என் மலர்tooltip icon

    கேரளா

    • முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.
    • தொடர் மழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.

    இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.

    இந்த நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் மீட்புக் குழுவினர் அப்பகுதிகளில் மீட்டுப்புப் பணிகளில் ஈடுபட்டனர். இருப்பினும், தொடர் மழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில், கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகன மழைக்கான ரெட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

    இதனிடையே தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கோட்டயம், வயநாடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், எர்ணாகுளம், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
    • மீட்புக் குழுவினர் அப்பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.

    கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

    நேற்று காலை முதலே கனமழை பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில், முண்டகையில் நள்ளிரவு 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால்  பாலமும் அடித்துச் செல்லப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலையில் பெரிய அளவிலான 2வது நிலச்சரிவு ஏற்பட்டது. 

    இந்த நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மீட்புக் குழுவினர் அப்பகுதிகளில் மீட்டுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

    • தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் யாரும் இல்லை.
    • நோய் தடுப்பு விதிமுறைகளை தளர்த்த முடிவு.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பரவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்திலேயே ஏராளமான காய்ச்சல்கள் மற்றும் பல்வேறு தொற்றுநோய்கள் பரவின. அமீபிக் மூளைக்காய்ச்சல், மேற்கு நைல் காய்ச்சல் உள்ளிட் அரியவகை நோய்கள் மட்டுமின்றி நிபா வைரசும் பாதித்தது.

    நிபா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட சிறுவனின் தொடர்பு பட்டியலில் 472 பேர் இருந்தனர். அவர்களின் ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நிபா தொற்று பாதித்ததாக தீவிர சிகிச்சை பிரிவில் யாரும் சிகிச்சை பெறவில்லை. இதனால் கேரள மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த நோய் தடுப்பு விதிமுறைகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மலப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிபா ஆய்வு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி வீனா ஜார்ஜ் தெரிவித் திருக்கிறார். மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சமூகஇடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

    • சூட்டிங்கின்போது கார் விபத்து ஏற்பட்டு நடிகர்கள் அர்ஜுன் அசோகன் மற்றும் 'பிரேமலு' புகழ் சங்கீத் பிரதாப் உள்ளிட்டோர் காயமடைந்துள்ளனர்.
    • 'ப்ரோமான்ஸ்' படப்பிடிப்பானது தற்போது கொச்சியில் நடைபெற்று வருகிறது

    கேரளாவில் படத்தின் சூட்டிங்கின்போது கார் விபத்து ஏற்பட்டு நடிகர்கள் அர்ஜுன் அசோகன் மற்றும் 'பிரேமலு' புகழ் சங்கீத் பிரதாப் உள்ளிட்டோர் காயமடைந்துள்ளனர்.

    மலையாளத்தில் நிவின் பாலி- நயன்தாரா நடித்த லவ்- ஆக்ஷ்ன்- ட்ராமா படத்தை இயக்கி புகழ் பெற்ற அர்ஜுன் டி.ஜோஸ் தற்போது இயக்கி வரும் படம் 'ப்ரோமான்ஸ்' (bromance). இதில் மேத்யூ தாமஸ், அர்ஜுன் அசோகன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

     

    'ப்ரோமான்ஸ்' படப்பிடிப்பானது தற்போது கொச்சியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் கொச்சி எம்.ஜி சாலையில் கார் சேசிங் காட்சி படமாக்கப்பட்டபோது உணவு டெலிவரி செய்பவரின் இரு சக்கர வாகனத்தில் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் டெலிவரி நபரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கார் கவிழ்ந்ததால் காரின் உள்ளே முன்பக்கம் இருந்த நடிகர் அர்ஜுன் அசோகனுக்கும், பின்பக்கம் இருந்த சங்கீத் பிரதாப்புக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மூவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

