என் மலர்
புதுச்சேரி
- கருப்புசாமி மதுரையில் நெல் வியாபாரம் செய்து வருகிறார்.
- யாரோ சொன்னதை கேட்டு புகார் தராமல் வந்தது தவறு என உணர்ந்தனர்.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் சன்னதி எதிரே, சாமி தரிசனம் செய்த பெண்ணிடம், 6 1/2 பவுன் தங்க நகை திருடிய மர்ம நபரை பிடித்து தங்க நகையை மீட்டுத்தருமாறு, பெண்ணின் கணவர், திருநள்ளாறில் போலீசில் புகார் அளித்துள்ளார். மதுரை தூநேரி அழகர் கோவில் மெயின் சாலையைச்சேர்ந்தவர் கருப்புசாமி. இவர் மதுரையில் நெல் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன், கருப்புசாமியை காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரரை தரிசனம் செய்துவந்தால், நேரம் நல்லா இருக்கும் என ஜோதிடர் கூறியதை அடுத்து, கருப்புசாமி, தனது மனைவி உமாதேவியுடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சனீஸ்வரரை, அவரது சன்னதி எதிரே நின்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. சாமி தரிசனம் செய்துவிட்டு கிளம்பும்போது, உமாதேவியின் கழுத்தில் இருந்த ஆறரை பவுன் தங்க நகையை காணவில்லை. கூட்டத்தை விலக்கி பல இடங்களில் தேடியும் நகை கிடைக்கவில்லை. தொடர்ந்து, உமாதேவி திருநள்ளாறு போலீசில் புகார் கொடுக்க கணவரிடம் கூறியுள்ளார். அப்போது அங்கு இருந்த சிலர், உயிருக்கு வந்த ஆபத்து தங்க செயினுடன் போய்விட்டது. சனியும் விலகிவிட்டது. அதனால், புகார் தராமல் வீட்டுக்கு போங்க என கூறியதாக கூறப்படுகிறது. அதனை நம்பி தம்பதியினர் புகார் தராமல் ஊர் திரும்பிவிட்டனர். ஊர் சென்றதும், யாரோ சொன்னதை கேட்டு புகார் தராமல் வந்தது தவறு. புகார் தந்தால்தான் நகை கிடைக்கும் என உமாதேவி கணவரிடம் அடிக்கடி கூறிவந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் காரைக்கால் திருநள்ளாறு வந்த கருப்புசாமி, கடந்த டிசம்பர் மாதம் சனீஸ்வரர் சன்னதி முன்பு நடந்ததை கூறி, கோவில் சி.சி.டி.வி கேமரா பதிவுகளை வைத்து, மர்ம நபரை பிடித்து, தங்க நகையை மீட்டுதருமாறு புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.
- கோபி மகன் சென்னையில் படித்தபோது உடன்படித்த கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
- நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டி மகன், மருமகள் எங்கே உள்ளனர் என்றும் செல்போன் நம்பரை கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை மஞ்சினி நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி என்ற டெல்லி கோபி.
சென்னையில் கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட பா.ஜனதா தலைவராக இருந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களது விவாகரத்து வழக்கு புதுவை கோர்ட்டில் நடந்து வருகிறது. கோபி மகன் சென்னையில் படித்தபோது உடன்படித்த கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இந்த திருமணத்திற்கு பெண்ணின் வீட்டினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் திருமணம் செய்து கொண்ட இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 13-ந்தேதி கோபி விவகாரத்து வழக்கிற்காக புதுவைக்கு வந்தார்.
விசாரணை முடிந்து புதுவை கருவடிக்குப்பம் சிவாஜி சிலை பஸ் நிறுத்தம் அருகே பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு காரில் வந்த கும்பல் வடபழனி போலீசார் எனக்கூறி கோபியை கடத்தி சென்றனர்.
சென்னை கோவளம் முட்டுக்காடு அருகே வந்தபோது காரில் அவரை தாக்கி மகன்-மருமகள் எங்கே? என கேட்டனர். மேலும் மற்றொரு காரில் இருந்து வந்த ஒருவர் துப்பாக்கி முனையில் கோபியை மிரட்டினார். கோபி தொடர்ந்து சத்தம் போட்டதால் கானாத்தூர் பஸ் நிறுத்தம் அருகே கோபியை கீழே இறக்கிவிட்டு சென்றனர்.
