என் மலர்
மேற்கு வங்காளம்
- மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் இருப்பவர்களைக் கூட விசாரணைக்கு நேரில் வருமாறு அழைக்கிறார்கள்.
- பாஜக என்னதான் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு வேண்டிய பலன் கிடைக்காது.
இந்தியத் தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் மொபைல் செயலிகள், பாஜகவின் தகவல் தொழில்நுட்ப (ஐடி) பிரிவால் உருவாக்கப்பட்டவை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.
மேற்கு வங்கத்தின் கங்காசாகரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, "தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காகப் பயன்படுத்தும் செயலிகள் பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவால் உருவாக்கப்பட்டவை.
தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயலிகள் அரசமைப்புச் சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானவை.
இவை முழுக்க முழுக்க பாஜகவின் ஐடி செல் கண்காணிப்பில் இயங்குகின்றன. தேர்தல் ஆணையம் அனைத்தையும் தவறாகச் செய்கிறது. உயிருடன் இருப்பவர்களை இறந்தவர்களாகப் பட்டியலிடுகிறார்கள்.
மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் இருப்பவர்களைக் கூட விசாரணைக்கு நேரில் வருமாறு அழைக்கிறார்கள்.
பாஜக என்னதான் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு வேண்டிய பலன் கிடைக்காது. மக்களின் குரலாக நான் நீதிமன்றம் செல்வேன்" என்று தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- SIR தொடங்கியதிலிருந்து, அச்சத்தின் காரணமாகப் பலர் உயிரிழந்துள்ளனர்.
- மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மார்ச்- ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்டது. இதற்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகிறார்.
SIR அச்சம், துன்புறுத்தல் மற்றும் நிர்வாகத் தன்னிச்சையான செயல்களைத் தூண்டிவிட்டு, உயிரிழப்புகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு வழிவகுத்துள்ளதாக குற்றசாட்டும் மம்தா பானர்ஜி, இதை எதிர்த்து நீதிமன்றத்தில் செல்வேன் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-
மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கும், ஏராளமான மக்கள் SIR காரணமாக உயிரிழந்துள்ளதற்கு எதிராக நாளை நாங்கள் நீதிமன்றத்தில் முறையிட இருக்கிறோம். அனுமதித்தால், உச்சநீதிமன்றத்திற்கும் சென்று, இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு எதிராக ஒரு சாதாரண குடிமகனாக நான் முறையிடுகிறேன். நான் வழக்கறிஞராகவும் பயிற்சி பெற்றுள்ளேன்.
தங்கள் வயதான பெற்றோரை அடையாளத்தை நிரூபிப்பதற்காக வரிசையில் நிற்க வைத்தால், பாஜக தலைவர்கள் எப்படி உணர்வார்கள்?. SIR தொடங்கியதிலிருந்து, அச்சத்தின் காரணமாகப் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
என்னை கொல்லும்படி நான் அவர்களுக்கு சவால் விடுகிறேன், ஆனால் நான் என் தாய்மொழியில் பேசுவதை நிறுத்த மாட்டேன்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
- வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதற்கு முதல் மந்திரி மம்தா கண்டனம் தெரிவித்தார்.
- தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் ஒன்று அனுப்பினார்.
கொல்கத்தா:
மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. திருத்தப் பணிகள் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன.
இதற்கிடையே, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதற்கு மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், மாநிலத்தில் நடந்து வரும் எஸ்.ஐ.ஆர். பணிகளை நிறுத்தவேண்டும். பெருமளவிலான மக்களின் வாக்குரிமையை இழக்கச் செய்கிறது. இது நாட்டின் ஜனநாயக அடித்தளத்திற்கு சரிசெய்ய முடியாத பெரும் சேதத்தை ஏற்படுத்தும். எஸ்.ஐ.ஆர். பணிகளில் சமரசம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் அடிப்படை அரசியலமைப்பை தாக்குகிறது என தெரிவித்துள்ளார்.
