என் மலர்
நீங்கள் தேடியது "IIT student murder"
கிண்டி ஐ.டி.ஐ. மாணவர் கொலை சம்பவம் தொடர்பாக கைதான 2 மாணவர்கள் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஆலந்தூர்:
கிண்டியில் ஐ.டி.ஐ. மாணவர் சிவக்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
கிண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து நடத்திய விசாரணையில் கொலை பற்றி துப்பு துலங்கியது.
சிவக்குமாருடன் ஐ.டி.ஐ.யில் படித்து வந்த சக மாணவர்களான அலமாதியைச் சேர்ந்த சதீஷ் (20), நெற்குன்றத்தைச் சேர்ந்த முகமது (20) ஆகிய இருவரும் சேர்ந்தே அவரை கொலை செய்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். சிவக்குமாரை கொலை செய்தது ஏன்? என்பது பற்றி சதீஷ், முகமது இருவரும் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன் எங்களுக்கும், சிவக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சிவக்குமார் எங்களை சரமாரியாக தாக்கினான். இதனால் ஏற்பட்ட ஆத்திரம் காரணமாகவே சிவக்குமாரை கொலை செய்தோம் என்று கூறியுள்ளனர்.
கடந்த 22-ந்தேதி அன்று நாங்கள் நடந்து சென்றபோது சிவக்குமார் எங்களை பார்த்து முறைத்தான். இதனால் 2 பேரும் சேர்ந்து அவனை விரட்டி விரட்டி தாக்கி பீர் பாட்டிலால் குத்தியும், கல்லால் தாக்கியும் கொலை செய்தோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
கிண்டியில் ஐ.டி.ஐ. மாணவர் சிவக்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
கிண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து நடத்திய விசாரணையில் கொலை பற்றி துப்பு துலங்கியது.
சிவக்குமாருடன் ஐ.டி.ஐ.யில் படித்து வந்த சக மாணவர்களான அலமாதியைச் சேர்ந்த சதீஷ் (20), நெற்குன்றத்தைச் சேர்ந்த முகமது (20) ஆகிய இருவரும் சேர்ந்தே அவரை கொலை செய்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். சிவக்குமாரை கொலை செய்தது ஏன்? என்பது பற்றி சதீஷ், முகமது இருவரும் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன் எங்களுக்கும், சிவக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சிவக்குமார் எங்களை சரமாரியாக தாக்கினான். இதனால் ஏற்பட்ட ஆத்திரம் காரணமாகவே சிவக்குமாரை கொலை செய்தோம் என்று கூறியுள்ளனர்.
கடந்த 22-ந்தேதி அன்று நாங்கள் நடந்து சென்றபோது சிவக்குமார் எங்களை பார்த்து முறைத்தான். இதனால் 2 பேரும் சேர்ந்து அவனை விரட்டி விரட்டி தாக்கி பீர் பாட்டிலால் குத்தியும், கல்லால் தாக்கியும் கொலை செய்தோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.






