என் மலர்
புதுச்சேரி
- கடந்த வாரம் வாடகை வீட்டிலிருந்து பொருட்களை எடுத்து கொண்டு, மாரிமுத்து தம்பதியினர் இளைய மகன் வீட்டிற்கு சென்றனர்.
- புகாரின் அடிப்படையில் கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த கோட்டகுப்பம் அருகே மாத்தூரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (69) விவசாயி. இவரது முதல் மனைவி இறந்த நிலையில், மனைவியின் தங்கையான லட்சுமியை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
முதல் மனைவிக்கு கோவிந்தராஜ் (42) வெங்கடேஷ் (40) ஆகிய 2 மகன்களும், 2-வது மனைவிக்கு சங்கரி (35) என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு 2 மகன்கள் மற்றும் மகளுக்கு தனது விவசாய நிலத்தை பாகப்பிரிவினை செய்து எழுதி வைத்தார். இதில் மாரிமுத்து வசித்த வந்த வீட்டை, இளைய மகன் வெங்கடேசுக்கு சேர்த்து எழுதி கொடுத்தார்.
பின்னர் 2015-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட வெங்கடேஷ் 2017-ம் ஆண்டு வயதான பெற்றோர் இருவரையும் அடித்து துன்புறுத்தி வீட்டைவிட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டில் குடியேறிய வயதான தம்பதியினர் தங்கள் வீட்டை மீட்டுத்தரக் கோரி விழுப்புரம் கோட்டாசியர் மற்றும் போலீசாரிடம் முறையிட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய கோட்டாட்சியர், வயதான தம்பதியினரை தாங்கள் சாகும் வரை இளைய மகன் வெங்கடேஷ் தன்னுடைய வீட்டில் வைத்து பராமரிக்கவும், மகன் மற்றும் மகள் சேர்ந்து மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து கடந்த வாரம் வாடகை வீட்டிலிருந்து பொருட்களை எடுத்து கொண்டு, மாரிமுத்து தம்பதியினர் இளைய மகன் வீட்டிற்கு சென்றனர்.
அப்போது வெங்கடேஷ் இவர்களை வீட்டிற்குள் வரவிடாமல், வீட்டை பூட்டிக்கொண்டு வயதான தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்து தனது மாமியார் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் செய்வதறியாமல் தவித்து வரும் வயதான தம்பதியினர், கடந்த ஒரு வாரமாக பூட்டிய வீட்டின் வெளியே கட்டில், பீரோ மற்றும் வீட்டு உபயோக பொருட்களுடன் காத்து கிடக்கின்றனர்.
இது தொடர்பாக அவர்கள் கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
இந்த விவகாரத்தில் கோட்டாட்சியர் தலையிட்டு உத்தரவிட்டதால் போலீசார் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் உள்ளனர்.
- தாமரைச்செல்வி (வயது32). இவர் கேன்சர் நோய்க்காக, புதுவை ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- தாமரைச்செல்வி தனது கைப்பையில் சிறிய அளவிலான மணி பர்சில் ரூ.23 ஆயிரம் பணம், ஏ.டி.எம் கார்டு உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் வெள்ளை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வி (வயது32). இவர் கேன்சர் நோய்க்காக, புதுவை ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மார்ச் 31-ந்தேதி, தனது தந்தை சிங்காரவேலு உதவியுடன், புதுச்சேரி சென்று சிகிச்சை பெற்று இரவு காரைக்காலுக்கு பஸ்சில் திரும்பினார். புதுச்சேரியிலிருந்து நேரடி பஸ் கிடைக்காததால், சிதம்பரம் வந்து அங்கிருந்து காரைக்காலுக்கு தனியார் பஸ்ஸில் வந்தார். தாமரைச்செல்வி தனது கைப்பையில் சிறிய அளவிலான மணி பர்சில் ரூ.23 ஆயிரம் பணம், ஏ.டி.எம் கார்டு உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
பஸ்சில் அவர் அருகில், 4 ஆண்கள் அமர்ந்து, பேச்சு கொடுத்தவாறு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிகாலை காரைக்காலுக்கு பஸ் வந்த போது. கைப்பையை இருந்த மணி பர்சை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பஸ்சில் பல இடத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் தாமரைச்செல்வி புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- ஜிப்மரில் புதுவை மட்டுமின்றி அண்டை பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.
