என் மலர்
கேரளா
- உயிரிழந்த 16 பேரில் மன்சூரின் அம்மா, மனைவி, தங்கை, 2 குழந்தைகளும் அடங்கும்.
- அவரது மகள் உட்பட 12 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் பல நூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர்.
நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 380-ஐ கடந்துள்ளது. மேலும் பலர் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
குறிப்பாக, சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் இருந்தும், பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து 35 கிமீக்கு மேல் தொலைவில் உள்ள சாலியார் ஆற்றில் இருந்தும் உடல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் மன்சூர் (42) என்ற நபர் தன் குடும்பத்தை சேர்ந்த 16 பேரை இழந்து தவித்து வருகிறார் என்கிற தகவல் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த 16 பேரில் மன்சூரின் அம்மா, மனைவி, தங்கை, 2 குழந்தைகளும் அடங்கும். உயிரிழந்த 16 பேரில் தாய், மனைவி, தங்கை, மகனின் உடல்கள் மட்டுமே தற்போது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது மகள் உட்பட 12 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நிலச்சரிவு ஏற்பட்டபோது மன்சூர் வெளியூருக்கு சென்றதால் அவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார்.
"இந்த நிலச்சரிவு என் ஒட்டுமொத்த உலகத்தையும் அடித்து சென்றுவிட்டது. என்னுடைய குடும்பம், என்னுடைய வீடு உள்ளிட்ட அனைத்தும் என்னை விட்டு சென்று விட்டது" என்று தன் கும்பத்தை இழந்து தவித்து வரும் மன்சூர் பெரும் சோகத்தோடு தெரிவித்தார்.
- ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- வெள்ளத்தில் இருந்து தப்பிவந்த அகில் மற்றும் அனந்தராம் ஆகிய இருவரும் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் கூறினர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆரியநாடு பகுதியை சேர்ந்தவர் அனில்குமார். இவரது மனைவி சரிதா. இவர்களது மகன்கள் அமல், அகில். அனில்குமார் கேரள போலீஸ் ஐ.ஜி. ஹர்ஷிதா அத்தலூரின் வாகன டிரைவர் ஆவார். நேற்று அவரது வீட்டுக்கு அவருடைய சகோதரர் சுனில்குமார் மற்றும் சகோதரி ஸ்ரீபரியாவின் குடும்பத்தினர் வந்துள்ளனர்.
மதியம் அனில்குமாரின் வீட்டில் 3 குடும்பங்களை சேர்ந்த அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். பின்பு அவர்கள் மூணாட்டுமுக்கில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றார்கள். அங்கு பயிர்களுக்கு உரமிடும் வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர். வேலை முடிந்ததும் அனைவரும் அங்குள்ள கரமனா ஆற்றில் குளித்தனர்.
அப்போது ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அனில்குமாரின் சகோதரி ஸ்ரீபிரியாவின் மகன் ஆனந்த்(25) ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதனைப்பார்த்த மற்றவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்களும் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டனர்.
அனில்குமாரின் மற்றொரு மகன் அகில், சுனில்குமாரின் மகன் அனந்தராமன் ஆகியோர் ஆற்றில் நீந்தி கடந்து வெளியே வந்துவிட்டனர். ஆனால் அனில்குமார், அவரது மகன் அமல், ஸ்ரீபிரியாவின் மகன் ஆனந்த், சுனில்குமாரின் மகன் அத்வைத் ஆகிய 4 பேரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதுகுறித்து வெள்ளத்தில் இருந்து தப்பிவந்த அகில் மற்றும் அனந்தராம் ஆகிய இருவரும் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் கூறினர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு நெடுமங்காடு தீயணைப்பு வீரர்கள் வந்தனர். அவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 4 பேரையும் பிணமாக மீட்டனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மழை காரணமாக பேப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. இதனால் கரமனா ஆற்றில் அதிகமாக தண்ணீர் சென்றுள்ளது. இதனை அறியாக அனில்குமாரின் குடும்பத்தினர் ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது ஒருவர் பின் ஒருவராக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக இறந்து விட்டனர்.
- வயநாட்டில் மீட்பு பணியில் முப்படைகளும் இணைந்து செயல்பட்டு வருகிறது.