    விபத்து குறித்து விசாரித்த காவல்துறையிர், காரை வேகமாக ஒட்டியதாக கூறி படக்குழுவை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் படப்பிடிப்பின்போது எந்தவித பாதிப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ் ராக்கர்ஸை சேர்ந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    • விசாரணையில் 12 பேர் இணைந்து செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    தனுஷின் ராயன் திரைப்படத்தை செல்போனில் பதிவு செய்து கொண்டிருந்த ஜெப் ஸ்டீபன்ராஜ் கைது செய்யப்பட்டார். புதிய திரைப்படங்களை இணையங்களில் சட்டவிரோதமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸை சேர்ந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஏரியஸ் தியேட்டரில் படத்தை பதிவு செய்து கொண்டிருந்த போது மதுரையை சேர்ந்த ஜெப் ஸ்டீபன்ராஜ் கைது செய்யப்பட்டார். இது குறித்து காக்நாடு சைபர் போலீசார் நடத்திய விசாரணையில் 12 பேர் இணைந்து செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    பிரபல நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜ்-இன் மனைவி சுப்ரியா அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழ் ராக்கர்ஸ் தளம் மட்டுமின்றி டெலிகிராம் செயலியிலும் ஸ்டீபன் ராஜ் படங்களை வெளியிட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கைது செய்யப்பட்ட ஸ்டீபன் ராஜை போலீசார் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • பெங்களூருவில் இருந்து மறுநாள் காலை 5.30 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.20 மணிக்கு எர்ணாகுளத்திற்கு வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • வந்தே பாரத் ரெயில் எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் பெங்களூரு ஆகிய ரெயில் நிலையங்களில் நிறுத்தப்படும்.

    திருவனந்தபுரம்:

    ரெயில் பயணிகளின் பயண நேரத்தை குறைக்கவும், சொகுசான பயணத்தை கொடுக்கும் வகையிலும் நாடு முழுவதும் வந்தே பாரத் ரெயில்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. கேரள மாநிலத்தில் 2 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும் நிலையில் தற்போது 3-வது வந்தே பாரத் ரெயில் சேவை வருகிற 31-ந்தேதி தொடங்கப்பட இருக்கிறது.

    இந்த ரெயில் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருவுக்கு சிறப்பு ரெயிலாக வாரத்தில் புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் இயக்கப்பட உள்ளது. மதியம் 12.50 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் அந்த ரெயில், இரவு 10 மணிக்கு பெங்களூருவுக்கு சென்றடையும்.

    அதேபோல் மறுமார்க்கத்தில் பெங்களூருவில் இருந்து மறுநாள் காலை 5.30 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.20 மணிக்கு எர்ணாகுளத்திற்கு வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வந்தே பாரத் ரெயில் எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் பெங்களூரு ஆகிய ரெயில் நிலையங்களில் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார்கள்.
    • அவர்களின் பயிற்சி மற்றும் மற்ற ஏற்பாடுகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது என மந்திரி தெரிவித்துள்ளார்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டி இன்று தொடக்க விழாவுடன் தொடங்குகிறது. இந்தியா சார்பில் 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்கள். கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இடம் பிடித்துள்ளனர்.

    இந்த நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.

    மேலும், சீனியர் தடகள பயிற்சியாளர் ராதாகிருஷ்ணன் நாயருக்கும் ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில விளையாட்டுத்துறை மந்திரி வி. அப்துரஹிமான் தெரிவித்துள்ளார்.

    முகமது அனாஸ், முகமது அஜ்மல் (இருவரும் ரிலே அணியில் உள்ளனர்), அப்துல்லா அபுபக்கர் (டிரிபிள் ஜம்ப்), பி.ஆர். ஸ்ரீஜேஷ் (ஹாக்கி), ஹெச்.எஸ் பிரனோய் (பேட்மிண்டன்) ஆகியோருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிதி வீரர்களின் பயற்சி மற்றும் ஒலிம்பிக் தொடர்பான ஏற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த முறையில் ஹாக்கி அணி பதக்கம் வெல்லும என நாங்கள் மிகவும் எதிர்பார்க்கிறோம். பிரனோய் நல்ல ஃபார்மில் உள்ளார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

    • குடை வாங்க கூட வழியின்றி தவித்தேன்.
    • 7 குடைகள் தொலைந்துபோன சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள இயற்கை வளங்கள் நிறைந்த மாநிலம் ஆகும். வனம் மற்றும் நீர்நிலை பரப்புகளை அதிகம் கொண்டிருக்கும் இந்த மாநிலத்தில் எங்கு பார்த்தாலும், கோடை காலத்தை தவிர மற்று காலங்களில் அனைத்து இடங்களிலும் மரங்கள் பச்சை பசேலென்றே காணப்படும்.

    பருவமழை காலத்தில் அனைத்து மாவட்டங்ளிலும் மழை கொட்டும். இதனால் பருவமழை காலங்களில் எப்போது மழை பெய்யும் என்பது தெரியாது எனபதால் வீட்டி லிருந்து வெளியே செல்லக் கூடிய பொது மக்கள் குடையுடனே செல்வார்கள். அனைவரின் வீட்டிலும் ஏராளமான குடைகள் இருக்கும்.

