களத்தில்தான் இருப்பான்’ என்று புறநானூறு பாடிய தமிழ் மண்ணின் வீரம் செறிந்த மகனாகச் செருக்களம் சந்தித்துத் தாயகம் காத்த அபிநந்தன் வர்த்தமான் அவர்கள் வீர் சக்ரா விருது பெற்றதற்குப் பெருமகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
    பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தி வீர தீர செயல் புரிந்ததற்காக அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று பாதுகாப்பு துறை சார்ந்த விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட தலைவர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் வீரதீர செயல்களில் ஈடுபட்ட வீரர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விமானப்படை குரூப் கேப்டன் கமாண்டர் அபிநந்தனுக்கு நாட்டின் மூன்றாவது உயரிய விருதான வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.

    இந்த விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தி வீர தீர செயல் புரிந்தததற்காக அபிநத்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 2019-ம் ஆண்டு ஸ்ரீநகரில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் அப்போது இந்திய போர் விமானியாக இருந்த அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கிக் கொண்டார்.  பின்னர், இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தைக்கு பிறகு, அபிநந்தன் விடுவிக்கப்பட்டார். அபிநந்தனின் வீரம் மற்றும் துணிச்சலுக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்தது.



    தாம்பரத்தில் உள்ள அபினந்தன் பெற்றோருக்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். #Abinandhan #Premalatha #TamilisaiSoundararajan
    தாம்பரம்:

    தாம்பரம் மாடம்பாக்கத்தை சேர்ந்த விமானப்படை விமானி அபினந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி உள்ளார். அவரை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

    தாம்பரத்தில் உள்ள அபினந்தன் வீட்டில் அவரது தந்தை வரதமான், தாயார் டாக்டர் ஷோபா ஆகியோர் வசித்து வருகிறார்கள். வரதமான் ஓய்வு பெற்ற விமானப்படை ஏர்மார்‌ஷல் ஆவார்.

    அபினந்தன் பெற்றோருக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், அதிகாரிகளும் நேரில் சென்று ஆறுதல் கூறி வருகிறார்கள்.



    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. ராமச்சந்திரன், போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோர் நேற்று அபினந்தன் வீட்டுக்கு சென்றனர். அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்கள்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று அபினந்தனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் இன்று அபினந்தன் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்கள்.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சார்பில் அபினந்தனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினேன். அவர்கள் 1942-ம் ஆண்டு முதல் 3 தலைமுறையாக விமானப்படை பிரிவில் நாட்டுக்காக சேவை செய்து வருவதை அறிந்து பெருமைப்படுகிறேன்.

    தங்கள் மகன் பாகிஸ்தானில் பிடிபட்டுள்ள நேரத்தில் இந்திய மக்கள் அனைவரும் மொழி, மதம் கடந்து அபினந்தன் பத்திரமாக நாடு திரும்ப பிரார்த்திப்பதை அறிந்து நெகிழ்ச்சி அடைவதாக கூறினார்கள். இந்தியர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.

    அதேநேரத்தில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு தக்க நேரத்தில் பதிலடி கொடுத்த மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் தே.மு.தி.க. சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அபினந்தன் பத்திரமாக நாடு திரும்ப தே.மு.தி.க. சார்பில் பிரார்த்திக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தி.மு.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு இன்று அபினந்தன் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜா சென்றிருந்தார். ஆறுதல் தெரிவித்துவிட்டு வந்த டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. சார்பிலும் மு.க.ஸ்டாலின் சார்பிலும் அபினந்தன் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினேன். அபினந்தன் வீரதீர செயல் மூலம் தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். அவர் ஜெனிவா ஒப்பந்தம் 13-வது பிரிவின்படி துன்புறுத்தாமல் நடத்தப்பட வேண்டும். அவரது குடும்பத்தினர் தைரியமாக உள்ளனர். அவர்கள் தான் நமக்கு தைரியம் சொல்கிறார்கள். அபினந்தன் விரைவில் நாடு திரும்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Abinandhan #Premalatha #TamilisaiSoundararajan 



    ×