- சிறுவனின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
வயநாடு:
வயநாடு மாவட்டம் முண்டகை, சூரல்மலை, மேப்பாடு ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 350-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். தொடர்ந்து வயநாட்டில் மீட்பு பணியில் முப்படைகளும் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ரயான் என்ற சிறுவன் இந்திய ராணுவத்திற்கு ஒரு கடிதம் எழுதி உள்ளான்.
அதில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ராணுவத்தினர் பல்வேறு இன்னல்களை சந்திப்பதோடு, இக்கட்டான இடங்களிலும் மீட்பு பணிகளை துரித கதியில் செய்து வருகிறார்கள். மேலும் பெய்லி பாலம் அமைத்து மீட்பு பணியில் இறங்கி உள்ளார்கள். ராணுவத்தினர் உணவுகளாக பிஸ்கட் சாப்பிடுவதை வீடியோவில் பார்த்தேன். அதனை மட்டும் சாப்பிட்டு சவாலான பணிகளை மேற்கொண்டு வருகிறீர்கள். மீட்பு பணியில் ஈடுபடுவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். அதனால் இந்திய ராணுவத்திற்கு மகிழ்ச்சியுடன் சல்யூட் அடித்துக் கொள்வதோடு, நானும் ராணுவத்தில் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட ஆர்வமாக உள்ளேன் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் சிறுவன் ரயான் எழுதிய கடிதத்திற்கு பதில் தெரிவித்து இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்ததாவது:-
சிறுவன் ரயானின் இதயப்பூர்வமான வார்த்தைகள் எங்களை ஆழமாக தொட்டன. இக்கட்டான காலங்களில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு உள்ளோம். நீங்கள் அனுப்பிய கடிதம் இந்தப் பணியினை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. உங்களை போன்ற ஜாம்பவான்கள் ராணுவத்தில் இணைவது பெருமையே. நீங்கள் ராணுவ சீருடை அணிந்து எங்களின் பக்கத்தில் நிற்கும் நாளை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நாம் ஒன்றுபட்டு நமது தேசத்தை பெருமைப்படுத்துவோம் என்று கூறப்பட்டு இருந்தது.
சிறுவன் ரயான் ராணுவத்திற்கு எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. மேலும் சிறுவனின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
- உடல்கள் எதுவும் கிடைக்காவிட்டால் நாளையுடன் மீட்புப் பணிகளை நிறுத்துவது குறித்து ஆலோசனை.
- நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களின் எண்ணிக்கை 180ஆக உள்ளது.
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளரிவு வேளையில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது அடுத்தத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் பல நூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர்.
வீடுகள் இடிந்து விழுந்தும், மரங்கள் வேறோடு சாய்ந்தும், தொடர் கனமழை போன்ற காரணங்களால் மீட்பு பணிகள் இன்னமும் முடிவுக்கு வராத சூழல் நிலவுகிறது. இன்று 6ம் நாளை எட்டிய மீட்பு பணிகளில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 380-ஐ கடந்துள்ளது.
மேலும் பலர் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
குறிப்பாக, சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் இருந்தும், பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து 35 கிமீக்கு மேல் தொலைவில் உள்ள சாலியார் ஆற்றில் இருந்தும் உடல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.
இதற்கிடையே, மீட்பு பணியின் போது அந்த பகுதிகளில் உடல்கள் எதுவும் கிடைக்காவிட்டால் நாளையுடன் மீட்புப் பணிகளை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், மாயமானவர்களின் எண்ணிக்கை 180ஆக உள்ள நிலையில், ரேடார், ட்ரோன் மூலம் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
- நிலச்சரிவில் சிக்கி இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
- ராணுவம் அமைத்த பெய்லி பாலம் வழியாக பேருந்து எடுத்துச் செல்லப்பட்டது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பெய்த கனமழையால், நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், வயநாடு மாவட்டத்தில் முண்டகையில் பயங்கர நிலச்சரிவும், காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது.
இதனால், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இயற்கை பேரிடர் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் சூரல் மலையில் சிக்கிய அரசுப் பேருந்து 6 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து மீட்கப்பட்ட நிலையில், ராணுவம் அமைத்த பெய்லி பாலம் வழியாக பேருந்து எடுத்துச் செல்லப்பட்டது.
சூரல் மலை முதல் கல்பட்ட பகுதி வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையில் தினசரி பேருந்து இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சூரல் மலையில் நிலச்சரிவுக்கு முன்னதாக பேருந்து இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. அதன்பிறகு, நிலச்சரிவு ஏற்பட்டதால் பேருந்து இயக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.