    இப்படிப்பட்ட சூழலில் கடந்த 49 வருடங்களாக ஒரு நபர் குடையே பயன்படுத்தாமல் இருந்து வருகிறார். கனமழை கொட்டினாலும், கடும் வெயில் வாட்டி வதைத்தாலும் அவர் குடையை பயன்படுத்து வதில்லை. அவர் அவ்வாறு இருப்பதற்கு ருசிகரமான சம்பவம் அவரது வாழ்க்கையில் நடந்திருக்கிறது.

    அந்த நபர் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி பகுதியை சேர்ந்த மேத்யூ. கூலித் தொழிலாளியான இவர் கனமழை கொட்டினாலும் நனைந்தபடி தான் செல்கிறார். கடும் வெயில் அடித்ததாலும் குடையை பயன்படுத்துவதில்லை.

    49 ஆண்டுகளாக குடையை பயன்படுத்தாமல் இருப்பது குறித்து அவரிடம் கேட்டபோது, தான் பட்ட கஷ்டங்கள் மற்றும் கஷ்டப்பட்டு வாங்கிய குடைகள் தொலைந்து போனபடி இருந்தது உள்ளிட்ட விஷயங்களை கண்ணீர் மல்க தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    நான் கூலி வேலை பார்த்து வந்தேன். எனது மனைவி எல்சி எழுத்தறிவு வகுப்புகளை சொல்லிக் கொடுப்பவராக இருந்தார். அவர் வீட்டில் இருந்து வேலை விஷயமாக எங்கு சென்றாலும் குடை தேவைப்பட்டது. எனக்கு போதிய வருமானம் இல்லாத காரணத்தால் ஒரு குடை வாங்கக்கூட வழியின்றி தவித்தேன்.

    இருந்தபோதிலும் எனது மனைவிக்கு குடை வாங்கி கொடுத்தேன். ஆனால் அவருக்கு வாங்கிக் கொடுக்கும் குடை எப்படியாவது தொலைந்துவிடும். மீண்டும் வாங்கி கொடுத்தாலும், அந்த குடையும் தொலைந்தபடி இருந்தது. எனது மனைவிக்கு அவரது தந்தை கூட 2 குடைகள் வாங்கி கொடுத்தார். அந்த குடைகளும் திருட்டு போகின.

    ஒரு முறை அரிசி வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தில் மனைவிக்கு குடை வாங்கி கொடுத்தேன். அரிசி வாங்க வைத்திருந்த பணத்தில் குடை வாங்கி விட்டதால், ஒருநாள் எனது கர்ப்பிணி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உருளைக் கிழங்கை வேகவைத்து சாப்பிட்டோம்.

    மற்றொரு முறை வங்கியில் அடகு வைத்த மனைவியின் நகையை திருப்புவற்கு ஏற்பாடு செய்த பணத்தில், மீதமிருந்த தொகையில் ஒரு குடை வாங்கினேன். இந்த இரு குடைகளுமே தொலைந்து விட்டன. 7 குடைகள் தொலைந்துபோன சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்தது.

    சாப்பாட்டுக்கு அரிசி வாங்கக்கூட கஷ்டப்பட்ட நேரத்திலும் மனைவிக்காக வாங்கிக்கொடுத்த குடைகள் அனைத்தும் தொலைந்தபடி இருந்தது எனக்கு கவலையை ஏற்படுத்தியது. அதன் காரணமாக "இனி குடையை பயன்படுத்த மாட்டேன்" என்று சபதம் எடுத்தேன்.

    இந்நிலையில் எனது மனைவி எல்சி எலி காய்ச்சல் பாதித்து உயிரிழந்தார். அதன்பிறகு எனது குழந்தைகளை பராமரிப்பதற்காக கிளாரம்மா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்தேன். தற்போது அவருடன் வாழ்ந்து வரும் நிலையில், குடையை பயன்படுத்த மாட்டேன் என்று நான் எடுத்த சபதத்தை இன்றளவும் கடைபிடித்து வருகிறேன்.

    இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.

    கஷ்டப்பட்டு வாங்கிய குடைகள் திருட்டு போன தால ஏற்பட்ட மன கஷ்டம் காரணமாக எடுத்த சபதத்தை மேத்யூ 49 ஆண்டு களாக கடைபிடித்து வருவது மானந்தவாடி பகுதி மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

      திருவனந்தபுரம்:

      கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்திருந்ததை தொடர்ந்து பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகின்றன.