இதுகுறித்து கோபி கானாத்தூர் போலீசில் புகார் அளித்தார். சம்பவம் நடந்த இடம் புதுவை என்பதால் அங்கு புகார் அளிக்குமாறு கானாத்தூர் போலீசார் கூறி புகாரை வாங்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை
இதனால், காவல்துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் நிருபர்களிடம் கோபி கூறியதாவது:-
எனது மகனையும், மருமகளையும் ஆணவக் கொலை செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் பெண்ணின் தந்தை, நண்பர் ஆகியோர் கூட்டு சதி செய்து போலீஸ் என கூறி என்னை கடத்தி சென்றனர். நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டி மகன், மருமகள் எங்கே உள்ளனர் என்றும் செல்போன் நம்பரை கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.
கடத்தல் சம்பவம் குறித்து லாஸ்பேட்டை போலீஸ் நிலையம் மற்றும் கவர்னர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக போலீசார் செயல்படு கின்றனர்.
இது தொடர்பாக கோர்ட்டையும் நாட உள்ளேன். கானாத்தூரில் கடத்தல் கும்பல் என்னை விடுவித்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் என்னிடம் இருக்கிறது. எனக்கும் என் குடும்பத்திற்கும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. போலீசார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சுபஸ்ரீ பெருந்தலைவர் காமராஜர் அரசு பொறியல் கல்லூரியில் பி.டெக் இறுதி யாண்டு படித்து வருகிறார்.
- 25-ந் தேதி காலை வழக்கம் போல், கல்லூரிக்கு சென்ற சுபஸ்ரீ, இரவு வரை வீடு திரும்பவில்லை.
காரைக்கால்:
காரைக்கால் சின்னக் கண்ணு செட்டிவீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். சொந்தமாக கடை நடத்தி வரும் இவருக்கு, கவிதா என்ற மனைவியும், பவித்ரா (வயது26), சுபஸ்ரீ (22) என்ற 2 மகள்களும் உள்ளனர். சுபஸ்ரீ காரைக்கால் செருமா விளங்கை பகுதியில் இயங்கி வரும் பெருந்தலைவர் காம ராஜர் அரசு பொறியல் கல்லூரியில் பி.டெக் இறுதி யாண்டு படித்து வருகிறார். வழக்கமாக, காலை கல்லூ ரிக்கு செல்லும் மாணவி, மாலை வீட்டுக்கு திரும்புவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 25-ந் தேதி காலை வழக்கம் போல், கல்லூரிக்கு சென்ற சுபஸ்ரீ, இரவு வரை வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து, தந்தை பல்வேறு இடங்களில் தேடியும், தோழிகள், உறவி னர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை. தொடர்ந்து, மாணவியை கண்டு பிடித்துதருமாறு, தந்தை காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாய மான கல்லூரி மாணவியை தேடிவருகின்றனர்.
- பாதிக்கப்பட்ட எல்லம்மாள் கடந்த 2018-ம் ஆண்டு சென்னை மகளிர் ஆணையத்தில் கல்யாணசுந்தரம் மீது புகார் அளித்துள்ளார்.
- பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக உள்ள கல்யாணசுந்தரம் கடந்த 2012-ம் ஆண்டில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.
புதுச்சேரி:
புதுவை காலாப்பட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம். இவர் கடந்த 2008-ம் ஆண்டு சென்னை ராமாபுரத்தை சேர்ந்த எல்லம்மாள் என்ற பெண்ணை காதலித்து சென்னை வடபழனி முருகன் கோவிலில் திருமணம் செய்துள்ளார்.
திருமணமான சில மாதங்களில் எல்லம்மாளுக்கு பெண் குழந்தை பிறந்து தனது தாய் வீட்டில் இருந்தார். அப்போது, கல்யாணசுந்தரம் வேறொரு பெண்ணை 2-வது திருமணம் செய்துள்ளார்.
நாட்கள் நகர நகர சில ஆண்டுகள் கழித்து இந்த உண்மை எல்லம்மாளுக்கு தெரியவந்தது. இதனால் கோபமடைந்து கல்யாணசுந்தரத்திடம் அவர் கேட்டுள்ளார். அப்போது எல்லம்மாளை கல்யாணசுந்தரம் சமாதானப்படுத்தி புதுவை கோரிமேட்டில் குடி வைத்துள்ளார்.