- ஜிப்மர் கொண்டு வந்துள்ள புதிய கட்டணம் முறை அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும்.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மரில் புதிய மேம்பட்ட உயர் மதிப்பு சிகிச்சைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வராத, மற்றும் ஏழைகளுக்கான சிவப்பு ரேஷன் கார்டு இல்லாத நோயாளிகளிடமிருந்து பயன்பாட்டு கட்டணங்கள் ஏப்ரல் 1-ந் தேதி முதல் வசூலிக்கப்படுகிறது. இத்தொகை நிறுவன வருவாய் கணக்கில் துறைகள் வரவு வைக்கப்பட வேண்டும்.
நோயாளியின் பராமரிப்பின் நலனுக்காக, மேம்பட்ட சோதனையை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இந்த மேம்பட்ட சிகிச்சைகள் விலை உயர்ந்தவை என்பதால், பயனாளிகளிடம் இருந்து ஓரளவு வருவாய் கிடைத்தால் மட்டுமே இந்த சேவைகளை நிலையான முறையில் வழங்க முடியும். இதில் அடிப்படை பரிசோதனை சேவைகள் இலவசமாக தரப்படும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்திருந்தது.
ஜிப்மரில் புதுவை மட்டுமின்றி அண்டை பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். பலருக்கு ஆயுஷ்மான்பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டம் இல்லை. ஜிப்மர் கொண்டு வந்துள்ள புதிய கட்டணம் முறை அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும்.
குறிப்பாக புதுவை மற்றும் காரைக்காலை சேர்ந்த ஏழை நோயாளிகள் அதிகளவில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு புதுவையில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதுவை சட்டசபையில் எதிர்கட்சித்தலைவர் சிவா உட்பட எம்.எல்.ஏ.க்கள் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில் ஜிப்மர் நிர்வாகம் கொண்டுவந்துள்ள சிகிச்சைக்கு கட்டண முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, புதுவை மாநில தி.மு.க. சார்பில் ஜிப்மர் நுழைவு வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா தலைமை தாங்கினார்.
ஜிப்மரில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும், ஏழை-எளிய மக்களின் சுகாதார உரிமையை பறிக்கக்கூடாது. ஏழை நோயாளிகளை வஞ்சிக்க கூடாது. புதுவை நோயாளிகளை புறக்கணிக்காதே என தி.மு.க.வினர் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், நிர்வாகிகள் தைரியநாதன், கல்யாணி கிருஷ்ணன், சண்.குமரவேல், பூ.மூர்த்தி, லோகையன், ஜெ.வி.எஸ். ஆறுமுகம், காந்தி, அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சக்திவேல், சோமசுந்தரம், தங்கவேலு, செல்வநாதன், கார்த்திகேயன், வேலவன், சண்முகம், கோகுல், தர்மராஜன், ரவீந்திரன், செந்தில்வேலன், இளம் பரிதி, பழனி, பிரபாகரன், மாறன், கோபாலகிருஷ்ணன், கோபால், அமுதாகுமார், நர்கீஸ், சிறப்பு அழைப்பா ளர்கள் முகிலன், டாக்டர் நித்திஷ், தொகுதி செயலா ளர்கள், பல்வேறு அணிகளின் துணை அமைப்பாளர்கள், தொகுதி கழக நிர்வாகிகள், கிளைக் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சித்தலைவர் சிவா உள்ளிட்ட 4 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 100-க்கும் மேற்பேட்டோரை போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணி முதல் சி.பி.ஐ. அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தினர்.
- பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சில ஆதாரங்களுடன் சி.பி.ஐ.க்கு புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரி:
காரைக்கால் நேரு வீதியில் உள்ள உதவி பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணி முதல் சி.பி.ஐ. அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தினர். இதில் பத்திரப் பதிவாளர் உள்ளிட்ட 2 பேரை கைது செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நேரு வீதியில் பத்திர பதிவுத்துறை உதவி பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு புதிய பத்திரப்பதிவுகள் மற்றும் பட்டா மாறுதல் செய்வதற்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சில ஆதாரங்களுடன் சி.பி.ஐ.க்கு புகார் அளித்துள்ளார். அதன்படி, நேற்று மாலை 4 மணிக்கு சென்னை தலைமை அலுவலக உதவி துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் வந்த 4 பேர் கொண்ட சி.பி.ஐ. குழுவினர் காரைக்கால் உதவி பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்தனர். அலுவலக கேட்டை மூடிவிடடு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அதேபோல் காரைக்கால் ராஜாத்தி நகர் அருகே உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீட்டிலும் நான்கு பேர் கொண்ட குழுவினர் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாலை 3 மணி வரை என விடிய விடிய சோதனை நடைபெற்றது. சோதனையில் முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர். இதில் பத்திரப்பதிவாளர் சந்திர மோகன், உதவியாளர் அருண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
- அமெரிக்க பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
- போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா புகாரை கோட்டகுப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரிக்கும்படி உத்தரவிட்டார்.
சேதராப்பட்டு:
புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்ட குப்பம் அருகே உள்ள சின்ன முதலியார்சாவடி கடற்கரை பகுதியில் தங்கும் விடுதியுடன் மசாஜ் சென்டர் உள்ளது.
இங்கு சுற்றுலாப் பயணிகள் அறை எடுத்து தங்குவது வழக்கம். இந்நிலையில் புதுவையை சுற்றி பார்க்க வந்த அமெரிக்காவைச் சேர்ந்த கசிஹெர்னாண்டஸ் (வயது35). என்பவர் மசாஜ் செய்வதற்காக சென்றார்.
அப்போது மசாஜ் சென்டரில் பணியாற்றி வரும் ரெக்கீஸ் என்பவர் கசிஹெர்னாண்டஸ்க்கு மசாஜ் செய்தார். அப்போது அவர் அமெரிக்க பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இது குறித்து கசிஹெர்ண்டஸ் கோட்ட குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் விசாரணை நடத்தினார். ஆனால் புகார் செய்த பெண் அமெரிக்காவை சேர்ந்தவர் என்பதால் இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம் காவல்துறை சூப்பிரண்டு ஸ்ரீநாதாவின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா இந்த புகாரை கோட்டகுப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரிக்கும்படி உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா வழக்கு பதிவு செய்து மசாஜ் சென்டர் ஊழியர் ரெக்கிஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகபுகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது
- , சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்காபக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகபுகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்க ளும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும், பணம், காணிக்கை போன்றவை, 3 மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இறுதியில்(டிசம்பர் மாதம்) இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சிவிழா நடைபெற இருப்பதால், கடந்த வாரம் 16-ந் தேதி உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது.
இதில் நூற்றுக்கு மேற்பட்ட கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். வாரம் இரு நாட்கள் என 4 நாட்கள் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணி நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. முடிவில், ரூ.2 கோடியே 7 லட்சம் பணமும், 150 கிராம் தங்கம், 1.5 கிலோ வெள்ளியும் காணிக்கையாக பெறப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரனை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, உண்டியலில் கிடைக்க ப்பெற்ற காணிக்கை மற்றும் பணம் உரிய பாதுகாப்புடன் கோவில் நிர்வாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
- 36 ஆண்டுகளாக 13 முறை மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- மத்திய அரசு தான் புதுவை நிர்வாகத்தை நடத்துகிறது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கினார்.
அப்போது, புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற தனி நபர் தீர்மானத்தை எதிர்க்கட்சித்தலைவர் சிவா, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு ஆகியோர் கொண்டு வந்தனர்.
5 பேரின் தனி நபர் தீர்மானங்களையும் இணைத்து விவாதிக்க சபாநாயாகர் ஏம்பலம் செல்வம் அனுமதியளித்தார்.
எதிர்க்கட்சித்தலைவர் சிவா: மத்திய அரசு நிதி பற்றாக்குறை, அதிகாரிகள் அலட்சியம், கவர்னர் அரசை நிலைக்குலைய செய்தல் ஆகியவை பற்றி சபையில் பேசப்பட்டது.