இந்த சூழ்நிலையில், 6 நாட்களுக்கு பிறகு பேருந்து மீட்கப்பட்டுள்ளது.
- மீட்பு பணியில் ஜே.சி.பி. டிரைவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.
- தூங்கும்போது பலியானவர்களின் உடல்கள் தான் கண் முன்பு வருகிறது.
வயநாடு:
வயநாடு நிலச்சரிவு மீட்பு பணியில் ஜே.சி.பி. டிரைவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அவர்கள் பலியானவர்களின் உடல்களை தேடுவதற்காக மீட்பு படையை சேர்ந்த வீரர்களுக்கு தேவையான உதவிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வயநாடு மாவட்டம் சூரல்மலை பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் ஜே.சி.பி. டிரைவர் ஒருவர் கூறியதாவது:-
எனது சொந்த ஊர் கேரள மாநிலம் மேப்பாடி. நிலச்சரிவு ஏற்பட்ட முதல் நாளிலேயே இங்கு மீட்பு பணிக்கு வந்து விட்டோம். அன்று முதல் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
நிலச்சரிவு ஏற்பட்ட மலைப்பகுதி முதல் அனைத்து இடங்களிலும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். இப்போது பலியானவர்களின் உடல்கள் ஏதாவது மண்ணுக்குள் புதைந்து உள்ளதா என்று தேடி வருகிறோம்.
மீட்புபணியில் ஈடுபட்ட பிறகு வீட்டுக்கு சென்று தூங்குவது கொஞ்சம் கஷ்டம் தான். நான் தூங்கி பல நாட்கள் ஆகிறது. நிறைய பேரின் உடல்களை பார்த்துவிட்டேன். எனவே தூங்கும்போது பலியானவர்களின் உடல்கள் தான் எனது கண் முன்பு வருகிறது. எனவே தூங்குவதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
தூக்கம் வராமல் அப்படியே உட்கார்ந்திருப்போம். அல்லது வெளியில் எங்காவது சென்று விடுவோம். ஆனாலும் மீட்பு பணிக்கு காலையில் 6 மணிக்கெல்லாம் வந்து விடுவோம். அப்படியே தூங்க வேண்டும் என்றால் தூக்க மாத்திரை தான் போட வேண்டி இருக்கும்.

இந்த பகுதியில் எங்களுக்கு தெரிந்தவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது. மேலும் எங்களுக்கு தெரிந்த நிறைய பேர் இறந்து விட்டனர். இனி இருப்பவர்கள் பார்த்து இருந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.
- பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்தமாத இறுதியில் தொடர்ந்து கனமழை பெய்தபடி இருந்தது. இதன் காரணமாக கடந்த 30-ந்தேதி அதிகாலை முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய 3 இடங்களில் அடுத்தடுத்து மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
அதுமட்டுமின்றி சாலியாற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் இருந்த ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ராட்சத பாறைகள் விழுந்ததில் வீடு உள்ளிட்ட கட்டிடங்கள் நொறுங்கி மண்ணோடு மண்ணானது.
நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இந்த பயங்கர சம்பவத்தில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த பொது மக்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். பலர் மண்ணுக்குள் உயிரோடு புதைந்தனர்.
நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் கடற்படை, கப்பற்படை, விமானப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக களமிறக்கப்பட்டனர். இதில் நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
மனித உடல்கள் சிக்கிய படியே இருந்ததால் பலி எண்ணிக்கை உயர்ந்த படி இருந்தது. சம்பவம் நடந்து 5-வது நாளான நேற்று வரை 356 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. ராட்சத பாறைகள் மற்றும் மரங்கள் உள்ளிட்ட இடிபாடுகளை பொக்லைன் உள்ளிட்ட எந்திரங்கள் மூலமாக அகற்றி பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
நிலச்சரிவில் சிக்கி பலியான 350-க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 300-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி இருக்கின்றனர். அவர்களில் 24 தமிழர்களும் அடங்குவர். அவர்கள் மண்ணுக்குள் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக மண்ணுக்குள் உயிரோடு இருப்பவர்களை கண்டறியக் கூடிய நவீக கருவிகள் உள்ளிட்டவைகளை பயன் படுத்தினர்.