பின்னர் இருவரும் சிறிது காலம் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். இந்த சூழலில் எல்லம்மாள் 2-வது முறையாக கர்ப்பமடைந்து ஆண் குழந்தை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கல்யாணசுந்தரம் தனது 2-வது மனைவியின் பேச்சை கேட்டு, எல்லம்மாள் மற்றும் அவரது 2 குழந்தைகளை சரிவர கவனிக்காமல் வீட்டுக்கு வருவதை தவிர்த்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட எல்லம்மாள் கடந்த 2018-ம் ஆண்டு சென்னை மகளிர் ஆணையத்தில் கல்யாணசுந்தரம் மீது புகார் அளித்துள்ளார். இதையடுத்து எல்லம்மாளை மீண்டும் சமாதானம் செய்த கல்யாணசுந்தரம் எல்லம்மாளுக்கு மாதந்தோறும் வீட்டு செலவுக்கு என்று ரூ.25 ஆயிரம் பணம் தருவதாக கூறினார். அவ்வப்போது வீட்டுக்கு வந்து குழந்தைகளையும் பார்த்து விட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கல்யாணசுந்தரம் குடும்ப செலவிற்கு பணம் தராமல் ஏமாற்றி வருவதாகவும் தன்னையும் குழந்தைகளையும் சந்திப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாகவும் எல்லம்மாள் புகார் கூறியுள்ளார்.
இதையடுத்து தங்களுக்கு நீதி வேண்டி எல்லம்மாள் கருவடிகுப்பம் பகுதியில் உள்ள கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. வீட்டு வாசலில் தனது 2 குழந்தைகளுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும் தன்னை ஏமாற்றிய கல்யாணசுந்தரத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரி வில்லியனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் எல்லம்மாள் புகார் அளித்துள்ளார்.
தற்போது பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக உள்ள கல்யாணசுந்தரம் கடந்த 2012-ம் ஆண்டில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, ஆள்மாறாட்டம் செய்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுதியதாக எழுந்த புகாரில் அமைச்சர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- காரில் சென்று கொண்டிருந்தபோது, ரமேஷுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- 2 பேரையும் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
புதுச்சேரி:
திருவாரூர் மாவட்டம் மேனாங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது50). இவர் தனது குழந்தைகளுடன், காரைக்காலுக்கு வேலை விசயமாக வந்துவிட்டு, மீண்டும் திருவாரூர் நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார். காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் கிராமத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது, ரமேஷுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், கார் திடீரென்று தனது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த கடையில் மோதி நின்றது.
இந்த விபத்தில், கார் மற்றும் கடை வாசலில் நிறுத்தியிருந்த 2 மோட்டார் சைக்கிள் சேதமானது. மேலும், கார் டிரைவர் ரமேஷ், கடை உரிமையாளர் திருவாரூர் நன்னிலத்தைச்சேர்ந்த ஜெயக்குமார்(50) என்பவரும் காயம் அடைந்தனர். தொடர்ந்து, அங்கிருந்தோர்,2 பேரையும் மீட்டு, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து, ஜெயக்குமாரின் மகன் குருமூர்த்தி, காரைக்கால் போக்குவரத்து போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில், கார் டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- விஜயகுமார் முதலில் அவரது வங்கி கணக்கு மூலம் ரூ.5 ஆயிரம் செலுத்தி கிரிப்டோ டாஸ்க் செய்து முடித்தார்.
- விரக்தி அடைந்த விஜயகுமார் இதுகுறித்து மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
சேதராப்பட்டு:
புதுவை வில்லியனூர் அடுத்த மேல்திருக்காஞ்சி மெயின் ரோட்டை சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மகன் விஜயகுமார் (வயது 30). என்ஜினீயர்.
இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மேல்திருக்காஞ்சி வீட்டில் இருந்தபோது இவரது செல்போனுக்கு டெலிகிராம் செயலி மூலம் அனுசியா என்ற பெண் பெயரில் மெசேஜ் வந்தது.
அதில் கிரிப்டோ டாஸ்க் என்ற செயலி மூலம் பணத்தை செலுத்தினால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை நம்பிய விஜயகுமார் முதலில் அவரது வங்கி கணக்கு மூலம் ரூ.5 ஆயிரம் செலுத்தி கிரிப்டோ டாஸ்க் செய்து முடித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த தொகை வரவில்லை. இதுகுறித்து அவர் மெசேஜ் அனுப்பினார். அதில் மேலும் பணத்தை செலுத்தினால் மட்டுமே முன்பு செலுத்திய பணம் இரட்டிப்பாக திரும்ப கிடைக்கும் என தகவல் வந்தது.