36 ஆண்டுகளாக 13 முறை மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
கடந்த 63-ம் ஆண்டில் 39 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். பின்பு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. பின்னர் அதிகாரம் குறைக்கப்பட்டு, மத்திய அரசின் கண்காணிப்பில் வந்தது. சமூகம், நிதி, நிர்வாக ரீதியாக அதிகாரம் குறைந்துள்ளது.
இதனால் மாநில அந்தஸ்து குரல் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகளான முதலமைச்சர், அமைச்சர்கள் முடிவு எடுக்காமல் தலைமைச்செயலர், கவர்னர் முடிவு எடுக்க வேண்டிய நிலையுள்ளது.
மத்திய அரசு தான் புதுவை நிர்வாகத்தை நடத்துகிறது. பிற்பட்டோர் இடஒதுக்கீட்டுக்கு கூட மத்திய அரசை நாட வேண்டியுள்ளது. பெரும்பாலான கோப்புகள் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்படுவதால் அதிகாரம் குறைந்துள்ளது. கவர்னரேதான் முடிவு எடுக்கிறார். முடிவு எடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.
கவர்னர், தலைமை செயலர், செயலர்கள் புதுவையின் மீது நிரந்தர அக்கறையின்றி செயல்படுகிறார்கள். பட்ஜெட்டுக்கு கூட மத்திய அரசுக்கு காத்திருக்க வேண்டி உள்ளது. இது ஜனநாயக முறைக்கு எதிரானது. நியாய பங்கீடு மறுக்கப்படுகிறது. பட்ஜெட்டில் உதவி என்று தரப்படுவது நியாயமற்றதாக உள்ளது.
தமிழகத்தில் 69 சத இடஒதுக்கீடு தரப்படுகிறது. புதுவையில் இல்லை. இந்த தடையெல்லாம் நீங்க முழு தகுதியுடைய மாநில அந்தஸ்து தேவை. மத்தியில் பா.ஜனதா-காங்கிரஸ் மாறி மாறி ஆட்சிக்கு வந்தும் புதுவைக்கு மாநில அந்தஸ்து தரவில்லை.
நாஜிம் (திமுக): புதுவைக்கு தற்போது மாநில அந்தஸ்து கிடைக்க அனைத்து வாய்ப்பும் உண்டு. மாநில அந்தஸ்துக்காக தொடங்கிய கட்சியின் ஆட்சி நடக்கிறது. மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்தனர். கூட்டணி அறுவடை செய்யும் நேரம் இது. மத்திய பாஜக உதவியாக இருக்கிறது. நாடாளுமன்ற நிலைக்குழுத்தலைவர் சுஷ்மா சுவராஜ் புதுவை வந்தபோது மாநில அந்தஸ்தை பரிந்துரை செய்தார்.
நேரு (சுயேட்சை): பலமுறை தீர்மானம் நிறைவேவற்றியும் மாநில அந்தஸ்து கிடைக்காதது வருத்தம். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். பொதுநல அமைப்புகள், தொழிலாளர், இளைஞர்கள் கோஷம் எழுப்புகின்றனர். அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முழு நேர பணியாக அடுத்தக் கட்டத்துக்கு இதை கொண்டு செல்ல வேண்டும்.
குட்டி பிரான்சான புதுவைக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. புதிய திட்டங்களுக்கான ஆய்வு கூடங்களாகி விட்டன. ரேஷன் கடை இல்லாத மாநிலமாகி விட்டது. மத்திய அரசு திட்டங்களை திணிக்கின்றன.
78 நாடுகள் பத்து லட்சம் மக்கள் தொகைக்கும் குறைவாக உள்ளன. அவை சுதந்திரமாக உள்ளது. நாம் அடிமைப்பட்ட மாநிலமாக உள்ளோம். எனவே மாநில அரசுக்கு அதிகாரம் தேவை. அதற்கு மாநில அந்தஸ்து தேவை.