மேலும் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை கண்டறியும் பணியில் ராணுவம் மற்றும் காவல் துறையில் உள்ள மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டன. அது மட்டுமின்றி ட்ரோன்களை பயன்படுத்தியும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.
நிலச்சரிவு ஏற்பட்டு 5 நாட்களுக்கு மேல் ஆவதால் மாயமானவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்றும், அவர்கள் பலியாகியிருக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக தேடுதல் பணியில் மீட்பு படையினர் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை இன்று 357 ஆக உயர்ந்தது. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி 6-வது நாளாக இன்று நடந்தது.
ராணுவத்தில் தரைப்படை, கடற்படை, விமானப்படை வீரர்கள், தேசிய பேரிடம் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார், மருத்துவ குழுவினர், கடலோர காவல்படையினர், சமூக ஆர்வலர்கள் என 11 பிரிவினர் தேடுதல் பணியில் களமிறங்கி இருக்கின்றனர்.
அந்த பிரிவுகளை சேர்ந்த 1,264 பேர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தேடுதல் பணி நடக்கிறது. நவீன சென்சார் கருவிகள், ட்ரோன்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தியும் மாயமானவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் நவீன ரேடார் கருவிகளை கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.
அதன்படி உயர்தொழில் நுட்பம் கொண்ட 4 ரேடார்கள் டெல்லி மற்றும் சியாச்சினில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்பட்டன. "லைவ் விக்டிம் ரேடார்" என்று அழைக்கப்படும் அந்த ரேடார்கள், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்டு நிறுவப்பட்டன.
இந்த ரேடார்கள் மண்ணுக்குள் யாரேனும் உயிருடன் புதைந்து கிடக்கிறார்களா? என்பதை கண்டறியும். அவற்றின் மூலம் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மண்ணுக்குள் யாரேனும் புதைந்து கிடக்கிறார்களா? என்று ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
நிலச்சரிவு ஏற்பட்டு 5 நாட்களுக்கு மேல் ஆவதால் மாயமான 300-க்கும் மேற்பட்டவர்களின் நிலை என்ன ஆகியிருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
- வீடுகள் இருந்த இடத்தில் ஒருசில கட்டிடங்கள் மட்டுமே இருக்கின்றன.
- நிலச்சரிவால் மிகப்பெரிய அழிவை வயநாடு சந்தித்திருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 350-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் தரைமட்ட மாகிவிட்டன. காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ராட்சத பாறைகள் மற்றும் பெரிய மரங்கள் கட்டிடங்களை நொறுக்கி விட்டன.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் மக்கள் வசித்து வந்த பகுதிதானா? என்ற கேள்வி எழும் வகையில் எங்கு பார்த்தாலும் பாறைகள், மரக்குவியல்களாக கிடக்கின்றன. அவற்றை பெரும்பாடுபட்டு ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர் அகற்றி தேடுதல் பணியில் ஈடுபடுகின்றனர்.
நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்த இடத்தில் ஒருசில கட்டிடங்கள் மட்டுமே இருக்கின்றன. அவையும் பலத்த சேதமடைந்த நிலையில் தான் உள்ளன. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 1,208 வீடுகள் முற்றிலுமாக இடிந்து அழிந்துவிட்டது.
முண்டக்கை பகுதியில் 540 வீடுகளும், சூரல்மலை பகுதியில் 600 வீடுகளும், அட்டமலை பகுதியில் 68 வீடுகளும் முற்றிலுமாக இடிந்துவிட்டன.
மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ அதிகாரிகளே, இப்படியொரு பேரழிவை பார்த்ததில்லை என்று கூறியிருக்கின்றனர். அந்த அளவுக்கு நிலச்சரிவால் மிகப்பெரிய அழிவை வயநாடு சந்தித்திருக்கிறது.
- ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கடந்த 1-ந்தேதி வயநாட்டிற்கு வருகை தந்தனர்.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டிக் கொடுக்க ராகுல் காந்தி முடிவு செய்தார்.
கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு 350-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பல சாலைகள் சேதமடைந்தன.