- 2009 மற்றும் 2019 ஆகிய இரண்டு முறை காங்கிரஸ் சார்பில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
- தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் மவுசம் நூர், இன்று மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இவருடைய மாநிலங்களை எம்.பி. பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைய இருக்கிறது. விரைவில் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
2009 மற்றும் 2019 ஆகிய இரண்டு முறை மால்டா தக்ஷின் தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் ஜெய்ராம் ரமேஷ், மேற்கு வங்க மாநிலத்திற்கான காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் அகமது மிர், மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார்.
கட்சியில் இணைந்த மவுசம் நூர் "மேற்கு வங்கத்திற்கு மாற்றம் தேவை. அது என்னிடம் இருந்து தொடங்கட்டும். எந்தவொரு நிபந்தனையின்றி கட்சியில் இணைந்துள்ளேன். மம்தா பானர்ஜிக்கு என்னுடையா ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளேன். மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய ரெடியாக இருக்கிறேன். திங்கட்கிழமை ஒப்படைப்பேன்" என்றார்.
- ஞானேஷ் குமார் உங்களுக்கு தெரியுமா?. அவர் ஒரு மந்திரவாதி.
- அவரால் உயிரோடு வாழ்பவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து மறைய வைக்க முடியும்.
மேற்கு வங்கத்தில் மார்ச்- ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., அபிஷேக் பானர்ஜி பெங்கால் மீண்டும் வெற்றி பெறும் என்ற பெயரில் 19 நாட்கள் மாநிலம் தழுவிய பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த 19 நாட்களில் 26 இடங்களில் நடைபெறும் பேரணியில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இன்று அவரது 2-வது பேரணி அலிபுர்துவாரில் நடைபெற்றது. இது பாஜக ஆதிக்கம் செலுத்தும் பகுதியாகும்.
பேரணியின் கலந்து கொண்டு அபிஷேக் பானர்ஜி பேசியதாவது:-
ஞானேஷ் குமார் உங்களுக்கு தெரியுமா?. அவர் ஒரு மந்திரவாதி. அவரால் உயிரோடு வாழ்பவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து மறைய வைக்கவும், இறந்து போனவர்களை நடமாட வைக்கவும் முடியும். அவர் தற்போது Vanish குமார்.
10 வருடத்திற்கு முன்னதாக, கனவுகளை காட்டி மக்களை வரிசையில் காத்திருக்க வைத்தனர். அதில் இருந்து கருப்புப் பணம் அதிகரித்துள்ளது. 10 வருடத்திற்குப் பிறகு, SIR என்ற பெயரில் வரிசையில் காத்திருக்க வைத்துள்ளனர். முன்னதாக, மக்கள் அரசை தேர்வு செய்தனர். தற்போது, அரசு யார் வாக்காளர்கள் என்பதை முடிவு செய்ய விரும்புகின்றனர்.
பாஜக எம்.பி.க்கள் மற்றும் பாம்புகள் ஒன்றுதான். ஒன்றிரண்டு பாம்புகளை உங்களது வீட்டிற்கு பின்னால் விட்டிருந்தாலும், பாம்பு பாம்பாகத்தான் இருக்கும். நீங்கள் கொடுக்கும் பால் மற்றும் பழங்களை சாப்பிடும். பின்னர் அது உங்களையே கடிக்கும். இந்த முறை பாம்புகளுக்கு வாய்ப்பு வழங்காதீர்கள். திரிணாமுல் காங்கிரஸ்க்கு வாய்ப்பு கொடுங்கள். உங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறினால், அடுத்த முறை எங்களை நீக்குங்கள்.
இவ்வாறு அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார்.
- மீன் வளர்ப்புக்காக நீர்நிலைகளை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு.
- போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றியபோது, கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியை போலீசார் கைது செய்தபோது, கும்பல் ஒன்று போலீசார் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 6 போலீசார் காயம் அடைந்தனர்.
வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளி பகுதியைச் சேர்ந்த போயர்மாரி கிராமத்தில், நேற்றிரவு திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி மூசா மொல்லாவை கைது செய்ய போலீசார் சென்றனர். போலீசார் கைது செய்து செய்து முசாவை போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றனர்.