அனிபால் கென்னடி (திமுக): சட்டப்பேரவை இல்லாத லடாக்கை நிதி கமிஷனில் சேர்த்துள்ளனர். ஆனால் புதுவையை சேர்க்கவில்லை. சொந்த வருவாயில் 63 சதவீதத்தில் உள்ளோம். வடகிழக்கு மாநிலங்களை விட நம் வருவாய் அதிகம். வருவாய் குறைவான பல மாநிலங்கள் மாநில அந்தஸ்து பெற்றுள்ளன. அதிகாரமில்லாத சுதந்திரம் இருக்கிறது. உடனடியாக அனைத்துக்கட்சித்தலைவர்கள், சட்டப்பேரவை எம்எல்ஏக்களைக் கூட்டி, பிரதமரை சந்தித்து மாநில அந்தஸ்தை வலியுறுத்த வேண்டும். அதற்கு திமுக உறுதுணையாக இருக்கும்.
செந்தில்குமார் (தி.மு.க.): ஆட்சியாளர்களை தாண்டி மக்களுக்கு உரிமை வேண்டும். இரண்டாம் தர குடிமக்களாக நாம் வாழும் சூழல் உள்ளது. இந்த இழுக்கை போக்கி உரிமையுடன் கூடிய குடிமகனாக வாழவேண்டும். சுதந்திரத்துக்காக பெண்களும் அதிகளவில் பங்கேற்றனர். இது அனைவரும் போராடி பெற்ற சுதந்திரம். இந்தியாவுடன் நாம் இணைந்தோம்.
நம்மால் சொந்த காலில் நிற்க முடியும். சட்டத்திட்டங்கள் அனைத்தும் கட்டி வைக்கும் விதமாக உருவாக்கியுள்ளனர். இவ்வளவு பிரச்சினைகளை வைத்தும் கட்டுகள் தேவையா? எனவே இந்த கட்டுகளில் இருந்து விடுபட மாநில அந்தஸ்து தேவை.
இதைத்தொடர்ந்து மாநில அந்தஸ்து தீர்மானத்தை வரவேற்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், ஜான்குமார், அசோக்பாபு, கல்யாணசுந்தரம், வெங்க டேசன், ரிச்சர்டு, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சம்பத், நாக.தியாகராஜன், என்ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், லட்சுமிகாந்தன், ரமேஷ், திருமுருகன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன், பி.ஆர்.சிவா, பிரகாஷ்குமார், சிவசங்கர், கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் ஆகியோர் பேசினர்.
மாகி, ஏனாமை இணைத்து மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்றும் இந்த தீர்மானத்தை அரசு தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்றும் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.
எம்.எல்.ஏ.க்களை தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.
ஒட்டுமொத்தமாக மாநில அந்தஸ்து கோரி வலியுறுத்தி விளக்கமாக பேசியுள்ளனர். பல விஷயங்களை சொல்லியுள்ளனர். நிர்வாக சிரமம் இங்கிருந்தால் தான் தெரியும். ஆளும்போதுதான் அதன் கஷ்டம் தெரியும். உரிமையும் நிலையாக கிடைக்க வேண்டும் என்றால், மாநில அந்தஸ்து மட்டுமே ஒரே வழி. பலமுறை இதை சட்டசபையில் வலியுறுத்தி உள்ளோம்.
நாம் வலியுறுத்தி செல்லும்போது மத்திய அரசு பார்ப்போம் என்கின்றனர். இந்த சட்டசபையில் ஒரு மனதாக இவ்வளவு தெளிவாக பேசி பார்த்ததில்லை. அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் பேசினர். அவ்வளவு வலி உள்ளது.
எனவே இந்த தீர்மானத்தை அரசு தீர்மானமாக நிறைவேற்றி, மத்திய அரசுக்கு கொண்டு சென்று மாநில அந்தஸ்து பெறுவோம். நல்ல நேரம் கூடி வந்துள்ளது.
அனைத்தும் நல்லபடியாக நடக்கும், அதற்கான நேரம் வந்துள்ளது. மத்திய அரசும் உறுதுணையாக இருக்கிறது. நமது கோரிக்கையை ஏற்று மாநில அந்தஸ்து கொடுக்கும் நிலையிலும் இருக்கிறது. எனவே இந்த தீர்மானத்தை அரசு தீர்மானமாக கொண்டு சென்று மத்திய அரசை வலியுறுத்தி வெற்றியை பெறுவோம். எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் அழைத்து சென்று பிரதமர், உள்துறை அமைச்சர், மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசி இந்த ஆண்டுக்குள் மாநில அந்தஸ்தை பெறுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அரசே தீர்மானமாக ஏற்றதால், உறுப்பினர்கள் கொண்டு வந்த தனிநபர் தீர்மானத்தை திரும்பப் பெறும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து 5 உறுப்பினர்களும் தங்களின் தனி நபர் தீர்மானத்தை திரும்பப்பெறுவதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாநில அந்தஸ்து கோரி மத்திய அரசை வலியுறுத்தும் அரசு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அப்போது வெளிநடப்பு செய்த சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு சபைக்கு திரும்பியிருந்தார். ஒட்டுமொத்த உறுப்பினர்களும் எழுந்து நின்று மேஜையை தட்டி ஆரவாரம் செய்து தீர்மானத்தை வரவேற்றனர்.
