என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு பஸ்சை கடத்தி பஸ் தினம் - மேலும் 10 மாணவர்கள் சிறையில் அடைப்பு
Byமாலை மலர்25 Jun 2018 8:51 AM GMT (Updated: 25 Jun 2018 8:51 AM GMT)
அரசு பஸ்சை கடத்தி பஸ் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மேலும் 10 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
ஆவடியில் இருந்து விவேகானந்தர் இல்லம் நோக்கி சென்ற மாநகர பேருந்தை கடத்தி, அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரி மாணவர்கள் பஸ்தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாநகர் 2-வது அவென்யூவில் பஸ்சை வழி மறித்து ஏறிய மாணவர்கள் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டனர். பஸ்சின் மேற்கூரையில் ஏறியும் ரகளையில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இதுதொடர்பாக 3 மாணவர்கள் ஏற்கனவே போலீசில் சிக்கினர். கைது செய்யப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பஸ் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்த மேலும் 10 மாணவர்கள் பிடிபட்டனர்.
தற்போது கல்லூரியில் படித்து வரும் மாணவர்களான விஜய், அஜய், சின்ராசு, நந்தகுமார், ஜான்சன், ரகு, ரஞ்சித், முன்னாள் மாணவர்களான தேவா, ஜெயக்குமார், சந்தோஷ் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆவடியில் இருந்து விவேகானந்தர் இல்லம் நோக்கி சென்ற மாநகர பேருந்தை கடத்தி, அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரி மாணவர்கள் பஸ்தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாநகர் 2-வது அவென்யூவில் பஸ்சை வழி மறித்து ஏறிய மாணவர்கள் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டனர். பஸ்சின் மேற்கூரையில் ஏறியும் ரகளையில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணாநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இதுதொடர்பாக 3 மாணவர்கள் ஏற்கனவே போலீசில் சிக்கினர். கைது செய்யப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பஸ் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்த மேலும் 10 மாணவர்கள் பிடிபட்டனர்.
தற்போது கல்லூரியில் படித்து வரும் மாணவர்களான விஜய், அஜய், சின்ராசு, நந்தகுமார், ஜான்சன், ரகு, ரஞ்சித், முன்னாள் மாணவர்களான தேவா, ஜெயக்குமார், சந்தோஷ் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X