இதனை நம்பிய அவர் அடுத்தடுத்து ரூ.33 ஆயிரம், ரூ.65 ஆயிரம், ரூ.1 லட்சம் என பணத்தை செலுத்தியுள்ளார். மொத்தம் ரூ.2 லட்சத்து 3 ஆயிரம் செலுத்தியுள்ளார். ஆனால் பணம் இரட்டிப்பாகவில்லை. கொடுத்த பணமும் திரும்பி வரவில்லை. பணம் குறித்து கேட்ட அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதனால் விரக்தி அடைந்த விஜயகுமார் இதுகுறித்து மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் வேலயன், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசத்தியா ஆகியோர் சம்பந்தப்பட்ட செயலி மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண் பெயரில் மெசேஜ் அனுப்பி நூதன மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காரைக்கால் நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரி விற்ற வாலிபரை, நகர போலீசார் கைது செய்தனர்,
- அவரிடமிருந்து, ஒரு செல்போன், ரூ.2230 ரொக்கம் மற்றும் 3 எண் துண்டு சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி:
காரைக்கால் நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரி விற்ற வாலிபரை, நகர போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து, ஒரு செல்போன், ரூ.2230 ரொக்கம் மற்றும் 3 எண் துண்டு சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
காரைக்கால் நகர போலீஸ் நிலைய சப்.இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மாலை, காரைக்கால் ஒப்பிலா ர்மணியர் கோவில் குளத்து மேடு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது, போலீசாரை பா ர்த்ததும், அங்கு நின்றிருந்த ஐயப்பன்(வயது30) என்பவர் ஓடத்துவங்கினார். போலீசார் அவரை விரட்டி பிடித்து சோதனை செய்தபோது, சட்டை பாக்கெட்டில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்ரி சீட்டுகளை வைத்திருந்தார். அவரது செல்போனிலும், 3 எண் லாட்ரி சீட் எண்கள் இருந்தது. விசாரித்ததில், 3 எண் லாட்ரியை விற்றதை வாலிபர் ஒப்புகொண்டார். தொடர்ந்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்து ஒரு செல்போன், ரூ.2230 ரொக்கம் மற்றும் 3 எண் துண்டு சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்
- கோடை காலம் தொடங்கி விட்டதால் மது வகைகளை விட குளிர்ச்சியான பீர்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
- புதுவை அண்ணா சாலையில் ஒரு தனியார் நிறுவனம் மைக்ரோ பீர் தொழிற்சாலை மூலம் பீர் தயாரிக்கிறது.
புதுச்சேரி:
புதுவை என்றவுடன் எல்லாருக்கும் நினைவுக்கு வருவது மது வகைகள் தான். இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகள் வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்படும் மது வகைகள் என சுமார் 900 பிராண்ட் மது வகைகள் புதுவையில் விற்பனையாகிறது.
புதிய பிராண்டு மது வகைகளை ருசிப்பதற்காக நாடு முழுவதும் இருந்தும், பிரெஞ்சு காலனி நாடுகளின் பகுதிகளில் இருந்தும் மக்கள் புதுவைக்கு படையெடுத்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் மது வகைகளை விட குளிர்ச்சியான பீர்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு பீர் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்து வரும் பீர் வகைகளும் புதுவையில் விற்பனை ஆகிறது. 33 பிராண்ட் பீர்கள் புதுவையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 5 பிராண்டுகள் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக வருபவையாகும்.
கோடை காலம் தொடங்கி விட்டதாலும், கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து இருப்பதாலும் மது பிரியர்கள் பீருக்கு தற்போது மாறி உள்ளனர்.
புதுவையின் அண்டை மாநிலமான தமிழகத்தின் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பீரை ருசி பார்க்கின்றனர். இதனால் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.
பொதுவாக வரும் அனைத்து பீர்களும் பார்லியில் செய்யப்படும். பார்லி தவிர்த்து அரிசி, கோதுமையிலும் செய்யப்படும் பீர்களும் கிடைக்கிறது. வழக்கமாக மாதத்திற்கு சுமார் 2 லட்சம் பாக்ஸ் பீர்கள் புதுவையில் விற்பனையாகும். தற்போது மாதத்திற்கு 2½ லட்சம் பாக்ஸ் பீர் என விற்பனை உயர்ந்துள்ளது.