- விமல்ராஜ் தனது பைபர் படகை நேற்று இரவு நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்
- படகிலிருந்து ஒரு மர்ம நபர், ரூ.15 ஆயிரம் மதிப்பிலான மின்சாதன பொருளை திருடிகொண்டு சென்றதை பார்த்து, கையும் களவுமாக பிடித்தார்,
புதுச்சேரி:
காரைக்கால் கடற்கரை சாலையில், கிளிஞ்சல் மேட்டைச்சேர்ந்த விமல்ராஜ் தனது பைபர் படகை நேற்று இரவு நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். காலை படகை பார்க்க வந்த போது, படகிலிருந்து ஒரு மர்ம நபர், ரூ.15 ஆயிரம் மதிப்பிலான மின்சாதன பொருளை திருடிகொண்டு சென்றதை பார்த்து, கையும் களவுமாக பிடித்து, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர் காரைக்காலை அடுத்த பட்டி னச்சேரி பகுதி யைச்சேர்ந்த ரகுபதி (வயது38) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்த னர்.
- காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
- கட்சியின் மாவட்டத் தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் கண்டன உரையாற்றினார்.
புதுச்சேரி:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி பதவி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, காரைக்கால் திருநள்ளாறு தேரடி அருகே, காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் கண்டன உரையாற்றினார். போராட்டத்தில், திருநள்ளாறு கொம்யூன் முன்னாள் தலைவர் சிங்காரவேலு, மகிளா காங்கிரஸ் மாநில பொது செயலாளர் நிர்மலா, இளைஞர் அணி தலைவர் ரஞ்சித், திருநள்ளாறு தொகுதி தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின் முடிவில், முன்னாள் அமைச்சர் கமல க்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- 4 தலைமுறைகளாக இந்தியாவிற்காக தியாகம் செய்த அரசியல் வாரிசான இளம் தலைவர் ராகுல்காந்திய அப்புறப்படுத்த, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த பலர், பல வகைகளில் இறங்கி பார்த்தார்கள். முடியாமல், இப்போது, திட்டமிட்டு சிறை தண்டனை வழங்கியும், எம்.பி பதவி நீக்கம் செய்தும் புது முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதுவும், பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி ராகுல் காந்தி கேள்வி எழுப்பிய நாளிலிருந்து, ராகுல் காந்தியை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும். காங்கிரஸ் இல்லாத இந்தியாவை கட்டமைக்க வேண்டும் என்ற வன்ம எண்ணத்துடன் பிரதமர் செயல்பட்டு வருகிறார். ஜனநாயகத்தின் குரல்வ லையை நெறிக்கும் பிரதமர் நரேந்திரமோடியின் இந்த செயல் கடும் கண்டனத்திற்குரியது, இத்தகைய ஜனநாயக விரோத செயல்பாடுகளைக் கண்டித்து காங்கிரஸ் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும். விரைவில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும். என்றார்.
புதுச்சேரி:
சூதாட்டத்தில்(சீட்டுகட்டு) ஈடுப்படுவதாக, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்திற்கு ரகசியத்தகவல் சென்றது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, அப்பகுதியைச்சேர்ந்த விக்னேஸ் (வயது23), சிவபாலன்(24),ராஜேஷ்(22), ராமன்(20), ஐயப்பன்(24) ரஞ்சித்(24) 6 பேர், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் 6 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.1000 மற்றும் சீட்டுகட்டுகளை பறிமுதல் செய்தனர்.