      டெங்கு, டைபாய்டு, எலி மற்றும் பன்றி காய்ச்சல்கள் மட்டு மின்றி வெஸ்ட் நைல், ஷிகல்லா, அமீபிக் மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட அரிய வகை காய்ச்சல்களும் , நிபா வைரஸ் உள்ளிட்ட உயிர்க் கொல்லி நோய்களும் பரவியது.

      தேங்கிக்கிடக்கும் அசுத்தமான தண்ணீரில் குளிப்பதன் மூலம் அதில் உள்ள அமீபாக்கள், குளிப்பவரின் மூக்கு துவாரம் மற்றும் காதுமடல் வழியாக மூளைக்கு சென்று தாக்கு வதன் மூலம் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சல் சிறுவர்களை பாதித்து வருகிறது.

      இந்த தொற்று பாதித்த மலப்புரத்தை சேர்ந்த 5 வயது சிறுமி, கண்ணூரை சேர்ந்த 13 வயது சிறுமி, கோழிக்கோட்டை சேர்ந்த 12 வயது சிறுவன் ஆகிய 3 பேர் கடந்த 2 மாத காலத்துக்குள் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் மாநிலத்தில் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

      இந்நிலையில் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்த கோழிக்கோட்டை சேர்ந்த 14 வயது சிறுவன், 22 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தான்.

      அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்தால் உயிர் தப்புவது மிகவும் அரிதானதாக கருதப்படுகிறது. இந்நிலையில் கோழிக்கோடு சிறுவன் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தான்.

      இந்தநிலையில் கேரளாவில் மேலும் ஒரு சிறுவன் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக் கிறான். கடந்த 20-ந்தேதி உடல் நலம் பாதித்து கண்ணூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட 4 வயது மதிக்கத்தக்க அந்த சிறுவ னுக்கு, அமீபிக் மூளைக் காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து தீவிர சிகிச் சைக்காக கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டான்.

      அங்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. சமீபத்தில் தளிபரம்பா அருகே உள்ள அருவியில் அந்த சிறுவன் குளித்திருக்கிறான். அப்போது அவனுக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

      • ஆட்டோவை மறித்து பிடித்த பெண் போலீஸ் அதிகாரி.
      • சுஜித் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்.

      திருவனந்தபுரம்:

      கேரள மாநிலம் கொச்சியில் உள்ள திரிப்புனித்துரா பகுதியை சேர்ந்தவர் சுஜித். இவர் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போக்சோ வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுஜித், ஜாமீனில் வெளியே வந்தார். அந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது.

      ஆனால் சுஜித் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது. இருந்த போதிலும் வழக்கு விசாரணைக்கு அவர் வரவில்லை. ஆகவே அவரை கண்டுபிடித்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டனர்.

      போலீஸ் சீருடையில் வந்தால் சுஜித் உஷாராகிவிடுகிறார். இதனால் அவரை பிடிக்க முடியாமலேயே இருந்தது.

      ஆகவே அவரை மாறுவேடத்தில் சென்று பிடிக்க பெண் போலீஸ் அதிகாரி கிருஷ்ணா திட்டமிட்டார். அதன்படி அவர் சாதாரண உடையணிந்து சுஜித்தின் நடமாட்டத்தை கண்காணித்தார்.

      இந்நிலையில் சுஜித் ஆட்டோவில் வரும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து ஆட்டோ வந்த சாலையில் பெண் போலீஸ் அதிகாரி கிருஷ்ணா காத்திருந்தார்.

      சுஜித் வந்த ஆட்டோவை நிறுத்துமாறு அவர் சைகை காட்டினார். டிரைவரும் ஆட்டோவை நிறுத்தினார். அப்போது ஆட்டோவுக்குள் அதிரடியாக ஏறிய கிருஷ்ணா, அதில் இருந்த சுஜித்தை அதிரடியாக பிடித்தார்.

      மேலும் அவரது 2 கைகளையும் துணியால் கட்டினார். சுஜித்தை தப்பிவிடாமல் அழுத்தி பிடித்துக்கொண்டு ஆட்டோவை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்.

      டிரைவரும் ஆட்டோவை போலீஸ் நிலையத்துக்கு ஓட்டிச்சென்றார். அங்கு ஆட்டோ வந்ததும், சக போலீசார் வந்து சுஜித்தை பிடித்து போலீஸ் நிலையத்துக்குள் அழைத்துச் சென்றனர்.

      அதன்பிறகே சுஜித்தை நடுரோட்டில் ஆட்டோவை மறித்து பிடித்த கிருஷ்ணா பெண் போலீஸ் அதிகாரி என்பது தெரியவந்தது.

      பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்டவரை பெண் போலீஸ் அதிகாரி ஒருவர், சினிமா பாணியில் தனி ஆளாக சென்று பிடித்து கைகளை கட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. கைது செய்யப்பட்ட சுஜித் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். 

      • கேரளவில் போதை பொருட்கள் அதிகளவில் புழக்கத்தில் இருக்கிறது.
      • காரில் இருந்த போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

      திருவனந்தபுரம்:

      கேரள மாநிலத்தில் போதை பொருட்கள் அதிகளவில் புழக்கத்தில் இருக்கிறது. அதிலும் விலை உயர்ந்த போதை பொருளான எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் போலீசாரின் சோதனையில் அடிக்கடி சிக்கி வருகிறது.

      இதனை பயன்படுத்துவம், பதுக்குவதும் சட்டப்படி குற்றம் என்றபோதிலும் பலர் விற்பனையில் ஈடுபடுகிறார்கள்.

      எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று மானந்தவாடி அருகே உள்ள பாவாலி சோதனைச் சாவடியில் கலால் புலனாய்வு பிரிவினர் மற்றும் சிறப்பு படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

      அப்போது அந்த வழியாக பெங்களூருவில் இருந்து வந்த காரை நிறுத்தி, காரில் இருந்தவர்களிடம் விசா ரணை நடத்தினர். அப்போது அவரகள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகம் அடைந்த கல்ல புலனாய்வு பிரிவினர் காரில் சோதனை செய்தார்கள். அப்போது காரின் ஸ்டியரிங் 'செலோடேப்' ஒட்டப்பட்டு வித்தியாசமாக இருந்தது.

      அதனை பிரித்து பார்த்தபோது அதற்குள் எம்.டி.எம்.ஏ. போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை காரில் கடத்தி வந்த பெங்களூரு நர்சிங் மாணவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

      அவர்கள் போதைப்பொ ருளை பெங்களூருவில் இருந்து கார் ஸ்டியரிங்கில் மறைத்துவைத்து நூதனமுறையில் கடத்தி கொண்டு வந்திருக்கின்றனர். ஆனால் அதனை கலால் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்து கைப்பற்றி விட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளின் மதிப்பு பல லட்சம் ஆகும்.

      அவர்கள் பெங்களூ ருவில் இருந்து கொண்டு வரப்பட்ட போதைப்பொ ருளை கூடுதல் விலைக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கொண்டுவந்தது விசார ணையில் தெரியவந்திருக்கி றது. கைது செய்யப்பட்ட நர்சிங் மாணவர்கள் உள்பட 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

      • 300 பேருக்கு கீழ் இருந்த அந்த எண்ணிக்கை தற்போது 472 ஆக அதிகரித்துள்ளது.
      • நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்றே வந்துள்ளது.

      திருவனந்தபுரம்:

      கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு காய்ச்சல்கள் பரவி வருகின்றன. டெங்கு, டைபாய்டு, எலி மற்றும் பன்றி காய்ச்சல்கள் மட்டுமின்றி வெஸ்ட் நைல், ஷிகல்லா, அமீபிக் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட அரிய வகை நோய்களும் பரவியது.

      இந்தநிலையில் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு அருகே உள்ள செம்பரசேரி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரசுக்கு பலியானான். கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் அந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

      இதையடுத்து நிபா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையில் மாநில சுகாதாரத்துறை களமிறங்கியது. பலியான சிறுவனின் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை தயார் செய்தது. குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர், நண்பர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு தொடர்பில் இருந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

      300 பேருக்கு கீழ் இருந்த அந்த எண்ணிக்கை தற்போது 472 ஆக அதிகரித்துள்ளது. சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களிடமிருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்றே வந்துள்ளது.

      நிபா வைரஸ் பாதிப்பு உள்ள இடங்களில் ஆய்வு செய்வதற்காக புனேவில் இருந்து வந்துள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையினான நிபுணர்கள் குழுவினர் வவ்வால்களின் மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

      நிவா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மாநில சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் பரவல் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. அனக்காயம் ஊராட்சியில் 95 குழுக்களும், பாண்டிக்காடு ஊராட்சியில் 144 குழுக்களும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

      இந்த 2 ஊராட்சிகளிலும் நேற்று 8,376 ஆயிரம் வீடுகளில் சுகாதார பணியாளர்கள் காய்ச்சல் கணக்கெடுப்பு நடத்தினர். இதுவரை 26ஆயிரத்து 430 வீடுகளில் காய்ச்சல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

      ×