புதுவை அண்ணா சாலையில் ஒரு தனியார் நிறுவனம் மைக்ரோ பீர் தொழிற்சாலை மூலம் பீர் தயாரிக்கிறது. இங்கு பீர் தயாரிப்பை நேரடியாக வாடிக்கையாளர்கள் பார்த்தபடியே பீர் அருந்தலாம். இங்கு மாம்பழம், எலுமிச்சை, ஸ்ட்ராபெரி என பல வகைகளில் பீர் கிடைக்கிறது. பீர் விற்பனை தொடர்பாக மொத்த விற்பனையாளரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
வழக்கமாகவே கோடை காலத்தில் மதுவை விட பீர் விற்பனை அதிகரிக்கும். இந்த ஆண்டு கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால் பீர் விற்பனை மேலும் அதிகரித்துள்ளது. வழக்கமாக படிப்படியாக அதிகரிக்கும் பீர் விற்பனை தற்போது கோடை காலம் தொடங்கிய உடனே அதிகரித்து உள்ளது.
இதற்காக ஜனவரி மாதத்தின் இறுதியில் இருந்து மதுபான தொழிற்சாலைகளில் பீர் ஆர்டரை அதிகரித்துள்ளோம். இந்த ஆண்டு 3 புதிய பீர்கள் அறிமுகமாகி உள்ளது. வழக்கத்தை விட சுமார் 30 முதல் 40 சதவீதம் வரை விற்பனை அதிகரித்துள்ளது. அடுத்தமாதம் பீர் விற்பனை மேலும் அதிகரிக்கும். 3 லட்சம் பாக்ஸ் பீர் விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு இந்த 12 மணி நேர வேலை மசோதா உதவி புரியும்.
- பணி புரியும் நேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கிறதே தவிர ஊழியர்களின் ஒட்டுமொத்த பணி நேரம் அதிகரிக்கப்படவில்லை.
புதுச்சேரி:
12 மணி நேர வேலை மசோதாவை தொழிலாளர்கள் ஒப்புதலுடன் மாற்றம் செய்ய வேண்டும் என்று புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
12 மணி நேர வேலைத்திட்டத்திற்கு ஆதரவான என்னுடைய கருத்து தொழிலாளர்களின் நலனுக்கு எதிரான கருத்தாக முன்வைக்கப்படுகிறது. தொழிலாளர் நலனையும் தொழில் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டே நான் இந்த மசோதாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறேன்.
நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு இந்த 12 மணி நேர வேலை மசோதா உதவி புரியும். 12 மணி நேர வேலை மசோதா விவகாரத்தை தொழிலாளர்களின் விருப்பத்திற்கு விட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
தொழிலாளர்களின் ஒப்புதலோடு இதுபோன்ற மாற்றங்களை படிப்படியாக கொண்டு வர வேண்டும். அதையும் தாண்டி மாற்றுக் கருத்து இருந்தால் அவற்றை ஆராய்ந்து அவற்றுக்கு மதிப்பளிக்கும் வகையில் அரசுகள் நடந்து கொள்ள வேண்டும்.
பணி புரியும் நேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கிறதே தவிர ஊழியர்களின் ஒட்டுமொத்த பணி நேரம் அதிகரிக்கப்படவில்லை. 6 நாட்களில் 8 மணி நேர பணியில் மொத்தம் 48 மணி நேரம் உழைக்கும் தொழிலாளர்கள் 12 மணி நேர வேலையில் அதனை 4 நாட்களில் செய்து முடிக்கலாம்.
மீதமுள்ள 3 நாட்கள் அவர்கள் தங்கள் குடும்பத்தோடு, உறவுகளோடு ஓய்வெடுத்து உளவியல் ரீதியாக புதுதெம்பு பெற்று அடுத்தகட்ட பணியில் ஈடுபட முடியும்.
ஆக்கபூர்வமான பல செயல்பாடுகளில், பணிகளில் ஈடுபடுவதற்கு இது உதவியாக இருக்கும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டங்களின் மூலமாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் எந்தவிதமான சலுகைகளும் பறிக்கப்படவோ அல்லது மாற்றப்படவோ மாட்டாது என்பதை உணர்ந்தே என்னுடைய கருத்துகளை பொதுவெளியில் முன்வைக்கிறேன்.
இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.
- புதுவை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ஐ.பி.எல் பேன் பார்க் நிகழ்ச்சி நடந்தது.
- பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை அங்கிருந்து கலைத்தனர்.