- தேவ மணிக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் (32) என்பவருக்கும் இட பிரச்ச னை கடந்த பல மாதங்க ளாக இருந்து வந்தது.
- தேவமணியை அவரது வீட்டின் அருகே, மணிமாறன் கூலிப்படையினரை வைத்து வெட்டி கொலை செய்தார்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாள ராக இருந்தவர் தேவமணி (வயது52). இவர் திருநள்ளாறு -சுரக்குடி சந்திப்பில் வசித்து வந்தார். தேவ மணிக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் (32) என்பவருக்கும் இட பிரச்ச னை கடந்த பல மாதங்க ளாக இருந்து வந்தது.இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி இரவு, தேவமணியை அவரது வீட்டின் அருகே, மணிமாறன் கூலிப்படையினரை வைத்து வெட்டி கொலை செய்தார். இக்கொலை வழக்கில் மணிமாறன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிமாறன், புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் மணிமாறன் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்து கடந்த 21-ந் தேதி, நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனில் வெளியே வந்தார்.
மேலும் திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் திங்கள் மற்றும் வெள்ளி என 2 நாட்கள் காலை 10.30 மணியளவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என ஜாமீனில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி மணிமாறன் நேற்று திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு சென்றுள்ளார். மணிமாறன் அடிக்கடி திருநள்ளாறு வந்தால் சட்ட ம்-ஒழுங்கில் பிரச்சனை ஏற்படும் என்பதால், திருநள்ளாறு ேபாலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன், மணிமாறன் காரைக்காலில் நுழைய தடை விதிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார். அதன் பேரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகியுள்ள மணிமாறன், 144 பிரிவின் கீழ் கோர்ட் உத்தரவுப்படி குறிப்பிட்ட நேரத்தை தவிர, காரைக்காலில் நுழைய கலெக்டர் தடை விதித்துள்ளார். மேலும் மணிமாறன் 2மாதத்திற்கு காரைக்கால் மாவட்டத்திற்குள் முழுமையாக வர தடை விதிக்க வேண்டும். அல்லது வேறு போலீஸ் நிலையத்தில் குறிப்பிட்ட நேரத்தில் கையெழுத்திட அனுமதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டுக்கு திருநள்ளாறு ேபாலீஸ் நிலைய போலீசார் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- காரைக்காலில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில், காதல் ஜோடி, திருமணம் செய்ய நேற்று முன்தினம் அறை எடுத்து தங்கியுள்ளனர்
- திடீரென்று அறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டதையடுத்து, விடுதி ஊழியர்கள் கதவை திறக்க முயற்சித்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில், திருவாரூர் குடவாசலைச்சேர்ந்த காதல் ஜோடி, திருமணம் செய்ய காரைக்கால் வந்துள்ளதாக கூறி, நேற்று முன்தினம் அறை எடுத்து தங்கியுள்ளனர். நேற்று காலை விடுதி ஊழியர் இருவருக்கும் உணவு வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் இருவரும் அறைய மூடிக்கொண்டு வெகு நேரம் ஆகியும் வெளியே வராமல் இருந்துள்ளனர். பின்னர், திடீரென்று அறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டதையடுத்து, விடுதி ஊழியர்கள் கதவை திறக்க முயற்சித்தனர். முடியாததால், காரைக்கால் நகர போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் போலீஸ் சூப்பிரண்டு சுப்ரமணியம் மற்றும் போலீசார், விடுதிக்கு விரைந்து சென்று, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, காதல் ஜோடி இருவரும் கை, கழுத்து பகுதிகளில் கத்தியால் அறுத்து இரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர். அறை முழுவதும் இரத்தம் சிதறி கிடந்தது. உடனடியாக, ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் மீட்டு, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
முதல் கட்ட விசாரணையில், திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(வயது25) அக்ஷரா(25) ஆகியோர் என்பதும், இவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், காரைக்கால் வந்து திருமணம் செய்துகொள்ள இருந்ததாகவும், அதற்குள், இருவரும் தங்கள் முடிவை மாற்றிகொண்டு, கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, காதல் ஜோடிகளின் பெற்றோர்களுக்கு தகவல் அளித்து, தொடர் விசாரனையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்வம, காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






