search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "students arrested"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரெயிலில் பச்சையப்பன் கல்லூரியில் பயிலும் சில மாணவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
    • மாணவர் ஒருவர் ரெயில் பெட்டியின் படிக்கட்டில் தொங்கியபடி கையில் பெரிய பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு நடைமேடையில் தீப்பொறி பறக்க உரசியபடி சென்றனர்.

    ஆவடி:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்டிரல் செல்லும் ரெயிலில் தினந்தோறும் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பயணம் செய்வது வருகின்றனர்.

    இந்த நிலையில் அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி நேற்று முன்தினம் காலை மின்சார ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரெயிலில் பச்சையப்பன் கல்லூரியில் பயிலும் சில மாணவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், ஆவடி இந்து கல்லூரி ரெயில் நிலையம் அருகே சென்ற போது, மாணவர் ஒருவர் ரெயில் பெட்டியின் படிக்கட்டில் தொங்கியபடி கையில் பெரிய பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு நடைமேடையில் தீப்பொறி பறக்க உரசியபடி சென்றனர். அவரை சுற்றி நின்று கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாங்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், எங்களிடம் வம்பு செய்யாதே என கூச்சலிட்டபடி சென்றனர்.

    இதனால் ரெயிலில் பயணம் செய்த சக பயணிகள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். சிலர் தங்களது செல்போனில் இந்த காட்சிகளை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரவ விட்ட நிலையில், கல்லூரி மாணவர்கள் ரெயிலில் பட்டா கத்தியுடன் செல்வது போன்ற காட்சிகள் வைரலானது, இது குறித்து ஆவடி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான திருவள்ளூர், ஈக்காட்டை பவுண்ட்டை சேர்ந்த அபிஷேக் (வயது 20), சரண்ராஜ் (20), ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் இதுசம்பந்தமாக திருநின்றவூரை சேர்ந்த மனோஜ் (23) உள்ளிட்ட மேலும் சில மாணவர்களை தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    போரூர் அருகே செல்போன் கொள்ளையின் போது முதியவரை மோட்டார்சைக்கிளில் இழுத்து சென்ற 2 வாலிபர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். #Cellphonerobbery
    போரூர்:

    விருகம்பாக்கத்தை அடுத்த மேட்டுக்குப்பம் புவனேஸ்வரி நகரை சேர்ந்தவர் ஜெயபாண்டியன் (66). கருப்பட்டி வியாபாரி.

    நேற்று முன்தினம் ஜெயபாண்டியன், வளசரவாக்கம் மெஜஸ்டிக் காலனியில் உள்ள தனது நண்பரை பார்க்கச் சென்றார். அங்கிருந்து திரும்பும் போது, ஸ்கூட்டரில் வந்த 2 பேர் ஜெயபாண்டியனிடம் முகவரி கேட்டனர்.

    அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, ஜெயபாண்டியனின் சட்டைபையில் இருந்த செல்போனை, ஸ்கூட்டரின் பின்னால் இருந்தவர் திடீர் என பறித்தார். இருவரும் தப்பிச் செல்ல முயன்றனர்.

    சுதாரித்துக் கொண்ட ஜெயபாண்டியன், கொள்ளையர்கள் இருந்த ஸ்கூட்டரின் பின்பக்கம் உள்ள கைப்பிடியை பிடித்துக் கொண்டார். ஸ்கூட்டரை நிறுத்தி போனை மீட்க முயற்சித்தார்.

    அப்போது கொள்ளையர்கள் ஸ்கூட்டரை வேகமாக ஓட்டினார்கள். இதனால் முதியவர் தடுமாறி கீழே விழுந்தார். ஆனால், ஸ்கூட்டரை நிறுத்தாமல் ஓட்டினார்கள். இதனால் ஜெயபாண்டியன் ஸ்கூட்டருடன் சிறிது தூரம் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார்.

    கை, கால் தரையில் உரசியதால் ரத்தம் கொட்டியது. எனவே ஸ்கூட்டரை நிறுத்தி கொள்ளையர்களை பிடிக்கும் அவரது முயற்சி தோல்வி அடைந்தது. கைப்பிடி நழுவி ஜெயபாண்டியன் கீழே விழுந்தார். கொள்ளையர்கள் தப்பி விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீசில் ஜெயபாண்டியன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

    சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இந்த செல்போன் பறிப்பில் 3 பேர் ஈடுபட்டது தெரிய வந்தது.