புதுச்சேரி:
ஐ.பி.எல் நிர்வாகம் பேன் பார்க் ஒன்றை அமைத்து கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க நாடு முழுவதும் 45 நகரங்களில் பிரம்மாண்ட திரைகள் மூலம் போட்டிகளை ஒளிபரப்ப ஏற்பாடு செய்திருந்தது.
புதுவை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ஐ.பி.எல் பேன் பார்க் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
சென்னை அணி போட்டியை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. மைதானம் ரசிகர்களின் கூட்டத்தால் நிரம்பியது. இதனையடுத்து இரவு 8 மணிக்கு நுழைவு வாயில் கேட் பூட்டப்பட்டது. இதனால் ரசிகர்கள் அங்கேயே நின்று கூச்சல் போட்டனர்.
இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை அங்கிருந்து கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- கூட்டணி கட்சிக்குள்ளேயே ஒரு கட்சியிலிருந்து, மற்றொரு கட்சிக்கு இழுக்கும் யுக்தி புதுவை அரசியலில் உருவாகியுள்ளது.
- அரசியல்கட்சிகள் தங்கள் நிர்வாகிகளை தக்க வைப்பதிலும் பெரும் முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. புதுவையில் அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பணிகளை தொடங்கியுள்ளன.
புதுவை மக்களிடம் செல்வாக்கை பெற மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம், ஆர்ப்பாட்டம், சத்தியாகிரகம் ஆகியவற்றை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு நிர்வாகிகளை இழுக்கும் வேலையும் நடந்து வருகிறது.
கூட்டணி கட்சிக்குள்ளேயே ஒரு கட்சியிலிருந்து, மற்றொரு கட்சிக்கு இழுக்கும் யுக்தி புதுவை அரசியலில் உருவாகியுள்ளது.
காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்று சட்டசபையில் எதிர்கட்சி அந்தஸ்து பெற்ற தி.மு.க. காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், பிரமுகர்கள், அனுதாபிகளை தங்கள் பக்கம் இழுத்துள்ளனர்.
- மருத்துவ பேராசிரியர் அமெரிக்க பெண்ணுக்கு 8 முறை மொத்தம் ரூ.35 லட்சம் அனுப்பியுள்ளார்.
- மோசடியில் இந்தியாவில் உள்ள சில நபர்களும் வெளிநாட்டுக்காரர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
புதுச்சேரி:
புதுவை உருளையன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் டாக்டர். தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு, அவரது பெற்றோர் திருமணத்திற்காக பெண் பார்த்து வந்துள்ளனர். புதுவையில் உள்ள ஒரு தனியார் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த தகவலை அங்கிருந்து எடுத்து சமூக வலைதள மோசடிக்காரர்கள், மருத்துவ பேராசிரியரை ஒரு பெண் மூலம் தொடர்பு கொண்டனர்.
தொடர்பு கொண்ட பெண் தான் சிரியாவில் இருப்பதாகவும் இந்தியர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி அவருடைய அனைத்து விவரங்களையும் அனுப்பியுள்ளார். அந்த பெண் தான் அமெரிக்காவில் வசித்து வருவதாகவும் சிரியாவில் நடந்த நிலநடுக்கத்திற்காக தன்னார்வலராக வேலை செய்ய வந்துள்ளதாக தெரிவித்தார்.
இங்கு வந்த பிறகு அமெரிக்கர் என்பதால் தன்னுடைய அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளார்.
அவருடைய கணக்குகள் முடக்கப்பட்ட விவரங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கான லொகேஷன், அவர் பணிபுரிகின்ற மருத்துவமனை போன்றவற்றை அனுப்பியுள்ளார். நீங்கள் உதவி செய்தால் மட்டுமே நான் இங்கிருந்து வெளியேற முடியும்.
வரி, சுங்கக்கட்டணம், டாக்குமெண்டேஷன் இன்னும் சில தேவைகள் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதனை நம்பிய மருத்துவ பேராசிரியர் அவருக்கு 8 முறை மொத்தம் ரூ.35 லட்சம் அனுப்பியுள்ளார்.
ரூ.35 லட்சம் பணத்தை பெற்ற பிறகு, அந்த பெண்ணிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. அதன்பிறகே, தான் ஏமாற்றப்பட்டதை டாக்டர் உணர்ந்தார். இதுகுறித்து அவர், இணைய வழி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் (சைபர் கிரைம்) புகார் அளித்தார்.
அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மோசடியில் இந்தியாவில் உள்ள சில நபர்களும் வெளிநாட்டுக்காரர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.