இதை தொடர்ந்து, நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கடந்த 1-ந்தேதி வயநாட்டிற்கு வருகை தந்தனர். அப்போது பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில், வயநாட்டில் நிலச்சரிவு பாதித்த பகுதிகளுக்கு சென்ற ராகுல் காந்திக்கு எதிராக உள்ளூர் மக்கள் கேள்வி கேட்பது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், (ராகுல்) காரில் இருந்து சேற்றில் இறங்குவதைப் பற்றி கவலைப்பட்டார் அவர் ஏன் இங்கு வந்தார்? அவர் பார்க்க என்ன இருக்கிறது என்று ஒருவர் கோபமாக கேள்வி கேட்பதைக் காண முடிகிறது.
முன்னதாக, வயநாட்டில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ராகுல் காந்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டிக் கொடுக்க முடிவு செய்தார்.
- வயநாடு நிலச்சரிவால் ஒட்டுமொத்த இந்தியா அதிர்ந்து போனது.
- நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 340-ஐ கடந்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்துபோய் உள்ளது.
வயநாட்டில் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலச்சரிவில் சிக்கி பலியானோர் 350-ஐ கடந்துள்ளது.
மேலும் மாயமான 200-க்கும் மேற்பட்டோரின் நிலை தெரியவில்லை. பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவத்தினர் என பலரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி வயநாடு நிலச்சரிவு குறித்து எச்சரித்தது வெளிவந்துள்ளது.
பள்ளி மாணவி எழுதிய கதையில், கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிட்டத்தட்ட 300 பேர் இறந்தார்கள் என்றும், 200- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது பற்றியும் தெரிவித்துள்ளார்.
மழை பெய்தால் நிலச்சரிவுகள் அருவியைத் தாக்கும். மனித உயிர்கள் உள்பட அவர்களின் பாதையில் உள்ள அனைத்தையும் அது மூழ்கடிக்கும் என அந்த மாணவி கடந்த ஆண்டு தனது பள்ளி இதழில் எழுதிய கதையில் குறிப்பிட்டுள்ளார்.
கதை எழுதிய மாணவியின் நகரமான சூரல்மலை தரைமட்டமாகியது. அவரது பள்ளியும் இடிபாடுகளுக்குள் புதைந்துவிட்டது .
வயநாடு நிலச்சரிவு குறித்து ஒரு ஆண்டுக்கு முன் எழுதி எச்சரித்த மாணவியின் கதை தற்போது வைரலாகி வருகிறது.
- முண்டகை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட 3 இடங்களில் அடுத்தடுத்து மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
- 600-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்ததும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை கொட்டியதன் காரணமாக கடந்த 29-ந்தேதி முண்டகை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட 3 இடங்களில் அடுத்தடுத்து மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களில் சுமார் 10 ஆயிரம் பேர் 94 நிவாரண முகாம்களில் உள்ளனர்.
600-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்ததும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதும் தெரிய வந்துள்ளது. அவர்களை மீட்பதற்கான பணிகள் இன்று 5வது நாளாக நடந்து வருகிறது. இதுவரை 340 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேல் ஆவதால் மாயமானவர்கள் நிலை என்ன ஆகியிருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றே கருதப்படுகிறது.
எது எப்படியென்றாலும் கடைசி நபர் மீட்கப்படும் வரை தேடுதல் பணியை தொடர கேரள அரசு முடிவு செய்திருக்கிறது.
இந்நிலையில், முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, உடனடியாக ரூ.4 கோடி ஒதுக்கப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
விரைவாக, மாநில பேரிடர் மேலாண்மை நிதி, வயநாடு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்படும் என்றும், இந்த தொகை மக்களின் நிவாரணப் பணிகளுக்கு மட்டும் செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 3 பேரை கடலோர காவல்படையினர் கண்டுபிடித்தனர்.
- வெள்ள நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் 3 பேர் அருகே நெருங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடி வந்த 3 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முண்டகையில் இருந்து 6 கி.மீ., தொலைவில் வெள்ளரிமலை பகுதியில் சூஜிப்பாறை நீர்வீழ்த்தி உள்ளது.
இங்குள்ள பாறைகளின் மேல் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 3 பேரை கடலோர காவல்படையினர் கண்டுபிடித்தனர்.
வெள்ள நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் 3 பேர் அருகே நெருங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
அதனால், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 3 பேரையும் மீட்பதற்கான வாய்ப்பு குறித்து இந்திய ராணுவத்தினர் திட்டமிட்டு வருகின்றனர்.
மேலும், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 3 பேரில் ஒருவரின் காலில் காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரும் கடந்த 5 நாட்களாக தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்து வந்துள்ளனர்.