அப்போது, ஒரு கும்பல் திடீரென போலீசார் மீதும், போலீஸ் வாகனம் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 6 போலீசார் காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து கூடுதல் படை வரவழைக்கப்பட்டு, நிர்வாகியை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மீன் வளர்ப்புக்காக அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை வலுக்கட்டாயமாக அபகரித்த குற்றச்சாட்டின் பேரில் போலீசார் மூசா மொல்லாவை கைது செய்துள்ளனர். கும்பல் தாக்குதலை தூண்டியதற்கான பஞ்சாயத்து தலைவர் உள்பட மேலும், இரண்டு திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2024-ம் ஆண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஷாஜகான் வீட்டில் சோதனை மேற்கொள்ள சென்றபோது மர்மக்கும்பல் ஒன்று அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- திரிணாமுல் காங்கிரஸ் 2021-ல் 294 தொகுதிகளில் 213-ல் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
- வரும் தேர்தலில் பாஜக 3-ல் 2 பகுதி இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும் என அமித் ஷா தெரிவித்திருந்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் வருகிற மார்ச்- ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த வாரம் அமித் ஷா மேற்கு வங்கம் சென்றிருந்தார். அப்போது, மேற்கு வங்கத்தில் ஊடுருவல்காரர்களை அடையாளம் மட்டும் காணமாட்டோம். அவர்களை வெளியேற்றுவோம். மேற்கு வங்கத்தில் 3-ல் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யான அபிஷேக் பானர்ஜி கூறியதாவது:-
தேர்தல் ஆணையம் போன்ற சக்திகளுக்கு எதிராக என்னுடைய சண்டை இன்றிலிருந்து தொடங்குகிறது. என்னுடைய வார்த்தைக்கு குறித்து வைத்துக் கொள்ளுங்கள். கடந்த 2021 தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களில் வென்றதோ, அதைவிட தற்போது குறைந்தபட்சம் கூடுதலாக ஒரு இடத்திலாவது வெற்றி பெறும்.
இவ்வாறு அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார்.
2021 தேர்தல் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிட்டு 294 தொகுதிகளில் 213-ல் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
- 2002-ம் ஆண்டிலிருந்து வாக்காளர் பட்டியலில் இருந்துள்ளார். ஆனால் தற்போது பெயர் நீக்கப்பட்டதால், விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டது.
- இதுவரை சுமார் 60 பேர் இதனால் உயிரிழந்துள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து முடிந்துள்ளது. அங்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 58 லட்சம் பேர் வரை நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லாததால் கவலையடைந்த 82 வயது முதியவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
உயிரிழந்தவர் புருலியா மாவட்டத்தைச் சேர்ந்த துர்ஜன் மாஜி ஆவார். இவர் சாந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.
திங்களன்று ஓடும் ரெயிலின் முன்பு குதித்து அவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை. 1943-ல் பிறந்த அவர், 2002-ம் ஆண்டிலிருந்து வாக்காளர் பட்டியலில் இருந்துள்ளார்.
ஆனால் தற்போது பெயர் நீக்கப்பட்டதால், விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டது.
விசாரணைக்குச் செல்ல வாகன வசதி கிடைக்காததாலும், தனது குடியுரிமை மற்றும் வாக்களிக்கும் உரிமை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தாலும் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த SIR நடைமுறை ஏழை மக்களைத் துன்புறுத்துவதாகவும், இதுவரை சுமார் 60 பேர் இதனால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளை நேரடி விசாரணைக்கு அழைக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
- மேற்கு வங்கத்தில் 3-ல் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சி அமைக்கும்- அமித் ஷா.
- மேற்கு வங்க மாநிலத்திற்கு அமித் ஷா சுற்றுலா பயணி போன்று வந்து சென்று கொண்டிருப்பார்.
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த வருடம் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக-வின் மூத்த அமைச்சருமான அமித் ஷா மேற்கு வங்க மாநிலம் சென்றுள்ளார்.