    அதன் அடிப்படையில் போலீசார் துப்பு துலக்கினார்கள். இதில் ஆழ்வார் திருநகரை சேர்ந்த கல்லூரி மாணவர் சக்திவேல் (18). 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன், இவர்களுடைய கூட்டாளியான விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனியார் ஊழியர் சிவா (18) ஆகியோர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து, 2 மாணவர்கள் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த செல்போன், வழிப்பறி செய்வதற்கு பயன்படுத்திய ஸ்கூட்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் ஏற்கனவே இது போன்ற வழிப்பறி சம்பவங்களில் தொடர்பு உள்ளவர்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.#Cellphonerobbery
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மதுரையில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள் 3 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் தங்கிய விடுதியில் இருந்து 35 பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
    மதுரை:

    மதுரையில் கஞ்சா புழக்கம் அதிகரித்து உள்ளது. இதை தடுக்கும் வகையில் மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் சிறப்பு தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் தனிப்படை போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களிடம் போலீசார் சோதனை நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    போலீஸ் விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த ஜாக்சன் சாமுவேல் (வயது 20), கீழவைத்தியநாதபுரம் ஆகாஷ் (20) என்பது தெரிந்தது.

    இதில் ஜாக்சன் சாமுவேல் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டும், ஆகாஷ், மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.

    இவர்களுக்கு கோரிப்பாளையம் தனியார் கல்லூரியில் படிக்கும் பெரியகுளத்தைச் சேர்ந்த மாணவர் சூர்யா (19) கஞ்சா பொட்டலங்களை விற்றுள்ளார்.

    இதைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்துக்கு சென்ற போலீசார் அங்கு விடுதியில் சூர்யா மற்றும் அவரது நண்பர் பிரேம் (20) ஆகியோரது அறையில் சோதனை நடத்தினர்.

    இதில் 35-க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சூர்யா, ஜாக்சன் சாமுவேல், ஆகாஷ் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கிண்டி ஐ.டி.ஐ. மாணவர் கொலை சம்பவம் தொடர்பாக கைதான 2 மாணவர்கள் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளனர்.
    ஆலந்தூர்:

    கிண்டியில் ஐ.டி.ஐ. மாணவர் சிவக்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    கிண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து நடத்திய விசாரணையில் கொலை பற்றி துப்பு துலங்கியது.

    சிவக்குமாருடன் ஐ.டி.ஐ.யில் படித்து வந்த சக மாணவர்களான அலமாதியைச் சேர்ந்த சதீஷ் (20), நெற்குன்றத்தைச் சேர்ந்த முகமது (20) ஆகிய இருவரும் சேர்ந்தே அவரை கொலை செய்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். சிவக்குமாரை கொலை செய்தது ஏன்? என்பது பற்றி சதீஷ், முகமது இருவரும் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

    சில நாட்களுக்கு முன் எங்களுக்கும், சிவக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சிவக்குமார் எங்களை சரமாரியாக தாக்கினான். இதனால் ஏற்பட்ட ஆத்திரம் காரணமாகவே சிவக்குமாரை கொலை செய்தோம் என்று கூறியுள்ளனர்.

    கடந்த 22-ந்தேதி அன்று நாங்கள் நடந்து சென்றபோது சிவக்குமார் எங்களை பார்த்து முறைத்தான். இதனால் 2 பேரும் சேர்ந்து அவனை விரட்டி விரட்டி தாக்கி பீர் பாட்டிலால் குத்தியும், கல்லால் தாக்கியும் கொலை செய்தோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அரசு பஸ்சை கடத்தி பஸ் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மேலும் 10 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    ஆவடியில் இருந்து விவேகானந்தர் இல்லம் நோக்கி சென்ற மாநகர பேருந்தை கடத்தி, அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரி மாணவர்கள் பஸ்தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அண்ணாநகர் 2-வது அவென்யூவில் பஸ்சை வழி மறித்து ஏறிய மாணவர்கள் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டனர். பஸ்சின் மேற்கூரையில் ஏறியும் ரகளையில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    இதுதொடர்பாக 3 மாணவர்கள் ஏற்கனவே போலீசில் சிக்கினர். கைது செய்யப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் பஸ் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்த மேலும் 10 மாணவர்கள் பிடிபட்டனர்.

    தற்போது கல்லூரியில் படித்து வரும் மாணவர்களான விஜய், அஜய், சின்ராசு, நந்தகுமார், ஜான்சன், ரகு, ரஞ்சித், முன்னாள் மாணவர்களான தேவா, ஜெயக்குமார், சந்தோஷ் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×