மேற்கு வங்கம் சென்ற அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமித் ஷா "நாங்கள் ஊடுருவல்காரர்களை அடையாளம் மட்டும் காணமாட்டோம். அவர்களை வெளியேற்றுவோம். ஏப்ரல் 15-ந்தேதிக்குப் பிறகு புதிய பாஜக அரசு பெங்காலில் அமையும். மக்கள் இதை முடிவு செய்துவிட்டனர். மேற்கு வங்கத்தில் 3-ல் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சி அமைக்கும்" என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநில கல்வித்துறை அமைச்சருமான பிரத்யா பாசு கூறுகையில் "மேற்கு வங்க மாநிலத்திற்கு அமித் ஷா சுற்றுலா பயணி போன்று வந்து சென்று கொண்டிருப்பார். இதுபோன்ற பயணம் எந்த பயனும் தராது. மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜக-வால் 50 இடங்களை கூட தாண்ட முடியாது, மோசமான தோல்வியை சந்திக்க இருக்கிறது" என்றார்.
- மேற்கு வங்கத்தில் பாஜக-வை ஆட்சிக்கு வர மக்கள் அனுமிக்கக் கூடாது.
- SIR என்ற பெயரில் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பங்குராவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது மம்தா பானர்ஜி பேசியதாவது:-
* ஏ.ஐ. பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணி மேற்கொள்ளப்படுகிறது. இது மிகப்பெரிய மோசடி.
* மேற்கு வங்கத்தில் பாஜக-வை ஆட்சிக்கு வர மக்கள் அனுமிக்கக் கூடாது.
* தேர்தல் வரும் நிலையில் சோனார் பங்க்ளா (Sonar Bangla) வாக்குறுதியை கொடுத்தார்கள். ஆனால், பெங்காலி பேசும் மக்கள் மற்ற மாநிலங்களில் தாக்கப்படுகிறார்கள்.
* வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது மேற்கு வங்கத்தில் சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
* SIR என்ற பெயரில் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
- வாக்காளர் பட்டியலில் சந்தேகம் உள்ளவர்களை நேரில் வந்து ஆவணங்களை வழங்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.
- முகாம்களுக்கு முதியோர்கள் வர சிரமமாக இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு.
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கையை மேற்கொண்டது. அதனடிப்படையில் தற்போது வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் சுமார் 15 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
தற்போது உயிரோடு இருப்பவர்கள் பலரது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளது. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் முகாம்களுக்கு செல்வதுடன் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தேர்தல் ஆணையத்தின் இந்த செயலுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. பார்தா பவ்மிக் கூறியதாவது:-
இது சித்ரவதைக்கு சற்றும் குறைவானது அல்ல. தேர்தல் நேரத்தின்போது வயதானவர்கள் வாக்களிக்க வர முடியாது என்பதால், அதிகாரிகளை வாக்குப்பதிவிற்கான வீடுகளுக்கு அனுப்புகிறது. அதே நடைமுறையை இதற்கு ஏன் பயன்படுத்தவில்லை?.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தொடர்ந்து இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி வருகிறது. ஆனால், வேண்டுமென்றே அவர்கள் இந்த கோரிக்கையை நிராகரிக்கின்றனர்.
இவ்வாறு தெரிவித்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் மூத்த அமைச்சர் சஷி பஞ்சா "வயது மூத்த நபர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுதிறனாளிகள் அவர்களுக்கு வழங்கப்ப்ட நாள், நேரத்தில் முகாமுக்கு செல்ல மிகப்பெரிய கஷ்டத்தை எதிர்கொள்கிறனர். 85 வயது போன்றவர்களை அவர்களுடைய வீட்டில் சந்தித்து ஆவணங்கள் குறித்து விசாரிகக் தேர்தல் ஆணையம் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
- SIR மூலம் 58.20 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
- SIR மேற்கொண்ட மற்ற அனைத்து மாநிலங்களை விட இது மிகவும் குறைவு.
மேற்கு வங்க மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்டது. அதனடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 58.20 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீக்கப்பட்டவர்களில் வங்காளதேசத்தினர், ரோஹிங்கியா மக்கள் எவ்வளவு பேர் என்பதை தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
மேற்கு வங்கத்தின் மக்கள் தொகை 10.05 கோடியாகும். இதில் SIR மூலம் 58.20 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இது மக்கள் தொகையில் வெறும் 5.79 சதவீதம்தான். SIR மேற்கொண்ட மற்ற அனைத்து மாநிலங்களை விட இது மிகவும் குறைந்த சதவீதம். நீக்கப்பட்ட 58.20 லட்சம் வாக்காளர்களில் வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியா மக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.
இவ்வாறு அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.






